Sunday 8 February 2015

அரசியல் மற்றும் சமூகம்

             அரசியல் மற்றும் சமூகம் 


அரசியல் மற்றும்  சமூகம் மீதான என் பார்வை 

சமீபத்திய செய்திகளில் இருந்தே ஆரம்பிப்போம்

#ரயில் பரமரிப்பு & பயணக் கட்டணம் ஊழல் ரூபாய்:500,000,000,000 (ஐம்பதாயிரம் கோடி)#

புதுசு கண்ணா புதுசு காங்கிரஸின் அடுத்த கட்ட ஊழல் சாதனை ஆரம்பம். எதிர்கட்சிகள் பாராளுமன்றத்தில் அமளி செய்யவும், வெளிநடப்பு செய்து பாராளுமன்றம் நடக்கவிடாமல் செய்யவும் காரணம் கிடைத்து விட்டது இங்கு வீணடிக்கப் பட்டுள்ளது அனைத்தும் மக்களின் வரிப் பணமே என்பதை மறக்க வேண்டாம்

#பிரதமர் மன்மோகன்சிங் வெளிநாட்டு பயணச்செலவு கடந்த 5 ஆண்டுகள் ரூபாய்:6420,000,000 (642 கோடிகள்)#

வெளிநாட்டுக்கு போய் அப்படி என்ன நாடு முன்னேற திட்டம் கொண்டுவந்தார்??
*எளிமையை அடையாளமாக காட்டிய காந்தி அவர்களின் கட்சியான காங்கிரசாரின் செயல்பாடுகளை பாருங்கள்.

#அமெரிக்கா வெளியிட்டுள்ள ஓன்றுக்கும் உதவாத & செயல்படாத பிரதமர்கள் பட்டியல்#*#இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் முதலிடம்#

#உங்களின் தொழில்துறைகளை இந்தியாவில் முதலீடு செய்யதீர்கள் உங்களின் பணம் வீணாய்ப்போகும். பன்னாட்டு நிறுவனங்களிடம் அமெரிக்கா வேண்டுகோள்#

#தாய்மொழியை பயன்படுத்தாதோர் அதை மதிக்காதோர் மாநகரம் பட்டியல்# #சென்னை-க்கு முதலிடம் BBC வெளியீடு#

#பெரியோகளுக்கு மரியாதை கொடுக்காதவர்கள் நிறைந்துள்ள மாநிலம் முதல் இடம் தமிழகம்#

இது பெருமைப்பட வேண்டிய செய்தி அல்ல.

நண்பர்களே ஒரு கனம் சிந்தியுங்கள் நம் பெற்றோர்கள் 1960-களின் இறுதியில் பிறந்தவர்கள் ஆனால் நாம் 1985-களின் இறுதியில் பிறந்தவர்கள் நமக்கும் நம் பெற்றோர்களுக்கும் கிட்டத்தட்ட 20-30 ஆண்டுகள் இடைவெளி இருக்கிறது ஆகவே நம் வேகத்திற்க்கும், விருப்பத்திற்க்கும் ஏற்றவாறு மாறி வர சற்று நேரம் ஆகலாம், மாறாமலும் கூட போகலாம் அது தவறு இல்லை.

*உங்களுக்கு அறிவுரை சொல்ல எனக்கு விருப்பம் இல்லை அதற்க்கான தகுதியும் எனக்கில்லை.

*சிறு தகவலை மட்டும் நினைவூட்ட விரும்புகிறேன்.

*உங்களின் குழந்தை பருவத்தில் நீங்கள் என்னவெல்லாம் மழலைத்தனமாக உளறினீர்களே அத்தனையும் அர்த்தம் புரியவில்லை என்றாலும் அதை ரசித்து கேட்ட முதல் ரசிகர்கள் நம் பெற்றோர்களே. இன்று அம்மா நம் பேரை அழைத்தாலே “என்னம்மா” என்று சலித்துக் கொண்டே கேட்கிறோம் (நான் உட்பட)...

#இங்குள்ள நண்பர்கள் அனைவரிடமும் சில கேள்விகள்# *இதை உங்கள் மனசாட்சி இடம் நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்*

உங்களுக்கு#ரஜினி, கமல், அஜித், விஜய், சிம்பு, தனுஷ்# போன்ற நடிகளின் பிறந்த நாள் தெரியும்.

*நம்மில் எத்தனை பேருக்கு தங்கள் அப்பா, அம்மாவின் பிறந்த தினம் நினைவிருக்கிறது???

*உங்களின் பணத்தில் ஒருமுறையாவது பெற்றோருக்காக பிறந்த தினம் கொண்டாடி இருக்கிறீகளா???

*எப்போதாவது அவர்களின் பிறந்த நாளுக்காக புதுத்துணி Surprise'ஆக வாங்கி கொடுத்து இருக்கிறீர்களா???

*எப்போதாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா என்று சொல்லி இருக்கிறீகளா???

*ஆனால் காதலர் தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடி வருகிறோம் சாக்லேட் கொடுப்பது பேஸ்புக்கில் வாழ்த்து பரிமாறுவது பற்றி சொல்லவே வேண்டாம்..

*ஒரே ஒரு முறை பெற்றோரின் பிறந்தநாளை கொண்டாடித்தான் பாருங்கள் அவர்கள் வேண்டாம் என்று தான் சொல்லுவர்கள் ஆனால் நீங்கள் ஒருமுறை ஆடை வாங்கி கொடுத்தால் பல வருடம் கழிந்த பிறகும் அதை சொல்லி பெருமைப் படுவார்கள். நாம் அந்த வார்த்தைகளில் சொர்கத்தையே காணலாம்.

**பெற்றோர்களையும் பெரியோர்களையும் மதிக்காத குடும்பம் உறுப்படாது** -பழமொழி (நல்ல குடும்பமே ஆரோக்கியமான குடும்பத்தின் அங்கம்)

சமூகம் அரசியல் மீதான களை எடுக்கும் என் பணி தொடரும்

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...