பாட்டி வைத்தியம் ...

· நெஞ்சு சளிக்கு தேங்காய்எண்ணையில் கற்பூரம் சேர்த்துநன்கு சுடவைத்து ஆர வைத்துநெஞ்சில் தடவ சளி குணமாகும்.
· தொண்டை கரகரப்புசுக்கு, பால்மிளகு, திப்பிலி, ஏலரிசிஆகியவற்றை வறுத்து பொடிசெய்து தேனில் கலந்து சாப்பிடதொண்டை கரகரப்புகுணமாகும்.
· புண் சிரங்கு குணமாக நுனா இலையை அரைத்து பற்றுப் போட குணமாகும்
· தேமல் குணமாக ஆரஞ்சு பழத் தோலை வெயிலில் உலர்த்தி பொடி செய்து
தினமும் தேய்த்து குளித்துவர தேமல் குணமாகும்.
· கோரைக்கிழங்கு கஷாயம் வைத்து சாப்பிட எவ்வித காய்ச்சலும் குணமாகும்.
· ஜலதோஷம் நீங்க துளசிச் சாறு இஞ்சி சம அளவு கலந்து குடிக்கலாம்
· அத்திப்பழம் தினம் தோறும் ஐந்து சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
· இருமல் குணமாக வெந்தயக்கீரை சமைத்து உண்டு வந்தால் குணமாகும்.
· வெட்டுக்காயம் குணமாக இலந்தை மர இலையை அரைத்து காயத்தின் மீதுபூசி வர குணமாகும்.
· தொடர் விக்கல்லுக்கு நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்துசாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
· வாய் நாற்றம் சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒருநாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம்போகும்.
· உதட்டு வெடிப்புக்கு கரும்பு சக்கையை எடுத்து எரித்துசாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டுவெடிப்பு குணமாகும்.
· அஜீரணம் ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும்கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
· குடல்புண்க்கு மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்கவேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.
· வாயு தொல்லைக்கு வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில்உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
· வயிற்று வலிக்கு வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில்குடிக்க வயிற்று வலி நீங்கும்.
· வில்வ இலையை தினமும் காலையில் மென்று தின்று வர வாய்திக்கல்குணமாகும்.
· வாத நோய் தீர ஊமத்தை இலையை நல்லெண்ணையில் வதக்கி கட்டி வரகுணமாகும்.
· அகத்திக் கீரை வாரம் ஒருநாள் சமைத்து உண்டுவர மலச்சிக்கல்குணமாகும்நோய் குணமாகும். இந்த நாட்களில் மாமிசம் புளி காரம் சேர்க்ககூடாது
.
· காய்ச்சிய வெப்பெண்ணையை தடவி வர சேற்றுப் புண் குணமாகும்
· நாக்கு பூச்சி நீங்க குப்பைமேனி வேர் பொடி கஷாயம் செய்து சாப்பிடலாம்.
· தான்றிக்காய் பொடி கால் ஸ்பூன் தேனில் கலந்து காலையில் சாப்பிட்டுவரகண்பார்வை நன்றாக தெரியும்.
· இஞ்சி சாறுடன் தேன் கலந்து தினமும் சாப்பிட ரத்தம் சுத்தமாகும்.
· பூவரசு இலைகளை அரைத்து வதக்கி கட்ட வீக்கம் குணமாகும்.
· கசகசா கற்கண்டு சேர்த்து சாப்பிட்டுவர தூக்கம் நன்கு வரும்.
· மலச்சிக்கல் செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளைசாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.
· சீதபேதிமலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதிகுணமாகும்.
· பித்த வெடிப்புக்கு கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சிபூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
· மூச்சுப்பிடிப்புக்கு சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சமஅளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்திமூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.
· சரும நோய்க்கு கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடிசெய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சருமநோய் குணமாகும்.
· சிலந்திகடி குணமாக கடிவாயில் கற்றாழை வைத்துக் கட்ட குணமாகும்.
· பாம்புக் கடி விஷம் குறைய ஆடு தின்னாப் பாலை வேர் எடுத்து கஷாயம்செய்து குடித்தால் விஷம் முறியும்.
· பூரான் கடிக்கு குப்பை மேனி உப்பு மஞ்சள் அரைத்து பற்று போட குணமாகும்.
· நாய்க்கடி விஷம் முறிய ஊமத்தை இலையை அரைத்து நல்லெண்ணையில்வதக்கி கட்ட முறியும்.
· தேள் கடிக்கு நாயுருவி வேரை பச்சையாக மென்று சாறை உட்கொள்ள விஷம்குறையும்.
· சீதபேதி குணமாக கசகசாவை சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர மூன்றுநாட்களில் குணமாகும்.
· முள்ளங்கிச் சாறு சாப்பிட தலைவலி, ஜலதோஷம் , இருமல் குணமாகும்.
· அகத்தி இலை அவித்த தண்ணீர் பருகினால் வாய்ப்புண் குணமாகும்.
· தேங்காய் பாலுடன் தேன் கலந்து குடித்தால் வாய்ப்புண் குணமாகும்.
· வல்லாரை இலையுடன் தூதுவளை சேர்த்து அரைத்து பாலில் கலந்துசாப்பிட்டு வர நுரையீரலில் உள்ள சளி நீங்கும்.
· தீப்புண் வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில்கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில்குணமாகும்.
· மூக்கடைப்புக்கு ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டுசுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வரமூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
· வரட்டு இருமல் எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல்குணமாகும்
· நரம்பு சுண்டி இழுத்தால் ஊற வைத்து, முளைக்க வைத்ததானிய வகைகளைசாப்பிட்டால் இந்த நோய் வராது. வாரத்தில் 3 தடவைகளாவது சேர்த்துக்கொண்டால் நல்ல பலன் இருக்கும். நரம்பு நாளங்களை சாந்தப்படுத்தும்குணம் தேனுக்கு உடையது.
· பல்லில் புழுக்கள் சிறிது வேப்பங்கொழுந்து எடுத்து, நன்றாக பற்களின் எல்லாப்பகுதியிலும் படும்படி மென்று சாப்பிட வேண்டும்.
· உடல் பருமன் குறைய வெங்காயத்தில் கொழுப்புச் சத்து குறைவு. அதனால்
· உடல் பருமனைக் குறைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் உணவில்தாராளமாக வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.
· தேன் உடல் பருமனைக் குறைக்கும்.தேனுடன் குளிர்ந்த தண்ணீரை கலந்துஅருந்தினால் உடல் பருமன் குறையும்.
No comments:
Post a Comment