Monday 29 February 2016

தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்துகொள்வதற்கான வழிமுறைகள்

Mohandass Samuel's photo.
Mohandass Samuel with Prince Prince and 2 others. தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்துகொள்வதற்கான வழிமுறைகள் இங்கே
வீட்டில் ஒரு பெயர் வைத்திருப்பார்கள், விரும்புவது வேறு பெயராக இருக்கும். சிலர் பெற்றோர் வைத்த பெயரை மாற்ற நினைப்பதும் உண்டு. தவிர, ஒருவர் தன் பெயரை நியூமராலஜிப்படியோ, ஜாதகப்படியோ அல்லது ஒரு நல்ல தமிழ்ப் பெயரையோ சூட்டிக்கொள்ளவும் விரும்பலாம். சரி, அதற்குரிய வழிமுறைகள் என்ன?
பெயர் மாற்றம் செய்வதற்கான தகுதிகள்:
தமிழ்நாட்டில் வசிக்கும் எவரும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர் 60 வயதுக்கு மேல் உள்ளவரானால் பதிவுபெற்ற மருத்துவரிடமிருந்து Life Certificate அசலாகப் பெற்று இணைக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்:
பிறப்பு / கல்விச் சான்றிதழ் நகல் இணைக்க வேண்டும். பிறப்பு / கல்விச் சான்றிதழ் இல்லாதவர்கள் வயதை நிரூபிக்க அரசு மருத்துவரிடம் உரிய சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
சமீபத்தில் எடுக்கப்பட்ட விண்ணப்பதாரரின் புகைப்படத்தை, அதற்கென அளிக்கப்பட்டுள்ள இடத்தில் ஒட்டி, தமிழக / மத்திய அரசின் அ மற்றும் ஆ பிரிவு அலுவலர்கள் / சான்று உறுதி அலுவலரிடமிருந்து சான்றொப்பம் பெறப்பட வேண்டும்.
பிற மாநிலத்தில் பிறந்து, தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் - தமிழ்நாட்டில் வசிப்பதற்கு ஆதாரமாக உணவுப் பங்கீட்டு அட்டை/கடவுச் சீட்டு/வாக்காளர் அடையாள அட்டை/ வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் இதில் ஏதேனும் ஒன்றின் சான்றிட்ட நகல் இணைக்க வேண்டும்.
தத்து எடுத்துக்கொண்டு, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் தத்துப்பத்திரத்தின் சான்றிட்ட நகலை இணைக்க வேண்டும்.
மண முறிவு செய்து, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் நீதிமன்றத் தீர்ப்பை சான்றிட்ட நகலாக இணைக்க வேண்டும்.
கட்டணம்,
பொதுவாக பெயர் மாற்றக் கட்டணம் 9-2-2004 முதல் ரூ.415 மட்டும்.
தமிழில் பெயர் மாற்றக் கட்டணம் ரூ.50 மற்றும் அரசிதழ் + அஞ்சல் கட்டணம் ரூ.65.
செலுத்தும் முறை:
அலுவலகத்திற்கு நேரில் சென்று காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை, பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணி வரை பணமாகச் செலுத்தலாம்.
அஞ்சல் மூலம் செலுத்த:
உதவி இயக்குநர் (வெளியீடுகள்),
எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம்,
சென்னை-600 002
என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி வரைவோலை மூலம்.
பண விடைத்தாள்/ அஞ்சல் ஆணைகள் ஏற்றுக் கொள்ளப்படாது.
விண்ணப்பிக்கும் முன் கவனிக்க வேண்டியவை:
பெயர் மாற்றத்திற்கான காரணம் தெரிவிக்க வேண்டும்.
பழைய பெயர் ( ம ) புதிய பெயரில், என்கிற (Alias) என்று பிரசுரிக்க இயலாது.
பிரசுரம் செய்யப்பட்ட அரசிதழில் அச்சுப்பிழைகள் ஏதுமிருப்பின் அவற்றை ஆறு மாதங்களுக்குள் சரிசெய்து கொள்ள வேண்டும். அதற்குப்பின் பிழைகளை திருத்தம் செய்யக்கோரும் எவ்விதக் கோரிக்கையும் கண்டிப்பாக ஏற்கப்பட மாட்டாது.
பெயர் மாற்ற அறிவிக்கை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே. அதற்கான உறுதிமொழியை உரிய இடத்தில் அளிக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் இணைக்கும் அனைத்து நகல்களிலும் கெசட்டட் அலுவலரிடம் கையெழுத்துப் பெற்று இணைக்க வேண்டும்.
நிபந்தனைகள்:
விண்ணப்பதாரர் தவிர வேறு எவரும் எவ்வித தொடர்பும் கொள்ளக் கூடாது.
பணம் செலுத்துவது தொடர்பாக விண்ணப்பதாரருக்கு நினைவூட்டு ஏதும் அனுப்பப்பட மாட்டாது.
இத்துறையால் வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
வெளியில் அச்சிட்ட அல்லது ஒளிப்பட நகல் படிவம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
எப்படி பெறுவது?
அரசிதழை நேரில் பெற விருப்பம் தெரிவிப்பவர்கள், அரசிதழ் பிரசுரிக்கப்பட்ட 5 நாட்களுக்குள் நேரில் வந்து அரசிதழை பெற்றுக்கொள்ள வேண்டும். தவறினால் அரசிதழ் தபால் மூலம் உரிய நபருக்கு அனுப்பப்படும்.
தபால் மூலம் அனுப்பப்படும் அரசிதழ்கள், தபால்துறை மூலம் திருப்பப்படும் பட்சத்தில், அரசிதழ்கள், உரிய நபர்களுக்கு மீண்டும் தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது. இது போன்ற நிகழ்வுகளில், உரிய நபர்கள் 6 மாதங்களுக்குள் நேரில் வந்து, தபால்துறை மூலம் திருப்பப்பட்ட, அவர்களுக்கான அரசிதழ்களைப் பெற்றுச் செல்லலாம்.
விண்ணப்பத்தில் கையெழுத்திடும்முன்:
சுவீகாரம் தொடர்பாக பெயர் மாற்றம் செய்யும் பட்சத்தில், சுவீகாரம் எடுத்துள்ள தந்தை (ம) தாயார் மட்டுமே, பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்து, படிவத்தில் உரிய இடத்தில் கையொப்பம் இட வேண்டும்.
விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர் மட்டுமே கையொப்பம் இடவேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடையாதவராக (Minor) இருந்தால், தந்தை, தாயார் அல்லது பாதுகாப்பாளர் மட்டுமே கையொப்பம் இட வேண்டும். பாதுகாப்பாளராக இருப்பின் அவர் பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டதற்கான ஆணை நகல் (Legal Guardianship Order) சான்றொப்பம் பெறப்பட்டு இணைக்கப்பட வேண்டும். கையொப்பத்தின்கீழ் உறவின் முறையை (Capital Letter-இல்) தந்தை/தாய்/ பாதுகாப்பாளர் பெயருடன் குறிப்பிட வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு:
உதவி இயக்குநர் (வெ), எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம், சென்னை-2-இல் 044-2852 0038, 2854 4412 மற்றும் 2854 4413 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்
http://www.stationeryprinting.tn.gov.in/servicetopublic.htm இத்தளத்திற்குச் சென்று மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ளலாம்.
http://www.stationeryprinting.tn.gov.in/forms.htmவிண்ணப்பப் படிவங்களை தரவிறக்கிக் கொள்ளலாம்.
தத்து எடுக்கும் பிள்ளைகளுக்கான பெயர் மாற்றம் செய்வோர் கவனத்திற்கு:
***************************************************************************************************************
சுவீகாரத் தந்தை/தாய் இருப்பின் அவர்கள் சுவீகாரம் பதிவு செய்யப்பட்ட சுவீகாரப் பத்திர நகலில் சான்றொப்பம் பெறப்பட வேண்டும், பிறப்புச் சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும்.
சுவீகாரம் கொடுக்கப்பட்ட மகன்/மகளின் சுவீகாரத் தந்தை/ தாய் இருவரும் காலம் தவறி இருப்பின் இதை அரசு வெளியீட்டில் பொது அறிவிக்கையாக மட்டுமே வெளியிட இயலும். இதற்கான ஆவணங்கள் பதிவு செய்யப்பட்ட சுவீகாரப் பத்திர நகலில் சான்றொப்பம் பெறப்பட வேண்டும், பிறப்புச் சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும்

Wednesday 10 February 2016

வாசி யோகம் பற்றிய ஒரு முழுமையான பார்வை

                     வாசி யோகம் பற்றிய ஒரு முழுமையான பார்வை. =================================================
{சித்தர்களால் பெரிதும் போற்றப்பட்ட , வணங்கப்பட்ட , ரகசியமான முறையில் பேணப்பட்ட அற்புதமான கலையை நம் சித்த நண்பர்களுக்காக முழுமையாக பகிர்கிறேன் . காலத்தால் அழியாத இந்த அற்புத கலையை நீங்களும் முறையாக பயின்று சித்தத்தை சிவமாகுங்கள். நன்றி .}
சமாதி .
-----------
மனித உடலை அடக்கம் செய்யும் முறைகள் சமாதி எனப்படும் என்று சாதாரணமாக அறிவோம்
சித்தர் கல்வியில் சம + ஆதி = சமாதி . . .
இறைவனுக்கு சமமாதல் என்பதே சமாதி
சமாதி பொதுவாக மூன்று வகைப்படும்
1. மனிதர்கள் இறந்தபின் உடலை நேரடியாக மண்ணில் புதைத்து அல்லது பேழைகளில் வைத்து கல்லறையில் வைப்பது சமாதி.
2.மீண்டும் பிறவாமல் முக்தி அடைய உயிரை தானே அடக்கி தானே உருவாக்கிய கல்லறையில் சமாதி அடைதல் . இதற்கு ஜீவசமாதி என்று பெயர் .
3. உயிருடனும் உடலுடனும் இறைவனுக்கு சமமாக இருந்து பேரின்பம் அடைதல் அல்லது முக்தி அடைதல் . அஷ்டாங்க யோகாவில் எட்டாம் நிலையில் அடையும் யோகா சமாதி . இதன்படி கிடைக்கும் முக்திக்கு இருத்தி முக்தி என்று பெயர் .
இந்தியாவில் இஸ்லாமும் கிறிஸ்தவமும் வரும் முன்பிருந்து மூன்று வகை சமாதிகள் கடை பிடிக்கப்பட்டன..
அவைகள்
1. நில சமாதி நிலத்திற்கு உள் அல்லது மேல் அடக்கம் செய்தல்
2. நீரில் சமாதி . நீரில் அடக்கம் செய்தல் . .
3. நெருப்பில் சமாதி. நெருப்பில் எரியுட்டி சம்பல் ஆககி நீரில் கரைத்தல் .
1.இறந்தபின் செய்யப்படும் சமாதிகள்
-----------------------------------------------------------
1.. நில சமாதி நிலத்திற்கு உள் அல்லது மேல் அடக்கம் செய்தல்
எளிய முறையில் உடலை மண்ணில் புதைக்கப்படும் சமாதிகள் பெரும்பான்மை உண்டு
இதில் இறந்தபின்பு அவரவர் பாவ புண்ணிய செயலுக்கு ஏற்ப மோட்சம் அல்லது நரகம் செல்வார் என்பது பலரின் நம்பிக்கை . ஆகையால் அவரின் உடலலை பேழையில் வைத்து கல்லறை கட்டி அடக்கம் செய்கின்றனர் .
.
இறந்து போனவர் மீண்டும் உயிர் பெறுவார் அல்லது மேல் உலகம் செல்வார் எனவே அவரது உடலை கெடாமல் பாதுக்காக வேண்டும் என்பது ஒருவகை நம்பிக்கை . ஆகையால் எகிப்ப்தில் உடலை பதபடுத்தி பெரும் சமாதிகளாக பிரமிடுகள் கட்ட பட்டன ..
அன்பின் மிகுதியால் தனது மனைவியின் உடலுக்கு இஸ்லாம் முறைப்படி கட்டப்பட்ட சமாதிதான் தாஜ் மஹால் . இது போன்று பல சமாதிகள் உள்ளன இன்றும் பல புகழ் பெற்ற தலைவர்களுக்கும் ஆன்மீக பெரியவர்களுக்கும் நினை விடங்கள் கட்டப்படுகிறது . இது பூமி அல்லது நில சமாதி .
..
சில பழங் குடியினர் மலைகளின் உச்சிக்கு உடலை எடுத்து சென்று வெட்ட வெளியில் வைத்து விடுகின்றனர் ... சிலர் உடலை பாறைகளில் கிடத்தி பறவைகள் உன்ன செய்கின்றனர் ..
இன்றும் அமெரிக்காவில் அவரின் பொருளாதார நிலைக்கு ஏற்ப 80 ஆயிரம் டாலர் செலவு செய்து உடலை பதபடுத்தி பாதுகாக்கும் வழக்கம் சிலரிடம் உண்டு. பிற்காலத்தில் இவரின் உடலை உயிர்பிக்கும் தொழில் நுட்பம் வரும் என்ற நம்பிக்கை . இதற்கு. cryogenic body preservation என்ற தொழில்நுட்பம் பயன்படுகிறது.
கிறிஸ்தவ பாதிரியாரின் உடல் கோவாவில் சர்ச்சில் பாதுகாக்க படுகிறது .இதவை பூமிக்கு மேல் சமாதி
1.2. நீரில் சமாதி . நீரில் அடக்கம் செய்தல். சல சமாதி
இறந்த உடல் பிற உயிர்களுக்கு உயிர்வாழ பயன்படும் என்று மீன்களுக்கும் நீர்வாழ் உயிர்களுக்கும் உணவாககும் முறைகளும் உண்டு.. இறந்தவர் உடலை நதிள்ளது கடலில் அடக்கம் செய்வது உண்டு . .
கங்கையில் உடலை சமாதி செய்தால் . மீன்களும் முதலைகளும் உடலை உண்ணும் . உடலுக்கு சொந்தகாரர் மோட்சம் செல்வார் என்பது நம்பிக்கை . இதை சல சமாதி என்பார்கள்
இறந்தவர் உடலை எரித்து அந்த சாம்பலை புனித தீர்த்தங்களில் கரைத்தால் மோட்சம் என்ற நம்பிக்கை . ஆகையால் கங்கை(காசி) அல்லது புண்ணிய நதிகள் மற்றும் கடல்( ராமேஸ்வரம்) ஆகிய இடங்களில் எரிக்கப்பட்ட உடலின் அஸ்தி கரைக்க படுகிறது. இது அக்கினி சமாதி .
இத்தகைய சமாதிகள் அவர் அவர் மத ,கலாசார , நம்பிக்கை மற்றும் பொருளாதார நிலைக்கு ஏற்ப .செய்யப்படுகிறது
.
. 2. ஜிவ சமாதி
------------------------
மீண்டும் பிறவாமல் முக்தி அடைய உயிரை தானே அடக்கி சமாதி அடைதல் . இதற்கு ஜீவசமாதி என்று பெயர்
2.!. திரும்பி வராமல் உயிருடன் அடங்கும் முறைகள் ஜீவ சமாதி..
ஆன்மீக குரு தனது பிறவியின் கடமைகள் முடிந்தபின் தனது உலக பயணத்தை முடித்து கொள்வது. தான் சமாதி செல்வதை உலகிற்கு சொல்லி அவர் மீது பற்றுக்கொண்ட அனைவருக்கும் செய்தி தெரிவிப்பார்.. தனது சமாதியை கட்டி வைத்து ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் அதனுள் அமர்ந்து கற்பூரம் வீபூதி முதலிய பொருட்களால் உடலை மூடி அதன் மேல் கருங்கல் பலகையால் மூடிவிடுதல் . இத்தகைய ஜீவ சமாதி அடைந்தவர் ராகவேந்த்திரர் மற்றும் பலர் . .
2.2 மூடப்பட்ட சமாதியில் இருந்து திம்பி உயிருடன் எழுந்துவரும் சித்தயோக சமாதி .
அஷ்டமா சித்தி அடைத்து முகதிஆன சித்தர்கள் பல் சித்து விளையாடல் செய்து உலகிற்கு பல நன்மைகள் செய்வார்கள் . இவர்களின் செயல் முடிவடைந்தது என்று அவர்கள் உணர்ந்தால் சித்த யோக சமாதிக்கு செல்வார்கள் . இதற்க்கு என்று தனிப்பட்ட சமாதி அரை கட்டுவார்கள். . தான் சமாதி செல்லும் நாளை குறிப்பிட்டடும, தான் சமாதியில் இருந்து திரும்பிவரும் நாளையும் குறிப்பிட்டும் பிற சித்தர்களுக்கும் சீடர்களுக்கும் சொல்லி அனுப்பு வார்கள் .
சமாதிசெல்லும் நாளில் அனைவர் முன்பாக சமாதிக்குள் செல்வார்கள் . பின்பு முறைப்படி கல பலகையால் முறைப்படி மூடி விடுவாரகள். . சமாதி சென்ற சித்தர் அவர் குறிப்பிட்ட நாளில் கல் பலகையை விலக்கிக்கொண்டு மேலே வருவார்
.
2.3 திரும்பிவராத சித்தர் சமாதி .
இவ்விதம் நிலசமாதி சென்று திரும்பிய சித்தர் மீண்டும் திரும்பிவராத சமாதி செல்வார் . இந்த நிலையில் உலகத்தவர்களிடம் தொடர்பு கொண்டு அவர்களை வழி நடத்தும் சிதர்கள் துரிய தியான நிலையில் சமாதி இருப்பார்கள் .
. .
எனவே சித்தர்களுக்கு இரண்டு சமாதி வுண்டு
..
போகர் பழனியில் சமாதி சென்றார் . சமாதியில் இருந்து திரும்பிவந்து வேறு தேசம் சென்றுவிட்டார் . அவர் மீண்டும் வருவார் என்று கோரக்கர் சந்திர ரேகை என்ற நூலில் சொல்லி உள்ளார் .
கோரக்கார் நாகபட்டினம் புதுபட்டுவில் ( பொய்கை புத்தூர் )சமாதிசென்று துரிய தியான நிலையில் இருப்பதாக சந்திர ரேகை நூலில் சொல்லி உள்ளார்
.
திருமூலர் சிதம்பரத்தில் சமாதி சென்றார் . . . காலங்கி அவரிடம் தியான நிலையில் சித்தர் கல்வி கற்றார் ..
.
காக புசுண்டர் சமாதி செல்லவில்லை . பிரளய காலத்தில் காக வடிவு பெற்று வாழ்வதாக சொல்லி உள்ளார் . காகவடிவு என்பது பரிபாசை . பஞ்ச பசசிகளில் காகம் என்பது. உகாரம்.. உகாரம் என்பது சக்தி . சக்திவடிவு என்பது ஒளி வடிவு . . .
. இராமதேவர் அரேபிய தேசம் சென்று யாகோப்பு என்று பெயரிடப்பட்டார் . அவர்களுக்கு சித்தர் கலை சொல்லிகொடுத்து சீடர்கள் உருவாக்கியபின் திரும்பிவரும் சித்தர் சமாதி சென்றார் . 30 ஆண்டுகள் சென்றபின் சமாதியில் இருந்து திரும்பி வந்தார் . அராபிய தேசத்தில் இருந்து மீண்டும் மதுரை அழகர் கோவில் வந்து தவம் செய்து திரும்பாத சமாதி சென்றார்,
2.4 சிலர் ஒளி உடலுக்கு செல்கிறார்கள் .
.
3. சீவன் முக்தி யோகசமாதி மற்றும் இருத்தி முகதி .
--------------------------------------------------------------------------------
3.1 சீவன் முக்தி
சமாதியே சொல்லுகிறேன் வசிஷ்ட நாதா
சந்ததிகள் லத்தனைக்கும் தெளிவதாக
சமாதியே நீயானாய் வெகுநாள் யோகி
சாகும் நாள் தெரிந்தவரே சமாதிதன்னில்
சமாதியே மண் மூடல் அறையாங்கல்லில்
தான் வைத்து மூடலல்ல ஒளியும்மல்ல
சமாதியே பிறர்காணா மறைவும்மல்ல
தானிறந்து உயிர் விடலுமில்லை
-காகபுசுண்டர் பெருநூல் காவியம் . பாடல் 673
அல்ல வென்றால் சமாதிநிலை உயிராம்மூச்சில்
அசைந்தாடும் சீவனுயிர் பிராணமூச்சு
சொல்லவென்றால் நூல் தோறும் சொல்லிவைத்தார்
சுகமுடனே தானிருந்து எங்கிடாமல்
நில்லவல்ல பேர்களுமே மூச்சோடாமல்
நிறுத்திடவும் தடுத்திடவும் உள்ளேதானே
செல்லவல்ல பேர்களுமே சிவன் மால் போல
தெந்தன மென்றாடலுமே உயிரின் சித்தே
-காகபுசுண்டர் பெருநூல் காவியம் . பாடல் 674
சித்தியா மிதுதானே சமாதியாகும்
சிவணானை மாலாணை சித்தி தானாம்
முக்தியே இதுதானே சீவன்முக்தி
காகபுசுண்டர் பெருநூல் காவியம் . பாடல் 675
பொருள்
சித்தர்களில் காக புசுண்டருக்கு தனி இடம் உண்டு . பிரலய காலத்திலும் . இறவாமை என்ற நிலை பெற்றவர் . பல பிரம்மாகளை சந்தித்தவர் .
காகபுசுண்டர் தனது சீடர் வசிஷ்டருககு சமாதியின் விவரங்கள் சொல்கிறார்
“ வசிஷ்டநாதா நமது சந்ததிகள் தெளிவு பெற சமாதி பற்றி விவரங்கள் சொல்கிறேன் .”
பலவித யோகசமாதியில் இருந்த யோகி தனது மரணத்தின் நேரத்தை அறிவார் . அவ்விதம் அறிந்தபின் தன்னை மான்னால் மூடிக்கொள்வது சமாதி இல்லை அல்லது கல்லறை கட்டி அமர்வது சமாதி இல்லை .ஒளிவுடல் பெற்று பிறர் அறியாமல் மறைந்து போவதும் சமாதி இல்லை .
தான் இறந்தபின் அடக்கம் செய்வதும் சமாதி இல்லை .
சமாதி பற்றி ஓவ்வொரு நூலிலும் பலவிதமாக சொல்லி வுள்ளாகள்
. இவையெல்லாம் சமாதி இல்லை என்றால் சமாதி என்பது எது என்று சொல்கிறேன் ..
எதற்கும் விரும்பாத யோகி , வாசி யோகா சமாதியை இன்பமாக செய்து பழகியவர் மட்டுமே பிராண ஓட்டம் அல்லது உயிரின் சித்து என்ற சமாதி செய்ய முடியும்
. உயிர் என்ற பிராணன் மூசசுக்குகாற்றில் இருந்து அது அசைந்தாடும் விதம் அறியவேண்டும் . அந்தமூசசு காற்று வெளியேயும் உள்ளேயும் ஓடவிடாமல் ( அதாவது பூரகம் ரேசகம் இல்லாமல் ) கும்பகம் மட்டும் செய்வது . இதன் படி மூசசு காற்ராகிய பிராணனை கும்பகத்திலே உள்ளுக்குளே ஓவ்வொரு ஆதார தளத்திலும் ஏற்றி அங்கங்கே தடுத்து நிறுத்தி, மூலாதாரத்தில் இருந்து சுழி முனைக்கு ஏற்றி மீண்டும் பிடரிவழியாக மூலாதாரத்திற்கு இறக்கி சுழல செய்வது .. இதன் பெயர் பிராண ஓட்டம் . . இந்த பிராண ஓட்டம் நடத்துவது என்பதே சமாதி. இதை செய்பவர் சிவனுக்கும் பெருமாளுக்கும் ஒப்பாக சித்து விளையாடுவார்கள் .. . இதுவே முக்தி . இது சீவன் முக்தி . அதாவது உயிருடன் முக்தி அடைதல் இது உயிரின் சிதது . .
இத்தகைய முக்தி அடைந்தவர் இன்று உள்ளாரா? பார்க்க முடியுமா .?
உள்ளார் . அவர் ராமானுஜர் . ஸ்ரீரங்கம் கோவிலில் வெளி பிரகாரத்தில் சுமார் 1000 ஆண்டுகளாக சீவன் முக்தராக அமர்ந்துள்ளார் . அவரை தரிசியுங்கள் .. இது உலக அதிசயம் . அவர் இந்த அறிவை பெற்றது காக புசுண்டரிடம் .
புசுன்டரின் மாணவர் வசிஷ்டர் . வஷிச்டரின் பேரன் பராசரர்,வசிஷ்டரிடம் காய சித்தி கற்றார் . பராசரர் பிரம சூத்திரம் என்ற நூல், உடல் அழியாமை பற்றி அல்லது காய சித்தி அல்லது மரணம் அற்ற தன்மை பற்றி பிரணவ சூத்திரம் என்ற நூல் எழுதினார் . . இந்த நூல் யாமுனாச்சாரியார் என்ற ராமானுஜரின் மானசீக குருவிடம் இருந்தது . இது பரிபாசையாக உள்ளது இதற்கு யாரும் பாஷ்யம் என்ற உரை எழுத முடியவில்லை
. யாமுனாச்சாரியார் இந்த நூலை ராமாநுஜரிடம் கொடுத்து உரை எழுத பணித்து மரணித்தார் . இதன்படி ராமானுஜர் இதற்க்கு உரை எழுதினார் . காய சித்தி என்ற சித்தர் கல்விகற்று சித்தர் வழி நடந்து சித்தராகி ஜீவன் முக்தராக இன்றும் நம்மிடம் இருக்கிறார் இந்தநூல் ஸ்ரீரங்கம் கோவிலில் இருக்க வாய்ப்பு உள்ளது .
3. . யோக சமாதி
-------------------------
காரியமான உபாதியை தான்கடந்து
தாரிய காரணம் ஏழுந்தான் பாலுற
ஆரியகாரண மாய தவத்திடை
தாரியால் தற்பரம் சேர்த்தல் சமாதியே .
திரு மூலர் திருமந்திரம் பாடல் 639
இறைவனை நமிடம் இருந்து பிரிக்கும் துன்பசெயளுக்கு காரணமாகிய காமம் , குரோதம் , மதம் , மாச்சர்யம் , ஆணவம் , மாயை , கன்மம் ஆகிய ஏழு காரணங்களை கடக்க வேண்டும் . ஆரிய காரணம் என்ற இறைவனை சேரவேண்டும் என்ற காரணத்திற்காக , இயம, நியம , ஆசன, பிராணாயாம,
பிரத்தியாகார ,தாரண , தியான ஆகிய ஏழு தவங்களை செய்யவேண்டும் . . இவ்விதம் ஏழு தவ நிலைகளை கடந்து தற்பரம் என்ற நம்முள் ஒளி வடிவாய் இருக்கும் இறைவனை சேர்தல் யோகா சமாதி .
எப்பொழுது இறைவன் ஒளி வடிவாய் தோன்றுவான் என்பதை திரு மூலர் சொல்கிறார் .
விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிட்டில்
சாந்தியி லான சமாதியில் கூடிடும்
அந்தமில்லாத அறிவின் அரும் பொருள்
சுந்தர சோதியும் தோன்றிடும் தானே .
-திரு மூலர் திருமந்திரம் பாடல்294
மனித பிறப்பில் மூலாதாரத்தில் சூரியகலை 1 2 கலை சக்தியாக அல்லது விந்து சக்தியாக உள்ளது . இடகலையில் சந்திர கலை 1 6 கலை சக்தியாக உள்ளது. இரண்டும் சமநிலை பெறவில்லை .. வாசி உருவாக்கி வாசி யோக பிராணாயாம் செய்தால் தாரைகளை என்ற விந்துசக்தி கொண்ட நான்கு கலை உருவாகும் . ஆக விந்துகளை 1 6 கலையாக இருக்கும் இம் மூன்றும் ஆறு ஆதார புள்ளிகளை கடந்து மேரு என்ற சுழிமுனை அடையும் இம்மூன்றும் நாதம் விந்து என்ற சமமான சக்தியாக சக்தி சமநிலை உச்சம் பெறும்
விந்து சக்தியும் நாத சக்தியும் மேரு என்ற சுழிமுனையில் உச்சம் பெறும் .இணையும் அப்போது சமாதிநிலை ஏற்பட்டு சமாதி கைகூடும். அப்பொழுது அறிவால் அறிய முடியாத அழகிய இறைசக்தி ஒளி வடிவில் தோன்றும் . இவ்விதம் இறைவன் ஒளிவடிவில் தோன்றும சமாதி நிலைகள் ஐந்து என்று அகத்தியர் சொல்கிறார் அவைகளை விளக்குகிறார் காகபுசுண்டர் மாணவர் ரோம ரிஷி இந்த ஐந்து வித சமாதி நிலை கண்டவர்கள் . கருணை மிக்க தேவரிஷி என்ற முனிவர் என்ற நிலை அடைந்தவர்கள் .
,
பாரப்பா சமாதிவகை அஞ்சுங் கேளு
பதிவான தத்துவய சமாதி யொன்று
சாரப்பா சவ்விகற்ப சமாதி யொன்று
சார்வான நிருவிகற்ப சமாதி யொன்று
நேரப்பா சஞ்சார சமாதி யொன்று
நிலையான ஆரூட சமாதி யொன்று
காரப்ப சமாதி அஞ்சும காத்தாயானால்
கருணையுள்ள தேவரிசி முனியே யாவாய்
-அகத்தியர் பூரண காவியம் அஷ்டாங்க யோகம் பாடல் 53
சமாதியாம் சவ்விகற்ப சமாதிகேளு
தனித்திடுதல் ரெண்டு வகை யதிலே யுண்டு
சமாதியஞ் சத்தானு வித்தை யொன்று
தரிப்பான திரவித்தை சமாதி யொன்று
புமாதியஞ் சாத்தானு வித்தை மார்க்கம் .
புதியதொரு கைவல்ய சமாதிக்குந் தான் .
பமாதியாம் சத்தங்கள் சாட்சி ஓசை
படுகிறது உன்மனதை பருவங் கேளே
-உரோமரிசி பரிபாசை 3 0 0 பாடல 45
பருவமருஞ் சத்தான வித்தை யொன்று
படியான சவ்விகற்பம் மென்று பேரு
சருவமான தன்னை அனுசந்தானம் பன்னி
சஞ்சரிக்கிற திரியானு வித்தை மார்க்கம்
துருவமாம் திரிசானு வித்தை மார்க்கம் .
சூச்சமா யந்த நிலைக்குள்ளே புக்கி
மருவமாம சவ்விகற்ப சமாதியாகும்
மருவியதோர் சஞ்சாரித் திருக்கிற் பாரே
-உரோமரிசி பரிபாசை 3 0 0 பாடல 46
பாரேநீ நிருவிகற்ப சமாதிகேளு
பாங்கான தத்வலய சமாதி முத்தி
தாறேநீ சத்தான வித்தை முத்தி
தனைமறந்து தூக்கமது மயக்கம் போலே
வாறேநீ பிறர் சத்தம் காதிர் கேளா
மருவியந்த பூரணத்தை லகித்து சித்தம்
நீரேநீ சைதன்ய மாகிப்போனால்
சமாதி என்ற நேர்மை ஆச்சு
-உரோமரிசி பரிபாசை 3 0 0 பாடல 47
ஐந்துவகை சமாதி நிலைகளை மேற் சொன்ன பாடல்களில் சொல்கிறார்கள் அகத்தியரும் ரோமரிசியும் அவற்றின் பொருள்களை பார்ப்போம் ..
1. சவ்விகற்ப சமாதி
-------------------------------
96 தத்துவங்களும் ஒடுங்க பெற்று தன்னுள் ஒளி காணல் நிலையில் ஓசை கேட்டல். இதை சாத்தானு வித்தை என்றும் சொல்லுவார்கள் . இதை கைவல்ய சமாதி என்பாருண்டு. . திரிசானு வித்தைஅல்லது திரவி விததை என்பார்கள்
2 சஞ்சார சமாதி
---------------------------
96 தத்துவங்களும் ஒடுங்க பெற்று தன்னுள் ஒளி காணல் நிலையான சவ்விகற்ப்ப சமாதியின் மற்றொரு நிலை . . இதில் சாதகர் தன்னை அணுவாக பிரித்து சஞ்சாரம் செய்வார் . இதற்கு அனுசந்தானம் .என்றுபெயர் . இவ்விதம் பிரபஞ்சபயணம் செய்தவர்களுள் திரு மூலரின் பிரபஞ்சபயணம் விரிவாக siddharyogam.com sidharசித்தர்யோகம். காம் siddharyogam.com வலைதளத்தில் சிததர் பற்றி பகுதியில் உள்ளது .
3. தத்துவய அல்லது தத்துவ சமாதி .
96 தத்துவங்களும் ஒடுங்க பெற்று தன்னுள் ஒளி காணல் நிலையான சவ்விகற்ப்ப சமாதியின் முதிர்ந்த நிலை . இதில் ஓசை அடங்கி விடும் மேற் சொன்ன மூன்று நிலை சமாதிகளில் தான் வேறு தெய்வம் என்ற பூரணமாகிய ஒளி வேறு என்ற உணர்வு இருக்கும் இது துவைத நிலை .
. .
4 .நிற்விகற்ப சமாதி.
---------------------------------
மேற்சொன்ன மூன்று நிலை முதிர்ந்தபின், தன்னுள் 9 6 தத்துவங்களும் ஓசையும் ஒடுங்கும் . இந்த நிலையில் ஒளியாகிய பூரனத்துடன் தன்னை ஒளியாகா மாற்றி இணைந்துவிடல் . இந்த நிலை தூக்கம் போன்றதும் மயக்கம் போன்றதும்மாகிய நிலை .. இது அத்வைத நிலை ஜிவாத்மாவும் பரமாத்வவும் இணைந்து இரண்டு அற்ற நிலை. அத்துவித நிலை . நான் சிவன் . தான் அவன் ஆதல் என்ற நிலை ..
இதில் நான்கு வைகளை சொல்லுவார்கள் அவை 4. 1. லயம் , 4.2 விட்சேபம்4 .3 மனோராசியம் , 4.4 சுவாகம் . ஆகியவை
4.1 லயம் .
தத்துவ சமாதி முதிர்ந்து படிப்படியாக தான் வேறு தெய்வம் வேறு என்ற எண்ணம் மறைந்துவிடுதல் ஒலியுடன் தத்துவங்கள் ஒன்ரறிவிடல் .
4.2 விட்சேபம்.
லயம் முதிர்ந்து ஒலியுடன் தத்துவங்கள் ஒன்றி சிறிது நேரம் உணர்வு அற்று தூங்கிய நிலை அடைந்து பிறகு விழித்தல் ..
4 3 மனோராசியம் ,
விட்சேபம். நிலைகடந்து மனதின் தொகுப்பான அந்தகரணங்கள் மயக்க நிலை அடைவது .
4.4 சுவாகம்
மனோராசியம் நிலைகடந்து அந்தகரணங்களும் அறிவும் ஒளியுடன் இணைந்து தானே ஒளியாதல் . தத்துவங்கள் ஒளியில் கரைந்துவிடும் .
தானே தற்பரம் என்ற தன்னுள் இருக்கும் இறைவனாக மாறல்.. ,
5 ஆரூட சமாதி.
--------------------------
மேற் சொன்ன நான்கு நிலை களை கடந்தபின் , மௌன யோகத்தில் அல்லது சஞ்சார சமாதி நிலையில் முதிர்ந்து தானே அகண்டமான பிரபஞ்சமாக மாறிப்போதல் தானே தொம்பதம் என்ற இறைவனாக மாறுதல் .
இந்த ஐந்து சமாதி நிலைகள் கைகூட செய்தால் நீ தேவரிசி என்ற முனி நிலை அடைவாய் .
இறை அருள் பெறுக !!!தான் அவன் ஆகுக!!!
சித்தர்களின் குரல்'s photo.

மனித உடலின் மகத்துவம்

                                         மனித உடலின் மகத்துவம்


  ஐந்து மண்டலங்கள்
===================
மனிதன், பஞ்ச பூதங்களாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றின் தன்மையால் ஆனவன், குழந்தையாகப் பிறந்து நிலத்தில் உழல்கிறான். உணவுப் பொருள்களில் நீரைச் சேர்த்து, நெருப்பில் இட்டு சுவையாக அருந்தி, இதமாக வருடிச் செல்லும் காற்றைச் சுவாசிக்கிறான். சந்தோஷமாக,வளமான வாழ்க்கையில் தன்னை மறந்த நிலையில் அவன் ஆகாயத்தில் ஆனந்தமாகப் பறக்கிறான்.
ஒரு மனிதனை, பஞ்ச பூதங்கள் அரவணைத்துச் சென்றால் அவன் வாழ்கிறான் இல்லையெனில், நிலத்தில் சடலமாக வீழ்கிறான். ஒருவனுடைய உயிர், நீரோட்டம் போன்றது. உயிரற்ற உடலை மண்ணில் புதைப்பதும், நெருப்பில் எரிப்பதும் நிகழ்கிறது. மண்ணில் புதைத்தாலும்,எரித்தாலும் உயிரானது காற்றில் கலந்து, ஆகாயத்துக்குச் சென்றுவிடுகிறது.
உடலை வைத்துத்தான் இந்த உலகத்தில் நமக்கு இருப்பிடம். இதை எல்லோரும் உணர வேண்டும். ஒருவரின் லட்சியங்கள் எவ்வளவு உயர்ந்ததாக வேண்டுமானலும் இருக்கலாம். ஆனால் உடல் நலம் ஒத்துழைக்கவில்லை என்றால், பாதிக்கிணறு தாண்டிய கதைதான். எனவே, உடலைப் பாதுகாத்து, நோயில்லா நெறியை நமக்கு நாமே உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
சித்தர் பாடல்
===========
:
‘கூறுவேன் தேகமது என்னவென்றால்
குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி
மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு
வன்மையுடன் நரம்பினால் வலித்துக் கட்டி
தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி
தேற்றமுடன் அதன் மேலே தோலை மூடி
ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி
அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே’
மனித உடலில் ரகசியத்தைச் சொல்லும் இந்த எட்டு வரி பாடலில் மனிதனுடைய உடலைப் பற்றிய சித்தர்களின் நுண்ணறிவு துல்லியமாக மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது.
உடல் என்பது, எலும்புகளை கை கால்களைப் போட்டு நீட்டி வைத்து, அவற்றின் ’இருப்பிடம்’ மாறிவிடாமல் இருக்க நுண்ணிய துவரங்களால் இணைத்து, நரம்புகளால் இழுத்துக் கட்டி, தோலால் மூடி, அவற்றுக்கு இடையே தசைகளைச் சேர்த்து, ரத்தத்தை ஊற்றி, உள்ளே வாயு எனப்படும் பிராணனை உள்ளடக்கி, உடல் என்ற ஓர் உருவம் உருவாக்கப்பட்டிருப்பதாக மேற்கண்ட சித்தர் பாடல் நமக்கு விவரிக்கிறது.
மேலே உள்ள சித்தர் பாடலின் விளக்கம்
_______________________________________
எலும்புதனை – எலும்பு மண்டலம்
நரம்பினால் – நரம்பு மண்டலம்
இரத்தமதை -ரத்த ஓட்ட மண்டலம்
தோலை மூடி -தசை மண்டலம்
வாய்வுதலை – மூச்சு மண்டலம்
அதாவது, இந்த ஐந்து மண்டலங்களால்தான் தேகம் என்ற உடல், கடமையின் பொருட்டு இந்த உலகில் நடமாடுவதாக சித்தர்கள் கூறுகின்றனர். இந்த மண்டலங்கள் ஒவ்வொன்றும் தமது பணியைச் சரிவர செய்துவந்தால்தான், நாம் உயிரோடு இருக்கிறோம் என்பதை நாமே உணர முடியும்.
ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள உறுப்புகள் அந்த மண்டலத்தில் உள்ள மற்ற உறுப்புகளோடும்,வேறு மண்டலத்தில் உள்ள மற்ற உறுப்புகளோடும் ஏதாவது ஒரு வகையில் ‘இணைந்திருக்கிறது’. உதாரணத்துக்கு, உடலில் எலும்புகள் உறுதியாகவும், வலுவாகவும் இருந்தால், நரம்புகளும் தன்னளவில் தளர்வில்லாமல் உறுதியாகவும்,வலுவாகவும் இருக்கும்.
நரம்புகளும் எலும்புகளும் உறுதியாக, வலுவாக இருக்கும் பட்சத்தில் ரத்தக் குழாய்களில் ரத்தம் எந்தத் தடையும் இல்லாமல் சுற்றி வரும். முறையான ரத்தச் சுழற்சியினால், இதயம் என்றும் இளமையுடன் தனது சுத்திகரிப்பு பணியைச் செய்யும்.
ரத்தச் சுழற்சியை முறையாக இயக்கும் பெரிய பொறுப்பு தசைகளைச் சார்ந்தது. அந்தத் தசை மண்டலத்துக்கு, எலும்பு, நரம்பு, ரத்த ஓட்ட மண்டலங்கள்தான் ஆதாரம்.
ஆக, இதில் இருந்து நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால்,எலும்பு, நரம்பு, ரத்தம், தசை இவற்றின் நிலைத்த தன்மை,உறுதி,செயல்படும் தன்மை ஆகியவற்றை வைத்தே வாயு எனப்படும் மூச்சு, உயிராக உடலில் நிலைக்கொள்ளும்.
அந்தவகையில், இந்த ஐந்து மண்டலங்களின் அடிப்படையில் உருவான மனித உடலை உலகில் நிலைநிறுத்தும் உன்னத பணியை இன்னும் சில மண்டலங்கள் செய்கின்றன. அவைகளை ஒவ்வொன்றாக இனி காணலாம்
தொடரும்..............
சித்தர்களின் குரல்'s photo.

மனித உடலின் மகத்துவம்

                                   மனித உடலின் மகத்துவம் 
  எலும்பு மண்டலம்:
==================
மனித உடலுக்கு ஆதாரமாகவும் , அஸ்திவாரமாகவும், இருப்பவை எலும்புகளே உடலில் உள்ள எல்லா எலும்புகளும் அதனை இணைக்கும் மூட்டுகளும் சேர்ந்ததே எலும்பு மண்டலம் .
உடலுக்கு ஒரு ஒழுங்கான வடிவமைப்பிற்கு காரணமாகவும் தன் சீரான செயல்பாட்டிற்கு துணை புரிபவையும் எலும்புகளே.
உடலில் உள்ள 7 தாதுக்களிலும் மிகக் கெட்டியானதாகவும் , பலம் உடையதாக இருப்பவை எலும்புகளே. எலும்புகளால்தான் நாம் நேராக நிற்கவும், உருவத்தை பெறவும், வலிமையை பெறவும், இயக்கம் பெறவும் முடிகிறது.
நமது எலும்புக்கூடு பல்வேறுபட்ட எலும்புகளாலும், எலும்புகளின் இணைப்புகளாலும் உருவானதாகும். இணைக்கும் திசுக்களிலேயே கடினமாக அமைந்து இருப்பது எலும்பு ஆகும். எலும்புகளானது 50 சதவீதம் தண்ணீரும், 25 சதவீதம் கால்சியம் எனப்படும் சுண்ணாம்பும், 25 சதவீதம் செல்களாலும் ஆனவை.
ஒரு சாதாரண வளர்ந்த மனிதனுடைய எலும்புக்கூடு 206 ஆகும். (மார்பெலும்பு மூன்று பகுதிகளாகக் கருதப்பட்டால் 208) எண்ணிக்கையான எலும்புகளைக் கொண்டிருக்கும். இந்த எண்ணிக்கை உடற்கூட்டியல் வேறுபாடுகளைப் பொறுத்து மாறுபடக்கூடும்.
எடுத்துக்காட்டாக, மிகக் குறைந்த எண்ணிக்கையான மனிதர்களில், ஒரு மேலதிக விலா எலும்பு (கழுத்துவில்) அல்லது ஒரு மேலதிகமான கீழ் முதுகெலும்பு காணப்படுவதுண்டு, இணைந்த சில எலும்புகளைத் தனி எலும்பாகக் கருதாவிடின், ஐந்து இணைந்த திருவெலும்பு; மூன்று (3 - 5) குயிலலகு எலும்புகள் சேர்ந்து 26 எண்ணிக்கையிலான முதுகெலும்புகள் 33 ஆகக் கருதப்படலாம். மனித மண்டையோட்டில் 22 எலும்புகள் (காதுச் சிற்றெலும்புகளைத் தவிர) உள்ளன; இவை 8 மண்டையறை (cranium) எலும்புகளாகவும் 14 முக எலும்புகளாகவும் (facial bones) பிரிக்கப்பட்டுள்ளன.
மனித எலும்புக்கூடு
****************************
மண்டையறை எலும்புகள் (8)
----------------------------------------------------
நுதலெலும்பு (frontal bone) (1)
சுவரெலும்பு (parietal bone) (2)
கடைநுதலெலும்பு (temporal bone) (2)
பிடர் எலும்பு (occipital bone) (1)
ஆப்புரு எலும்பு (sphenoid bone) (1)
நெய்யரியெலும்பு (ethmoid bone) (1)
முக எலும்புகள் (14)
-----------------------------------
கீழ்த்தாடை எலும்பு (mandible)(1)
மேற்றாடை எலும்பு (maxilla) (2)
அண்ணவெலும்பு (palatine bone) (2)
கன்ன எலும்பு (zygomatic bone) (2)
நாசி எலும்பு (nasal bone) (2)
கண்ணீர் எலும்பு (lacrimal bone) (2)
மூக்குச் சுவர் எலும்பு (vomer)
கீழ் மூக்குத் தடுப்பெலும்பு (inferior nasal conchae) (2)
நடுக்காதுகளில் (6):
----------------------------------
சம்மட்டியுரு (malleus) (2)
பட்டையுரு (incus) (2)
ஏந்தியுரு (stapes) (2)
தொண்டையில் (1):
--------------------------------
தொண்டை எலும்பு (நாவடி எலும்பு) (hyoid)
தோள் பட்டையில் (4):
---------------------------------------
காறை எலும்பு (clavicle) (2)
தோள் எலும்பு (scapula) (2)
மார்புக்கூட்டில் thorax(25):
------------------------------------------
மார்பெலும்பு (sternum) (1)
மேலும் மூன்று எலும்புகளாகக் கருதப்படலாம்: பிடியுரு (manubrium), உடல் மார்பெலும்பு (body of sternum), வாள்வடிவ நீட்டம் (xiphoid process)
விலா எலும்புகள் (rib) (24)
முதுகெலும்புத் தூண் (vertebral column) (33):
கழுத்து முள்ளெலும்புகள் (cervical vertebra) (7)
மார்பு முள்ளெலும்புகள் (thoracic vertebra) (12)
நாரிமுள்ளெலும்புகள் (lumbar vertebra) (5)
திரிகம் (திருவெலும்பு) (sacrum)
வால் எலும்பு (குயிலலகு) (coccyx)
மேற்கைகளில் (arm) (1):
----------------------------------------
புய எலும்பு (மேல்கை எலும்பு) (humerus)
புய எலும்புப் புடைப்பு (மேல்கை எலும்புப் புடைப்பு) (condyles of humerus)
முன்கைகளில் (forearm) (4):
---------------------------------------------
அரந்தி (ulna) (2)
ஆரை எலும்பு (radius) (2)
ஆரை எலும்புத் தலை (head of radius)
கைகளில் (hand) (54):
-----------------------------------
மணிக்கட்டுகள் (carpal):
-----------------------------------------
படகெலும்பு (scaphoid) (2)
பிறைக்குழி எலும்பு (lunate) (2)
முப்பட்டை எலும்புtriquetrum) (2)
பட்டாணி எலும்பு (pisiform) (2)
சரிவக எலும்பு (trapezium) (2)
நாற்புறவுரு எலும்பு (trapezoid) (2)
தலையுரு எலும்பு (capitate) (2)
கொக்கி எலும்பு (hamate) (2)
அங்கை முன்னெலும்புகள் (அனுமணிக்கட்டு எலும்புகள்) (metacarpal): (5 × 2)
விரலெலும்புகள் (phalange):
-------------------------------------------------
அண்மை விரலெலும்புகள் (proximal phalanges) (5 × 2)
நடு விரலெலும்புகள் (Intermediate phalanges) (4 × 2)
தொலை விரலெலும்புகள் (distal phalanges) (5 × 2)
இடுப்புக்கூடு (pelvis) (2):
--------------------------------------
இடுப்பெலும்பு (ilium) மற்றும் கீழ் இடுப்பெலும்பு (ischium
கால்கள் (leg) (8):
------------------------------
தொடையெலும்பு (femur) (2)
இடுப்பு மூட்டு (hip joint) (மூட்டு, எலும்பல்ல)
பெரிய தொடையெலும்புக் கொண்டை (greater trochanter of femur)
தொடையெலும்புப் புடைப்பு (condyles of femur)
சில்லெலும்பு (patella) (2)
கால் முன்னெலும்பு (கணைக்காலலுள்ளெலும்பு) (tibia) (2)
சிம்பு எலும்பு (கணைக்கால்வெளியெலும்பு) (fibula) (2)
காலடிகளில் (52):
----------------------------
கணுக்காலெலும்புகள் (tarsal):
-------------------------------------------------
குதிகால் (calcaneus) (2)
முட்டி (talus) (2)
படகுரு எலும்பு (navicular bone) (2)
உள் ஆப்புவடிவ எலும்பு (2)
இடை ஆப்புவடிவ எலும்பு (2)
வெளி ஆப்புவடிவ எலும்பு (2)
கனசதுர எலும்பு (cuboidal bone) (2)
அனுகணுக்காலெலும்புகள் (metatarsal) (5 × 2)
விரலெலும்புகள் (phalange):
---------------------------------------------
அண்மை விரலெலும்புகள் (proximal phalanges) (5 × 2)
நடு விரலெலும்புகள் (intermediate phalanges) (4 × 2)
தொலை விரலெலும்புகள் (distal phalanges) (5 × 2)
எலும்பின் உட்கூறுகள் யாவை?
எலும்பானது இருவகை எலும்புத் திசுக்களால் ஆனது. அதன் வெளிப்புறத்தில் எலும்புச் சவ்வு (periosteum) எனப்படும் ஒரு வகைத் தோல் பகுதி அமைந்துள்ளது. இதன் கீழே தடிமனான, அடர்த்தி மிக்க, ‘திடவடிவிலான எலும்பு’ எனப்படுகிற மெல்லிய அடுக்கு (layer) ஒன்று அமைந்துள்ளது. இதுவே கடினமான அல்லது உறுதியான எலும்புத் திசுவாகும்.
இதற்கு உட்புறம் எலும்பின் நடுப்பகுதியான வேறொரு எலும்புத் திசு பஞ்சு அல்லது தேன்கூடு அமைப்பில் அமைந்துள்ளது. இதில் இடைவெளிகளும், துளைகளும் உள்ளன; இதனை பஞ்சு அமைப்பிலுள்ள அல்லது குழிவுகளைக் கொண்ட எலும்புத் திசு என அழைப்பர். இது வெளிப்புறம் இருக்கும் எலும்புத் திசுவை விட மிகவும் மென்மையானது; இதன் இடைவெளிகளில் புதிய இரத்த அணுக்களை உருவாக்கும் நாளங்களும், பாகு போன்ற எலும்புச் சோறும் (marrow) அமைந்துள்ளன.
சாதாரண மனித உடலில் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் சிலரிடம் 12 இணை விலா எலும்புகளுக்குப் (Ribs) பதிலாக 13 இணைகள் இருப்பதுண்டு; இதனால் அத்தகையோர்க்கு மொத்தத்தில் 208 எலும்புகள் இருக்கும்.
நமது உடலை ஒரு கட்டிடமாக உருவகப்படுத்திப் பாருங்கள்.
எலும்பின் முக்கியமான மூலப்பொருள் (சத்து) கால்சியம் எனப்படும் சுண்ணாம்பு. பழங்கால வீடுகளுக்கு சுண்ணாம்பு எனப்படும் வெந்த கற்களை (இன்றைய சிமெண்டுக்கு மாற்று) பாலில் நீர்த்து, அத்துடன் கடுக்காய், பனை வெல்லம் சேர்த்து குழைத்துக் கட்டடம் எழுப்புவர்.
வேகவைத்த சுண்ணாம்புக் கற்களை பால், இளநீர் சேர்த்து கரைப்பதால், பாலில் உள்ள சுண்ணாம்புச் சத்தும் (CALCIUM), இளநீர் உள்ள சுண்ணாம்புச் சத்து சேர்த்து சுண்ணாம்புக் கற்களுக்கு மேலும் வலுசேர்க்கின்றன. இத்துடன் நின்று விடவில்லை. கடுக்காய் சேர்க்கப்படுகிறது. அந்தக் கடுக்காயில் என்ன இருக்கிறது?.
சுண்ணாம்புச் சத்தை இரும்பைப்போல் இறுத்தும் தன்மை கடுக்காய்க்கு உண்டு. கடுக்காயின் துவர்ப்புத்தன்மை, சுண்னாம்புச் சத்துடன் சேரும் போது கட்டடத்தின் ஆயுள் நீட்டிக்கப்படுகிறது. எல்லாம் சரி, பனை வெல்லம் சேர்ப்பது ஏன்?.
பனை மரத்தின் சீவிய பாளையில் இருந்து கிடைக்கும் பதநீருடன் தக்க அளவில் சுண்ணாம்பு சேர்த்து காய்ச்சிக் கிடைப்பதுதான் பனை வெல்லம். பனை வெல்லத்தில் உள்ள இனிப்புத்தன்மைக்குப் பதநீரும், சுண்ணாம்பும் தான் காரணம். பதநீரின் துவர்ப்பு, சுண்ணாம்பு இரண்டும் பனை வெல்லத்தில் இருப்பதால், இதைக் கடுக்காயுடன் சேர்த்து தூளாக்கி, சுண்ணாம்புடன் கலந்து வீடு அல்லது கட்டடம் கட்டும்போது அது உறுதியாக, பல நூறு ஆண்டுகள் நிலைத்திருக்கும்.
சுண்ணாம்பு (இயற்கைதாது) +பால் (இயற்கை) +இளநீர் (இயற்கை) +கடுக்காய் (இயற்கை) +பனை வெல்லம் (இயற்கை) என, இயற்கை மூலகங்களால் உண்டான கட்டடங்களே பல நூறு ஆண்டுகள் உறுதியுடன் இருக்கும் போது, இயற்கை மூலகங்களில் கிடைக்கும் சுண்ணாம்புச் சத்தை நாம் உணவாகவோ, மருந்தாகவோ சாப்பிடும்போது நமது எலும்புகள் பலம் பெற்று, உறுதியாகி, உடல் வலிமையோடு நூறு ஆண்டுகள் வாழ முடியும் இல்லையா?.
ஆக, எலும்புகள் உறுதி பெற, இயற்கை மூலகங்களில் சுண்ணாம்புச் சத்து நிறைந்துள்ள மூலிகைகள் மற்றும் உணவுகளைத் தொடந்து சாப்பிட்டு வந்தால் எலும்புகளில் உண்டாகும் கோளாறுகள் மற்றும் குறைபாடுகள் நீங்கும்.
சித்தர்களின் குரல்'s photo.
                                                   மனித உடலின் மகத்துவம்


  நரம்பு மண்டலம்
=================
மனித உடம்பில் நரம்பு மண்டலம் ஓர் அதிசயம். மூளையும், தண்டுவடமும், அவற்றில் இருந்து புறப்படும் பல நரம்புகளும் இதில் அடக்கம்.
மூளையில் இருந்து 12 ஜோடி நரம்புகள் புறப்படுகின்றன. சுண்டுவிரல் அளவுக்குத் தடிமன் உள்ள தண்டுவடம் மூளையின் அடிப்பாகத்தில் இருந்து தலையின் துவாரம் வழியாகச் செல்லும் வடமாகும். முதுகு எலும்புகள் நடுவில் துவாரம் உள்ளவை, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டவை. அவற்றின் வழியாக சுமார் 18 அங்குல நீளமுள்ள தண்டுவடம், முதுகின் அடிப்பாகம் வரை நீண்டிருக்கிறது. இதில் இருந்து 31 ஜோடி நரம்புகள் கிளம்புகின்றன.
காட்சி, கேள்வி, சுவை, மணம் ஆகியவற்றுடன் மூளை நரம்புகள் பிரதானமாகச் சம்பந்தப்பட்டிருக்கின்றன. தண்டுவடம், மூளை, அவற்றின் நரம்புகள் ஆகியவை உணர்ச்சிகளையும், அசைவுகளையும் தீர்மானிக்கின்றன என்று சுருக்கமாகச் சொல்லி விடலாம்.
மூளையும், தண்டுவடமும் மைய நரம்பு மண்டலமாக (Central nervous system) அமைகின்றன. மூளையில் இருந்து வரும் 12 ஜோடி நரம்புகளும், தண்டுவடத்தில் இருந்து புறப்படும் 31 ஜோடி நரம்புகளும் மேற்பரப்பு (Peripheral nervous system) நரம்பு மண்டலம் ஆகும்.
மூன்றாவதாகக் குறிப்பிட வேண்டியது, தன்னியக்க நரம்பு மண்டலம் (Autonomic nervous system). இதை மேற்பரப்பு மண்டலத்தின் சிறப்புப் பகுதி எனலாம். மூளையின் கட்டுப்பாடு இன்றித் தாமே நிகழும் சுவாசம், செரிமானம் முதலியவற்றை முறைப்படுத்துவது தன்னியக்க மண்டலம்.
இந்த தன்னியக்க நரம்பு மண்டலத்தில் இரு பிரிவுகள் உள்ளன
• பரிவு நரம்பு மண்டலம் (Sympathetic Nervous System)
• அனுபரிவு நரம்பு மண்டலம் (Parasympathetic Nervous System)
இவை இரண்டும் எதிரெதிர் செயல்களை செய்ய கூடியவை
உதாரணமாக பரிவு நரம்பு மண்டலம் தூண்டப்பட்டால் கண்களின் பாப்பா விரிவடையும். அனுபரிவு மண்டலம் தூண்டப்பட்டால் கண்களின் பாப்பா சுருங்கும்.
பரிவு மண்டலம் தூண்டப்பட்டால் இதய துடிப்பு அதிகரிக்கும். அனுபரிவு மண்டலம் தூண்டப்பட்டால் இதய துடிப்பு குறையும்.
பரிவு மண்டலம் தூண்டப்பட்டால் உணவு பாதை மற்றும் குடலுக்கு செல்லும் இரத்த ஓட்டம் குறையும், அனுபரிவு மண்டலம் தூண்டப்பட்டால் உணவு பாதை மற்றும் குடலுக்கு செல்லும் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
பரிவு மண்டலம் தூண்டப்பட்டால் வியர்வை அதிகரிக்கும். அனுபரிவு நரம்பு மண்டலம் இயங்கினால் உமிழ்நீர் மற்றும் உணவு பாதை, குடல் ஆகியவற்றிலுள்ள உணவை செறிக்கும் திரவங்கள் அதிகம் சுரக்கும்.
பரிவு நரம்பு மண்டலம் தூண்டப்பட்டால் வாய் உலர்ந்து விடும். அனுபரிவு மண்டலம் தூண்டப்பட்டால் நாக்கில் எச்சில் ஊறும்.
அனுபரிவு நரம்பு மண்டலத்தின் நரம்புகள் மூளையில் பொது உடலுள்ளுறுப்புக்குரிய அகல் நரம்பு மையம் என்று அழைக்கப்படும் நரம்பு மையங்களில் (Nuclei) இருந்து துவங்குகின்றன.
மனித உடலில் இந்த பொது உடலுள்ளுறுப்புக்குரிய அகல் நரம்பு மண்டலத்தில் கீழ்க்காணும் நரம்பு மையங்கள் இருக்கின்றன.
எடிங்கர் வெஸ்ட்பால் நரம்பு மையம் (Edinger Westphal Nucleus) அல்லது உதவி விழியிக்க நரம்பு மையம் (accessory oculomotor nucleus).
இதிலிருந்து வரும் நரம்பு கண்களில் உள்ள பாப்பாவிற்கு சென்று இந்த மையம் தூண்டப்பட்டால் பாப்பா சுருங்கும்.
மேலுள்ள உமிழ்நீர் (Superior Salivatory) நரம்பு மையம்
இதிலுள்ள நரம்பு மேண்டிபிலுக்கு அடியில் உள்ள உமிழ்நீர் சுரப்பி (Submandibular Salivary Gland) மற்றும் நாக்கின்கீழுள்ள (Sublingual) உமிழ்நீர் சுரப்பி ஆகியவற்றிற்கு செல்கிறது. இந்த நரம்பு மையம் தூண்டப்பட்டால் இவ்விரு சுரப்பிகளிலிருந்தும் உமிழ்நீர் சுரக்கிறது.
கீழுள்ள உமிழ்நீர் (Inferior) நரம்பு மையம்
இதிலுள்ள நரம்பு பரோட்டிட் உமிழ்நீர் சுரப்பி சென்று இந்த நரம்பு மையம் தூண்டப்பட்டால் பரோட்டிட் சுரப்பியிலிருந்தும் உமிழ்நீர் சுரக்கிறது.
கண்ணீர் (Lacrimatory) நரம்பு மையம்
இந்த மையத்திலிருந்து நரம்பு கண்ணீர் சுரப்பி செல்கிறது.
வேகஸ் நரம்பின் பின் (இயக்க) மையம் Dorsal (Motor) Nucleus of Vagus
இதிலிருந்து தான் இதயம் முதல் உணவு பாதையில் பெருபகுதி உட்பட நரம்புகள் செல்கின்றன.
இதில் முக்கிய விஷயங்கள்
1. இந்த ஐந்து மையங்களும் ஒரே வகை செல்களிலிருந்து தோன்றியவை.
2. கண்ணீர் நரம்பு மையம் உமிழ்நீர் நரம்பு மையத்திற்கு வெகு அருகில் இருக்கிறது.
தன்னியக்க மண்டலம் என்று கூறினாலும் இது மைய நரம்பு மண்டலத்துடன் உறவில்லாமல் தனியாட்சி நடத்தவில்லை.
தன்னியக்க மண்டலச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நரம்பு மையங்கள் மைய நரம்பு மண்டலத்திலேயே உள்ளன.
இரண்டு மண்டலங்களின் செயல்களைச் செம்மையாக ஒத்திசைவு காணச் செய்வது மைய நரம்பு மண்டலம்.
நரம்பு மண்டலம் இடைவிடாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. உடலின் சகல பாகங்களில் இருந்தும், தண்டுவடத்துக்கும், மூளைக்கும் செய்தி சென்று கொண்டிருக்கிறது. அதைப் போலவே மூளையில் இருந்தும், தண்டுவடத்தில் இருந்தும் செய்திகள் உடலின் பல பாகங்களுக்குப் போய்க் கொண்டே இருக்கின்றன.
நரம்பு மண்டலம் இருவகை நரம்புகளால் அமைந்தது. ஒருவகையான உணர்வு (sensory) நரம்புகள், செய்தியை மூளைக்கோ, தண்டுவடத்துக்கோ கொண்டு செல்வதால் உட்செல் (afferent) நரம்புகள் எனப்படும்.
இன்னொரு வகை நரம்புகள் மூளை அல்லது தண்டுவடத்தில் இருந்து உடல் உறுப்புகளுக்கு செய்திகளைக் கொண்டு செல்வதால் அவை வெளிச்செல் நரம்புகள் எனப்படும். அவற்றை செயல் (motor) நரம்புகள் என்றும் கூறுவர்.
இந்த இருவகை நரம்புகளும் சேர்ந்தாற்போல் அமைந்துள்ளன. இவற்றின் போக்குப் பாதையும், வரத்துப் பாதையும் இரண்டு இருப்புப் பாதைகள் அடுத்தடுத்து இருப்பதைப் போல உள்ளன. இந்த நரம்பு மண்டலங்கள் எல்லாம் இணைந்துதான் நம் உடம்பை இயக்குகின்றன.
நமது உடலை ஒரு கட்டிடமாக உருவகப்படுத்திப் பாருங்கள்.
சுண்ணாம்பு சேர்த்து கட்டப்படும் கட்டடம் மேலும் உறுதியுடன் இருக்க, வைரம் பாய்ந்த மரங்களைப் பயன்படுத்துவார்கள். இன்றைய காலகட்டத்தில், வீடுகள் கட்டுவதற்கு, செங்கல், சிமெண்ட், இரும்புச் சத்து உள்ள மருந்துகளும் வழங்கப்படுவதைக் கருத்தில்கொள்ளலாம்.
இதில் இருந்து நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால், இரும்புச் சத்தின் மூலம் நமது உடல் நரம்புகளை முறுக்கேற்றலாம் என்பதுதான். இதனால்தான், சித்த மருந்துகளில் நரம்பு மண்டலம் சார்ந்த நோய்களுக்கு, இயற்கை மூலகங்களில் இரும்புச் சத்து அதிகம் உள்ள மூலிகைகளை வகைப்படுத்தியும், இரும்பு போன்ற இயற்கைத் தாதுக்களை முறைப்படி பஸ்பமாக செய்தும் வழங்கி வருகிறார்கள்.
வைரம் பாய்ந்த மரக்கட்டைக்கும் இரும்புக்கும் என்ன தொடர்பு?.
சந்தேகம் எழலாம்.
நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நிற்கும் மரங்கள் சில உண்டு. கருங்காலி, கருவேங்கை, தேக்கு பொன்ற மரங்கள் இந்த வகையைச் சேர்ந்தவை. இந்த மரங்களை அவ்வளவு எளிதாக, சாதாரான மரங்களை வெட்டும் கோடாரியால் வெட்ட முடியாது. அந்த அளவுக்கு மரத்தின் அடிப்பாகம், கிளைகள் எல்லாம் இரும்பைப் போன்று வலுவோடும் உறுதியோடும் இருக்கும்.
அத்தகைய மரக்கட்டைகளை உடைத்து துண்டுகளாக்கி, கஷாயம் செய்து, அதைப் பல மடங்குகளாகச் சுண்டச் செய்து, அந்த மரத்தின் இரும்புத்தன்மையை மருந்தாக மாற்றுவது சித்தர்களின் மரபு. இப்படி மருந்துகளைத் தயார் செய்து சாப்பிட்டால், நமது உடலில் நரம்புகள் இறுகி நன்கு முறுகேறும். எலும்பும், நரம்பும் இறுகிய உடலில் ரத்தக் குழாய்கள் தங்களுடைய பணியைச் செவ்வனே செய்யும்.
இடன் அடிப்படையில்தான், நரம்புகளைப் பலப்படுத்தும் மருந்துகளும், உணவுகளும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
தொடரும்.........
சித்தர்களின் குரல்'s photo.
                                                    மனித உடலின் மகத்துவம்

  இரத்த ஓட்ட மண்டலம்
=======================
நமது உடலில் ஓடும் ரத்தம்தான் உயிரோட்டமான வாழ்க்கைக்கு அஸ்திவாரம். ஒருவனுடைய உடலில் வளமையான ரத்தம் தேவையான அளவில் சுழன்று கொண்டிருந்தால், அவன் அபார தன்னம்பிக்கை கொண்டவனாகவும், எதற்கும் பயப்படாதவனாகவும் இருப்பான்.
இளமைப் பருவம் என்பது வளரும் பருவங்களில் மிக முக்கியமானது. வளர்ந்து வாலிப வயதை அடையும் போது , நமது உடலில் ரத்தம் மிகவும் வன்மையுடன் இருக்கும். இளமையில் உண்டாகும் அற்புதமான ரத்த ஓட்டத்தினால், மனமகிழ்ச்சி, மனக்களிப்பு, எதிர்பால் ஈர்ப்பு போன்றவை ஏற்படுகின்றன. இதயம், அன்பு, காதல் போன்ற வார்த்தைகளை உச்சரிக்கும் உதடுகளுக்குச் சொந்தமான உடலில் ரத்த ஓட்டம் ஒரு பகுதி கூடுதலாகவே இருக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை. ஆக, நமது உடலில் சுறுசுறுப்பை ஏற்படுத்துவது ரத்தம்தான்.
இரத்த ஓட்ட மண்டலம் மூன்று பகுதிகளாக செயல்படுகின்றன. அவைகள் இதயம், நுரையீரல், மற்றும் கல்லீரல் இரத்த ஓட்டம் ஆகும்.
இருதயம்;-
==========
இருதயம் மூன்று நிலைகளில் இயங்குகிறது.இதயம் சுருங்குவது சிஸ்டோலி என்று பெயர்.இதனால் இரத்தம் அழுத்தப்பட்டு தமனிகள் வழியாக உயிர்க்காற்றையும்,உணவுச்சத்துக்களையும் அனைத்து உறுப்புகளுக்கும் செலுத்தப்படுகிறது. இதயம் விரிவடைவதற்கு டயஸ்டோலி என்று பெயர்.இதனால் அனைத்து உறுப்புகளிலிருந்தும் கழிவுகளானஅசுத்த இரத்தங்கள் சிரைகள் வழியாக இருதயத்திற்கு வருகிறது. மூன்றாவது நிலை ஓய்வு நிலை ஆகும். ஒவ்வொரு முறை இதயம் சுருங்கும்போது 60cc இரத்தம் இறைக்கப்படுகிறது. ஒரு நிமிடத்திற்கு சுமார் நான்கு லிட்டர் இரத்தம் இறைக்கப்படுகிறது.
நுரையீரல் இரத்த ஓட்டம்;-
========================
உடலின் மேற்பாகத்தில் இருந்து மேல் பெருஞ்சிரையின் மூலமாகவும்,உடலின் கீழ்ப்பாகத்திலிருந்து கீழ் பெருஞ்சிரையின் மூலமாகவும் வரும் அசுத்த இரத்தம் இதயத்தின் வலது ஏட்ரியத்திற்குள் கொண்டு வரப்பட்டு வலது ஏட்ரியம் சுருங்கி வலது வெண்டிரிக்கிள் க்குள் இரத்தத்தை செலுத்துகிறது. பிறகு வலது வெண்டிரிக்கிள் சுருங்கி அசுத்த இரத்தத்தை நுரையீரல் தமனி வழியாக நுரையீரலுக்குள் செலுத்தப்படுகிறது. நுரையீரலின் செயல்பாட்டால் இரத்தம் சுத்தம் செய்யப்பட்டு நுரையீரல் சிரை வழியாக மீண்டும் இதயத்தின் இடது ஏட்ரியம் பகுதிக்குள் செலுத்தப்படுகிறது. இடது ஏட்ரியம் சுருங்கி இடது வெண்டிரிக்கிள் பகுதிக்கு செலுத்தப்படும் இரத்தம் வெண்டிரிக்கிள் சுருங்குவதால் இதய தமனி வழியாக சுத்தம் செய்த இரத்தம் உடலின் பிற பாகங்களுக்கு செல்கிறது. இவ்வாறாக நுரையீரலில் இரத்த ஓட்டம் நடைபெறுகிறது. இங்கு ஒரு வேறுபாட்டினை அறிந்து கொள்ள வேண்டும். இதய தமனிக்குழாய்களில் தூய்மையான இரத்தம் ஓடும். ஆனால் நூரையீரல் தமனிக்குழாய்களில் மட்டும் அசுத்த இரத்தம் ஓடும். அதேபோல இதய சிரை குழாய்களின் வழியாக அசுத்த ரத்தம் இதயத்திற்கு திரும்ப பெறப்படும். ஆனால் நுரையீரல் சிரை குழாய்களில் மட்டுமே சுத்தமான இரத்தம் ஓடும்.
கல்லீரல் இரத்த ஓட்டம்;-
======================
இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், மண்ணீரல், கணையம், பித்த நீர் பைகளில் இருந்து பெறப்படும் அசுத்த இரத்தம் போர்ட்டல் சிரை வழியாக கல்லீரலுக்கு செல்கிறது. இந்த போர்ட்டல் சிரையானது சிறிய கிளைகளாக பிரிந்து மேலும் பல தந்துகிகளாக பிரிந்து கல்லீரலுக்குள் நுழைந்து அங்குள்ள கழிவுப்பொருட்களை பெற்றுக்கொண்டு கீழ்ப்பெருஞ்சிரை குழாயுடன் சேர்ந்து கொள்கிறது. அதாவது சிரை குழாய் வழியாக செல்லும் இரத்தம் கல்லீரல் வழியாக சென்றுதான் பொது இரத்த மண்டலத்திற்குள் செல்கிறது. இந்த இரத்த ஓட்டத்தின் மூலமாக கல்லீரல் தனது பாதுகாப்பு பணிகளையும், வளர்சிதை மாற்றத்தில் மேற்கொள்ளும் பணிகளையும் நிறைவேற்றிக்கொள்கிறது.
ரத்தம், தன்னம்பிக்கையின் தாரக மந்திரம். நமது உடலை ஒரு கட்டிடமாகப் பார்த்தால், சுண்ணாம்பையும், மரக்கட்டைகளையும் இணைக்கப்பயன்பட்ட தண்ணீர்தான் ரத்தம். இதன் அடிப்படையில்தான், இயற்கை மூலகங்களில் ரத்தத்தைப் பெருக்கும் உணவுகள் மற்றும் மருந்துகள் வகைப் படுத்தப்பட்டுள்ளன.
கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. அதனால் உணவில் வாழைப்பூவை அடிக்கடி சேர்த்துக்கொள்வது நல்லது.
வாழைப்பூவை கடலைப்பருப்பு சேர்த்துத்தான் பொரியல் செய்து சாப்பிடுகிறோம். துவர்ப்புக்கும் வாயுவுக்கும் ஆகாது. அதனால் கடலைப்பருப்பு வாயுப் பதார்த்தம் என்பதால் அதனை சேர்க்காமல் தனியாக வாழைப்பூவை பொறியல் செய்து சாப்பிடுவது சிறப்பு.
ஆகவே, நாம் நமது உணவில் அன்றாடம் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம். துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும்.
சித்தர்களின் குரல்'s photo.

மனித உடலின் மகத்துவம்

                                             மனித உடலின் மகத்துவம்
 மண்டலம்
===============
நமது உடல் அசைவுகளையும், இயக்கத்தையும் பெற்றது. இந்த அசைவு மற்றும் இயக்கத்திற்கு ஆதாரமாக அமைந்துள்ளது தசைகளே. செல்கள் ஒன்று கூடி கூட்டமாக சேர்ந்து திசுக்கள் ஆகின்றன. திசுக்கள் கூட்டமாக ஒன்று சேர்ந்து தசைகளாக மாறுகின்றன.
மனித உடலில் 600 க்கும் மேற்பட்ட தசைகள் உடலின் 206 க்கும் மேற்பட்ட எலும்புகளுடன் சேர்ந்து உடல் இயக்கம் பெற உதவுகிறது.
தசைகள் மூன்று வகைகள் ஆகும்.
அவை;-
(1) இயக்கு தசை அல்லது எலும்பு தசை,
(2) இயங்கு தசை,
(3) இதயத்தசை ஆகியன.
(1)இயக்கு தசைகள் அல்லது எலும்பு தசைகள்
**************************************************************
நமது விருப்பத்திற்கேற்ப இயக்கப்படுகின்றன. இவை எலும்புகளுடன் சேர்ந்து இருப்பதால் எலும்பு தசை என்றும், இந்த தசைகளில் வரி போன்ற அமைப்பு உள்ளதால் வரித்தசை என்றும் கூறுகிறோம்.
உதாரணம் தலை, நடு உடல், கை, கால் தசைகள்.
(2) இயங்கு தசைகள்
****************************
இவை தாமாக அதாவது தன்னிச்சையாக இயங்குகின்றன. இந்த தசைகளில் வரி எதுவும் இல்லாமல் மழுமழுப்பாக இருக்கும். அதனால் வரியற்ற தசைகள் என்றும் கூறுவர். உதாரணம் வயிறு, குடல்கள், இருதயம், மற்ற உறுப்புகள் ஆகியன.
(3) இதயத்தசை
*********************
இந்த தசையும் நமது விருப்பத்திற்கும், இயக்கத்திற்கும் கட்டுப்படாது. இதன் சிறப்பம்சம் இயக்கு தசைகள் போன்று காணப்பட்டாலும் செயல்பாட்டில் இயங்குதசைகளாகும். மற்றும் சிறப்பு அமைப்பு கொண்ட வரி இருக்கும்.
ஒவ்வொரு எலும்பு தசையிலும் தசை இழைகள் உண்டு. இணைப்பு திசுக்கள், இரத்த நாளங்கள், நரம்புகள் உள்ளன. இந்த தசைகள் இரத்த நாளங்களிலிருந்து இரத்தத்தை பெற்றுக்கொண்டு, தங்களிடமுள்ள கழிவுகளை வெளியே அனுப்பிவிடும். தசைகளுக்கும் மத்திய நரம்பு மண்டலத்திற்கும் நேரடியான இணைப்பு உண்டு.
ஒவ்வொரு தசையிலும் இயக்க நரம்பு இழை மற்றும் உணர்வு நரம்பு இழை என இரண்டு வித நரம்பு தொடர்கள் உள்ளன. அதேபோல ஒவ்வொரு தசைக்கும் தொடக்கம் மற்றும் முடிவு என இரண்டு நிலைகள் உள்ளன. தொடக்க நிலைத்தசை அசையாமல் நிலையாக இருக்கும். முடிவுத்தசை அசையும் அதாவது இயங்கும். ஒரு தசை இயங்குகின்றபோது அதற்கு எதிராக இன்னொரு தசை செயல்படும்.
மடக்கு தசைகள் சுருங்கினால் நீட்டு தசைகள் நீளும். நீட்டு தசைகள் சுருங்கினால் மடக்கு தசைகள் நீட்டும். இவ்வாறு பலதரப்பட்ட, பலதிறப்பட்ட தசைப்பகுதிகள் சுருங்கி விரிகன்ற இயக்கங்கள், ஒரு குறிப்பிட்டமுறையில், ஒரு குறிப்பிட்ட வேகத்துடன் நரம்பு மண்டலத்தின் உதவியால் நடத்தப்படுகின்றன. இந்த தசை இயக்கத்தை மூன்று வகைகளாக பிரிக்கலாம்.
அவைகள்
(1) நிலையான நீளாத இயக்கம்,
(2) நீள்கின்ற இயக்கம்,
(3) குவிகின்ற இயக்கம் ஆகியன.
இவ்வாறு தசைகள் செயல்புரியும்போது தசைகளுக்கு உள்ளே இருக்கும் உயிர்க்காற்று ஆக்சிகரணம் அடைந்து எரிந்து விடுகிறது அதனால் கரியமிலவாயுவும், லாக்டிக் அமிலம் போன்ற கழிவுகளும் உண்டாகின்றன. மேலும் நமது உடலின் வெப்ப நிலையை ஒரே சீராக வைத்துக்கொள்ள தேவையான வெப்பத்தினை உற்பத்தி செய்பவை தசை மண்டலம் ஆகும்.
நமது உடலை ஒரு கட்டிடமாகப் பார்த்தால், ஒரு கட்டடம் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்ட பிறகும், அதில் உடனே குடியேறிவிட முடியாது. அதில் சில மேற்பூச்சுகள், வண்ணங்கள் தீட்டுதல் போன்ற வேலைப்பாடுகளைச் செய்த பிறகுதான் வீட்டுக்குள் குடிபுக முடியும்.
லட்சக்கணக்கில் செலவழித்து வீட்டைக் கட்டி முடித்து, அதில் வெளிப்பூச்சு, உள்பூச்சு போன்றவற்றைச் செய்யவில்லை என்றால், அந்தக் கட்டடத்தில், மழைக்காலத்தில் நீர்க்கழிவு, கட்டிடம் செதில், செதிலாக உரிவது, கட்டடத்தில் வெடிப்பு போன்றவை ஏற்படும். மேலும், கட்டடத்தின் ஆயுளும் குறையும்.
இதேபோல்தான், உடலானது என்னதான் எலும்பு, நரம்பு, ரத்தம், இவற்றால் முக்கியத்துவம் பெற்றாலும், இவற்றுக்கு ஓர் உருவம் கொடுப்பது தோலும், தசைகளும் தான். உடலை ஒழுங்காக இயக்குவது இந்தத் தசைகள்தான். இதயத்தைச் சீராக இயக்கி, நமக்காக வாழ்நாள் முழுவதும் செயலாற்றுவதும் இந்தத் தசைகள் தான்.
ஆக, பூசப்படாத கட்டிடத்தில் உண்டாகும் குறைகளைப்போல், தசைகளின் செயல்பாடு குறையும்போது, படை, அரிப்பு, சொரி, சிரங்கு, பரு, அரையாப்புக் கட்டிகள், பித்த வெடிப்பு, குஷ்டம் (LEPROSY), காயங்கள், புண்கள், போன்ற குறைகள் உண்டாகும்.
இயற்கைத் தீர்வு :
-------------------------------
தினசரி காலையில் பப்பாளிப்பழம் 300 கிராம், பேரீச்சம்பழம் 6 பழம், அத்திப்பழம் 4 பழம், தேங்காய் துருவல் 50 கிராம் இதனுடன் தினசரி ஒரு டம்ளர் பால், இதனை காலை உணவாக யார் ஒருவர் சாப்பிட்டு வருகிறார்களோ, அவர்களுக்கு எலும்பு, நரம்பு, தசை மண்டலக் கோளாறுகள் அனைத்தும் முழுமையாக தீரும்.
சித்தர்களின் குரல்'s photo.

மனித உடலின் மகத்துவம்

                                          மனித உடலின் மகத்துவம்


  சுவாச மண்டலம்
==================
“காயமே இது பொய்யடா காற்றடைத்த பையடா” என்பதிலிருந்து காயம் என்ற இந்த உடல் நிலைப்புத் தன்மை கொண்டதாக இருக்க மூச்சு என்ற காற்றடைத்த பையாக இருந்தால் மட்டுமே இது மெய் எனப்படும். அதை விடுத்து மூச்சு என்ற காற்று இல்லாத இந்த உடம்பினை பொய் என சித்தர்கள் கூறுகின்றனர்.
ஆகவே, நம் உடம்பில் சுவாசம் ஒழுங்காக, சீராக, முறையாக இருக்கும் பொழுதுதான் மனிதன் மனிதனாக இருக்கிறான். உடம்புக்குள்ளே சீவன் என்கிற சிவம் இருக்கும் வரைதான் நாம் சிவமாக இருக்க முடியும். அந்த சீவன் என்ற சிவம் இல்லாத பொழுது நாம் சவமாக மாறி விடுகிறோம்.
பிராணசக்தி என்பது பஞ்சபூதங்களில் ஒன்றான காற்று. இந்தக் காற்றை ஒழுங்காக முறையாக இயக்கப்பழகுவது என்பது சுவாச மண்டலத்தை மேம்படுத்தக்கூடிய ஒரு விசயமாக இருக்கும்.
தினசரி அதிகாலை 4.30 மணியளவில் துயில் எழக்கூடிய பழக்கம் இருக்கிறது என்றால் பல்லாயிரக்கணக்கான நோய்களை நாம் ஓட ஓட விரட்ட முடியும். தூக்கம் என்பதே ஒரு வியாதி. தூங்காமல் தூங்கி சுகம்பெறும் நாள் எந்நாளோ என்று சித்தர்கள் கூறுவார்கள். ஒரு சராசரி மனிதனுக்கு குறைந்தபட்சம் 6 மணி நேரத் தூக்கம் அவசியம். ஆனால் ஒரு சித்தனுக்கு ஐந்து நிமிடம் போதும் அல்லது பத்து நிமிடம் போதும். அவர்கள் தமது உடம்பை புதுப்பிப்பதற்கு ஏற்ற உடல்வாகு, உடல் கூறு மாறியிருக்கும்.
அதிகாலை தூக்கத்தைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. படைப்பாற்றல் அதிகமாகக்கூடிய தன்மை அதிகாலையில் இருக்கும். அதிகாலையில் பார்த்தோம் என்றால் நல்ல சுவாசம் கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கும். நீங்கள் பிராணாயாமம் செய்ய வேண்டாம், மூச்சு பயிற்சி செய்ய வேண்டாம். அதிகாலையில் எழுந்து அதிகாலைக்காற்றை நன்றாக ஆழ்ந்து உள்மூச்சு வாங்கி சுவாசம் செய்கிற பொழுது நம்முடைய சுவாச மண்டலம் ஒழுங்காகும், சீராகும், நுரையீரல் பலமாகும்.
எவரொருவர் 4.30 மணிக்கு எழுந்து 6.00 மணிவரையிலும் சுவாச அப்பியாசங்களை மேற்கொள்கிறாரோ அவருடைய சுவாச மண்டலம் ஒழுங்காகும், முறையாகும், சீராகும், சுவாசப்பை நல்ல வலுவாகும்.
நம் முன்னோர்கள் நாடிசுத்தி பண்ணுவது, பிராணாயாமம் பண்ணுவது, பஸ்திரிகா பண்ணுவது, கபாலபதி பண்ணுவது போன்ற சுவாசப் பயிற்சிகளை ஏன் மேற்கொண்டார்கள் என்றால் சுவாச மண்டலத்தை வலுப்படுத்துவதற்காகத்தான்.
சுவாசம்;-
*************
சுவாசித்தலே அனைத்து உயிரினங்களுக்கும் இன்றியமையாத பணியாக மிக முக்கியமான பணியாக கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு உயிரினத்திற்கும் சுற்றுப்புறச்சூழலுக்கும் இடையில் ஓய்வின்றி தொடர்ச்சியாக காற்றுப்பரிமாற்றம் நடந்து கொண்டே இருக்கிறது. காற்றிலுள்ள பிராணவாயுவை எடுத்து உடல் உறுப்புகளுக்கு தருவதும், உறுப்புகள் உயிர்க்காற்றினை எடுத்துக்கொண்டு அசுத்த காற்றினை அதாவது கரியமில வாயுவினை வெளியேற்றுவதும் சுவாசம் என்கிறோம். இவ்வாறு காற்றை உள்ளிழுத்து வெளிவிடுகின்ற வேலையை இரு பிரிவுகளாக பிரிக்கலாம். உள் சுவாசம், வெளி சுவாசம் எனப்படும்.
உள் சுவாசம்;-
*******************
உடலின் அனைத்து திசுக்களிலும் உள்ள செல்களனைத்தும் உயிர்வாழ, செயல்பட, இரத்தத்தில் இருந்து ஆக்ஸிஜன் என்னும் பிராணவாயுவை எடுத்துக்கொண்டு கார்பன் டை ஆக்சைடு என்னும் கரியமில வாயுவை இரத்தத்திற்கே அனுப்பி விடுவது உள் சுவாசம் எனப்படுகிறது.
வெளி சுவாசம்;-
***********************
நாம் மூக்கினால் சுவாசிக்கும் காற்றிலுள்ள பிராணவாயுவை நுரையீரலில் உள்ள இரத்தம் எடுத்துக்கொண்டு அதிலுள்ள கரியமில வாயுவை வெளியேற்றுவது ஆகும். இந்த வெளி சுவாசத்திற்கு மூக்கு, தொண்டை, குரல்வளை, மூச்சுக்குழல், மூச்சுக்கிளைகள், போன்ற உறுப்புகள் உதவி செய்கின்றன. இவையே காற்று பாதைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
எல்லா காற்றுப்பாதைகளுமே சிலியா எபிதிலியம் என்னும் சளிப்படலத்தால் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இதன் சுரப்பிகள் எப்போதும் சளியை சுரந்து கொண்டு இருக்கின்றன. அதனால் வெளிக்காற்றில் கலந்து வரும் தூசிகள் மற்றும் நுண் கிருமிகள் இந்த சளியில் ஒட்டிக்கொண்டு உடனடியாக அகற்றப்படுகின்றன.
நாம் ஒரு முறை சுவாசத்திற்கு ஏறத்தாழ 500 கன சென்டி மீட்டர் காற்றை உள்ளிழுத்து வெளி விடுகிறோம். இதையே முயற்சி செய்தால் 1500கன சென்டி மீட்டர் காற்றை உள்ளிழுத்து வெளிவிட முடியும்.
நாம் ஒரு நாளைக்கு சுமார் 13,638 லிட்டர் காற்றை சுவாசிக்கிறோம். ஒரு வாரத்திற்கு 95,466 லிட்டர் காற்றை சுவாசிக்கிறோம். ஒரு வருடத்திற்கு 53 லட்சம் லிட்டர் காற்றை சுவாசிக்கிறோம். எழுபது ஆண்டு ஆயுட்காலம் என்றால் நீங்களே கணக்கிட்டு பார்த்துக்கொள்ளுங்கள்.
நாம் ஒருமுறை சுவாசிக்கும் காற்றில் பிராணவாயுவை நான்கு சதவீதம் மட்டுமே பெற்றுக்கொண்டு மீதி பதினாறு சதவீத பிராணவாயுவை வெளியேற்றுகிறோம்.
சுவாச மண்டல உறுப்புகள்
*************************************
மேல் சுவாச மண்டல உறுப்புகள் -
நாசி (மூக்கு), தொண்டை, குரல் வளை, சைனஸ்கள்.
கீழ் சுவாச மண்டல உறுப்புகள் -
சுவாசக் குழல் (Trachea), பிராங்கைல் குழல்கள் (Bronchial tubes), நுரையீரல்கள்.
சாதாரண சுவாச கோளாறுகள்
******************************************
• மேல் சுவாச மண்டல தொற்றுக்கள் (Infections) (ஜலதோஷம் முதலியன)
• மூக்கு, பிராங்கைல் ஒவ்வாமை (அலர்ஜி - Allergy)
• சைனுசைடீஸ்
• பிராங்கைடீஸ் / ஆஸ்துமா
• இந்த கோளாறுகளை அறிவிக்கும் சில அறிகுறிகள்
• இருமல்
• மூச்சுத்திணறல்
• மார்வலி
• கோழையில் ரத்தம்
மூலிகை வைத்தியம்
******************************
சுவாச சம்பந்தமான பிரச்சனைகளுக்கு சிறப்பாக நாம் சொல்லவேண்டுமென்றால் தூதுவளை, துளசி, ஆடாதொடா, கண்டங்கத்திரி, முசுமுசுக்கை இந்த மூலிகைகள் அனைத்துமே நுரையீரல் கோளாறுகளை முழுமையாகப் போக்கக்கூடிய தன்மை இதற்கு உண்டு.
சில வீடுகளில் தூதுவளையை துவையலாக நாம் அரைப்பது உண்டு. தூதுவளையை முள் நீக்கி லேசாக நெய் சேர்த்து வதக்கி அதைத் துவையலாக அரைத்து சாப்பிடும்பொழுது சளி, இருமல், கபம், தலைவலி, தலைபாரம் போன்ற அனைத்துப் பிரச்சனைகளும் தீரக்கூடிய ஒரு வாய்ப்பு உண்டு.
தமிழில் ஒரு பழமொழி உண்டு
“தூதுளை மாதுளை இருக்கும் வீட்டில் மார்பிலும் வயிற்றிலும் கலங்கம் இல்லை”.
மார்புதான் இந்த சுவாச மண்டலத்தின் மூலஸ்தானம். ஆக நுரையீரலை வலுப்படுத்தக்கூடிய தன்மை தூதுவளைக்கு உண்டு. இந்தத் தூதுவளையை விடாமல் தொடர்ந்து சாப்பிட்டு வரக்கூடிய ஆண்களுக்கும் பெண்களுக்கும் நுரையீரல் சார்ந்த, சுவாசம் சார்ந்த, மூச்சு சார்ந்த அனைத்துப் பிரச்சனைகளும் சரியாகும் என்று இந்தப் பழமொழியில் கூறியிருப்பார்கள்.
அதேபோல் மாதுளை சாப்பிடுபவர்களுக்கு வயிறு சார்ந்த பிரச்சனைகள், குடல் சார்ந்த பிரச்சனைகள், மலச்சிக்கல், சீதபேதி இவையனைத்தும் சரியாகும் என்பது அந்தப் பழமொழியின் உட்கருத்து.
ஆக தூதுவளை, துளசி, ஆடாதொடா இம்மூன்றையும் சமஅளவு கலந்து வைத்துக்கொண்டு அதைத் தேனில் காலை மற்றும் இரவு என்று இரண்டுவேளையும் தொடர்ந்து சாப்பிடும்பொழுது சுவாசமண்டலம் சார்ந்த அனைத்துப் பிரச்சனைகளையும் சரிசெய்ய முடியும்.
துளசி இலைகள், இஞ்சி, இரண்டு (அ) மூன்று கருமிளகு - இவற்றை தண்ணீரிலிட்டு கஷாயமாக்கி குடிக்கலாம். ஜுரம், இருமல், ஜலதோஷம் இவற்றுக்கு இந்த கஷாயம் நிவாரணமளிக்கும்.
கற்பூரவல்லி இலைகளை சாறு பிழிந்து அதனுடன் தேன் கலந்து எடுத்துக் கொண்டால் தொண்டைக்கு இதமாக இருக்கும். இருமலும் குறையும். பல ஒவ்வாமைகளை தடுக்கும்.
வெங்காயத்திலிருந்து எடுத்த சாறுடன் வெல்லம் கலந்து குடிக்க இருமல் நிற்கும். வெங்காயத்திற்கு பதில் பூண்டையும் உபயோகப்படுத்தலாம்.
யூகலிப்டஸ் எண்ணெய் (அ) கிராம்புத் தைலம் இவற்றை நீரிலிட்டு நீரை நன்றாகக் காய்ச்சி ஆவி பிடிக்கவும். சுவாச அடைப்புகள் நீங்கும்.
தேன் சேர்த்த இஞ்சி டீ, இருமலுக்கும், மூக்கடைப்புக்கும் நல்ல பலன் தரும்.
இரவில் படுக்கும் முன் மஞ்சள், இஞ்சி மற்றும் மிளகு சேர்த்து காய்ச்சிய பாலை குடிக்கவும். இதனால் இருமலும், மூக்கு சம்மந்தப்பட்ட அலர்ஜிகள் குறையும்.
பொதுவான உணவு நியமங்கள்
*******************************************
பல சுவாசக் கோளாறுகளுக்கு சுகாதாரமற்ற உணவுகள், ஐஸ்கிரீம் போன்ற குளிர்ந்த உணவுகள், எண்ணெய்யில் பொரித்த, வறுத்த உணவுகள் காரணமாகின்றன. மாசுபடிந்த சுற்றுப்புற சூழலின் தூசிகள், குளிர்காலம், அஸ்பஸ்டோஸ் போன்றவை, புகை முதலியன சுவாசக் கோளாறுகளை தூண்டும்.
சில குறிப்புகள்
*********************
இரவு உணவில் தயிர் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும் என்கிறது ஆயுர்வேதம். அதே போல ஐஸ்கிரீம், குளிர்பானங்களை தவிர்க்கவும்.
ஜலதோஷத்தின் போது உருளைக்கிழங்கு, கத்தரிக்காய் தவிர்க்கவும். நெல்லிக்காய், பூண்டு, மஞ்சள் பொடி உபயோகங்கள் நல்லது. வெங்காய சூப் நிவாரணம் தரும்.
இருமலுக்கும் அதைச் சார்ந்த சுவாச கோளாறுகளுக்கு கோதுமை, பயத்தம் பருப்பு, பழைய அரிசி, பார்லி, ஆட்டுப்பால், பசும்பால், நெய், காய்கறி சூப், உலர்திராட்சை, நெல்லி முதலியனவற்றை உணவில் சேர்க்க வேண்டும்.
தவிர்க்க வேண்டியவை
*********************************
கத்தரிக்காய், பாகற்காய், கடுகு, வில்வப்பழம், குளிர்ந்த உணவுகள்.
================சைனுசைட்டீஸ் (Sinusitis)=================
மூக்கைச் சுற்றியுள்ள 'சைனஸ்கள்' (வெற்றிட எலும்புக் குழிகள்) பிரதேசங்களில் ஏற்படும் தொற்று (Infections) சைனுசைட்டீஸ் எனப்படும். நாட்பட்ட, நீடித்த ஜலதோஷம் சைனுசைட்டீசை உண்டாக்கலாம்.
இதற்கு ப்ரிட்ஜில் வைத்த குளிர்ந்த உணவுகள், வருத்த உணவுகளை தவிர்க்கவும்.
தண்ணீர் நிறைய குடிக்கவும். துளசி, இஞ்சி, புதினா, இலவங்கம் கலந்த வெந்நீரை குடிக்கவும். பழங்கள், காய்கறிகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்.
வாழைப்பழம், தக்காளி, குடைமிளகாய், கத்தரிக்காய் இவற்றை தவிர்க்கவும். பசிவரும் நேரத்தில் நேரத்தில் உண்ணவும்.
ஒரு கட்டடம் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்ட பிறகு நாம் குடி புகுவது போல, எலும்பு, நரம்பு, ரத்தம், தசை இவற்றால் வேயப் பட்ட’வீட்டில்’ தான் சிவனாகிய சீவன் வாயுவாகக் குடி புகுவான்.
உடலில், பிராணன் முறையாகச் சுழன்று வந்தால் மட்டுமே உயிர் நிலைப்படும். பிராணன் அற்ற உடலில் உயிர் இருப்பதிலை. பிராணக் குறைபாட்டுக்கு சுவாச மண்டலக் குறைகளே காரணமாகும்.
இதுவரை, உடலை ஒரு கட்டிடமாக உருவகப்படுத்தி கட்டிடத்துக்கும் உடலுக்கும் உள்ள தொடர்பை தெளிவாகப் பார்த்தோம்.
அடுத்து, முழுமையாகக் கட்டப்பட்ட கட்டிடத்துக்குள் தேவையான வசதிகளைச் செய்துகொண்டு வசிப்பது போல், நாம் நலமோடு இருப்பதற்காக உழைத்துக் கொண்டிருக்கும் அடுத்த நான்கு மண்டலங்களின் செயல் பாடுகளை இனி வரும் பகுதிகளில் பார்க்கலாம்.
அவைகள்
------------------
1. ஜீரண (Digestive) மண்டலம்
2. கழிவு (Excretory) மண்டலம்
3. நாளமில்லா சுரப்பி (Endocrine) மண்டலம்
4. இனப்பெருக்க (Reproductive) மண்டலம்
மனித உடல் – ஒரு மாயாசால இயந்திரம்
மனித உடல் – நடமாடும் இறைவனின் கோவில்
மனித உடல் - ஆத்மாவுக்கான ரதம்
மனித உடலின் கட்டமைப்பையும், அதன் இயக்கத்தையும் நம் நுண்ணறிவு கொண்டு தீவிரமாகச் சிந்தித்தால் நாம் அதிசயத்து மலைத்துப்போய்விடுவோம். மனித உடலை, இறைவன் குடியிருக்கும் கோயிலாக சித்தர்கள் கருதினர்.
‘நட்ட கல்லைத் தெய்வம் என்று
நாலு புஷ்பம் சாத்தியே
சுர்றிவந்து முணுமுணென்று சொல்லு
மந்திரம் ஏதடா, நட்ட கல்லும் பேசுமோ
நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம்
கறிச்சுவை அறியுமோ’
-சிவவாக்கியர்
உடலை ஆலயம் என்று சித்தர்கள் சொன்னதற்கு இதைவிடச் சிறந்த உதாரணம் தேவையில்லை.
சுவையாகச் செய்யப்பட்ட உணவின் சுவையைப் பாத்திரம் அறியாததுபோல், உளிகொண்டு கல்லில் செதுக்கிய சிலையில் கடவுளைக் காண இயலாது.
உண்மையான கடவுளாகிய ’நாதன்’ உனக்குள், உன் உடலில் மூச்சாக இருக்கிறார். எனவே, இறைவன் உறைந்துள்ள உன் உடலை நீ பேணிப் பாதுகாத்து வா என்பதே சித்தர்களின் கட்டளை.
எலும்பு, நரம்பு, ரத்தம், தசை இவற்றால் கட்டப்பட்ட உடம்பு என்ற ஆலயத்தில், ‘ஜீவன்’ என்னும் வாயுவால் உடலை இறைவன் இயக்கிக்கொண்டிருக்கிறான். எனவே, மனிதனின் தேகம் நிலைத்து நீண்ட நாட்கள் வாழ சுவாச மண்டலத்தினை பேணி காப்போம், பெருமையுடன் நீண்ட ஆயுள் வாழ்வோம்.
தொடரும்.............
சித்தர்களின் குரல்'s photo.

மனித உடலின் மகத்துவம்

                                         மனித உடலின் மகத்துவம்


  ஜீரண மண்டலம் (Digestive System)
==============================
அழகான வீட்டை கட்டியவரை பாராட்டும் போது "பார்த்து பார்த்து" கட்டினார் என்கிறோம். அதே போல, நம் உடல் என்ற வீட்டை 'பார்த்து பார்த்து' கட்டியிருக்கிறார் இறைவன். ஒவ்வொரு அவயமும், அவற்றின் தனித்தனி செயல்பாடுகள், பிறகு இணைந்த செயல்பாடுகள் பிரமிப்பானவை.
இந்த அவயம் தான் அதிசயமானது என்று குறிப்பிட்டு சொல்லமுடியாமல், எல்லா உறுப்புகளும் அதிசயமானவை. உடலின் ஐந்து உறுப்புகளை முக்கியமானவை என்று, வேண்டுமானால், சொல்லிக் கொள்ளலாம். அதில் ஒன்று வயிறு - அத்துடன் இணைந்த ஜீரண மண்டலம். மற்ற நான்கு முக்கிய அவயங்கள் - மூளை, இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரகம்.
உலகம் ஒரு செல் ஜீவராசியிலிருந்து இன்று பல செல் ஜீவராசிகளாக உருவெடுத்திருக்கிறது. தோன்றிய போதும் சரி, இப்போதும் சரி, உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளின் முதல் தேவை உணவு.
உணவு என்றால் அதை சுவைக்க ஜீரணமாக்க சக்திகள் பெற ஜீரண மண்டலம் தேவை.
இந்த உடல் உயிருடன் இருக்க உணவு தேவை. உணவை ஜீரணிக்க வயிறு, அதை சார்ந்த அவயங்களும் தேவை. உணவுடன், பிராண வாயுவும் தேவை.
ஓய்வில்லாமல் உழைக்கும் ஜீரணமண்டலத்தின் உறுப்பினர்கள்
வாய்
தொண்டை மற்றும் உணவுக்குழாய்
வயிறு (இரைப்பை)
சிறுகுடல்
பெருங்குடல்
மலக்குடல்
ஆசனவாய்.
தவிர இந்த மண்டலத்திற்கு வெளியிலிருந்து உதவும் அவயங்கள் கணையம், கல்லீரல், பித்தப்பை.
உணவின் ஒருவழிப் பயணம்
-----------------------------------------------------
மல்லிகைப் பூ போன்ற சாதத்தில், உருக்கிய நெய்விட்டு, வத்தல் குழம்புடன் அப்பள துண்டையும் சாப்பிடு முன், வாயினில் போட்ட ஒரு கவளத்தை உமிழ்நீர் நனைக்கிறது. பற்கள் அரைக்கின்றன. உமிழ்நீரின் என்ஜைம் (அமைலேஸ்) ஸ்டார்ச்சை, சர்க்கரை சத்தாக மாற்றுகிறது. வாயில் உணவை மெல்ல 5 லிருந்து30 வினாடிகள் ஆகும். மென்ற பின் நாக்கு, வாயில் உள்ள மென்ற உணவை பந்தாக உருட்டி தொண்டையில் தள்ளுகிறது. வாயிலிருந்து உணவு 10 வினாடிகளில் (ஒரு கவள உணவு) தொண்டையில் முழுங்கப்படுகிறது.
வாயைத் தாண்டியவுடன் வத்தல் குழம்பும் ஒன்று தான் வறுத்த மீனாக இருந்தாலும் ஒன்று தான்! வாயை தாண்டியதும் ருசி இல்லை.
தொண்டையிலிருந்து உணவு, உணவுக்குழாயின் வழியே வயிற்றை (இரப்பையை) அடைகிறது. உணவுக்குழாய் தொண்டையையும் வயிற்றையும் இணைக்கும் குழாய். "தொப்" பென்று வயிற்றில் விழாமல், உணவு, உணவுக்குழாய்களின் தசைகளின் பெரிஸ்டாலிசிஸ் (Peristalis) எனும் அசைவுகளால் நிதானமாக வயிற்றுக்குள் நுழைகிறது. உணவுக் குழாயும், வயிறும் சேரும் பகுதியின் உள்ள வளையம் போன்ற ஒரு வழி வால்வு, உணவை வயிற்றுக்குள் விடுத்து மூடிக்கொள்ளும்.
இரைப்புக்குள் உணவு வருமுன்பே "சாப்பாடு தயார்" என்ற செய்தி 'வேகஸ்' (Vagus) நரம்பின் மூலம் மூளைக்கு பறக்கிறது. அடுத்த நொடியில் மூளையின் 'பர்மிஷன்' கிடைத்து, பரைட்டல் செல்கள் (Parietal cells), கேஸ்ட்ரீன் (Gastrin), செக்ரடீன் (Secretin) போன்ற ஹார்மோன்களால் தூண்டப்படுகின்றன. இதனால் ஹைட்ரோகுளோரிக் அமிலமும் சுரக்கத் தொடங்கும். ரென்னின், பெப்சின், லிப்பேஸ் (Lipase) என்ஜைமுகளும் சுரக்கும். அமிலம் வயிற்றில் மழை போல் பொழியும். பெப்சினோடு இணைந்து உணவை ஜீரணிக்க உதவும்.
வயிற்றுள் உணவு சுழட்டப்படுகிறது. ஜீரண நீருடன் உணவு குழம்பாக கலக்கப்பட்டு, தசை அசைவினால் சுழட்டப்படுகிறது. திருப்பி, திருப்பி, வயிறு அலைகள் போன்ற தசை அசைவுகளால் உணவை புரட்டி எடுத்து, சிறு துகள்களாக்குகிறது. 3 - 4 மணிநேரம் இந்த சுழற்றல் நடக்கும். இதனால் இரு உணவுகளுக்கு நடுவே 3 - 4 மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும்.
இங்கிருந்து சிறுகுடலின் முதல் பகுதியான டியோடினத்தை அடைகிறது. இங்கு வரும் உணவில் நிறைய ஹைட்ரோ குளோரிக் அமிலம் இருக்கும். இந்த அமிலத்திற்கு சிறுகுடலில் வேலை ஏதுமில்லாததால், சிறுகுடலை தாக்கும். இதை தவிர்க்க, உணவுக் கூழ் வரும் முன்பே காரத்தன்மை மிகுந்த கணைய நீர், பித்த நீர், (முறையே கணையம், கல்லீரலிருந்து) வந்து, அமிலத்தை நீர்த்து விடும். இதைத் தவிர சிறுகுடலில் சுரக்கும் நீர்களும், கணையநீர், பித்த நீர் இவற்றுடன் சேர்ந்து உணவுக் கூழை ஜீரணிக்க உதவும். பிறகு உணவு பெருங்குடலுக்கு தள்ளப்படும்.
சிறுகுடலின் சுவர்களில் உள்ள 'விரல்கள்' போன்று துருத்திக் கொண்டிருக்கும் 'வில்லி' (Villi) களால் உணவுச் சத்துக்களும், கழிவுப்பொருள்களும் பிரித்தெடுக்கப்படும்.
பெருங்குடலின் எந்த ஜீரண நீர்களும் இல்லை. இங்கு வருமுன்பே உணவு ஜீரணமாகி சத்துக்கள் உறிஞ்சப்பட்டு விடுகின்றன. பெருங்குடலில் Mucus (கோழை) சுரக்கும். இது உணவுக்கூழ் கழிவை இளகிய தன்மைக்கு மாற்றும். பெருங்குடல் உணவுக்கழிவுகளிலிருந்து 80% தண்ணீரை உறிஞ்சுக்கொள்கிறது. உணவுக் கழிவுகள், பெருங்குடலிலிருந்து மலக்குடல் வழியே மலமாக ஆசனவாய் வழியே வெளியேறுகிறது. இதுதான் ஜீரணமண்டலத்தின் செயல்பாடு ஆகும்.
ஜீரணமண்டலத்தின் பாதிப்புகள்
--------------------------------------------------------
பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் இன்றைய உலகில் ஜீரண மண்டலக் கோளாறுகளால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். வாழ்க்கை முறை மாற்றம், உணவுப் பழக்கம், பரபரப்பு காரணமாக செரிமான நோய்கள் அதிகரித்து வருகின்றன.
மனித உடலுக்கு உணவில் இருந்துதான் சக்தி கிடைக்கிறது. ஒவ்வொரு மனிதனும் ‘நாக்குக்கு’ அடிமையானவன்தான். அதனால்தான், எதைப்பற்றியும் கவலைப்படாமல் நன்றாக சாப்பிடுகிறோம். அதே நேரத்தில், நம் உணவின் தேவையை நம்மால் அனுமானிக்க இயலாதபோது அந்த உணவாலேயே நமக்கு நோய்கள் ஏற்படுகின்றன.
’அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சென்று’ பெரியவர்கள் சொன்னதில்தான் எவ்வளவு உண்மை உள்ளது.
உணவால் உடலில் ஏற்படும் மந்த நிலையே அனைத்து நோய்களுக்கும் மூலகாரணமாக அமைகிறது. உடலின் மந்தத்தில் இருந்து வாயுவும், வாயு மிகுதியால் மலச்சிக்கலும், மலச்சிக்கலால் உடலில் பல சிக்கல்களும் உண்டாவதாக சித்தர்கள் சொல்லியிருக்கிறார்கள். இதையே,
‘காணுமே மந்தம் கவளிக்கும் அன்னத்தால்
காணுமே மந்தம் கடுமா மிசம்மீறல்
காணுமே மந்தம் கலந்தமாப் பண்டத்தால்
காணுமே மந்தம் கடுமேதிப் பாலுக்கே’
என்கிறார் திருமூலர்.
உணவை நன்றாக மென்று உண்ண வேண்டும். அரைகுறையாக மென்று வேகமாக விழுங்கினால் மந்தம் உண்டாகும். அதேபோல், மாமிசம் உண்பதும் உடலுக்கு மந்தமாகும். அதையே அதிகம் சாப்பிட்டால் மந்தம் அதிகமாகும். அதேபோல மாவுப்பண்டங்களான (பரோட்டா, கிழங்கு வகைகள் போன்றவைகள்) உணவுப் பொருட்களை அதிகமாகச் சாப்பிட்டாலும், எருமைப் பாலை உணவில் அதிகம் சேர்த்தாலும், உடலில் மந்தம் உண்டாகும் என்று திருமூலர் குறிப்பிடுகிறார்.
உணவு என்பது வாழ்வுக்கான ஆதாரம். நம்மில் பலர் உணவினால் வாழ்வின் அச்சாணியையே முறித்துவிடுகின்றனர். உணவைச் சரியான முறையில் தேர்ந்தெடுத்துச் சாப்பிட்டால் நம் ஜீரண உறுப்புகளில் பிரச்சனை ஏதும் உண்டாவதில்லை.
உணவில் காரமும், சாரமும் அதிகமானால் ஜீரண உறுப்புகளில் புண், அமிலச் சுரப்பு, வாயு, மலச்சிக்கல், மலக்குடல்களில் கோளாறு, மூல நோய்கள் போன்றவை உண்டாகும். இதனால், உடலின் கழிவுகளை வெளியேற்றும் உறுப்புகளுக்கு வேளைப்பளு அதிகமாகி, உடல் சமநிலைத் தன்மையை இழந்து நோய்வாய்ப்பட நேர்கிறது.
எனவே நாம் சாப்பிடும் உணவு நம் கட்டுக்குள் இருக்கவேண்டும். அதிகமாக சாப்பிடுவதாலும், தேவையான அளவு சாப்பிடாமல் இருப்பதாலும் நம்மை ஏராளமான நோய்கள் துரத்துகின்றன.
செரிமானப் பாதை உறுப்புகளில் உண்டாகும் நோய்கள் யாவை?
உணவுக் குழாய் அழற்சி, இரைப்பை அழற்சி, இரைப்பைப் புண், சிறுகுடல் புண், குடல்வால் அழற்சி, மலச்சிக்கல், வாயுத் தொல்லை மற்றும் செரிமான மண்டல உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய்.
செரிமான மண்டல நோய்க்கான அறிகுறிகள் என்ன?
வயிறு எரிச்சல், வயிறு வலி, நெஞ்சுக் கரிப்பு, நெஞ்செரிச்சல், குமட்டல், ஏப்பம், வயிற்றுப் பொருமல், வயிறு உப்புசம், மந்தம், வாயு உண்டாகுதல், உணவு எதுக்களித்தல், வயிறு புரட்டல், கவ்விப் பிடிப்பது போன்ற வலி உணர்வு, மலச்சிக்கல் அல்லது மலம் சிறிது சிறிதாகக் கழிதல், நீராகவோ அல்லது ரத்தம் சளியுடனோ மலம் கழிதல், வயிறு கடுத்தல், கழிதல் ஆகியன பொதுவான அறிகுறிகள்.
குடல் நோய்கள் ஏற்பட பொதுவான காரணங்கள் என்ன?
உணவு உண்ணும் அளவுக்கேற்ப உழைப்பு இல்லாமை, பதற்றம், பரபரப்பான வாழ்க்கைச் சூழல், முறையற்ற அல்லது மாறுபட்ட உணவுப் பழக்கம், காரம், மசாலாப் பொருட்கள், எண்ணெய் அதிகம் கலந்த உணவுகள், டீ, காபி போன்ற பானங்களை அளவுக்கு அதிகமாகப் பருகுதல், காலம் தவறி நினைத்த நேரத்தில் நினைத்த உணவுகளைச் சாப்பிடுதல், புகை, மதுப்பழக்கம், கோபம், கவலை, மன அமைதியற்ற நிலை ஆகியவை பொதுவான காரணங்கள். நுண்கிருமிகள் மற்றும் வலி நிவாரண மருந்துகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சாப்பிடுவதாலும் செரிமானக் கோளாறுகள் ஏற்படும்.
வாயுத் தொந்தரவு என்றால் என்ன?
சாப்பிடும் உணவுகள் இரண்டரை முதல் மூன்று மணி நேரத்துக்குள் ஜீரணமாகிவிடும். ஜீரணிக்கப்பட்ட உணவின் சாரம் குடலிலிருந்து உறிஞ்சப்பட்டு நமக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கிறது. ஆனால் இரைப்பை, சிறுகுடல் உறுத்தல் அல்லது அழற்சியின் காரணமாக உணவுப் பொருள்கள் ஜீரணமாவது தாமதமாகிறது. அதிக நேரம் தங்கி இருக்கும் உணவுப் பொருள்களின் மேல் சுரப்பிக்கப்பட்ட அமிலம் மற்றும் நொதிகளின் செயல்பாட்டினால் வாயுவானது இடம் பெயர்ந்து செல்வதால் வலி மாறி மாறி வருகிறது.
வயிற்று வலி வருவது ஏன்?
வயிற்று வலி பெருமபாலும் குடல் புண்ணால்தான் உண்டாகிறது. ஆனால் புண் மட்டுமே காரணம் அல்ல. மேலும் புண் இருக்கும் உறுப்பைப் பொருத்தும் வயிற்று வலி மாறுபடும். இரைப்பையில் புண் இருந்தால் உணவு உட்கொண்டதும் வலி ஏற்படும். சிறுகுடல் முதல் பகுதியில் புண் இருந்தால் உணவு சாப்பிட்ட இரண்டு மணி நேரத்துக்குப் பின் வலி ஏற்படும். உணவு உண்டதும் வலி நீங்கிவிடும். குடல்புண் தவிர செரிமான உறுப்புகளில் அழற்சி குடலில் கிருமிகள் இருப்பது இவற்றாலும் வலி உண்டாகக் கூடும்.
குடல் புண் வருவது எப்படி?
உணவை செரிப்பதற்கான அமிலம் குடலில் சுரக்கிறது. அதனுடன் வேறு சில நொதிப் பொருள்களும் சுரக்கின்றன. காலம் தவறி சாப்பிடுதல் அல்லது அடிக்கடி உணவு சாப்பிடுவதால் அமிலம் மற்றும் நொதிப்பொருள்கள் முறையற்று சுரந்து அவை இரைப்பை அல்லது குடலின் உட்பகுதியை அரித்துப் புண் உண்டாக்கிவிடுகின்றன.
குடல் புண்ணால் ஆபத்தா?
இரைப்பை, சிறுகுடல் இவற்றின் உள்சுவரில் உண்டாகும் புண் மேலும் தீவிரமாகி அந்தச் சுவரையே துளைத்து விடுவதால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. மேலும் புண்ணிலிருந்து ரத்தம் வடிவதால் அவை ரத்த சோகையை ஏற்படுத்தி உடல் வலிமை குறையும்.
மலச்சிக்கலைத் தவிர்க்க யோசனைகள் என்ன?
மாறுபட்ட உணவுப் பழக்க வழக்கமே மலச்சிக்கலுக்குக் காரணம். அரை வயிறு உணவு, கால் வயிறு நீர், கால் வயிறு காற்று என்ற அளவிலே இருக்கவேண்டும். உணவில் போதுமான அளவு நார்ச்சத்து இல்லாவிட்டால் கண்டிப்பாக மலச்சிக்கல் ஏற்படும். ஆனால் நாம் இப்போது இத்தகைய முறையைக் கடைப்பிடிப்பதில்லை. வயிறு நிறையச் சாப்பிடுகிறோம். நார்ச்சத்து அதிகமுள்ள காய்கறி, கீரைகள், பழங்கள் ஆகியவற்றைத் தேவையான அளவு சேர்த்துக் கொள்ளாததாலும் போதுமான அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளாததாலும் மலச்சிக்கல் ஏற்படுகிறது.
குடல் புண் வராமல் தடுக்கச் செய்ய வேண்டியது என்ன?
புகை, மது பழக்கத்தைக் கைவிட வேண்டும். மூன்று வேளை உணவைச் சரியான கால நேரத்தில் நமது உடலுக்குத் தேவையான அளவு சாப்பிட வேண்டும். எளிதில் ஜீரணிக்கக் கூடிய உணவுகளை அதிக அளவு சாப்பிட வேண்டும். எண்ணெய்யில் வறுக்கப்பட்ட உணவு வகைகளைத் தவிர்க்கவேண்டும். நார்ச்சத்துள்ள காய்கறிகளை அதிகம் சாப்பிடவேண்டும். ருசிக்காக அதிகமாகச் சேர்க்கப்படும் காரம் மசாலாப் பொருள்களின் அளவைக் குறைக்கவேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படியே மருந்து சாப்பிடவேண்டும். கவலை, பரபரப்பு, பதற்றத்தைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மன அமைதியுடன் எந்நேரமும் இருக்க பழகிக் கொள்ளவேண்டும்.
குடல் புண்ணுக்கு ஹோமியோபதியில் மருந்துகள்
************************************************************************
சிறுகுடலின் முற்பகுதியான டியோடினத்தில் புண் - லைகோ, அனகார்டி, கிராபைடீஸ்.
கடுமையான எரிச்சல் பலவீனம் வாந்தி - சாங்குனேரி.
வயிற்றுப்புண்ணில் இரத்த வாந்தி - ஹாமோமெலி, சீகேல், டிரில்லியம்.
அதிக வாயு உபாதை - லைகோபோடியம், கார்போ-வெஜி, அர்ஜெ- நைட்
அதிக மது அருந்துவதால் புண் - அர்ஜெ- நைட், நக்ஸ்-வோ.
இறைப்பை புண் - காலி-பைக், பாஸ்பரஸ்,
சித்தர்களின் குரல்'s photo.

மனித உடலின் மகத்துவம்

                                     மனித உடலின் மகத்துவம்


   கழிவு மண்டலம்
=================
நாம் எத்தனை உணவுகளை உட்கொண்டாலும் தேவையான சத்துக்களை மட்டும் நமது உடலானது எடுத்துக்கொண்டு மீதியுள்ளவற்றை சக்கையாக வெளியேற்றி விடும். அதாவது கழிவுகளாக வெளியேற்றிவிடும்.
இவ்வாறு தேவைக்கு அதிகமானவற்றை கழிவுகளாக வெளியேற்றும் பணியை செய்யும் உறுப்புகள் கழிவு மண்டலம் எனப்படுகின்றன.
கழிவுமண்டலம் ஒரு மனிதனுக்கு மிக மிக முக்கியமான ஒரு மண்டலம் என்று நாம் சொல்லவேண்டும். ஒரு மனிதனுக்கு தன்னுடைய வாழ்நாளை நீட்டிக்க, ஆரோக்கியமாக வாழ எந்த அளவிற்கு செரிமான மண்டலம் மிகச் சிறந்த ஒரு விசயமாகப்படுகிறதோ, அதே மாதிரி ஒரு மனிதனுடைய கழிவுகளும் ஒழுங்காக முறையாக வெளித்தள்ளப்படவேண்டும்.
ஆக என்னதான் சத்தான ஆகாரங்கள் சாப்பிட்டாலும் கூட அதாவது ஒரு நாளைக்கு விதவிதமாக குங்குமப்பூவிலிருந்து, ஆப்பிளிலிருந்து, பேரீச்சம்பழத்திலிருந்து, அன்னாசிபழத்திலிருந்து நல்ல உயர்வான உணவுப்பொருட்களைத் தொடர்ந்து ஒரு ஆணோ பெண்ணோ சாப்பிடலாம். அப்படி சாப்பிட்டாலும் கூட அந்த சத்தான உணவுகளில் உள்ள கழிவுகள் ஒழுங்காக முறையாக வெளியேறக்கூடிய நிலை இருந்தால்தான் ஒரு ஆணோ பெண்ணோ ஆரோக்கியமாக இருக்கக்கூடிய சூழல் இருக்கும்.
ஆனால் இன்றைக்கு நம்முடைய உடல் உறுப்புகளில் உள்ள பிரச்சனைகளிலேயே இந்த கழிவுமண்டலப்பிரச்சனை என்பது மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. அதற்கான காரணம் நம்முடைய வாழ்வியல் சூழல் மாறிப்போன ஒரு விசயத்தை நாம் கண்டிப்பாக அடிக்கோடிட்டுக் காட்டியாக வேண்டும்.
அந்த காலகட்டத்தில் பார்த்தோம் என்றால் உணவுகள் ஒழுங்காக முறையாக தரம் வாரியாக பிரிக்கப்பட்டிருந்தது. அன்றைய குடும்ப அமைப்பில் சிறுவர்களுக்கு என்ன உணவு?, வாலிபர்களுக்கு என்ன உணவு?, தோட்டம் மற்றும் காடுகளில் வேலைசெய்யக்கூடிய ஆண்களுக்கு என்ன உணவு?, வீட்டிலேயே குடும்பத் தலைவியாக இருக்கக்கூடிய பெண்களுக்கு என்ன உணவு? இப்படியெல்லாம் அவர்களுடைய வேலையின் திறன் அறிந்து உணவுகள் வகைப்படுத்தப்பட்டிருந்தது.
ஆனால் இன்று மாறிவந்த காலச்சூழல், பணி, இடம்பெயர்வு போன்ற காரணங்களினால் நம்முடைய உணவு முறை மாறியுள்ளது. ஒரு குடும்பம் என்றால் ஒரே வகையில் பிரிக்கப்பட்டது. அதாவது சிறிய வயதிலிருந்து பெரியவயதுவரை எத்தனை வகைப்பட்ட ஆட்கள் இருந்தாலும் கூட எல்லோருக்கும் ஒரே வகையான உணவாகப் பிரிக்கப்பட்டது. சில உணவுகளை நாம் நிறைய எடுக்கக்கூடிய சூழலை உருவாக்கிக் கொண்டோம்.
நிறைய அரிசி கலந்த உணவுகள், மாவு கலந்த உணவுகள், எண்ணெய் கலந்த உணவுகள், செயற்கை உணவுகள், ஒரு உணவில் விரைவில் பூஞ்சை வராமல் இருக்கவேண்டும் என்பதற்காக ரசாயனப் பொருட்கள் சேர்க்கக்கூடிய சில உணவுகள் எல்லாமே எடுக்கக்கூடிய காலகட்டம் இருக்கிறதால் நம்முடைய கழிவுமண்டலம் ஒழுங்காக வேலை செய்கிறதா? என்றால் கண்டிப்பாக இல்லை என்றுதான் நாம் சொல்ல வேண்டும்.
கழிவு என்பது மிகக்குறைவாக இருக்க வேண்டும். ஆனால் இன்றைக்கு இருக்கக்கூடிய உணவுகளில் கழிவு என்பது மிக அதிகமாக இருக்கிறது. ஒரு ஆணோ பெண்ணோ மலச்சிக்கல் இல்லாமல் இருக்கிறபொழுதுதான் அவருடைய உடல் ஆரோக்கியமாக இருப்பதாக நாம் சொல்லலாம்.
அதாவது சித்த மருத்துவ நூல்களிலே சொல்வார்கள் மலம் என்பது புழுக்கை, புழுக்கையாக வெளியேற வேண்டும் என்று, அதாவது மலம் என்பது மலவாயில் ஒட்டக்கூடாது. இன்றைக்கும் பறவைகளைப் பாருங்கள், சில பறவைகள் எச்சம் இடுகின்றன. அந்த மாதிரி எச்சம் ஒட்டாது. ஆடு புழுக்கை போடும், வெறும் புல்லையும், இலை தழைகளையும் சாப்பிடக்கூடிய ஆடு புழுக்கையாகப் போடும் போது மலவாயில் ஒட்டுவது கிடையாது.
அதேமாதிரிதான் ஒரு மனிதனுக்கும் மலம் மலவாயில் ஒட்டக்கூடாது. எந்த மனிதனுக்கு மலவாயிலில் மலம் ஒட்டுகிறதோ அவனுக்கு கழிவுமண்டலப்பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.
இன்றைக்கு நம்மை சார்ந்து நாம் வளர்க்கக் கூடிய நாயை எடுத்துக்கொண்டாலும் சரி, பூனையை எடுத்துக்கொண்டாலும் சரி, ஏன் காகம் எடுத்துக்கொண்டாலும் சரி, இவை அனைத்துமே நம்மைப்போலவே மலம் கழிக்க ஆரம்பித்துவிட்டன. ஏனென்றால் நம்மை சார்ந்து இருக்கக்கூடிய ஜீவராசிகளையும் மனிதன் கெடுத்துக்கொண்டிருக்கிறான் என்பதற்கு இது ஒரு உதாரணம் என்றே சொல்லலாம்.
மலச்சிக்கல் ஒரு மனிதனுக்கு இருந்தது என்றால் கண்டிப்பாக உடலில் பல பந்தம் வரும். அதனால்தான் நாம் சொல்வோம் மலபந்தம் மனபந்தம் என்று. ஆக ஒரு மனிதனுக்கு மலச்சிக்கல் இருக்கிறது என்றால் தீர்க்கமான சிந்தனைக்கு நாம் வரமுடியாது. ஆக மலம் சிக்கலில்லாமல் இருக்கவேண்டும் என்றால் உணவுகளை தேர்ந்தெடுத்து ஒழுங்காக முறையாக எடுக்கும் பொழுது மலச்சிக்கல் இல்லாத சூழல் உண்டாகும். மலச்சிக்கல் கழிவுமண்டலப் பிரச்சனையில் இருந்தது என்றால் நம்முடைய படைப்புத்திறன் அதிகமாக குறையக்கூடிய வாய்ப்பு உண்டு. நல்ல எண்ணம் எந்த மனதில் இருந்து உதிக்கும் என்றால் கழிவுமண்டலப் பிரச்சனை இல்லாத ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோதான் நல்ல எண்ணங்கள் உதிக்கக்கூடிய ஒரு வாய்ப்பு உண்டு.
நிறைய காழ்ப்புணர்ச்சி, வெறுப்பு, பித்தம் அதிகரித்த நிலை, குழப்பமான மனநிலை, பதற்றமான நிலை, மன உளைச்சல் ஆகக்கூடிய நிலை, கோபப்படக்கூடிய நிலை எல்லாமே கழிவுமண்டலப் பிரச்சனை யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்குத்தான் இந்த மாதிரி விசயங்கள் ஏற்படுவதற்கான ஒரு சூழல் இருக்கிறது.
பண்டைய காலத்தில் எடுக்கப்பட்டமாதிரியான உணவுகளை ஆணோ, பெண்ணோ சிறுவர்களோ, வயதானவர்களோ இவர்களெல்லாம் தனக்கேற்றமாதிரி உணவுகளைத் தேர்ந்தெடுத்து எடுக்கிறபொழுது செரிமான மண்டலம் ஒழுங்காக முறையாக வேலை செய்யும்.
செரிமானமண்டலம் ஒழுங்காக முறையாக வேலை செய்து முழுமையாக செரித்து அந்த உணவில் உள்ள சத்துக்களையெல்லாம் இரத்தத்தில் தாதுக்களாக பிரிக்கப்பட்டு இரத்தத்தில் சேர்ந்து ஒழுங்கான முறையில் உடலெல்லாம் நிரவப்பட்டது என்றால் கண்டிப்பாக பிரச்சனை இருக்காது. செரிமானமண்டலம்தான் கழிவுமண்டல வேலையில் முரண்பாடு உண்டாவதற்கு காரணமாக அமைகிறது.
யார் ஒருவருக்கு செரிமானக்கோளாறு பிரச்சனை இருக்கிறதோ அவருக்கு நரம்பு பிரச்சனை, வாய்வுத்தன்மை, அமிலத்தன்மை, மலப்பிரச்சனைகள் வருவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.
இந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் மூலம் எதுவென்று பார்த்தால் உணவை சரியான முறையில் தேர்ந்தெடுக்காமல் உண்பதுதான். ஆக எப்பொழுதுமே உணவில் மிதமான உணவை எடுத்துப் பழகவேண்டும்.
கழிவு மண்டலத்தில் நான்கு முக்கிய உறுப்புகள் உள்ளன.
அவை (1)சிறுநீரகங்கள், (2)தோல், (3)நுரையீரல், (4)பெருங்குடல் ஆகியன ஆகும்.
சிறுநீரகங்கள்
============
சிறுநீரகங்கள் மூத்திரத்தையும் அதாவது சிறுநீரையும், நுரையீரல்கள் கரியமில வாயுவையும், தோல் வியர்வையையும், பெருங்குடல் மலத்தையும் வெளியேற்றுகின்றன.
நமது சிறுநீரகங்கள் மிகவும் மென்மையானவை. தனி மனித நெறிமுறைகளைக் கொண்டே நமது சிறுநீரகங்களின் ஆரோக்கியத் தன்மையை நாம் உணரலாம்.
புகை மற்றும் போதைப் பழக்கம், மாமிச உணவுகளை அதிகமாகச் சாப்பிடுவது போன்றவற்றால் நம் நுட்பமான உணர்வுகள் மேலும் மேலும் மழுங்கடிக்கப்பட்டு, உடலானது தேய்வை நோக்கிப் பயணிக்கத் தொடங்கிவிடுகிறது.
தேவையில்லாத கோபம், மன அழுத்தம், மன உளைச்சல், படபடப்பு, பயம் மற்றும் உணவில் அதிகக் காரம் , உப்பு, போன்றவற்றால் நமது உணர்வுப்பூர்வ உறுப்பான சிறுநீரகங்கள் பாதிக்கப்படுகின்றன.
நமது உடலின் ரத்த சுத்திகரிப்பு பணியிலும், உடலின் கழிவுகளை முறையாக வெளியேற்றி உடலை நிலைக்கச் செய்வதிலும் நமது சிறுநீரகங்கள்தான் முன்னணியில் இருக்கின்றன.
தோல்
======
உடலின் வெளிப்புறமாக இருக்கும் தோலும் கழிவுத்தொகுதியின் ஒரு அங்கமாகும். தோலினூடாக வெளியேற்றப்படும் வியர்வையும் கழிவுப் பொருட்களான மேலதிக நீர், சிறிய அளவிலான யூரியா, மற்றும் சில உப்புக்களைக் கழிவாகக் கொண்டிருக்கும்
மனித உடல் உறுப்புகளிலேயே மிகப் பெரிய உறுப்பு தோல் தான். கிட்டத்தட்ட இரண்டு சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. உடலின் மொத்த எடையில் 16 முதல் 20 சதவீதம் தோலின் எடை இருக்கும். கண், காது, மூக்கு, இதயம், சிறுநீரகம், மூளை போன்றவற்றைப் போன்றே, தோலும் மிக முக்கியமான உறுப்பாகும்.
தோலில் நுண்ணிய துவாரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு துவாரத்தின் கீழும் ஒரு வியர்வை சுரப்பி இருக்கிறது. இதைத் தவிர அபாக்ரின், செபாஷயஸ் சுரப்பிகளும் உள்ளன. அபாக்ரின் சுரப்பிகள் அக்குள்களிலும், ரோமம் வளரும் பகுதிகளிலும் உள்ளன. இவை ஒரு வித திரவங்களை ரோமங்கள் மூலம் சுரக்கும். செபாஷயஸ் சுரப்பிகள் உள்ளங்கை, கால் தவிர எல்லா இடத்திலும் இருக்கிறது. தலையில் உள்ள வியர்வை சுரப்பிகள் சிபம் எனும் எண்ணை திரவத்தை சுரக்கின்றன. உண்மையில் வியர்வை என்பது உடல் நலத்தை பேணு வதற்காகவே. வியர்வை என்ற ஒன்று இல்லையானால் மரணம் நிச்சயம். வியர்வை சுரப்பிகள் மிகமுக்கியமாக சிறுநீரகத்தின் வேலைப்பளுவை குறைக்கின்றது.
நுரையீரல்
=========
சுவாசித்தலே அனைத்து உயிரினங்களுக்கும் இன்றியமையாத பணியாக மிக முக்கியமான பணியாக கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு உயிரினத்திற்கும் சுற்றுப்புறச்சூழலுக்கும் இடையில் ஓய்வின்றி தொடர்ச்சியாக காற்றுப்பரிமாற்றம் நடந்து கொண்டே இருக்கிறது.
காற்றிலுள்ள பிராணவாயுவை எடுத்து உடல் உறுப்புகளுக்கு தருவதும், உறுப்புகள் உயிர்க்காற்றினை எடுத்துக்கொண்டு அசுத்த காற்றினை அதாவது கரியமில வாயுவினை வெளியேற்றுவதும் சுவாசம் என்கிறோம். இவ்வாறு காற்றை உள்ளிழுத்து வெளிவிடுகின்ற வேலையை நுரையீரல் செய்கின்றது.
பெருங்குடல்
===========
பெருங்குடல் திண்மக் கழிவுகளுக்கான ஒரு சேமிப்புக் குழாய் ஆகும். பெருங்குடலின் முக்கிய செயற்பாடு மலத்தில் இருந்து நீர், உப்புக்கள் என்பவற்றைப் பிரித்து எடுப்பதாகும். பாலூட்டிகளில் இது ஏறு பெருங்குடல், இறங்கு பெருங்குடல், குறுக்குப் பெருங்குடல், நெளிபெருங்குடல் என நான்கு பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. பெருங்குடல்வாயில் இருந்து இறங்கு பெருங்குடல் தொடக்கம் வரையுள்ள பகுதி வலது பெருங்குடல் எனவும் மீதி இடது பெருங்குடல் எனவும் அழைக்கப்படுவது உண்டு.
கழிவுத்தொகுதி (Excretory system) எனப்படுவது உயிரினங்களின் உடலில் இருந்து தேவையற்றதாகவும், மேலதிகமானதாகவும் கருதப்படும் பொருட்களை வெளியேற்றும் ஒரு உயிரியல் தொழிற்பாட்டிற்கான உடல் உறுப்புக்களின் தொகுதியாகும். இந்தத் தொகுதி உடலில் ஒரு சீரான சமநிலையைப் பேண உதவும்.
பொதுவாக உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றும் அனைத்து உடல் உறுப்புக்களும் கழிவுத்தொகுதியினுள் அடங்குமாயினும், சிறுநீர்த்தொகுதியே மிக முக்கியமான கழிவுத்தொகுதியாகக் கருதப்படுகின்றது. இதனால், சிலசமயம் சிறுநீர்த் தொகுதியையே கழிவுமண்டலம் எனவும் அழைப்பதுண்டு.
வளர்சிதைமாற்றத்தில் உருவாகும் கழிவுப் பொருட்கள், உடலிற்குத் தேவையற்ற, அல்லது மேலதிகமான திண்ம நீர்ம, வளிமப் பொருட்கள் அனைத்தும் உடலில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு இந்த கழிவுத்தொகுதிகள் உதவுகின்றது. உடலின் அனைத்து உறுப்புக்களும் வளர்சிதைமாற்றத் தொழிற்பாட்டில் பங்குகொண்டாலும், கழிவுகளை வெளியேற்றுவதில் பங்களிக்கும் உறுப்புக்களே கழிவு மண்டலத்தில் இணைக்கப்படுகின்றன.
சித்தர்களின் குரல்'s photo.

                                          மனித உடலின் மகத்துவம்


  நாளமில்லா சுரப்பி மண்டலம்
============================
ஆண், பெண் இருபாலருக்கும் அந்தந்த வயதுக்கேற்ப உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு அதாவது , ஆண்களுக்கு மீசை முளைப்பது, பெண்களுக்கு மார்பகம் வளர்வது போன்றவற்றுக்கு முக்கியக் காரணமாக இருப்பது இந்த நாளமில்லா சுரப்பி மண்டலம்தான். மேலும் ஆணும் பெண்ணும் உறவு கொண்டு மகிழவும் இந்த மண்டலத்தில் உள்ள சுரப்பிகளே காரணம்.
நமது உடலில் உள்ள சுரப்பிகள் பல சிறப்பான திரவங்களை சுரக்கின்றன.இவை நரம்பு மண்டலம் தரும் தொடர்புகள் போன்று தகவல் தொடர்பு கருவியாகவும் பயன்படுகின்றன. நாளமில்லா சுரப்பிகளின் பணிகள் அனைத்தும் நரம்பு மண்டலத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன.
இவற்றை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்.
---------------------------------------------------------------------------
வெளிப்புற சுரப்பிகள்
உதாரணம் வாய், வயிறு, குடற் பகுதி, வியர்வை, கண்ணீர் போன்றவை ஆகும்.
மற்றொன்று உட்புற சுரப்பிகள்
இவை சுரக்கும் நீர்கள் அல்லது திரவங்கள் அனைத்தும் வெளியேற்ற நாளங்கள் எனப்படும் குழாய்கள் ஏதும் இல்லாத காரணத்தால் நிண நீர் திசுக்களில் அல்லது இரத்தத்தில் நேரடியாக கலந்து விடுகின்றன.
இரத்த மண்டலத்தில் இரத்த ஓட்டத்தில் கலந்து கொண்டு உடலில் உள்ள அனைத்து திசுக்களுக்கும் உறுப்புகளுக்கும் போய் சேர்கின்றன. பிறகு தனது தனித்தன்மையை காட்டி உடலின் உறுப்புகளில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. இத்தகைய நாளமில்லா சுரப்பிகள் சுரக்கும் திரவத்தைத்தான் ஹார்மோன்கள் என்று அழைக்கப்படுகின்றன.
இந்த ஹார்மோன்கள் நமது உடலின் வளர்ச்சிக்கு, சிதையும் திசுக்கள் சீரடைதலுக்கு, அடிப்படை உணர்வுகளின் உந்துதலுக்கு, இன உணர்வுகளின் ஊக்கத்திற்கு, கோபம், பயம், கொடூரம், சந்தோசம், துயரம் போன்ற குணாதிசயங்களுக்கு, சூழ்நிலைக்கேற்றவாறு உடலினை தயார் செய்துகொள்வதற்கு, நம்மை தாக்கும் நோய்களில் இருந்து காத்துக்கொள்வதற்கு, காதல் உணர்வுகளுக்கு என அனைத்து செயல்களுக்கும் காரணமாக இருக்கின்றன.
நம் உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் பற்றி காண்போம்.
(1)பிட்யூட்டரி சுரப்பி,
(2)தைராய்டு சுரப்பி,
(3)பாராதைராய்டு சுரப்பி,
(4)தைமஸ் சுரப்பி,
(5)அட்ரீனல் சுரப்பி,
(6)பால் இன சுரப்பி,
(7)கணைய சுரப்பி,
(8)பீனியல் சுரப்பி ஆகியன ஆகும்.
பிட்யூட்டரி சுரப்பி;-
**************************
இது கண்கள் மற்றும் மூக்குக்கு பின்புறமாக சிறுமூளைக்கு அடியில் கபால குழியில் பயிறு வடிவத்தில் அல்லது முட்டை வடிவில் அமைந்து உள்ளது. இதன் எடை 0.5கிராம் ஆகும். அனைத்து நாளமில்லா சுரப்பிகளை திறமையாக பணி செய்ய தூண்டுவது பிட்யூட்டரி சுரப்பி ஆகும். அதனால் இது சுரப்பிகளின் தலைவன் எனப்படும். இது வளர்ச்சி ஹார்மோன், தைராய்டு ஊட்ட ஹார்மோன், அட்ரீனல் ஊட்ட ஹார்மோன், இனப்பெருக்க ஊட்ட ஹார்மோன் மற்றும் ஆக்ஸிடோசின், வேசோபிரசின் ஆகிய ஹார்மோன்களை சுரக்கிறது.
தைராய்டு சுரப்பி;-
**************************
இது கழுத்தின் முன் பரப்பில் அமைந்து உள்ளது. இதன் எடை 28கிராம். இது தைராக்சின் மற்றும் டிரையோடோதைரானின் ஹார்மோன்களை சுரக்கிறது.
பாராதைராய்டு சுரப்பி;-
*******************************
இது தைராய்டு சுரப்பியின் பின்புறத்தில் அமைந்து இருக்கும். இவை நான்கு இருக்கும். ஒவ்வொன்றும்0.05கிராம் எடை அளவு இருக்கும். இது பாராதார்மோன் என்னும் ஹார்மோனை சுரக்கிறது. இதன் பணி கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவற்றை கட்டுப்படுத்துவது ஆகும்.
தைமஸ் சுரப்பி;-
**********************
மூச்சுக்குழாய் இரு பிரிவாக பிரிவதற்கு முன்பாக தைராய்டு சுரப்பிகளுக்கு சற்று கீழாக அமைந்து உள்ளது. இது தைமிக் ஹ்யூமரல் ஃபேக்டர் என்னும் ஹார்மோனை சுரக்கிறது.
அட்ரீனல் சுரப்பி;-
************************
இது சிறுநீரகங்களின் மேற்பாகத்தில் அமைந்து உள்ளன. கார்டெக்ஸ் மற்றும் மெடுல்லா என்ற இரு பாகங்களை கொண்டது. ஒவ்வொன்றும் ஏழு கிராம் எடை கொண்டது. இது கார்டிசோன் மற்றும் அட்ரீனலின் ஹார்மோன்களை சுரக்கிறது.
பால் இன சுரப்பி;-
************************
இதன் சுரப்பிகளாக விரைகளும், சூலகங்களும் விளங்குகின்றன.
கணைய சுரப்பி;-
************************
இது உட் புறமும் சுரக்கும். வெளிப்புறமும் சுரக்கும். கணையம் இன்சுலின் மற்றும் குளுகோன் என்ற இரண்டு ஹார்மோன்களை சுரக்கின்றது.
பீனியல் சுரப்பி;-
***********************
இது பெருமூளை எபிபிசிஸ் என்னும் இடத்தில் ஒரு சிறிய உறுப்பாக அமைந்து உள்ளது.
இந்த மண்டலத்தில் உள்ள சுரப்பிகளில் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்துவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. மேலும், அவற்றுக்கான மருந்துகள் கிடைப்பதும் மிகவும் அரிது.
அந்த மண்டலத்தில் உள்ள முக்கிய சுரப்பியான கணையம் பாதிக்கப்படுவதால் ஏற்படும் சர்க்கரை நோய், இன்று உலகத்தையே பயமுறுத்தி வருகிறது. தவிர, உடல் பருமன் , மாதவிலக்குகோளாறுகள் , தைராய்டு நோய்கள் போன்றவற்றை இம் மண்டலத்தில் ஏற்படும் மிக முக்கியமான நோய்களாகும்.
மேலும், சித்த உடற்கூறு தத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள ஆறு ஆதார உயிர் மையங்கள்தான், இம் மண்டலத்தில் உள்ள சுரப்பிகளைத் தூண்டிச் செயல்படுத்துவதாகச் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
யோகாசனப் பயிற்சிகளாலும், சுவாச ஒழுங்கு மூச்சு பயிற்சிகளாலும் உடலுக்கு என்ன பயன் விளையக்கூடும் என்பது பற்றி பலருக்கும் சந்தேகங்கள் இருப்பது இயல்பு. பொதுவாக அதுவொரு ஆரோக்கிய பயிற்சி என்பது மட்டும் தான் வெளிப்படையாக தெரிந்த செய்தி.
ஆனால் யோகாசனப்பயிற்சிகளும், சுவாச ஒழுங்கு மூச்சு பயிற்சிகளும் உடலில் அரிதான பல மாற்றங்களை நிகழ்த்துகின்றன என்பதே உண்மை. இன்றைக்கு இயங்கும் கம்பியில்லா தகவல் தொடர்பு சாதனங்கள் அனைத்தும் கண்ணுக்கு தெரியாத மின்காந்த அலைகள் மூலம் செயல்படுகின்றன என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம்.
நமது மூளையும் ஏறக்குறைய இதே அடிப்படையில் செயல்பட்டு தான் மனிதனை உலகத்தின் உயர்ந்த பரிணாம அதிசயமாக மாற்றியிருக்கிறது. இன்று வரை மனித மூளையின் முழு ஆற்றலின் வெளிப்பாட்டையும் அறிந்திருக்க முடியவில்லை. ஆனால் வியத்தகு செயல்பாட்டை கொண்ட சில விஞ்ஞானிகளால் மட்டும் உலகின் அரிதான கண்டுபிடிப்புகளை வெளியிட முடிந்திருக்கிறது. இதற்கு காரணம், அவர்களின் உடல் அதிகமான மின்காந்த செயற்பாடுகளை கொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.
இதை வேறுவகையில் பார்க்கலாம். இந்த பூமி ஒரு மிகப்பெரிய இயற்கை காந்தம் என்பது உண்மை. இதன் காந்த அலைகள் அதைச்சுற்றிலும் கிட்டத்தட்ட 66 ஆயிரம் மைல்கள் விட்டத்திற்கு ஒரு அடர்த்தியான பரப்பளவில் அலைகளாக விரிந்து கிடக்கிறது. அதன் வட துருவம் வடஅமெரிக்கா வரையிலும், தென்துருவம் தென்விக்டோரியா வரையிலும் படர்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அப்படியானால் இந்த காந்த எல்லைக்குள் வசிக்கிற அனைத்து உயிரினங்களும் மின்காந்த துணுக்குகள் தான் என்பதில் மாற்றமில்லை. மின்காந்த சக்தி விதிகளுக்கு உள்பட்டு தான் இந்த உலகமும், அதனுள் இருக்கும் நமது உடலும், உறுப்புகளும் இயங்குகின்றன.
மின்காந்த விதிகளின்படி நமது உடலும் வடதுருவம், தென்துருவமாக பிரிக்கப்பட்டுள்ளது.
காந்த சக்தியின் அடிப்படையில் உடலை ஆராயும் பொழுது மேலிருந்து கீழாக தலை, கைகள், இடுப்பு வரை மேல்பகுதி வடதுருவமாகவும், இடுப்பிற்கு கீழ்புறம், கால்கள் முதலியவை தென்துருவமாகவும் அமைகின்றன.
பக்கவாட்டில் பார்க்கும் போது வலது கை, முன் கை, வலது பாதி வடதுருவமாகவும், இடது கை, முன் கை என்று உடலின் இடப்புறம் முழுமையும் தென்துருவமாகவும் அமைகின்றன.
உடலின் முன்புறம் அதாவது, நெற்றி, முகம், மார்பு, வயிறு இவைகள் வடதுருவமாகவும், உடலின் பின்புறமான பிடரி, கழுத்தின் பின்புறம், முதுகுத்தண்டு இவைகள் தென்துருவமாகவும் அமைகின்றன.
இந்த உடல் அமைப்பின் நடுநேர் கோட்டில் தான் மனித உடலை இயக்கும் 7 ஆதார சக்கரங்கள் (சுரப்பிகள்) அமைந்துள்ளன. இந்த சுரப்பிகள் முழுமையாக காந்த ஆற்றலின் விதிகளின் அடிப்படையில் சிறப்பாக இயங்கி மனித உடலையும், மூளையின் ஆற்றலையும் செம்மைப்படுத்துகின்றன.
விஞ்ஞானிகளும், மருத்துவஉலகமும் மனித உடற்கூறு இயலையும், பிரபஞ்சத்தின் சக்தி ஆற்றல் அந்த உடலில் செயல்படும் விதத்தையும் கணிக்கும் முன்பே, யோக சக்தியில் வளர்ந்த யோகிகள் மனித உடலின் இந்த சக்கரங்களையும், அவற்றில் மின்காந்த ஆற்றல் செயல்படும் விதத்தையும் துல்லியமாக கணித்து அந்த ஆற்றலை செழுமைப்படுத்தும் விதத்தையும் உலகிற்கு அளித்தனர். அது தான் யோகாசனங்களும், மூச்சுப்பயிற்சியும். இதில் மூச்சுப்பயிற்சி பல வகைகளில் கற்பிக்கப்பட்டாலும், அதில் சுவாச ஒழுங்கு என்ற முச்சுபயிற்சி மட்டுமே சரியானது ஆகும். மற்ற வாசியோகப்பயிற்சிகள் உடலில் உள்ள செல்களை சிதைத்து சின்னாபிண்ணமாக்கிவிடும் என்றால் அது மிகையாகாது.
யோகிகளின் கூற்றுப்படி, மனித உடல் 7 சக்கரங்களில் இருந்து இருகூறுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
சக்கரம் என்றால் ஒரு குறிப்பிட்ட இடம் அல்லது முனைப்பு. இந்த குறிப்பிட்ட இடங்களில் உள்ள நரம்புகள் மூளையில் உள்ள முக்கியமான நாளமில்லா சுரப்பிகளோடு தொடர்புடையவை.
இந்த குறிப்பிட்ட சக்கரங்கள் அல்லது முனைப்புகள் தூண்டப்படும் போது அந்த குறிப்பிட்ட நாளமில்லா சுரப்பிகள் செவ்வனே இயங்கி உடல் உறுப்புகளை சரியாக இயங்க செய்கின்றன.
இந்த சக்கரங்களின் மூலமாகவே உடலின் ஜீவசக்தி பல பாகங்களுக்கும் அனுப்பபடுகிறது என்கிறார்கள். ஆக, இந்த சக்கரங்கள் இயங்க தேவையான சரியான மின்காந்த ஆற்றலை அவற்றுக்கு நாம் தொடர்ந்து அளித்திட வேண்டும். அதற்கு உதவுவது தான் யோகசனங்களும், சுவாச ஒழுங்கு மூச்சுப்பயிற்சியும் ஆகும்.
இப்போது இந்த சக்கரங்கள் என்று சொல்லப்படக்கூடிய 7 ஆதாரங்களையும் மருத்துவரீதியாக பார்க்கலாம்.
1. மூலாதார சக்கரம்
==================
இந்த சக்கரம் எருவாய்க்கும் கருவாய்க்கும் இடையில் இருக்கிறது. இதுவே குண்டலி சக்தியின் இருப்பிடம் என்பார்கள். இது பாலுணர்வு தொடர்பான உணர்வுகளுக்கு இருப்பிடம். இதன் மையம் மூளையின் அடிப்புறமாகும். ஆண்களில் டெஸ்டிஸ் எனப்படும் உறுப்பும், பெண்களில் சினைப்பையும் இதன் பிரதிபலிப்பாகும்.
2. சுவாதிஷ்டான சக்கரம்
======================
இந்த இடத்தில் சோலார் பிளக்ஸ் என்று சொல்லப்படும் நரம்பு மண்டலம் உள்ளது. இது அட்ரீனல் சுரப்பிகளுடனும், கழிவு மண்டலத்துடனும் தொடர்புள்ளது. சிறுநீரக மண்டலம் இருக்கும் இந்த இடம் ஆண்குறி அல்லது பெண்குறி. இது குதத்தையும், கால்களையும் கட்டுப்படுத்தக்கூடியது. கர்ப்பபையும், சினைப்பையும் இதன் கட்டுப்பாட்டில் உள்ளது.
3. மணிபூரக சக்கரம்
==================
இதன் இருப்பிடம் தொப்புள். இது அக்கினி சக்தியாக கருதப்படுகிறது. இது கணையத்துடன் தொடர்புடையது. வயிறு, குடல், கல்லீரல், பித்தப்பை, கணையம் போன்றவை இதன் கட்டுப்பாட்டில் உள்ளன.
4. அனாகத சக்கரம்
=================
இது இருக்கும் இடம் இதயம். இது தைமஸ் சுரப்பியுடன் தொடர்புடையது. இது இதயத்தையும், நுரையீரலையும் கட்டுப்படுத்துகிறது. வேகஸ் நரம்பு மண்டலம் என்னும் அதி முக்கிய நரம்பு மண்டலம் இதன் கட்டுப்பாட்டில் உள்ளது.
5. விசுக்தி சக்கரம்
================
இதன் இருப்பிடம் கழுத்து மற்றும் பின்புற எலும்புகள் அமைந்துள்ள இடம். காதுகள், மூக்கு, தொண்டை, கண்கள், உணவுக்குழல், பாரா தைராய்டு ஆகியவை இதன்கட்டுப்பாட்டில் உள்ளன. இது தைராய்டு சுரப்பியை குறிக்கிறது.
6. ஆக்ஞா சக்கரம்
================
இது முளையின் நடுமையத்தில் வெளிப்புறமாக இரண்டு புருவ மத்தியில் அமைந்துள்ளது. இது பீனியல் கிளாண்ட் எனப்படும் சுரப்பியைக் குறிக்கிறது. இந்த பீனியல் கிளாண்டுக்கு மூன்றாவது கண் என்ற பெயர் உண்டு. இது மூளையின் கீழ்புறத்தையும், காதுகளையும், மூக்கையும் கட்டுப்படுத்துகிறது.
7. சகஸ்ரஹார சக்கரம்
====================
இது பிட்யூட்டரி சுரப்பியை குறிக்கிறது. தலையின் உச்சியில் அமைந்துள்ளது. பிட்யூட்டரி நாளமில்லா சுரப்பிகளின் தலைவன் என்ற பெருமை கொண்டது. அதீதமான அறிவுத்திறனை ஒருவர் பெறுவதற்கு இந்த பிட்யூட்டரி சுரப்பியின் ஆற்றல் தான் காரணம்.
ஆக..இந்த 7 சக்கரங்களை தூண்டி நன்றாக செயல்படும் படி செய்யவும், உடலுக்கு வரும் நோய்களை தடுத்து நிறுத்தவும் வந்த நோய்களை குணப்படுத்தவும் உடலுக்கு இயங்கும் காந்தசக்தியை வலுப்படுத்தவும் சுவாச ஒழுங்கு மூச்சுப்பயிற்சியும், யோகப்பயிற்சியும் உதவுகின்றன.
அதாவது நமது உடலுக்குள் வலுவான காந்தசக்தியை இந்த பயிற்சிகள் உருவாக்குகின்றன. ஒருவர் மிகவும் சராசரி அறிவுத்திறனுடன், எதிலும் பிடிப்பில்லாமல் இயங்குகின்றார் என்று வைத்துக் கொள்வோம்.
அவர் இந்த பயிற்சிகளை செய்து வருகையில் மேற்கண்ட சகஸ்ரார சக்கரம் தூண்டப்பட்டு மிகுந்த சுறுசுறுப்புடனும், நல்ல நினைவாற்றலுடனும், மிகுந்த திறனுடனும் விளங்கும் நபராக மாற்றத்தை காண முடியும்.
இந்த மின்காந்த சக்திகள் எப்படி நோய்களை குணப்படுத்துகின்றன என்பதற்கு வேறு ஒரு உதாரணத்தையும் கூறலாம்.
நமது அன்றாட வாழ்வில் காற்றில் கலந்திருக்கும் எத்தனையோ நுண்கிருமிகள் நமது மூச்சின் வழியாக உள்ளிழுக்கப்பட்டு உடலுக்குள் புகுந்து விடுகின்றன. ஆனால் இந்த நுண்கிருமிகளை எல்லாம் நமது ரத்தத்தின் வெள்ளை அணுக்கள் கொன்று போட்டு உடலை பாதுகாக்கின்றன. அதாவது குறிப்பிடத்தக்க வெப்பம் உடலில் உருவாக்கப்பட்டு இந்த நோய்க்கிருமிகள் கொல்லப்படுகின்றன என்பதே உண்மை. இது போல் அதீதமான திறனுடைய வெப்பத்தை அதாவது சுத்த கணலை யோகாபயிற்சியும், சுவாச ஒழுங்கு மூச்சு பயிற்சியும் நமக்கு தருகிறது.
இதுதவிர பயிற்சிகளின் உச்சத்தில் ஒருவரால் கண்களால் கூட பொருள்களை நகர்த்தும் (சைக்கோகீனசிஸ்) என்ற ஆற்றலை பெறும் அளவுக்கு கூட முன்னேற முடியும் என்கிறார்கள் நிபுணர்கள். சிவனின் மூன்றாவது கண் என்பது கூட ஒரு வித ஆற்றலின் வெளிப்பாட்டு வடிவம் தான்.
இந்த சுவாச ஒழுங்கு மூச்சுப்பயிற்சியினால் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலுப்படுத்தப்படுகிறது. இதனால் உடலுக்குள் நுழையும் கிருமிகள் தடுக்கப்பட்டு கொல்லப்படுகின்றன. உடல் எப்போதும் ஆரோக்கியமாகவும், புத்துணர்வுடனும் இருக்கிறது.
சித்தர்களின் குரல்'s photo.

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...