Friday 11 December 2015

விதைகள் சட்டம் 2004

                                   விதைகள் சட்டம் 2004


விவசாயிகளை பாதுகாக்காது


நாடு முழுதும் பல்லாயிரம் ஆண்டுகளாக விவசாயிகள் தாங்களே எண்ணற்ற வகையான விதைகளை உற்பத்தி செய்து பாதுகாத்து பராமரித்து பயன்படுத்தி வந்துள்ளனர். சுமார் 4 லட்சம் நெல்வகைகள் உலகின் நீண்ட நெடும் வரலாற்றில் இருந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. டாக்டர் ஆர்.எச்.ரிச்சார்யா என்ற நெல் ஆராய்ச்சியாளர் மத்தியப்பிரதேசம், சட்டீ°கர் மாநிலங்களில் மட்டும் சுமார் 20000 வகையான நெல் விதைகளை சேகரித்துள்ளார்.. இன்றும் நமது நாட்டில் 3000 நெல் வகைகள் பயன்பாட்டில் இருப்பதாக விபரங்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்று பல தானியங்கள், பழங்கள், காய்கறிகள், எண்ணை வித்துக்களின் விதைகளை விவசாயிகள் தங்கள் சொந்த அனுபவத்தில் உற்பத்தி செய்து பயன்படுத்தி வந்துள்ளனர்.


விதைகள், தாவரங்கள் ஆகியவற்றின் பன்முகத்தன்மையை பேணவும், விஞ்ஞான ஆய்விற்கு உட்படுத்தவும், விவசாயத் தொழிலாளி, குத்தகை விவசாயி ஆகியோர்களின் அனுப ஞானத்தையும், விஞ்ஞானக்கண்டுபிடிப்புக்களையும், இணைக்கவும் அவர்களை நவீன தொழில் நுட்பங்களில் தேர்ந்தவர்களாக ஆக்கவும், மத்திய அரசிற்கும், மாநில அரசிற்கும் ஒரு இசைவான பார்வையும், முரண்படாத கோட்பாடும், அதனை அமுலாக்க சட்டங்களும் அவசியம். ஆங்காங்கு செயல்படும் ஆராய்ச்சி பண்ணைகள் அவசியம். உயிர்க்கரு வங்கிகள், தொழில் நுட்ப வங்கிகள் அவசியம். இவை அனைத்தும் எளிதில் ஏழை விவசாயிகள் அணுகக் கூடிய வகையில் அமைக்கப்படுவது அவசியத்திலும் அவசியம். மத்திய மற்றும் பல மாநில அரசுகளின் பார்வைகள் இப்படி இல்லை. விவசாயத்தை வர்த்தக நோக்கோடும், பெருமுதலாளிகளின் தொழில்களோடும் இணைத்து பணப்புழக்கத்தை பெருக்கும் பார்வையோடும் சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே அரசுகள் செயல்படுகின்றன. இப்பொழுது உலகமயக்கொள்கையோடு இணைக்கிற முறையில் சட்டங்களும், அணுகுமுறைகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்தப்பார்வையில் புதிய விதைச்சட்டம் இந்திய அரசால் கொண்டு வரப்பட இருக்கிறது. இச்சட்டம் நமது விவசாயத்தை வளர்க்காது. இதை நம்பி வாழும் விவசாயத் தொழிலாளர்கள், குத்தகை விவசாயிகளை வறுமைப் பள்ளத்திலுருந்து மீளவிடாது. அவர்களது உழைப்பின் உபரி முன்னைவிட வேகமாக பறிபோகும். இந்தப்பின்அணியோடு வர இருக்கிற படுபிற்போக்குத்தனமான விதைச்சட்டத்தின் பாதகங்களை ஆராய்வோம்.
இந்திய நாட்டில் 1960ம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப் பட்ட பசுமைப் புரட்சியையொட்டி குறுகிய கால - அதிக மகசூல் விதைகளை உற்பத்தி செய்யும் பண்ணைகள் மத்திய - மாநில அரசுகள் மூலம் உருவாக்கப்பட்டன. இதற்னெ 1961ம் ஆண்டு தேசிய விதைகள் கார்ப்பரேஷன் என்பது உருவாக்கப்பட்டது. பின்னர் 1967ம் ஆண்டு உலக வங்கியின் உதவியோடு “தேசிய விதைகள் திட்டம்” (சூயவiடியேட ளுநநனள ஞசடிதநஉவ) என்பது உருவாக்கப்பட்டு, 17 மாநிலங்களில் விதைப் பண்ணைகள் உருவாக்கப்பட்டன.
அதுவரை பெரும் பகுதி அரசுத் துறையில் நடைபெற்று வந்த விதை உற்பத்தியில் 1988ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட “விதை உற்பத்தி வளர்ச்சியில் புதிய கொள்கை” தனியார் துறையினை ஊக்குவிப்பதாக அமைந்தது. விவசாயிகளுக்கு தரமான விதைகள் வழங்கும் வேலையைக் கூட அரசுத்துறை பண்கைள் துவங்கிய காலத்திலிருந்தே ஒழுங்காக செய்யவில்லை. விதைத் தேவையை பூர்த்தி செய்ய எந்த திட்டமும் அதனிடமில்லை. பணக்கார விவசாயிகளுக்கு கிடைக்கும் சலுகையாகவும், ஆளும் கட்சிக்கு அரசியல் விளம்பரமாகவும் அவைகள் இருந்தன. ஏழை விவசாயிகள் சொந்தமாக தயரிக்கும் விதைகளை நம்பியிருக்க நேரிட்டது. இதன் விளைவாக விவசாயிகளிடையே, விதை பரிவர்த்தனை உறவு வலுப்பட்டது. காலப்போக்கில் நிhவாகச் சீர்கேடுகள், ஊழல் ஆய்விற்கு போதுமான நிதி ஒதுக்கீட்டை ஒதுக்காமை, ஆய்வாளர்களை நியமிக்காமை அல்லது ஊக்கம் கொடுக்காமை, இத்தியாதி நடவடிக்கைகளால் அரசே குற்றுயிரும், குலைஉயிருமாக அரசாங்க விதைப்பண்ணை களை ஆக்கிவிட்டது. மறுபக்கம் தரமான விதை தயாரிக்கும் நவீன நுட்பங்கள் ஏழை விவசாயிகளிடம் பரவாததால் விவசாயிகள் தரமான விதையின்றி தவித்தனர். கடன் சுமைக்கும் இது பிரதான காரணமாக ஆனது. தனியார்துறையை நாடி நிற்கத்தள்ளப்பட்டனர். விளம்பர ஏமாற்று தவிர தனியார்துறை வேறு எதையும் செய்யவில்லை. என்றாலும், தங்களது தவிப்பிற்கு “அரசின் திட்டமிட்ட கொள்கையே” என்ற பார்வை விவசாயிகளிடையே பரவாத சூழலில் தனியார் மயக் கொள்கைகளை சந்தடி இல்லாமல் அரசு புகுத்தியது. தானும் விதைகளை தயாரித்து விற்கமுடியும் என்ற பிரமைகளையும் அரசின் நடவடிக்கை வளர்த்தது. பன்னாட்டு கம்பெனிகளை இந்திய விதை வர்த்தகத்தில் அனுமதித்திடவும் உலக வங்கியும் - அமெரிக்காவும் கடன் மற்றும் நிதி உதவியினை இந்திய அரசுக்கு வழங்கின. இக்கொள்கையின் விளைவாக பல பன்னாட்டுக் கம்பெனிகள் - உள்நாட்டுக் கம்பெனிகளுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டு - விதைகள் உற்பத்தி வர்த்தகம் ஏற்றுமதி - மற்றும் இறக்குமதிகளில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது மான்சாட்டோ, பேயர் உட்பட சுமார் 10 பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகள் இந்திய விதை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளன. உள்நாட்டில் சுமார் 400 கம்பெனிகள் விதைகள் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளன. இவைகளில் சுமார் 30 பெரிய நிறுவனங்களாகும். மீதம் உள்ளது சிறிய மற்றும் நடுத்தர வகையை சார்ந்தவை. இவைகளில் அரசுத்துறையில், கூட்டுறவுத்துறையில் 10 நிறுவனங்கள் மட்டும் உள்ளன. ஆகமொத்தத்தில் விதைகள் உற்பத்தி மற்றும் வினியோகத்தில் அரசுத்துறையின் பங்கு வெகுவாக குறைத்து பன்னாட்டு உள்நாட்டு நிறுவனங்களின் பங்கு பல மடங்கு உயர்ந்துள்ளன.


என்னதான் லாப வெறிகொண்ட தனியார் நிறுவனங்களின் பகீரத தலையீடு இருந்த போதிலும், தற்போதும் சுமார் 70 சதம் விதைகள் விவசாயிகள் மூலமே உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் சிறு,குறு விவசாயிகளின் கைக்கு எட்டாத துhரத்தில் விதைச்சந்தை உள்ளது. இதனால் தரக்குறைவான விதைகளே விவசாயிகள் பெற முடியும் என்ற நிலையும் உள்ளது. இந்த ஊனத்தை இன்றைய நிலையில் அரசு கவனம் செலுத்த வேண்டியது இப்பொழுது நடைமுறையில் இருக்கும், சிறு, குறு விவசாயி களிடையே இருக்கம் விதை பரிவர்த்தன முறைகளை பலப்படுத்தும் முறைகளே, தரமான விதைகளை தயாரிக்கும், நவீன தொழில் நுட்பங்களை, இந்த விவசாயிகள் அறிய வழிவகுத்தல், ஆங்காங்கு அதிக செலவில்லாமல் பெறக்கூடிய ஆலோசனை மையங்கள், விதை பாதுகாப்பு பெட்டகங்கள், குளிர்சாதன வசதிகள், வாகன வசதிகள், சாலை வசதிகள் போன்ற ஏற்பாட்டை வளர விட வேண்டுமே தவிர, பன்னாட்டு நிறுவனங்களின் விதை விற்பனை ஆக்கிரமிப்பல்ல; அதற்கு பாதுகாப்பல்ல, அவர்கள் வந்தாலும், அவர்களளோடு சந்தையில் போட்டி போடக்கூடிய தொழில் நுட்பத் திறனுள்ளவர்களாக விவசாயிகளை ஆக்குவதே விதைச்சட்டத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். ஆகமொத்தத்தில் விதைகளை உற்பத்தி செய்வது பாதுகாப்பது, பராமரிப்பது, பயன்படுத்துவது, பரிமாறிக்கொள்வது என்பது சிறு, குறு விவசாயிகள்தத்தளிப்பைத் தவிர்க்க உருவாக்கிக் கொண்ட இயல்பான உரிமையாகும், ஒத்துழைப்பு பண்பாடாகும் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். இந்த விவசாயிகளின் இன்று அனுபவித்து வரும் இந்த பாரம்பரியமான தாங்களாக உருவாக்கிக் கொண்டஉரிமைக்கு வேட்டு வைக்கும் நோக்கத்தோடு ஒரு மசோதா தயாரரய் இருக்கிறது.


இந்திய நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் “விதைகள் சட்டம் 2004” என்ற மசோதா தாக்கல் செய்யப்பட்டு அது நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இம்மசோதா அதே வடிவத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டு சட்டமாக்கப்படுமாயின், விவசாயிகளின் மேற்கண்ட பாரம்பரிய உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படுவதுடன், இவ்வுரிமைகள் அனைத்தும் தண்டனைக்குரிய குற்றங்களாக்கப்படும். விதைகள் உற்பத்தி - விநியோகம் அனைத்தும் பன்னாட்டு - உள்நாட்டு நிறுவனங்களின் அதிகார வரம்புக்குட்பட்டவையாக மாற்றப்பட்டு விடும். இந்திய அரசு விரும்பினால் கூட தலையிட முடியாத நிலைக்குத் தள்ளிவிடும்.


விதைகளை மையமாகக் கொண்டு வேளாண்மை தொடர்பான பல சட்டங்கள் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு அமுலில் உள்ளன. விதைகள் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் தனியார் சம்பெனிகளின் அதிகரிப்பு காரணமாக விதைகளின் தரத்தையும், உற்பத்தி மற்றும் விநியோகத்தையும் முறைப்படுத்துவதற்கு இத்தகைய சட்டங்கள் அவசியப்பட்டன. இவ்வகையில் நிறைவேற்றப்பட்டதே 1966ம் ஆண்டின் விதைகள் சட்டம். இச்சட்டத்தில் தேவையான திருத்தங்களைக் கொண்டு இன்றைய தேவைக்குப் பொறுத்தமான சட்டமாக மாற்ற வேண்டியது அவசியமானதுதான். ஆனால், மத்திய அரசின் புதிய விதைகள் சட்டம் இதற்கு நேர் எதிரான நோக்கங்கள் கொண்டதாகும்.
காட் பேச்சுவார்த்தை முடிவின் படி மேற்கொள்ளப்பட்ட வேளாண்மை தொடர்பான ஒப்பந்தம் (ஹடிஹ), உலக வர்த்தக நிறுவனத்தின் கட்டுப்பாடுகள், அதனைத் தொடர்ந்து இந்திய அரசு செயல்படுத்தி வரும் உலகமய, தாரளமய, தனியார் மயக் கொள்கைகளின் விளைவாக இந்திய நாட்டின் பாரம்பரிய விவசாயத்தில் பன்னாட்டு, உள்நாட்டு பகாசுரக் கம்பெனிகளின் படையெடுப்புகள் அதிகரித்து வருவது அறிந்ததே. விவசாயம், உணவு உற்பத்தி மற்றும் வேளாண் வர்த்தகத்தை தங்களது முழுக்கட்டுப் பாட்டில் கொண்டு வர வேண்டுமென்ற கனவை நினைவாக்க, விதைகள் உற்பத்தி மற்றும் விநியோகம் என்ற “தண்டு வடத்தைக்” கைப்பற்றுவதன் மூலம் மட்டுமே முடியும் என்பதைப் பன்னாட்டுக் கம்பெனிகளும், ஏகாதிபத்திய நாடுகளும் புரிந்து வைத்துள்ளன. இந்நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள, இக்கம்பெனிகள் துடியாய் துடித்துக் கொண்டுள்ளன.


வேண்டாத சனியனை விருந்துக்கு அழைத்ததைப்போல் இந்திய அரசு ஏற்றுக்கொண்ட றுகூடீ நிபந்தனைகளின் படி, ஏற்கனவே உருவாக்கப்பட்ட விதைகள் சட்டம் 1996, காப்புரிமைச்சட்டம் உட்பட பல சட்டங்களை அடிப்படையில் மாற்றி இயற்ற வேண்டிய கட்டாயம் இந்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த அத்தியாயத்தின் அடுத்த கட்டமே மத்திய அரசு சமர்ப்பித்துள்ள புதிய விதைகள் சட்டம் 2004, “விதைத் தொழில் வளர்ச்சிக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கவும் ... விதைகள் ஏற்றுமதி, இறக்குமதிக்கான வழிவகைகளை உருவாக்குவது” சட்டத்தின் நோக்கம் என இந்திய விவசாயத்துறை விளக்கமளித்துள்ளதிலிருந்தே இதனைப் புரிந்து கொள்ள முடியும்.


சட்டத்தின் முக்கிய அம்சங்கள்
நாட்டில் பயன்படுத்தப்படும் அனைத்து விதைகளும், மத்திய அரசால் உருவாக்கப்படும், தேசிய பதிவு ஆவணத்தில் பதிவு செய்யப்பட வேண்டுமென இச்சட்டம் கட்டாயப்படுத்துகிறது. விதைகளைப் பதிவு செய்வதற்கு மத்திய அரசால் அமைக்கப்படும் மத்திய விதைக்குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
விதைகள் பதிவு அல்லது நிராகரிக்கும் விவகாரத்தில் இக்குழுவின் முடிவே இறுதியானது. இவ்வாறு பதிவு செய்யப்பட்ட விதைகள் அல்லது நடவு பயிர்களை மட்டுமே பயன்படுத்த முடியும். பதிவு செய்யப்படாத விதைகள் அல்லது நடவுப் பயிர்களை விற்பனை செய்வது, பயன்படுத்துவது, பாதுகாப்பது, பரிமாறிக்கொள்வது அனைத்தும் முற்றிலுமாகத் தடைசெய்யப்படுகிறது.
சாதாரண விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்யும் விதைகளையோ அல்லது மரக்கன்றுகளையோ மத்திய அரசுக்கு அனுப்பி பதிவு செய்வது சாத்தியமான ஒன்றல்ல. அப்படியானால் அவர்கள் விதைகளை உற்பத்தி செய்வது சட்டவிரோமானதாகும். செல்வாக்குபடைத்த விதைக்கம்பெனிகள் மட்டுமே தங்களது விதைகளை பதிவு செய்யவும், அவ்விதைகளை மார்க்கெட்டில் விற்கவும் முடியும். இதன்படி வராலாற்றுக் காலந்தொட்டு விவசாயிகளுக்கு விதைகள் மீதிருந்த உரிமை தட்டிப்பறிக்கப்பட்டு விட்டது. தங்களுக்குத் தேவையான விதைகளுக்கு விதைக்கம் பெனிகளிடம் கையேந்தி நிற்கும் அவலநிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இனி தனது வயலில் என்ன சாகுபடி செய்வது என தீர்மானிக்கும் உரிமைகளைக் கூட விவசாயிகள் இழந்து விட்டார்கள். விதைகள் வழங்குவதை தங்கள் கையில் வைத்துக் கொண்டுள்ள நிறுவனங்கள் ரிமோட் கண்ட்ரோல் மூலம் கிராமத்து விவசாயிகளது தலைவிதியை தீர்மானிக்க முடியும். இதனால் உணவு உற்பத்தி குறைந்து பஞ்சமும், பட்டினிச்சாவுகளும் ஏற்பட வாய்ப்புண்டு.
விதைகளுக்கான விலைகளை தீர்மானிப்பது குறித்து சட்டத்தில் எந்த வரைமுறையும் இல்லை.


எனவே, பதிவு செய்துள்ள கம்பெனி விதைகளின் விலைகளை பலமடங்கு உயர்த்தி விவசாயிகளை கொள்ளையடிக்க முடியும். ஏற்கனவே பல்முனை சுரண்டலுக்குள்ளாகியுள்ள விவசாயிகள் இனி விதை கொள்ளைக்கும் பலியாக வேண்டும்.
விதைகளை பதிவு செய்வதில் மத்திய விதைக்குழுவின் முடிவே இறுதியானது என்பது பெரும் ஊழலுக்கு வழிவகுக்கும் ஏற்பாடாகும். ஏற்கனவே மான்சாட்டோ கம்பெனி தனது மரபணு விதைகளை பல நாடுகளில் அறிமுகப்படுத்த கோடிக்கணக்கான டாலர் லஞ்சம் கொடுத்த சம்பவங்கள் அம்பலமாகியுள்ளன. சமீபத்தில் இந்தோனேசியா அதிகாரிகளுககு 7 லட்சம் டாலர் கையூட்டு வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கையூட்டுகள் வழங்குவதும் - கையூட்டுகளைப் பெற்றுக்கொண்டு தரமற்ற விதைகளைப் பதிவு செய்து இந்திய விவசாயத்தை நாசப்படுத்துவதும் இனி அன்றாட நிகழ்ச்சிகளாகிவிடும்.
ஒருமுறை பதிவு செய்யப்பட்ட விதை ஆண்டு பயிராக இருப்பின் 15 ஆண்டுகளுக்கும், நீண்ட காலப் பயிர்களாக இருப்பின் 18 ஆண்டுகளுக்கும் பதிவு பெற்றவர் உரிமம் கொண்டாட முடியும். பதிவு பெற்றவர் மேற்கண்ட பதிவுக்காலத்துக்குப் பின்னர் மீண்டும் இதே காலத்துக்கு மறுபதிவு செய்து கொள்ளவும் முடியும். இக்காலம் முழுவதற்கும் பதிவு பெற்றவரின் உரிமையில் வேறுயாரும் தலையிட முடியாது என திட்டவட்டமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இனி விதைகள் பதிவு பெற்றவரின் தனிச் சொத்தாக மாறிவிடும்.
அரசு மற்றும் தனியார் விதை பரிசோதனை மையங்களை விதைகளின் தரத்தை தீர்மானிக்க பயன்படுத்திக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டிருப்பதன் மூலம் தரம் குறைந்த விதைகளுக்கும் முறையற்ற சான்றிதழ்களை தனியார் பரிசோதனை மையங் களிலிருந்து பெற்றுக் கொள்ள வழி ஏற்படும். விதை நிறுவனங்களே இத்தகைய சோதனை மையங்களை ஏற்படுத்திக் கொள்வது அந்நிறுவனங்களுக்கு எளிதானதாகும்.
அடுத்த ஆபத்து விதை சான்றிதழ் வழங்கும் பணியிலிருந்து படிப்படியாக அரசு வாப° வாங்கிக் கொள்ளும் என்பது தான். விதை உற்பத்தி செய்யும் தனிநபர் அல்லது நிறுவனம் நாளடைவில் தங்களது விதைகளுக்கான சான்றிதழ்களை (ளுநநன ஊநசவகைiஉயவiடிn) அவர்களே வழங்கிக் கொள்ள முடியும் என்பது விதை நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சர்வ சுதந்திர பாத்யதையாகும். விதைகளின் தரத்தைப் பரிசோதிக்கவும், சான்றிதழ் வழங்குவதையும் கூட அரசு நிறுவனங்களின் மூலம் தான் நடத்த வேண்டு மென்பதை இச்சட்டம் கட்டாயப்டுத்தவில்லை என்பதிலிருந்தே இச்சட்டம் யார் நலனை பாதுகாக்க முன்மொழியப்பட்டுள்ளது என்பது விளங்கும்.
மிகவும் கொடுமையானது என்னவெனில் வழக்கமாக விவசாயிகள் பயன்படுத்தி வரும் விதைகளையும் ஒருவர் தன் பெயரில் பதிவு செய்துகொள்ள சட்டத்தில் வழிவகையுள்ளது. இவ்வாறு பதிவு செய்யக் கூடாது என மத்திய விதைக்குழுவிற்கு மனு செய்வதற்கான உரிமை யாருக்கும் கிடையாது. அதேபோன்று தவறுதலாக பதிவு செய்யப்பட்ட விதையின் பதிவினை ரத்து செய்ய வேண்டுமென யாரும் கோரவும் முடியாது. ஆம்! பதிவு செய்யப்படும் விதை கம்பெனிகளுக்கு முன்னால் பல்லிளிக்க வேண்டிய பரிதாப நிலை விவசாய தேசத்துக்கு.


“விதைகளின் தரத்தை பாதுகாப்பதற்கே” சட்டம் என முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தரத்தை பாது காப்பதற்கான பொறுத்தமான சரத்துக்கள் சட்டத்தில் இல்லாதது வினோதமானதாகும். தரமற்ற விதைகளை விநியோகித்து அதனால் பயிர்கள் அழிந்து விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து உரிய நட்ட ஈடு பெறவும் சட்டத்தில் வழியில்லை. மாறாக, பாதிக்கப்பட்ட விவசாயிகள் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் படி நீதி மன்றம் மூலம் நிவாரணம் பெறலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே நொந்து நுhலாகிப்போயியுள்ள விவசாயிகள் நீதிமன்றத்தின்நெடிய படிக்கட்டுகளில் ஏறி நட்ட ஈடுகோரி அலைவது எப்படி சாத்தியமாகும்? அதிலும் செல்வாக்கு படைத்த விதைக்கம்பெனி களை எதிர்த்து அப்பாவி விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பது, நீதி பெறுவது அவ்வளவு எளிதானதல்ல.
கடந்த ஆண்டுகளில் மான்சாட்டோ கம்பெனியின் பி.டி.பருத்தி விதைகளால் சாகுபடிகள் அழிந்து நாடுமுழுவதும் பல ஆயிரம் விவசாயிகள் தற்கொலையில் மாண்டது நாடறிந்ததே. புதிய சட்டம் இந்த பரிகாரத்திற்கே நடைமுறையில் இடமளித்துள்ளது.
இச்சட்டத்தை அமுல்படுத்திட பகுதிவாரியாக விதை ஆய்வாளர்கள் (ளுநநன ஐளேயீநஉவடிசள) நியமிக்கப்படுவார்கள். இவர்களுக்கு தங்கு தடையற்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. பூட்டிய வீடுகளையும் - குடோன்களையும் கூட பூட்டுக்களை உடைத்து சோதனை செய்யும் அதிகாரம் இவர்களுக்கு உள்ளது. தீவிரவாதி களின் வீடுகளைக் கூட பூட்டை உடைத்து சோதனை செய்வதற்கு சட்டம் ஒழுங்கு காவல் துறை நீதிமன்றம் மூலம் தேடுதல் வாரண்ட் பெற வேண்டும். ஆனால் விதை இன்°பெக்டர்கள் அத்தகைய நிபந்தனை ஏதுமின்றி தானடித்தமூப்பாக யாருடைய வீடுகளையும் உடைத்து சோதனையிட முடியும். விவசாயிகளை மிரட்டி சட்டத்தின் கட்டுப்பாட்டுக்குள் கட்டிப்போடவே இத்தகைய முரட்டு அதிகாரங்கள் விதை இன்°பெக்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பழைய சட்டத்தில் மத்திய விதைக்குழுவில் மாநிலங்களுககு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், புதிய சட்டத்தில் மாநிலங்கள் ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் மண்டலத்திற்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளதானது மாநிலங்களுககான உரிமைகளைக்கூடத் தட்டிப் பறிப்பதாகும்.
சட்டத்தை மீறி பதிவு செய்யப்படாத விதைகள் நடுபவர்கள் விற்பனையில் ஈடுபட்டால் ரூ.50000 வரை அபராதமும் - 6 மாதம் சிறைத் தண்டனைகள் வழங்கிட முடியும். அதாவது, பதிவு செய்யாத ஒருபடி நெல் விதையை அடுத்த வீட்டு விவசாயிக்கு விற்றாலோ அல்லது வீட்டுத் தோட்டத்தில் முளைத்த ஒரு வாழைக்கன்றையோ, தென்னங்கன்றையோ விற்பனை செய்தாலோ, அவர் கதி அதோ கதிதான். இத்தகைய தேச விரோத குற்றங்களை (!?) கண்டுபிடித்து வழக்கு போட்டு உள்ளே தள்ளுவதற்கு விதை இன்°பெக்டர்கள் சுற்றிக் கொண்டே இருப்பார்கள் (இவர்களுக்கு வேறு எந்த வேரலயும் கிடையாது). இத்தகைய விவசாய விரோத, தேச விரோத அம்சங்கள் பல இச்சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ளன. ஏழை, சிறு, குறு விவசாயிகள் பெரும் பகுதியாக உள்ள இந்திய திருநாட்டில் எந்த சட்டமும் இவர்களது பாதுகாப்பை மையமாகக் கொண்டதாகவே இருக்க வேண்டும். ஆனால் புதிய சட்டம் பன்னாட்டு, உள்நாட்டு விதை கம்பெனிகளை பாதுகாப்பது மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளது. விவசாயிகள் பாதுகாப்பு பற்றி குறிப்பிடும் சில சரத்துக்களும் நடைமுறை சாத்தியமற்றதாகவே உள்ளது.


விவசாயிகள் விதை உற்பத்தி உரிமையை பாதுகாக்கும் வகையில் 2001ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், “பயிர்வகைகள் மற்றும் விவசாயிகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டம்” (ஞடயவே ஏயசவைநைள ஞசடிவநஉவiடிn யனே குயசஅநசள சுiபாவ ஹஉவ - 2001) நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டது. இச்சட்டத்தில் விவசாயிகளுக்கு சில குறைந்த பட்ச பாதுகாப்புகள் அளிக்கப்பட்டிருந்தன. இச் சட்டம் நிறைவேற்றப்பட்டு சுமார் 3 1/2 ஆண்டுகளுக்குப் பின்னரும், இச்சட்டத்தை மத்திய அரசு அரசிதழில் பதிவு செய்து அமுலாக்குவ தற்கான ஏற்பாடுகள் இன்று வரை மேற்கொள்ளப்பட வில்லை. இது பாராளுமன்ற ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்குவ தாகும். இந்திய அரசால் முன்மொழியப்பட்டு சட்டமாக்கப்பட்ட பி.வி.பி.எப்.ஆர் (ஞஏஞகுசு ஹஉவ) சட்டத்தை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, இதற்கு நேர் எதிர் மறையான விதைகள் சட்டத்தை அதே நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது இந்திய அரசின் உண்மை சொரூபத்தை தோலுரித்துக் காட்டுவதாகும்.
நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனையில் உள்ள இச்சட்டம் நாடுமுழுவதும் பெரும் எதிர்ப்பலைகளை உருவாக்கியுள்ளது. விவசாயிகள், விவசாய சங்கங்கள், ஆராய்ச்சியாளர்கள், சமூக விஞ்ஞானிகள், இடதுசாரி கட்சிகள் போன்ற அனைத்து தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வலுவடைந்து வருகின்றன. எனவே, இந்த சட்டத்தில் கீழ்க்கண்ட திருத்தங்களைச் சேர்ப்பது அவசியமான தாகும். மசோதாவை அப்படியே நிறைவேற்றுதை எதிர்த்தும், கீழ்க்கண்ட திருத்தங்களை வற்புறுத்தியும், நாடுதழுவிய மேலும் வலுவான மக்கள் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.
விவசாயத் தொழிலாளர் சங்கமும், விவசாயிகள் சங்கமும், விவசாயிகளிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை முக்கியக் கடமையாகக் கருத வேண்டும்; தொழிலாளர் விவசாயி களின் கூட்டு முயற்சிக்கு வழிகாண வேண்டும். தங்களது வறுமைக்கும், கடன் தொல்லைக்கும் அடிப்படை இயற்கை அல்ல; கிரகங்களின் சேட்டையுமல்ல; அரசுகளின் கடைக்கண் பார்வை நம்மீது விழாததுமல்ல; அரசுகளின் திட்டமிட்ட அரசியல் பார்வையும், கொள்கையும், சுரண்டும் வர்க்க சார்புத் தன்மையேடு இருப்பதே காரணம் என்பதை உணர வைக்கும் ஏற்பாடுகளை வலுப்படுத்த வேண்டும். பெரும் திரளாக விவசாயிகள் பங்கேற்கும் இயக்கங்களே அரசைப்பணிய வைக்கும் என்ற உண்மையை சங்கங்களின் தலைவர்கள் உணர வேண்டும். இன்று சின்னத்திரை, பத்திரிக்கை இவைகளின் மூலம் பப்ளிசிட்டி போதும், மக்களின் பங்கேற்பு முக்கியமல்ல என்ற கருத்து பரவலாக உள்ளதை பலகீனமாகப் பார்க்க வேண்டும். மக்கள் திரளும் போது பப்ளிசிட்டி தானாகக் கிடைக்கும், அரசும் பயப்படும். இல்லையெனில் போட்டி டி.வி சேனல் மூலம் மக்களை குழப்பிவிடும். இந்த உணர்வோடு, கீழ்க்கண்ட கோரிக்கைகளுக்காக வலுவான இயக்கம் நடத்திட நம்மால் இயன்றதை எல்லாம் செய்வோம்.
1. விவசாயிகள் பாரம்பரிய உரிமைகள் சம்பந்தப்பட்ட அனைத்து அம்சங்களுக்கும் இச்சட்டத்தில் விலக்கு அளித்திட வேண்டும்.
2. தற்போது விவசாயிகள் பயன்படுத்தும் அனைத்து விதைகளையும் பதிவு செய்வதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். விதைகளை பதிவு செய்யக் கூடாது எனவும், செய்யப்பட்ட பதிவினை ரத்து செய்திட கோருவதற்கு மக்களுக்கு உரிமை அளிக்கப்பட வேண்டும். பதிவு பெற்றவர் பதிவு செய்த விதையின் மீது உரிமை கொண்டாடுவதற்கான காலத்தை 7 ஆண்டுகளாகக் குறைப்பதுடன் - மறு பதிவுக்கு வாய்ப்புகள் ரத்து செய்யப்பட வேண்டும்.
3. மோசமான விதைகளால் ஏற்படும் சாகுபடி இழப்புகளுக்கு சம்பந்தப்பட்ட விதை நிறுவனம், விதையினை வழங்கும் ஏஜெண்டுகள் முழு நட்ட ஈட்டினை சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு குறுகிய கால வரம்புக்குள் வழங்கிட வேண்டும்.
4. விதை இன்°பெக்டர்களின் அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
5. மத்திய விதைகள் குழுவில் அனைத்து மாநிலங்களுக்கும் பிரதிநிதிகள் வழங்கிட வேண்டும்.
6. விதைகள் சான்றிதழ் வழங்கும் அதிகாரம் தனி நபர்களுக்கோ, நிறுவங்களுக்கோ வழங்கக் கூடாது. சான்றிதழ் வழங்கும் ஆணையம் மத்திய - மாநில விதைகள் குழுவின் ஆலோசனையுடன் மாநில அரசுகள் அமைத்திட வேண்டும்.
7. விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாப்பது சட்டத்தின் தலையாய நோக்கமாக இருக்க வேண்டும்.

விவசாயிகளின் உரிமையை பறிக்கும் விதைகள் சட்ட மசோதா

விவசாயிகளின் உரிமையை பறிக்கும் விதைகள் சட்ட மசோதா – 2010

கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடர் எதிர் கட்சிகளின் நடவடிக்கை காரணமாக பல சட்ட மசோதாக்களை நிறைவேற்றாமல் முடிவடைந்தது. அப்படி சட்டமாக நிறைவேறாமல் போன ஒரு சட்ட மசோதா –விதை சட்ட மசோதா 2010 (Seed Bill 2010). பசுமைப் புரட்சியை தொடர்ந்து புதிய வகை விதை உற்பத்தி மற்றும் விதை வர்த்தகத்தில் தனியார் நிறுவனங்களின் அதிகரிப்பு காரணமாக விதைகளின் தரத்தையும், உற்பத்தி மற்றும் விநியோகத்தையும் முறைப்படுத்துவதற்கு 1966-ம் ஆண்டு விதைகள் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தில் உலகமய-பொருளாதார சூழலுக்கு ஏற்ப மாற்றங்களை கொண்டு வர எண்ணிய மத்திய அரசு கடந்த 2004-ம் ஆண்டு விதைகள் சட்ட மசோதாவை   (Seed Bill 2004) கொண்டு வந்தது. இச்சட்டம் நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் விதைகள் அனைத்தும்மத்திய அரசால் உருவாக்கப்படும், தேசிய பதிவு ஆவணத்தில் பதிவு செய்யப்பட வேண்டுமென கட்டாயப்படுத்தியது. அப்படி பதிவு செய்தவர்மட்டுமே விதைகளை விற்பனை செய்ய முடியும் என்றும் கூறியது.மேலும் விவசாயிகளுக்கு எதிரான பல அம்சங்களை கொண்டிருந்த இச்சட்ட மசோதா, பலத்த எதிர்ப்பின் காரணமாக, தேவையான மாற்றங்களை செய்ய நாடாளுமன்ற கூட்டு குழுவிற்கு அனுப்பட்டது.

அதன்பின் இந்த சட்ட மசோதா பல மாற்றங்கள் செய்யப்பட்டு இப்பொழுது விதைகள் சட்ட மசோதா 2010 (Seed Bill 2010) என மறு உருவெடுத்துள்ளது. ஆனாலும் இந்த மசோதா பழைய அபாயமிக்க பிரிவுகளுடனேயே வந்துள்ளது. உதாரணமாக, விவசாயிகளுக்குஇச்சட்டத்தின் கீழ் விதைகளை பாதுகாக்கவும்மறுபயிர் செய்யவும்அவற்றை விற்கவும் அனுமதி அளித்திருந்தாலும் கூடுதலாக சிலகட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாட்டின்படிவிவசாயிகள் தங்கள் விதைகளை வணிகப்பெயரிட்டு விற்க முடியாது.அப்படி விற்கவேண்டும் என்றால் அவர்களும் தங்களுடைய விதைகளைஇச்சட்டத்தின் கீழ் பதிவு செய்திருக்கவேண்டும்நாட்டின் பல பகுதிகளிலும்பரிசோதனை அடிப்படையில் பயிரிடப்பட்டு நிரூபிக்கப்பட்ட விதைகளைமட்டுமே இச்சட்டத்தின் கீழ்பதிவு செய்யமுடியும்இந்த நிபந்தனை ஒருசாதாரண விவசாயிக்கு எந்த விதத்திலும் பயனற்றது என்பதும்மிகப்பெரிய வணிக நிறுவனங்களே இதன்மூலம் பயனடைய முடியும்என்பதையும் விளக்க வேண்டியதில்லை.

விவசாயிகளின் பாரம்பரிய விதைகளை இச்சட்டத்தின் கீழ் வேறுயாரும் பதிவு செய்ய முடியாது என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்ய ஒரு பயிரின் மூலத்தை (Parentage)தெரிவிக்க தேவையில்லை என்னும் விதியின் மூலம் நம்முடையபாரம்பரிய விவசாய விதைகளை மரபணுமாற்றம் (Genetic Engineering)செய்து புதிய வகை விதை என்னும் பெயரில் அவற்றை பதிவு செய்யும் ஆபத்தும் இதில் உள்ளது.

மேலும் இந்த சட்டம்விதை கண்காணிப்பாளருக்கு (Seed Inspector)ஏற்கனவே இருந்ததைவிட அதிகப்படியான அதிகாரங்களை வழங்குகிறது.தற்போதைய சட்டத்தின்படி விதை கண்காணிப்பாளர் எந்தவிதமானமுன்னறிவிப்பும் இன்றி அவர் சந்தேகம் கொள்ளும் எந்த ஒருஇடத்தையும்எந்த நேரத்திலும் சோதனை இடலாம். அங்குவிதைச்சட்டங்களின் கீழ் உரிய பதிவு பெறாமல் சேமித்து வைத்துள்ளவிதைகளை கைப்பற்றுவதோடுஅவற்றை பாதுகாத்து வைத்துள்ளவிவசாயியை கைது செய்யும் அதிகாரமும் படைத்துள்ளார்.

முன்பு இருந்த மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் பறிக்கப்பட்டு புதிய சட்டத்தின்  கீழ் மாநிலங்கள் ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் மண்டலத்திற்கான பிரதிநிதித்துவமாக வழங்கப்பட்டுள்ளதது. இது மாநிலங்களுக்கான உரிமைகளை தட்டிப் பறிப்பதாகும்.

தாவரங்களுக்கு காப்புரிமை கொடுப்பதற்காக கொண்டு வரப்பட்ட தாவர ரகங்கள் மற்றும் உழவர்களின் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 2001, கூட விவசாயிகளுக்கு உழவர்களின் உரிமைகள் என்னும் பிரிவு இப்படி கூறுகிறது: “இச்சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட ஒரு ரகத்தை சேமிக்கவும், பயன்படுத்தவும், விதைக்கவும், மறுமுறை விதைக்கவும், பரிமாற்றம் செய்யவும், பகிர்ந்து கொள்ளவும் அல்லது நிலத்தில் விளைவிக்கப்பட்ட விதை உள்ளிட்ட விளைபொருட்களை விற்கவும், இச்சட்டம் நடைமுறைக்கு வருவதற்குமுன் ஒரு உழவருக்கு இருந்த அனைத்து உரிமைகளுக்கும் உடையவராகக் கருதப்படுவார்.” ஆனால் இந்த உரிமைகளை பறிக்கின்ற வகையில் விதை சட்ட மசோதா அமைந்துள்ளது. மேலும்  இச்சட்டம் தாவர வகை பயிர்களுக்கு 15 ஆண்டு கால காப்புரிமையும், மரவகைகளுக்கு 18 ஆண்டு கால காப்புரிமையும் கொடுக்கிறது. இதனை மிஞ்சும் வகையில் விதைச் சட்ட மசோதா தாவர வகைகளுக்கு 30 ஆண்டு கால பதிவு உரிமையும் மரம் வகைகளுக்கு 36 ஆண்டு கால பதிவு உரிமையும் வழங்குகிறது. அதாவது, இந்த பதிவு உரிமை காலகட்டத்தில் பதிவு பெற்றவரை தவிர்த்து வேறு யாரும் இந்த விதை வகைகளை விற்பனை செய்ய முடியாது.  

 இந்தியாவில் சுமார் 70 சதவித விதைகள் விவசாயிகள் மூலமே உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இம்மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டு சட்டமாக்கப்பட்டால், விவசாயிகளின் பாரம்பரிய உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படும். மேலும் விவசாயிகளின் அடிப்படை உரிமையான விதை சேமிக்கும் உரிமை  கூட தண்டனைக்குரிய குற்றமாக மாறுகின்ற ஆபத்து உள்ளது. மேலும் விதைகள் உற்பத்தி விநியோகம் அனைத்தும் நிறுவனமயமாக்கப்படும்.  

நிறுவனமயமாகும் வேளாண்மை

விவசாயிகளின் உரிமைகளை பறித்தெடுக்கும் சட்டங்களை இயற்றும் இதே மத்திய அரசு பன்னாட்டு, உள்நாட்டு தனியார் நிறுவனங்களுக்கு பல சலுகைகளை வாரி வழங்குகிறது. இதன் ஒரு அம்சமாக மத்திய அரசின் கீழ் இயங்கும் உயிரி-தொழில்நுட்ப துறையின் தலைமையில் தனியார்-பொதுத்துறை கூட்டுத்திட்டங்கள் Biotechnology Industry partnership Programme (BIPP)  அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டப்படி மரபணுமாற்று தொழில்நுட்பம் போன்ற உயிரி-தொழில்நுட்பம் சார்ந்த மரபணுமாற்று விவசாய உற்பத்திற்கு ஊக்கம் அளிக்கப்படும். நிறுவனங்கள் இத்தகைய தொழில்நுட்பங்களுக்கு செலவிடப்படும் தொகையை, திட்டதிற்கு ஏற்றவாறு, மத்திய அரசிடம்இருந்து மானியமாக பெறலாம். ஏற்கனவே இத்திட்டத்தின் கீழாக மரபணுமாற்று பயிர்களை உற்பத்தி செய்வதற்காக மான்சான்டோவின் இந்திய நிறுவனமான Maharashtra Hybrid Seeds Company, Metahelix Life Science Private Limited மற்றும் Bejo Sheetal Seed Private Limited போன்றவை மத்திய அரசிடம் இருந்து மானியம் பெறுகின்றன. 

விவசாயிகளின் தற்கொலை விகிதம் அதிகரித்துக் கொண்டு போகும் நிலையில் விவசாயிகளின் உரிமைகளை பறித்தெடுக்கும் இந்திய அரசு, நிறுவனங்களின் உரிமை காக்கும் சட்டங்களை இயற்றுவதும் மானியங்களை வாரி வழங்குவதும் இந்திய அரசியலைமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாகும். 

மரபணு மாற்ற விதைகள் உணவு சுதந்திரத்தை பறிக்கின்றன

மரபணு மாற்ற விதைகள் உணவு சுதந்திரத்தை பறிக்கின்றன: நம்மாழ்வார்

பி.டி. பருத்தி, பி.டி.கத்திரிக்காய் என்று மரபணு மாற்ற விதைகளை மத்திய, மாநில அரசுகள் மக்கள் மீது திணிப்பதனால் நமது நாட்டின் உணவுச் சுதந்திரமும், பாதுகாப்பும் பறிக்கப்படுகிறது என்று இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூறினார்.



webdunia photo
WD

சென்னையில் மனித உரிமை, சுற்றுச் சூழல் நீதிக்கான வழக்கறிஞர்கள் மையம் ஏற்பாடு செய்த ‘மரபணு மாற்ற விதைகளும் இந்திய விவசாயிகள் எதிர்கொள்ளவிருக்கும் சட்டச் சிக்கல்களும்’ என்ற கலந்தாய்வில் பங்கேற்றுப் பேசிய நம்மாழ்வார், மரபணு மாற்றப்பட்ட (பி.டி.) கத்திரிக்காய்க்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது நமது நாட்டின் மீதான இரண்டாவது காலனி ஆதிக்கம் என்றும், அதனை எதிர்த்து நாம் போராட வேண்டும் என்றும் கூறினார்.



எந்த ஒரு பயிரானாலும் அதன் தன்மையை நிர்ணயிப்பது அது விளைவிக்கப்படும் மண்தான் என்றும், அதனால்தான் நமது நாட்டில் விளைவிக்கப்படும் சிறப்பான பயிர்கள் பலவும் அது விளையும் இடத்தின் பெயரோடு சேர்த்து அழைக்கப்படுவதை சுட்டிக்காட்டிய நம்மாழ்வார், அப்படிப்பட்ட பயிரின் இயற்கையான பன்முகத் தன்மையை பி.டி. கத்திரிக்காய் போன்ற மரபணு மாற்றப்பட்ட விதைகள் அழித்துவிடும் என்று எச்சரித்தார்.



“ஒரு இடத்தில் விளையும் பயிர் அந்தச் சமூகத்தின் சொத்து, அதனை இப்படிப்பட்ட மரபணு மாற்ற விதைகளைத் திணிப்பதன் மூலம் அழிப்பது, இயற்கையின் அடிப்படையான உயிரியல் பரவலை திட்டமிட்டு அழிக்கும் செயலே” என்று கூறிய நம்மாழ்வார், நாகை மாவட்டத்தில் பரவலாக மக்கள் வாங்கும் பொய்யூர் கத்திரிக்காய், அந்த ஊரில் பயிரிட்டால் மட்டுமே அந்த சுவையை அளிக்கும் என்றும், அதனை வேறிடத்தில் பயிரிட்டால் அந்தத் தனிச் சுவை இல்லாமல் போகும் என்றும், வேலூர் எண்ணெய்க் கத்திரிக்காய் (முள்ளு கத்திரிக்காய் என்றும் கூறுவார்கள்) அவ்விடச் சிறப்பின் விளைவே என்றும், இதுவே உயிர்ப் பரவலின் உன்னதமான சிறப்பு என்றும் கூறினார்.



நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் இப்படி சிறப்பாகப் பயிரிடப் பொருட்களை அனைத்தையும் அழிக்கும் திட்டத்துடனேயே மரபணு மாற்ற விதைகள் வேகமான திணிக்கப்படுகின்றன என்றும், அதற்கு அரசுகள் மாத்திரமின்றி, வேளாண் பல்கலைக் கழகங்களும் அறமின்றித் துணை போகின்றன என்றார் நம்மாழ்வார்.



இலாப நோக்கை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, விவசாயத்தை வணிகமயமாக்கும் பன்னாட்டு ஆய்வு நிறுவனங்களுக்கு விவசாயத்தை ஏக போக உரிமையாக்கும் வழிமுறையே காப்புரிமை சட்டம் என்று சாடிய நம்மாழ்வார், இப்படிப்பட்ட நிறுவனங்களுக்கு நமது நாட்டின் அரசுகள் கதவு திறந்துவிட்டால் நமது உணவுப் பாதுகாப்பிற்கு என்ன உத்தரவாதம் என்று கேள்வி எழுப்பினார்.



WD

பி.டி. கத்திரிக்காய் பயன்பாட்டை ஆதரித்து தமிழக வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சட்டப் பேரவையில் பேசும்போது, அந்த விதைகளை பயிரிட்டு அதிலேதும் குளறுபடி ஏற்பட்டால் நீதிமன்றத்திற்குப் போகலாம் என்று கூறுவது அவரின் தெளிவின்மையையே காட்டுகிறது என்று கூறிய நம்மாழ்வார், மரபணு மாற்றப்பட்ட விதைகளை அனுமதித்துவிட்டால் பிறகு நமது விவசாய உரிமையை மீட்க முடியாது என்றும், அதனை நுழைய விடாமல் தடுப்பதே முக்கியம் என்று வலியுறுத்தினார்.



பி.டி. விதைகளை நாட்டிற்குள் அனுமதிப்பது நமது உணவை நாம் தேர்வு செய்யும் சுதந்திரத்தை அடியோடு அழித்துவிடும் என்றும் நம்மாழ்வார் எச்சரித்தார்.



1960களில் மேற்கொள்ளப்பட்ட பசுமைப் புரட்சியின் காரணமாகத்தான் இந்தியாவின் உணவுப் பற்றாக்குறை தீர்க்கப்பட்டது என்று பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் கூறியது குறித்து கேள்வி கேட்டதற்கு, அது தவறான தகவல் என்றும், பசுமைப் புரட்சியால் உணவுப் பற்றாக்குறை தீர்ந்தது என்றால், பி.எல். 420 திட்டத்தின் கீழ் கோதுமை இறக்குமதி செய்யப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பினார். நமது நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வழி உரத்தையும், பூச்சி மருந்துகளையும் கொட்டி உற்பத்தியை எடுக்கும் பசுமைப் புரட்சி வழியல்லவென்றும், இயற்கை விவசாயத்தை நடைமுறைப்படுத்தி உற்பத்தியைப் பெருக்குவதே சரியான வழியென்றும் நம்மாழ்வார் கூறினார்.



“உணவுப் பாதுகாப்பு என்பது வெறும் உற்பத்தி மட்டுமல்ல, அது ஊட்டமுடைய உணவு உற்பத்தியாகவும் (Nutrition Security) இருக்க வேண்டும்” என்று கூறிய நம்மாழ்வார், நமது அரசுகளின் உணவுக் கொள்கை என்பது மக்களை மையப்படுத்தியதாக இருக்க வேண்டுமே தவிர, சந்தையை மையப்படுத்தியதாக இருக்கக் கூடாது என்றும், மரபணு மாற்ற விதைகளைத் திணிப்பது இலாப நோக்கு கொண்ட நிறுவன விவசாயத்திற்கு (Corporate Agriculture) உதவுவதே என்றார்.

கொள்ளை போகும் இயற்கை வளங்கள் - துணை நிற்கும் சட்டங்கள்

கொள்ளை போகும் இயற்கை வளங்கள் - துணை நிற்கும் சட்டங்கள்

உலகில் வேறு எங்கும் காண முடியாத அரிய குணங்கள் படைத்த பல கோடி தாவரங்கள், மூலிகைகள், உயிரினங்கள் இந்தியாவில் உள்ளன. நம்முடைய மூதாதையர்கள் இத்தகைய உயிரினங்களின் இக்குணங்களை கண்டறிந்து காலகாலமாக பலவிதங்களில் பயன்படுத்தி வந்து உள்ளனர். ‘பாட்டி வைத்தியம்’ என்று அழைக்கப்படு்ம் இவை பெரும்பாலும் எழுத்து வடிவில் இருப்பதில்லை, சொல் வடிவம் மூலமாக ஆண்டாண்டு காலம் நாம் இவற்றை பயன்படுத்தி வருகிறோம். உலகெங்கும் மக்கள் இப்படி மூலிகைகள், மற்றும் உயிரினங்களின் மருத்துவ மற்றும் பிற பயன்பாடுகளை அறிந்து வைத்துள்ளனர்.
இத்தகைய அறிவை பாரம்பரிய அறிவாண்மை (Traditional Knowledge) என்று வகைப்படுத்துகின்றனர். இதுபோன்ற அறிவை நம்மக்கள் ‘நவீன அறிவியலுக்கு’ ஏற்ப ஆவணப்படுத்தி வைப்பதில்லை, இவை பெரும்பாலும் மக்களின் பொது சொத்தாக இருக்கின்றது. ஆனால் நவீன தொழில்நுட்பங்களை கொண்டு பொது பயன்பாட்டில் உள்ள இத்தகைய இயற்கை வளங்களை காப்புரிமை போன்ற சட்டங்கள் மூலம் தனியார் / நிறுவனங்கள் உடைமைகளாக மாற்றப்படும் கொடூரம் அதிகரித்து வருகிறது. மஞ்சள் வேம்பு, வேப்பிலை போன்றவற்றுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் காப்புரிமை கொடுக்கப்பட்டதை நாம் இங்கு நினைவில் கொள்ளலாம். ஆண்டு தோறும் நம் நாட்டைச் சேர்ந்த சுமார் 2000 பாரம்பரிய இயற்கை வளங்களுக்கு மேற்கு நாடுகளில் காப்புரிமை கொடுக்கப்படுவதாக மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

மூன்றாம் உலக நாடுகளின் இயற்கை வளங்கள் காப்புரிமை போன்ற சட்டங்கள் மூலம் கொள்ளை போவதை தடுப்பதற்கும், இயற்கை வளங்கள் மீதான ஆராய்ச்சிகளை முறைப்படுத்தவும் 1992 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவை சார்பில் மாநாடு ஒன்று நடைபெற்றது. ஒரு நாட்டின் இயற்கைவளங்களை மற்றொரு நாடு ஆராய்ச்சிகாக பயண்படுத்துகின்ற போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் உள்ளடங்கிய பல்லுயிர்பரவலுக்கான ஒப்பந்தம் (Convention For Biodiversity) ஒன்று அந்த மாநாட்டில் வரையறுக்கப்பட்டது.

பல்உயிரின ஒப்பந்தத்தின் அடிப்படையில் இயற்கை வளங்களையும் மூதாதையர்களின் பாரம்பரிய அறிவாண்மையும் பாதுகாத்திட, பல்லுயிர்ப்பரவல் சட்ட த்தை (Biological Diversity Act,2002) இந்தியா இயற்றியது.

பல்லுயிர்ப்பரவல் சட்டத்தின் கீழ் இயங்கும் அமைப்புகள்

இந்த சட்டம் தேசிய பல்லுயிர்ப்பரவல் ஆணையம் மற்றும் மாநில பல்லுயிர்ப்பரவல் வாரியம் ஆகிய கமிட்டிகளை நியமித்துள்ளது. இந்த கமிட்டிகளுக்கு நம் நாட்டின் இயற்கை வளங்களை பாதுகாக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ஒவ்வொரு பஞ்சாயத்து மற்றும் நகராட்சியும் பல்லுயிர்ப்பரவல் நிர்வாகக் குழுக்களை அமைக்க இச்சட்டம் வலியுறுத்துகிறது. தத்தமது எல்லையி்ல் பல்லுயிர் பாதுகாப்பு நிலையான பயன்பாடு மற்றும் வாழ்விடங்களை பராமரித்தல், நில இனங்கள், நாட்டுப்புற வகைகள் பயிரிடு இனங்கள், வளர்ப்புக்காக பயன்படுத்தப்படு்ம் விலங்குகளும், கால்நடை இனங்களும், மற்றும் நுண்ணுயிர்களை பாதுகாத்தல் மற்றும் பல்லுயிர்ப்பரவல் தொடர்பான அறிவாண்மையை பதிவு செய்தல் போன்றவை இத்தகைய குழுக்களின் நோக்கமாகவும் செயல்பாடுகளாகவும் இருக்க வேண்டு்ம் என்றும் இச்சட்டம் வலியுறுத்துகிறது.

மேலும் இக்குழுவின் முக்கிய பணியாக இச்சட்டம் கூறுவது, உள்ளுர் மக்களிடம் கலந்துபேசி மக்களுடைய பல்லுயிர்ப்பரவல் பதிவேடு தயாரிப்பதே ஆகும். இந்த பதிவேடு உள்ளுர் உயிரியியல் ஆதாரம், மருத்துவ பயன் அல்லது இதர பயன்கள் அல்லது பாரம்பரிய அறிவாண்மை ஆகிய விவரங்களை உள்ளடங்கியதாக இருக்க வேண்டும் என்றும் இச்சட்டம் கூறுகிறது.

இச்சட்டப்படி தேசிய மற்றும் மாநில பல்லுயிர்ப்பரவல் ஆணையம், பல்லுயிர்ப்பரவல் நிர்வாகக் குழுக்களின் எல்லைக்குள் அமைந்துள்ள இயற்கை வளம் மற்றும் அது தொடர்பான பயன்பாடு குறித்து யாதொரு முடிவு எடுக்கும்போது அவற்றை கலந்தாலோசிக்க வேண்டும் . 

இயற்கை வளங்களும் காப்புரிமையும்

இந்த சட்டம் நம்நாட்டு இயற்கை வளங்களுக்கு அறிவுசார் சொத்துரிமை (Intellectual Property Rights) வழங்குவதை முழுவதுமாக, குறிப்பாக காப்புரிமையை தடைசெய்கிறது. காரணம் காப்புரிமை என்பது தனியாருக்கு வழங்கப்படும் ஏகபோக உரிமையாகும். காப்புரிமை பெற்ற ஒருவர்/நிறுவனம் தாம் காப்புரிமை சட்டப்படி பதிவு செய்த பொருளை மற்றொரு நபர் உற்பத்தி/விற்பனை செய்வதை 20 ஆண்டுகளுக்கு தடுக்கும் உரிமையை பெறுகிறார்.

காப்புரிமையை தடை செய்யும் அதே நேரத்தில் (உள்நாட்டு/வெளிநாட்டு) ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆராய்ச்சிக்காக பல்லுயிர்ப்பரவல்சட்டத்தின்ப்படி அமைந்துள்ள கமிட்டியின் கீழ் பாதுகாக்கப்படும் இடங்களுக்குச் சென்று அவர்களுடைய அனுமதியோடு ஆராய்ச்சி செய்யும் உரிமையையும் இச்சட்டம் வழங்குகிறது. இந்த சலுகைஆராய்ச்சி என்ற பெயரில் நம்முடைய இயற்கை வளங்கள் கொள்ளை போவதற்கு உதவக்கூடும். இந்த சட்டம் நம்முடைய இயற்கை வளங்களின் மரபணுக்களை (Gene) ஆராய்ச்சிக்காக வெளிநாடுகளுக்கு எடுத்துச்செல்வதை தடை செய்யவில்லை. இவ்வாறு ஆராய்ந்து அதன் மூலம் பெறப்படும் கண்டுபிடிப்புகளுக்கு(!?) காப்புரிமை வழங்குவதையும் இச்சட்டம் தடை செய்யவில்லை.

ஆக அனுமதி பெற்று ஆராய்ந்து கண்டுபிடிக்கப்படும் பொருட்களுக்கு இந்தியாவிலும் காப்புரிமை பெற மூடியும். இதன் மூலம் பெறப்படும் லாபத்தில் குறிப்பட்ட பகுதியை இந்த செல்வங்களை இதுநாள் வரை பாதுகாத்து வந்த மக்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் (Benefit Sharing)என்று பல்லுயிர்ப்பரவல் சட்டம் கூறுகிறது. அதாவது பல்லுயிர்ப்பரவல் நிர்வாகக் குழுக்கள் தமது எல்லைக்குள் அமைந்துள்ள பகுதிகளிலிருந்து வணிக நோக்கங்களுக்காக இயற்கை வளங்களை சேகரிக்கும் அல்லது அணுகும் யாதொரு நபரிடத்திலிருந்து/நிறுவனத்திடம் கட்டணமாக ஒரு தொகையை வசூல் செய்யலாம் என்பது இதன் பொருள்.

மறைமுகமாக நம்முடைய இயற்கை வளங்கள் கொள்ளை போவதற்கு இச்சட்டம் உதவுவதோடு மட்டும் அல்லாமல், இதுபோன்ற ஆராய்ச்சியின் பயனாக இத்தகைய இயற்கை வளங்களை பாதுகாத்து வந்த மக்களுக்கு ஏற்படும் நஷ்டங்ளை மிகச்சிறிய இழப்பீட்டுத்தொகை மூலம் நிவர்த்தி செய்துவிடலாம் எனவும் இச்சட்டம் கூறுகிறது. இச்சட்டம் இயற்கை கொள்ளையை (Bio Piracy) சட்டப்பூர்வமாக முறைப்படுத்துகின்றது என்று இயற்கை ஆர்வலர் டாக்டர் வந்தனா சிவா கூறியதை இங்கு நினைவில் கொள்ளலாம்.

. கூடுதலாக இந்த சட்டத்தின் கீழ் The Protection, Conservation and Effective Management Of Traditional Knowledge Relating To Biological Diversity Rules, 2009 என்கிற சட்ட வரைவு நிலுவையி்ல் உள்ளது. இந்த சட்ட விதி மேற்கூறிய வகையில் ஆராய்ச்சிகளை முறைப்படுத்தி கட்டணத் தொகை வசூல் செய்வதிற்கு தேசிய பல்லுயிர்ப்பரவல் ஆணையம் மற்றும் இதர கமிட்டிகளுக்கு கூடுதல் அதிகாரம் தருகிறது.

சட்டத்தின் செயலற்ற நிலை 

மாநில அரசுக்கு கிராம பஞ்சாயத்து போன்ற உள்ளாட்சி அமைப்புகளோடு கலந்தாலோசித்து, பல்லுயிர்ப்பரவல் முக்கியத்துவம் உடைய இடங்களை பல்லுயிர்ப்பரவல் பாரம்பரிய இடங்களாக (Biodiversity Heritage Sites) அறிவிக்க இச்சட்டம் வழிவகுத்துள்ளது. இவ்வாறு அறிவிக்கப்படும் இடங்கள் சிறப்பு சட்டங்கள் மூலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று மேற்கூறிய சட்டம் கூறுகிறது. 2008 ஆண்டு நிலவரப்படி கேரளாவை தவிர வேறு தமிழ்நாடு உட்பட எந்த ஒரு மாநிலமும் இந்த பிரிவின்படி பல்லுயிர்ப்பரவல் பாரம்பரிய இடமாக தங்கள் மாநிலங்களில் எந்த இடத்தையும் இன்னும் கண்டறியவில்லை.

குறிப்பாக தமிழகத்தில் எந்த உள்ளாட்சி அமைப்பும் பல்லுயிர்ப்பரவல் நிர்வாகக் குழவை ஏற்படுத்தியதாக தெரியவில்லை. கிராம பஞ்சாயத்து அளவில் இந்த சட்டம் செயல்படுத்தப்படும் போது மட்டுமே நம் பாரம்பரிய இயற்கை வளங்கள் பாதுக்காப்படும். கேரளாவில் உள்ள பிளாச்சிமடா என்கிற ஒரு சிறிய கிராம பஞ்சாயத்துதான் “கோக்” என்கிற மிக பெரிய பன்னாட்டு நிறுவனம் தங்களுடைய நீர் வளத்தை சுரண்டவிடாமல் துரத்தியது என்பதை நாம் மறக்க கூடாது. 

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...