Tuesday 14 July 2015

தொப்பையை குறைக்க சில டிப்ஸ்

       

          தொப்பையை குறைக்க சில டிப்ஸ்






உடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு கடினமான விஷயம் அல்ல. அதிலும் அந்த எடையை குறைக்க நிறைய பணத்தை செலவு செய்து குறைக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.

இவற்றால் உடல் எடை மற்றும் பானை போன்ற வயிறு முழுவதும் குறைந்துவிடாது. அதற்கு தினமும் வீட்டு சமையலறையிலேயே சூப்பரான மருந்து இருக்கிறது.

அத்தகைய வீட்டு மருந்துகளை சாப்பிட்டு வந்தால், உடல் எடை மற்றும் பானை போன்ற வயிறு நிச்சயம் குறைந்துவிடும்.

உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது.

அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.

பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.

எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.

காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி டீயை 2-3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள்.

இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பிறகு ஒரு டம்ளர் சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.

உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.
தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் அழகான இடுப்பைப் பெறலாம்.

எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்கிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.

இவ்வாறெல்லாம் செய்து வந்தால், வயிற்றை குறைத்து அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.

மறைக்கப் பட்ட வரலாற்று உண்மை

     மறைக்கப் பட்ட வரலாற்று உண்மை

 

மறைக்கப் பட்ட வரலாற்று உண்மை !

இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யார் ? இந்தியர்களே நன்றி மறப்பது நன்றன்று !!!
இந்தியாவிற்கு சுதந்திரம் அடைய காரணமானவர் மாவீரன் சுபாஷ் சந்திரபோஸ் தான் .
அவரது அர்ப்பணிப்பும் தியாகமும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப் பட வேண்டியவை திட்டமிட்டு மறைக்க பட்டுவிட்டது .
இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யாரோ ?
அந்த பேரையும் புகழையும் அனுபவிப்பது யாரோ ?

சுபாஷ் சந்திரபோசின் மறைக்க பட்ட வரலாறு .
சுருக்கமாக : அகிம்சை முறையில் போராடி கொண்டு இருந்த காந்தியிடம் சந்திரபோஸ் சொன்னார் . அகிம்சை முறையில் போராடினால் பல ஆண்டுகளாக இந்த போராட்டம் இழுத்து கொண்டே போகும் . கோடிகணக்கான இந்தியர்களை வெறும் இருபதாயிரம் வெள்ளையனைக் கொண்ட ராணுவம் அடிமை படுத்தி வைத்து இருக்கிறாது . ஏன் அந்த ராணுவத்தை அடித்து விரட்ட கூடாது . அவர்களை நான் ஆயுத ரீதியாக எதிர்கொள்ள திட்ட மிட்டு இருக்கிறேன் . உங்களின் கருத்து என்ன என்று காந்தியிடம் கேட்ட போது அகிம்சையை போதிக்கும் நான் இதை ஒருநாளும் ஏற்று கொள்ள மாட்டேன் என்று சொன்னார் . இருவருக்கும் நிறைய கருத்து மோதல் வந்த பின்னர் சந்திரபோஸ் அவர்கள் தனித்து போராட தயாராகினார் .

முதல் கட்டமாக தமிழ்நாடுக்கு வந்தார் . வந்து துடிப்பான இளைஞ்சர்களை சந்தித்து . வெள்ளையனை நாம் ஆயுத ரீதியாக தான் எதிர்கொள்ள வேண்டும் அதற்காக நாம் ராணுவ கட்டமைப்பை உருவாக்க வேண்டும் . என்று இளைஞர்களிடம் பிரச்சாரம் செய்தார் . பிறகு இதே பிரச்சாரத்தை இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கும் சென்று இளைஞ்சர்களின் ஆதரவை திரட்டினார் . ஆனால் அது அவருக்கு தோல்வியிலே முடிந்தது யாரும் ஆயுதம் எடுத்து போராட முன் வரவில்லை மீண்டும் தமிழகம் வந்த போது .

தமிழகத்தில் உள்ள ஆயிர கணக்கான இளைஞர்கள்
சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் போராட்டதிற்கு ஆதரவளித்தார்கள் . அந்த இளைஞர்களுக் கெல்லாம் மறைமுகமாக பயிற்சி அளிக்கப்பட்டது . தமிழகத்தில் காந்தியின் ஆதரவாளர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து கொண்டே போனது . தமிழர்கள் சுபாஷ்சந்திரபோசின் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டு ராணுவத்தில் இணைய ஆரம்பித்தார்கள் .

அப்போது சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் ஆயுத புரட்சி ஒன்று ஆரம்பித்து உள்ளார்கள் என்று வெள்ளையர்களுக்கு தெரியவர . இவர்களை எல்லாம் வெள்ளையர்கள் வேட்டையாட ஆரம்பித்துள்ளார்கள் .

சந்திரபோஸின் இயக்கத்தில் பெரும் தமிழ் இளைஞர்கள் இணைந்து கொண்டதை அறிந்த காந்தியின் ஆதரவாளர்கள் . சுபாஷ் சந்திரபோசை காட்டி கொடுக்கவும் ஆரம்பித்தார்கள். அதனால் அவரால் இந்தியாவில் இருந்துகொண்டு செயல்பட முடியாமல் போனது . வெள்ளையர்களிடம் இருந்து தப்பித்து சுபாஷ்சந்திரபோஸ் வெளிநாடுக்கு சென்றார் .

சில வெளிநாட்டு தலைவர்களை சந்தித்து தனது போராட்டத்தின் ஆதரவை திரட்டினார் . ஒவ்வொரு நாடாக சென்று போருக்கான ஆயுத தளவாடங்களை ஹிட்லர் மூலம் சேகரித்தார் . எல்லாம் தாயாரான பின்பு இந்தியாவில் இருக்கும் வெள்ளையர்களின் ராணுவ முகாம்களின் எண்ணிக்கை எங்கே இருக்கிறது எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று உளவு பார்த்து தகவல் அறிந்து கொண்ட பின்னர் .

தமிழ் நாட்டில் இருக்கும் அவரின் ஆதரவாளர்களுக்கு தகவல் அனுப்பினார் . நான் வெளிநாட்டில் மிகப்பெரிய ராணுவ கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறேன் . இந்த ராணுவத்தில் இணைந்து நமது நாட்டு விடுதலைக்காக ஆயுதம் எடுத்து போராட விரும்புபவர்கள் . என்னுடன் இணைந்து கொள்ளலாம் என்று தகவல் அனுப்பி இருந்தார். இந்தியா முழுவதும் இந்த தகவல் பரவியது . இதை அறிந்த தமிழக தேச பற்றாளர்கள் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் படகு மூலம் வெளிநாட்டுக்கு செல்ல ஆரம்பிதார்கள் .

அங்கே எல்லோருக்கும் போர்ப் பயற்சி அளிக்கப்பட்டது . அப்போது போராளிகளிடம் சுபாஷ்சந்திரபோஸ் பேசினார் . எமது தேசத்தில் வெறும் இருபது ஆயிரம் வெள்ளையனின் ராணுவம் இருக்கிறது . நாம் இங்கு மிகப்பெரிய ராணுவ கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறோம் . அவர்களை நாம் கப்பல் மூலம் சென்று டெல்லி வரை தாக்க போகிறோம் டெல்லியில் தான் வெள்ளையனின் முழு பலமும் இருக்கிறது எனவே டெல்லி வரை நாம் சென்று தாக்க போகிறோம் என்று சொன்னார் . ஆனால் இந்த ராணுவத்தில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்பது குறிப்பிட தக்கது .

ஒரு பக்கம் காந்தியின் அகிம்சை போராட்டம் நடந்து கொண்டிருந்தது . சுபாஷ்சந்திரபோஸ் திட்டமிட்டபடி யுத்த ஆயுத கப்பல்கள் மூலம் சென்று டெல்லி வரை வெள்ளையர்களின் ராணுவத்தை அடித்தார்கள் . அப்போது வெள்ளையர்கள் பாரிய உயிரிழப்புக்களை சந்தித்தார்கள் . வெள்ளையர்களுக்கு வெளிநாட்டில் இருந்து வரும் ஆயுத உதவிகளை தடுத்தார்கள் முக்கியமான கடல்வழி பாதை சுபாஷ் சந்திர போஸின் கட்டுபாட்டுக்குள் வந்தது . அதனால் தொடர்ந்து வெள்ளையர்களால் யுத்தம் செய்யஇயலாமல் ஆயுத பற்றாகுறை வந்தது. பொருளாதார பிரச்சனையும் அவர்களுக்கு வந்தது. தொடர்ந்து அவர்கள் இந்தியாவில் இருப்பது பற்றி கேள்விகுறியானது .

சுபாஷ்சந்திரபோஸ் ராணுவத்தோடு நடந்து கொண்டிருக்கும் சண்டையில் வெள்ளையர்கள் தோல்வி அடைந்து கொண்டே வந்தார்கள். இந்த தோல்வியை அவர்களால் ஒப்பு கொள்ள முடியவில்லை. அதனால் வெள்ளையர்கள் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்தார்கள் .
ஆனால் இந்தியா முழுவதும் சுபாஷ்சந்திரபோஸ் அவர்களின் ராணுவ போராட்டம் தெரியவந்தது .

அதனால் காந்தி வழியில் போராடி கொண்டிருந்தவர்களுள் பெரும்பாலானோர் சந்திரபோஸ் அவர்களின் பின்னால் செல்ல ஆரம்பித்தார்கள். இதனால் வெள்ளையர்களுக்கு தொடர்ந்து இந்தியாவில் இருக்க முடியாத நிலைமை ஏற்ப்பட்டது . ஆயுத போராட்டத்தை காந்தி அவர்கள் கடுமையாக எதிர்த்து வந்தார் சுபாஷ் சந்திர போஸ் மக்களை தவறான வழியில் கொண்டு செல்கிறார் என்றும் கூறி வந்தார் .

காந்தியின் ஆதரவாளர்களால் சுபாஷ்சந்திரபோஸ் காட்டி கொடுக்க பட்டார் . அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள் வெள்ளையர்கள் . ஆனால் சிறையில் வேலை செய்தவர்களின் உதவியுடன் சுபாஷ் சந்திர போஸ் தப்பித்து வந்தார் . அதன் பிறகு
ஆயுத போராட்டம் கடும் தீவிரம் அடைந்து வந்தது
வெள்ளையர்கள் வெளியேறும் நிலைமையும் வந்தது .


ஆனால் நாங்கள் ராணுவ ரீதியாக தோற்கடித்து இந்தியாவில் விரட்டியடிக்க பட்டோம் என்று வந்து விடக் கூடாது என்பதற்காக . அப்படி ஒரு அவமானம் வந்து விட கூடாது என்பதற்காக காந்தியை நாடினார்கள் வெள்ளையர்கள் .

வெள்ளையர்கள் அகிம்சைரீதியாக போராடும் காந்தியை சந்தித்து நாங்கள் உங்கள் அகிம்சை போராட்டத்தால் உங்களுக்கு சுதந்திரம் கொடுக்க போகிறோம் நாங்கள் இந்தியாவை விட்டு போக போகிறோம் என்று சொன்னார்கள் . காந்தியின் அகிம்சை பெயரை சொல்லி வெள்ளையன் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்து விட்டு வெளியேறினான் .

ஆனால் தற்போது இந்திய அரசாங்கமும் இந்திய மக்களும் சுபாஷ்சந்திரபோஸை மறந்து விட்டார்கள் . அவரின் மகத்தான போராட்ட வரலாற்றை திட்ட மிட்டு மறைத்து விட்டார்கள். காரணம் காந்தியின் அகிம்சை போராட்டம் பாதித்து விடும் இந்த வரலாறு மறைந்து விடும் என்பதற்காக .

இந்தியர்களே தமிழர்களே நன்றி மறப்பது நன்றன்று.. எனவே இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி தந்த சுபாஷ்சந்திரபோஸ் அவர்களுக்கு எங்கள் வீர வணக்கம் இந்நாளில் அந்த வீரனை நினைவு கொள்வோம்.

மந்திரம், மாயவித்தை சில அடிப்படைகள்


      மந்திரம், மாயவித்தை சில அடிப்படைகள் 



அஸ்டகர்மம் மாந்திரீக சக்தி மூலம் நாம்

1.வசியம்
2. மோகனம்
3. ஆகர்சணம்
4. தம்பனம்
5. பேதனம்
6. வித்வேசணம்
7. உச்சாடனம்
8. மாரணம் 
என்ற எட்டு வித (அஸ்டகர்மம்.) செயல்களையும் செய்யலாம்.
 
மந்திரங்கள்

வசியம் - ஓம் யநமசிவ அரிஓம்
ஐயும் கிலியும் சுவாகா.
இது மற்றவர்களைத் தன் வசப்படுத்தல்.

மோகனம் - ஓம் மசிவயந கிலியும்
சவ்வும் ஸ்ரீயும் சுவாகா.
இது பிறரை தன்மீது மோகம் கொள்ளச் செய்தல்.
 
தம்பனம் - ஓம் நமசிவய ஐயும்
கிலியும் சவ்வும் சுவாகா.
இது எந்த வொரு இயக்கத்தையும் அப்படியே ஸ்தம்பிக்கச் செய்வது.
 
உச்சாடனம் - ஓம் வயநமசி ஸ்ரீயும்
அரிஓம் ஐயும் சுவாகா.
இது தீய சக்திகள் அனைத்தையும் தன் இடம் விட்டு விரட்டுவதாகும்.
 
ஆக்ருசணம் - ஓம் வசிமநய ஸ்ரீயும்
சவ்வும் கிலியும் சுவாகா.
இது துர் தேவதைகளை தன்முன் பணிய வைப்பது.
 
பேதனம் - ஓம் யவசிமந அரிஓம்
ஸ்ரீயும் சவ்வும் சுவாகா.
இது சுயநினைவற்றுப் பேதலித்துப் போகச் செய்வது.
 
வித்துவேடணம் - ஓம் நமசிவய ஐயும்
கிலியும் ஸ்ரீயும் சுவாகா.
இது ஒருவருக்கொருவர் பகையை உண்டாக்கிப் பிரிப்பது.
 
மாரணம் - ஓம் சிவயநம சவ்வும்
ஸ்ரீயும் அரிஓம் சுவாகா.
இது உயிர்கள் அனைத்திற்கும் கேடு விளைவிப்பது.
 
மாந்திரீகத்தின் அடடமா சித்திகளையும் பெற விரும்புபவர்கள் அவற்றை செய்யும்போது அமரும் ஆசனம் எந்த மரத்தின் பலகையால் அமைந்திருப்பது சிறப்பானதாக இருக்கும் என்று புலிப்பாணிச்சித்தர் பின் வருமாறு குறிப்பிடுகிறார்.

பலா பலகை          - தம்பனம்
மாம் பலகை          - மோகம்
வில்வம்                  - வசியம்
பேய்த்தேத்தான்   - பேதனம்
எட்டிப்பலகை       - வித்துவேடணம்
அத்திப்பலகை      - மாரணம்
வெண்நாவல்        - ஆக்ருசணம்
வெப்பாலை           - உச்சாடனம்.

இதே வகையில் மாந்திரீகத்தின் அஸ்டமா சித்திகளையும் பெற விரும்புபவர்கள் அவற்றை செய்யும் போது பூஜைக்கு பயன் படுத்த வேண்டிய மலர்களைப் பற்றி புலிப்பாணிச்சித்தர் பின் வருமாறு வகைப்படுத்துகிறார்.

மல்லிகை         - வசியம்
முல்லை           - மோகனம்
தும்பை               - உச்சாடனம்
அரளி                   - ஆக்ருசணம்
காக்கனமலர்   - வித்துவேடணம்
ஊமத்தம்           - பேதனம்
கடலைமலர்   - மாரணம்
தாமரை             - தம்பனம்
 
இறுதியாக மாந்திரீக பயிற்சியின் போது அதனை செய்பவர்கள் அணிவதுடன் செய்யும் மூலங்களை அலங்கரிக்க வேண்டிய ஆடை வகைகளைப்பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார் புலிப்பாணிச்சித்தர்.

செம்பட்டு                               - வசியம்
மஞ்சள் பட்டு                       - மோகனம்
பச்சைப்பட்டு                       - தம்பனம்
வெள்ளைப் பட்டு               - பேதனம்
கழுதைவண்ணப்பட்டு     - வித்துவேடணம்
பஞ்சவர்ணபட்டு                - உச்சாடனம்
ஆந்தைவண்ணப்பட்டு    - ஆக்ருசணம்
கருப்பு வண்ணப்பட்டு     - மாரணம்.

சித்தர்கள் அருளிய மாந்திரிகத்தின் எட்டு நிலைகளைப் பற்றியும், அதன் மூல மந்திரங்களைப்பற்றியும், அந்த மந்திர உபாசனைகளை துவங்கிட வேண்டிய நாள் பற்றியும் முந்தைய பதிவில்பார்த்தோம்.

அந்த வரிசையில் இன்றைய பதிவில் இந்த பயிற்சிகளை மேற்கொள்ளும் போது அமர வேண்டிய திசை, உடலில் அணிய வேண்டிய மாலைகள், செபிப்பதற்கு பயன்படுத்த வேண்டிய மாலைகள் பற்றி இன்றைய பதிவில் காண்போம்.

கிழக்கு             - இந்திரன் - தம்பனம்
தென்கிழக்கு  - அக்கினி - மோகனம்
தெற்கு             - எமன் - மாரணம்
தென்மேற்கு  - நிருதி - உச்சாடனம்
மேற்கு             - வருணன் - ஆக்ருசணம்
வடமேற்கு     - வாயுதேவன் - வித்வேடணம்
வடக்கு            - குபேரன் - பேதனம்
வடகிழக்கு     - ஈசன் - வசியம்

இதைப் போலவே மாந்திரீகத்தின் அஸ்டமா சித்திகளையும் பெற விரும்புபவர்கள் அவற்றை செய்யும்போது அணிய வேணிய மாலைகளையே ஜெபம் செய்யும் போது பயப்படுத்த வேண்டும்.
 
 மாந்திரிக நிலைகளுக்கு ஏற்ப இவை மாறுபடும் என்றும் அது பற்றிய தகவல்களை புலிபாணி சித்தர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

 உருத்திராட்சம்   - வசியமாகும்
மிளகுமணி            - மோகனந்தான்
துளசிமணி             - உச்சாடனம்
தாமரைமணி         - தuமணி - மாரணம்
சங்குமணி              - ஆக்uடிமணி - வித்துவேடணம்
வெண்முத்து         - பேதனம்

இப்படி பெறப்பட்ட இந்த மூல மந்திரங்களை குறிப்பிட்ட நாளில்தான் உச்சாடனம் செய்திட துவங்க வேண்டுமாம். இதைப் பற்றி புலிப்பாணி சித்தர் பின்வருமாறு கூறுகிறார்.

ஞாயிறு         - வசியம் மற்றும் பேதனம்
திங்கள்          - தம்பனம்
செவ்வாய்    - மோகனம்
புதன்               - மாரணம்
வியாழன்      - உச்சாடனம்
வெள்ளி        - ஆக்ருசணம்
சனி                 - வித்துவேடணம்

மந்திர உச்சாடணம் செய்வதற்க முன்னர் வினாயகரை முறைப்படி வழிபாடு செய்து எந்த தடங்களும் இல்லாமல் எடுத்த செயல் வெற்றிகரமாக முடிய அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக்கொண்டு பின்னர் தான் மந்திர உச்சாடண வழிபாடடினை ஆரம்பிக்க வேண்டும்.

பக்கவிளைவுகள் இல்லாத சித்த மருத்துவம்

    பக்கவிளைவுகள் இல்லாத சித்த மருத்துவம்

குழந்தைகளின் சளிக்கு: 
ஆடாதொடை இரண்டு இலை, தும்பைப்பூ 10 எண்ணிக்கை. தாளிசபத்திரி (நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்) கால் ஸ்பூன், இஞ்சி ஒரு துண்டு. இதெல்லாத்தையும் நசுக்கி, சாறெடுக்கணும். இதுல 8 சொட்டு சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் தேன் கலந்து, 3 மணி நேரத்துக்கு ஒருமுறை குழந்தையோட நாக்குல தடவி வந்தா, சளி கட்டுக்குள்ள வரும். பிறந்த குழந்தைகள் முதல் 2 வயசுக் குழந்தைகள் வரை இந்த மருந்தைத் தரலாம்.

பெரியவர்களுக்கு ஏற்படும் நெஞ்சு சளிக்கு: 
இதுக்கு பூண்டுப் பால் நல்ல மருந்து, பெரிய சைஸ் முழு வெள்ளைப் பூண்டை தோல் உரிச்சுக்கணும். 100 மில்லி பசும்பால்ல தண்ணி கலந்து, இதுல பூண்டை நல்லா வேக வைக்கணும். அடுப்புலருந்து இறக்கறதுக்கு முன்னால ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், கால் ஸ்பூன் மிளகுப்பொடி போட்டு இறக்கிடணும். இதை நல்லாக் கடைஞ்சு, தேவையான அளவு, பனங்கற்கண்டு சேர்த்து, ராத்திரி தூங்கப் போறதுக்கு முன்னாடி சாப்பிட்டா, நல்ல பலன் கிடைக்கும்.

இருமல் விலக: 
அதிமதுரம் 100 கிராம் எடுத்து நசுக்கி, 200 மில்லி தண்ணியில வெறுமனே ஊறவச்சு, காலையில எடுத்து வடிகட்டி, சூடாக்கி (கொதிக்க வைக்க தேவையில்லை) பனங்கற்கண்டு சேர்த்துக்குடிச்சு வந்தா இருமல் ஓடியே போயிரும்.

மாந்தம் போக்க:  
ஒரு வயது நிரம்பிய குழந்தைகளுக்கு ஒரு டீஸ்பூன் துளசிச்சாறை கொடுத்தால்... மாந்தம், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஓடியே போகும். குழந்தையும் அழுகையை நிறுத்தி நிம்மதியாகத் தூங்கும்.
துளசி இலை:

1,மூச்சு விடத் திணறுபவர்கள் துளசி இலையை காயவைத்து அரைத்து, அவ்வப்போது முகர்ந்து வந்தால், சுவாசம் நீங்கும். 

 
2,துளசி இலையை தண்ணீரில் போட்டுக்குடித்தால், தொடர் இருமல் தொல்லை நீங்கும்.
சுடுநீரில் துளசி இலையைப் போட்டு ஆவிபிடித்தால், சளி, மண்டைக் குத்தல் குணமாகும். 
 
3,பேறுகாலம் முடிந்த பெண்கள் துளசி விதையை அரைத்து, தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் வேண்டாத அழுக்கு நீங்கும்.
 
4,ஒரு கைப்பிடி துளசிக் கொழுந்தை இஞ்சி சேர்த்து அரைத்து, மாத்திரை போல் உருட்டி, காயவைத்து எடுத்து, தேனில் கலந்து கொடுத்தால், வறட்டு இருமல் காணாமல் போகும். 
 
5,கட்டிகள் இருந்தாலோ, வெட்டுக்காயம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது வண்டு கடித்திருந்தாலோ அந்த இடத்தில் துளசியை அரைத்துப் பூசினால், உடனடி குணம் கிடைக்கும். 
 
6,துளசியை ரசமாக செய்து சாப்பிட்டால் வாய்கசப்பு முற்றிலும் நீங்கி, ஜூரமும் வந்த வேகத்தில் ஓடிவிடும்

மா மரபூக்களின் மருத்துவ குணங்கள்

     மா மரபூக்களின் மருத்துவ குணங்கள்




முக்கனிகளில் ஒன்றாக போற்றப்படும் மாம்பழம் எண்ணற்ற மருத்துவப் பயன்களை கொண்டுள்ளது. வைட்டமின் சத்துக்களும், தாது உப்புகளும் கொண்டுள்ள மாம்பழத்தைப் போலவே மாம்பூக்களும் மருத்துவ குணம் கொண்டுள்ளன. பற்களுக்கும், ஈறுகளுக்கும் வலிமை தருவதோடு, வாய்ப்புண்களை குணமாக்குவதில் மாம்பூக்கள் மிகச்சிறந்த மருந்து பொருளாக விளங்குகின்றன. மாமரத்தில் கொத்து கொத்தாய் பூத்திருக்கும் மாம்பூக்களின் மருத்துவ குணங்களை தெரிந்து கொள்வோம்.


தொண்டை வலி குணமடையும்

தொண்டையில் புண் ஏற்பட்டு எதையும் சாப்பிடக்கூட முடியாமல் வலி உயிரை எடுக்கும். அந்த நேரத்தில் மாமரத்தில் பூத்திருக்கும் மாம்பூக்களை பறித்து நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும். அதனை நன்கு நீரில் கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டிக்கொண்டு அதில் எலுமிச்சம் பழத்தின் சாறினை பிழிந்து விடவேண்டும். அந்த தண்ணீரை நன்றாக தொண்டைக்குள் இறங்குமாறு கொப்பளிக்க தொண்டை வலி குணமடையும்.

வாய்ப்புண்ணுக்கு மருந்தாகும்

உலர்ந்த மாம்பூக்களை நன்றாக பொடிசெய்து மோரில் கலந்து பருகவேண்டும். தினசரி மூன்று வேளை பருகிவர மூன்று நாட்களில் வாய்ப்புண், வயிற்றுப்புண் காணாமல் போய்விடும். புத்தம் புதிய மாம்பூக்களை தினமும் பறித்து வாயில் போட்டு மென்று வர பல்வலி குணமடையும். பற்கள், ஈறுகள் பலமடையும். மாம்பூ, மாந்தளிர், இரண்டையும் நீரில் போட்டு கொதிக்க வைத்து இளம் சூட்டில் வாய் கொப்பளித்து வர பல்வலிக்கு நிவாரணம் கிடைக்கும். மாம்பூவைச் சேகரித்து தணலில் போட்டு அதன் புகையைத் தலையில் படுமாறு செய்தால் தலைபாரம், ஜலதோஷம் நீங்கும்.

நீரிழிவு நோய்க்கு

மாம்பூ குறிப்பாக நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. தொடர்ந்து பல நாட்கள் பயன்படுத்தும்போது இதன் நல்ல பயனைக் கண்டுணரலாம். மாம்பூ, நாவல் பழக்கொட்டை, மாந்தளிர் மூன்றையும் சம அளவாக சேகரித்து வெயிலில் காயவைத்து இடித்து பத்திரப்படுத்தவும். தினம் அதிகாலை வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவு வெந்நீரில் பருகவும். 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர நீரிழிவு நோய் குணமாகும் என்கின்றனர் மருத்துவர்கள். இடையே ரத்த சர்க்கரை அளவை பரிசோதித்து கொள்ளவேண்டும்

சீதபேதிக்கு அருமருந்து

மாம்பூ, மாதுளம் பூ, மாந்தளிர் வகைக்கு 5 கிராம் சேகரித்து நீர் விட்டு மைபோல் அரைத்து அதனை பசும்பாலில் கலந்து காலை, மாலை, 3 நாட்கள் சாப்பிடவேண்டும். இதனால் சீதபோதி நீங்கிவிடும்.

மாம்பூக்களைச் சேகரித்து உலர்த்தி ஒரு கைப்பிடியளவு எடுத்து இரண்டு பங்கு அளவு நீர் சேர்த்துக் காய்ச்சிக் கஷாயமாக்கி வடிகட்டி அரை டம்ளர் அளவு எருமைத் தயிரில் கலந்து காலையில் மட்டும் பருகி வந்தால் சீதபேதி நீங்கிவிடும். மாம்பூ, பச்சை கொத்தமல்லி, தோல்நீக்கிய இஞ்சி, கருவேப்பிலை சமஅளவு எடுத்து துவையல் செய்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட குமட்டல் நீங்கும்.

மூலநோய் குணமடையும்

மாம்பூ, சீரகம், இரண்டையும் சம அளவாக எடுத்து தனித்தனியே உலர்த்திப் பொடியாக்கி சலித்து எடுத்து இரண்டையும் ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும். இந்த தூளில் 2 சிட்டிகை எடுத்து சர்க்கரையுடன் சேர்த்துக் காலை, மாலை தினமும் சாப்பிடவும் மூலநோய் கட்டுப்படும். உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்றுப் போக்கு நேரத்திலும் இந்த மருந்தை உட்கொள்ளலாம்

கொசுத்தொல்லை நீங்க

உலர்ந்த மாம்பூவை நெருப்பிலிட்டு அதன் புகையை வீடு முழுவதும் காண்பிக்க கொசுத்தொல்லை ஒழியும்

பப்பாளி பழத்தின் மருத்துவக் குணங்கள்



    பப்பாளி பழத்தின் மருத்துவக் குணங்கள்




1. பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
2. பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.
3. பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.
4. நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.
5. பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.
6. பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.
7. பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.
8. பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.
9. பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.
10. பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.
11. பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.
12. பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்

ரோஜாப்பூவின் மருத்துவப்பயன்கள்

           ரோஜாப்பூவின் மருத்துவப்பயன்கள்



இய‌ற்கை வைத்தியம்:-

மருத்துவப்பயன்கள் :- ரோஜாபூ லேசான துவர்ப்புச் சுவையுள்ளது. வயிற்றிலுள்ள வாயுக்களை அகற்றி குளிர்ச்சியைத் தரும். இதயத்திற்கு வலுவூட்டும். இதன் இதழ்கள் குளிர்ச்சியை உண்டாக்கும். பெண்களுக்கு
கர்பப்பையினுள் ஏற்படும் ரத்த ஒழுக்கை நிறுத்தும். மலமிளக்கும் குணமுடையது.

ரோஜா இதழ்களை ஆய்ந்து எடுத்து ஒருகைப்பிடயளவு இதழை ஒரு சட்டியில் போட்டு ஒருடம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, அதில் பாதி கசாயத்தைஎடுத்துச் சர்கரை சேர்த்துக் காலையிலும், மறுபாதியை மாலையிலும் குடித்து வந்தால் மலர்ச்சிக்கல் விலகும். நீர் கட்டு உடையும், மூலச்சூடு தணியும்.

ரோஜா மொக்குகளில் ஒரு கைப்பிடயளவு கொண்டு வந்து ஆய்ந்து, அதை அம்மியில்வைத்து மைபோல அரைத்து, ஒரு டம்ளர் அளவு கெட்டியாக தயிரில் போட்டுக் கலக்கிக்காலை வேளையில் மட்டும் குடித்து விட வேண்டும். இந்த விதமாக மூன்றே நாட்கள்சாப்பிட்டால் சீத பேதி குணமாகும். தேவையானால் மேலும் மூன்று நாட்கள் கொடுக்கபூரண
மாகக் குணமாகும்.

பித்தம் காரணமாகக் கிறுகிறுப்பு, குமட்டல், வாந்தி நெஞ்செரிவு மற்றும் பித்தக் கொளாறினால் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு கைப்பிடியளவு ரோஜா இதழ்களை ஒரு சட்டியில் போட்டு, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து இறுத்து, காலையில் ஒரு டம்ளர் அளவும், மாலையில் ஒரு டம்ளர் அளவும், ருசிக்காக தேவையான அளவு சர்கரை சேர்த்துக் கலக்கிக் குடித்து விட வேண்டும், இந்த விதமாக ஏழு நாட்கள் செய்து வந்தால் பித்தம் அறவே நீங்கி விடும். இந்தச் சமயம் பித்த்தை உற்பத்தி செய்யும் பதார்த்தங்களைச்
சேர்க்க க்கூடாது.

ஆய்ந்து எடுத்த ரோஜா இதழ்கள், கால் கிலோ எடுத்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு, 150 கிராம் சுத்தமான தேனை அதில் விட்டு நன்றாகக் கிளறி வெய்யிலில் வைத்து விட வேண்டும். போட்டது முதல், காலையில் ஒரு தேக்கரண்டி, மாலையில் ஒரு தேக்கரண்டி வீதல் சாப்பிட வேண்டும். காலையில் வெய்யிலில் வைத்து மாலையில் எடுத்து வைத்து விட வேண்டும். இந்த விதமாக இரத்தபேதி நிற்கும் வரை சாப்பிட வேண்டும். இதைத் தயாரிக்கச் சிரமமாகத் தோன்றினால் தமிழ் மருந்துக் கடைகளில் குல்கந்து என்று கேட்டால் கொடுப்பார்கள். அதை வாங்கி இதே அளவு சாப்பிட்டு வர வேண்டும்.

ஒரு சிலருக்கு அடிக்கடி தும்மல் வரும். இதை நிறுத்த ஒரு கைப்பிடியளவு ரோஜா இதழ்களை சட்டியில் போட்டு அரை டம்ளர் அளவு தண்ணீர் விட்டுச் சுண்டக் காய்ச்சி அந்தத் தண்ணீரை இறுத்து, காட்டுச் சீரகத்தில் ஒரு தேக்கரண்டியளவு அம்மியில் வைத்து அரைத்து ஒரு சுத்தமான துணியில் நனைத்து முகர்ந்து கொண்டேயிருந்தால் தும்மல் நிற்கும்.

பூவைக் குடிநீராக்கிக் கொப்பளிக்க வாய்புண், ரசவீறு குறையும். குடிநீராக வைத்து ரணங்களைக் கழுவி வரச் சதை வளர்வது ஆறும்.

ரோஜா பூவிலிருந்து பன்னீர் தயாரிக்கப்படுகிறது. ரோஜாபூவிதழ் 1500 கிராம், அதனுடன் நாலரை லிட்டர் தண்ணீர் சேர்த்து வாளியிலிட்டு நன்கு காய்ச்சி வடிக்கும் நீரே பன்னீராகும். இது மணத்திற்கும், களிம்பு, சந்தனம் முதலியவற்றில் சேர்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

பன்னீர் 238 கிராம், மீன் கொழுப்பு 51 கிராம், வாதுமை எண்ணெய் 306 கிராம் ரோஜாப்பூ எண்ணெய் 10 துளி இவைகளை நன்கு கலந்து உடம்பில் உள்ள புண்களுக்கு போட்டு வர துர்நாற்றம் விலகும்.

ரோஜாப்பூ பன்னீரை கண்கள் சிவந்து எரிச்சில் இருக்கும் நேரம் சில துளிகள் விட்டு வந்தால் எரிச்சல் மாறும். கண் நோய் சம்பந்தமான மருந்துகள் தயாரிக்க பன்னீர் பயன்படுகிறது. சிலருக்கு அதிக வியர்வையின் காரணமாக உடலில் துர்நாற்றும் ஏற்படும். இவர்கள் குளிக்கும் நீரிடன் பன்னீரைக் கலந்து குளிக்க துர்நாற்றம் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும்.

ரோஜாப்பூக்ளிலிருந்து நறுமணமான எண்ணெய் எடுக்கிறார்கள். அதற்கு அத்தர் என்று பெயர்.

சித்தமருத்துவத்தில் இதனை பொதுவாக கழிச்சலுக்கு கொடுக்கும் மருந்துகளிலும் லேகியங்கள், மணப்பாகு முதலியவற்றுக்கு நறுமணம் ஊட்டுவதற்கும் பயன் படுத்துகிறார்கள்.

ரோஜா இதழ்களை சுத்தம் செய்து அப்படியே சாப்பிட்டு வர சுவையையும், மணத்தையும் தரும். வயிற்றுக் கடுப்பு, சீத பேதி இவைகளையும் போக்கும். உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தி தேக ஆரோக்கியத்தை வளர்க்கும்.

ரோஜாப்பூ மொக்கு மற்றும் சதகுப்பை ஆகியவற்றை உரலில் போட்டு இடித்து சுடு நீரில்போட்டு மூடி வைத்து விட வேண்டும். மூன்று மணி நேரம் குறையாமல் வைத்திருந்து பிறகுவடிகட்டி கொள்ள வேண்டும். குழந்தைகளாக இருந்தால் கால் டீஸ்பூனும் பெரியவர்களாகஇருந்தால் ஒரு டீஸ்பூனும் மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை கொடுத்துவர உஷ்ணவயிற்று வலி போகும். குன்ம வயிற்று வலிக்கு இது சிறந்ததாகும்.

ரோஜாப்பூ இதழ்களை தேவையான அளவு சேகரம் செய்து சம அளவு பயத்தம்பயிரைஅதனுடன் சேர்த்து 4,5 பூலாங்கிழங்கை சேர்த்து அரைத்து விழுதாக எடுத்துக் கொண்டுதினமும் உடலில் இந்த விழுதை தேய்த்து அரை மணி பொறுத்து குளித்து வந்தால் சருமநோய்கள் ஒழிந்து உடல் நல்ல நிறம் பெறும்

சரியாக தூங்காவிட்டால் வரும் தொல்லைகள்



    சரியாக தூங்காவிட்டால் வரும் தொல்லைகள்

 
 நீங்கள் நன்றாகத் தூங்கும் நேரம், நீங்கள் தூங்கும் விதம், உங்களின் ஆழ்ந்த தூக்க நேரம், இவைகளை வைத்துதான் நீங்கள் விழித்திருக்கும் நேரம், உங்கள் ஞாபகசக்தி, மூளையின் செயல்பாடு, அறிவுத்திறன், சிந்தனை, உடலின் செயல்பாடு, எண்ணங்களின் வெளிப்பாடுகள், உடலின் சக்தி, உடலின் எடை ஆகியவை கணக்கிடப்படுகிறது.

நான்கு நாட்கள் சரியாகத் தூங்கவில்லையென்றால், அரை கிலோ உடல் எடை குறைந்து விட்டது என்று சிலர் சொல்வார்கள். இது முற்றிலும் உண்மை. தூங்கும் நேரத்தை வைத்துத்தான், விழித்திருக்கும் நேரம் கணக்கிடப்படுகிறது. நன்றாகத் தூங்கிவிட்டு எழுந்தால் அடுத்தநாள் தூங்குகிறவரை களைப்பில்லாமல் உற்சாகமாக எல்லா வேலைகளையும் பார்க்க முடியும்.

எல்லா வேலைகளிலும் அதிகமாக கவனம் செலுத்தவும் முடியும். வேறு எந்த விஷயத்திலும் இவ்வளவு உற்சாகமும், ஆனந்தமும், சந்தோஷமும், தெம்பும், நிம்மதியும் கிடைக்காது. ஒருநாளைக்கு சுமார் 8 மணி நேரம் நாம் தூங்குவதாக வைத்துக் கொள்வோம். அப்படியென்றால் ஒரு நாளில் மூன்றில் ஒரு பகுதியை நாம் தூங்கிக் கழிக்கிறோம். அப்படியென்றால் ஒருவேளை நாம் எழுபது வயதுவரை வாழ்கிறோம் என்று வைத்துக் கொண்டால் சுமார் 23 வருஷத்தை நாம் தூங்கியே கழித்திருக்கிறோம் என்று அர்த்தம்.

ஆ... 23 வருட வாழ்க்கையை நாம் தூங்கியே கழித்துவிட்டோம் என்று எண்ணி நீங்கள் வேதனைப்பட வேண்டாம். உண்மை என்னவென்றால், 23 வருடம் ஒழுங்காக தூங்கியதால்தான், 70 வயது வரை நிம்மதியாக வாழ முடிந்திருக்கிறது என்பதுதான் நிஜம். அப்படி தூங்கவில்லை என்றால் அந்த வயது வரை வாழவே முடியாது. ஒழுங்காக தூங்காவிட்டால் நம் மூளையும் வேலை பார்க்காது.

தினமும் சரியாகத் தூங்காதவருடைய உடல் எடை, வெகு சீக்கிரத்திலேயே குறைய ஆரம்பித்துவிடும். அதேபோல கண்களைச் சுற்றி கரு வளையமும், கண்கள் சற்று உள்ளேபோன மாதிரியும் தெரியும். உடலில் சோர்வு அதிகம் இருக்கும். தெம்பு இருக்காது. உடல் தசைகள் முழுவதிலும் வலி இருக்கும். ஞாபக மறதி இருக்கும்.

மனச் சோர்வு, கை விரல் நடுக்கம், தலைவலி, ஜலதோஷம் வருவது போன்ற உணர்வு, கண்கள் சிவந்து போகுதல், கண் கீழ் இமைக்குக் கீழே பை போல வீங்கிப் போகுதல் (ஐ பேக்ஸ்) ரத்தக்கொதிப்பு அதிகரித்தல், உடலில் ஹார்மோன்கள் அதிகமாக சுரத்தல், சர்க்கரை வியாதி வருவதற்குண்டான வாய்ப்புகள், எரிச்சல், தலைசுற்றல், உடல் எடை சில பேருக்கு கூடுதல், கொட்டாவி முதலியவை ஏற்படும்.

தூக்கத்தை தொலைக்கும் வியாபாரிகளுக்கும், இரவுப் பணி செய்பவர் களுக்கும் மேற்கண்ட பிரச்சினைகளில் அவரவர் தூக்க அளவைப் பொறுத்து ஏதேனும் பாதிப்புகள் இருக்க வாய்ப்புகள் அதிகம். பத்து வயது வரை நிறைய நேரம் குழந்தைகள் தூங்க வேண்டும். இது அவர்களுக்கு ரொம்ப ரொம்ப நல்லது. ஆனால் இப்பொழுதெல்லாம் குழந்தைகளை பெற்றோர்கள் சரி வர தூங்க வைப்பதே இல்லை. இரவும் லேட்டாக குழந்தைகள் படுக்கிறார்கள்.

காலையில் ஸ்கூலுக்கு அனுப்ப அரைகுறை தூக்கத்திலேயே சீக்கிரம் எழுப்பி ரெடி பண்ணி வேனில் ஏற்றி விட்டு விடுகிறார்கள். இது சரியல்ல. குழந்தை வளர வளர, தூக்க நேரம் ஒவ்வொரு மணி நேரமாக குறைந்து கொண்டே வரும். 50 வயது வரும்போது 6 முதல் 8 மணி நேர தூக்கமாக குறைந்து விடும். இளம் வயதில் அதிக நேரம் படிப்பதனாலும், வேலை பார்ப்பதனாலும், விளையாடுவதாலும், மூளை சீக்கிரமே களைப்படைந்து விடுகிறது.

ஆனால் இளம் வயதில் தூங்கும் நேரம் கொஞ்சமாக இருந்தாலும் அந்த தூக்கம் ஆழ்ந்த தூக்கமாக இருக்கும். மாவீரன் நெப்போலியன் 3 முதல் 4 மணி நேரம்தான் தினமும் தூங்குவாராம். பிரபல விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சுமார் 10 மணி நேரம் தூங்குவாராம். `நல்ல பொழுதையெல்லம் தூங்கிக் கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்' என்று சினிமாப் பாடல் உண்டு.

அப்படி தூங்கக்கூடாத நேரத்தில் தூங்கியும், தூங்க வேண்டிய நேரத்தில் தூங்காமலும் இருந்து உடம்பைக் கெடுத்துக் கொள்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆதிகாலத்தில் மனிதர்கள் குகைகளில் வாழ்ந்தார்கள். அதே குகைகளில் பயங்கர மிருகங்களும் வாழ்ந்தன. இருட்டானவுடன் அந்த மிருகங்களின் பயங்கர உருவங்களையும், அலறல்களையும், சத்தங்களையும் மனிதர்கள் பார்த்து, கேட்டு பயந்து பயந்தே இரவைக் கழித்தார்கள். பகலில் மிருகங்கள் தெரியும்.

இரவில் மிருகங்கள் தெரியாது. எனவே இரவு வந்து விட்டாலே ஆதிவாசிகளுக்கு பயமும் கூடவே வந்து விடும். மனிதன் குகைகளில் வாழ்ந்த காலம், நெருப்பைக் கண்டுபிடிப்பதற்கு முன்புள்ள காலம் என்பதால், அப்போது நெருப்பை பயன்படுத்தி வெளிச்சம் உருவாக்க மனிதர்களுக்குத் தெரியாது. அதனால் இருட்டில் என்ன செய்வதென்றே தெரியாது.

எனவே வேறு வழியில்லாமலும், பகலில் இரைக்காக அலைந்ததனால் ஏற்பட்ட அசதியில் சோர்வு ஏற்பட்டிருப்பதாலும் குகையில் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து உடல் களைப்பில் தானாகவே தூங்க ஆரம்பித்து, பின்னர் அதையே தினமும் இருட்டியவுடன் செய்ய ஆரம்பித்து, இதுவே பின்னாளில் இரவு என்றால் தூக்கத்திற்குத்தான் என்று பழக்கமாகி விட்டது

கண்களை பாதிக்கும் காரணிகளும் அதற்கான சில விளக்கமும்



கண்களை பாதிக்கும் காரணிகளும் அதற்கான சில விளக்கமும்

1) கண்களை பாதிக்கும் சில காரணிகள்:

க்ளைகோமா, தூரப்பார்வை ,கிட்டப்பார்வை ,ஸ்டை (ஸ்டை என்பது கண்ணீர் சுரப்பியை தடுக்கும் கண்ணின் மேற்புறத்தில் தோன்றும் ஒரு தொற்று ஆகும்) கட்டிகள், தொற்றுகள் கண்புரை உலர்ந்த கண்


2) கண் பாதிப்புகளை தெரிவிக்கும் எச்சரிக்கை அறிகுறிகள் யாவை?

இருளில் பார்வையை சரிபடுத்துதலில் சிரமம்,இரட்டை தோற்றம்,சிவந்த விழிகள்,கண் எரிச்சல் மற்றும் வீக்கம்,கண் மற்றும் கண்களை சுற்றி வலி,அதிகப்படியான கண்ணீர் சுரத்தல்,கண் உலர்ந்து போதல், அரிப்பு மற்றும் எரிச்சல்,தெளிவில்லாத பார்வை திறன்,காணும் காட்சியின் மத்தியில் கருப்பு புள்ளி தோன்றுதல்,கண்களின் நிறங்களில் தோன்றும் நிற மாற்றம், பார்வை திடீரென்று தெளிவில்லாமல் மேலும் குழப்பத்துடன் தோன்றுதல்

3) சிமிட்டுதல் கண்களுக்கு உதவுமா?

சிமிட்டுதல் விழி உருளைகளை கண்ணீரால் கழுவ மட்டும் உதவுகிறது. அவை கண்களை சுத்தமாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவுகிறது. யாரேனும் நம் கண்களை குத்தினால் நாம் அனிச்சையாக நம் கண்கனை சிமிட்டுவோம்.

4) ஒரு வருடத்தில் நாம் எத்தனை முறை கண்களை சிமிட்டுகிறோம்?

வருடத்திற்கு 10,00,000 முறை. உண்மையில் நம் உடலின் அனைத்து தசைகளை விட கண்களின் தசை விரைந்து செயல்படுகிறது. ஒரு நிமிடத்தின் 1/00 னை விட குறைவான கால அளவில் சுருங்குகிறது. வருடத்திற்கு 10,00,000 முறை. உண்மையில் நம் உடலின் அனைத்து தசைகளை விட கண்களின் தசை விரைந்து செயல்படுகிறது. ஒரு நிமிடத்தின் 1/00 னை விட குறைவான கால அளவில் சுருங்குகிறது.

5) காதில் தங்க வளையம் அணிவது கண்பார்வை திறனை மேம்படுத்துமா?

இது ஒரு கட்டுக்கதை. காதில் தங்க வளையம் அணிவதால் கண்பார்வை மேம்படும் என்பதுமூட நம்பிக்கையாளர்களின் எண்ணம்.

6) மிகவும் இறுக்கமாக கழுத்துப்பட்டை அணிவது கண்களை பாதிக்குமா?

இறுக்கமாக கழுத்துப்பட்டை அணிவது க்ளைகோமா தோன்றும் வாய்ப்பினை அதிகப்படுத்தும்என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

7) மங்கிய விளக்கொளியில் படிப்பது கண்களுக்கு கேடு விளைவிக்குமா?

மங்கிய விளக்கொளி தங்கள் பார்வைத்திறனை பாதிக்காது என்றபோதும், அது உங்கள் கண்களை அதிக தளர்வடையச் செய்யும். படிப்பதற்கான சிறந்த வழியானது விளக்கின் ஒளி புத்தகத்தின் பக்கங்களில் விழும்படி படிக்க வேண்டும், உங்கள் தோள்களின் மீது விழும்படி படிக்க கூடாது.

எனது கண்களுக்கான சிறந்த உணவு எது?

காரட் சிறந்த உணவு என்பது உண்மையாகும். கண்புரை மற்றும் மாசு சீர்கேட்டினை தடுப்பதற்கு நம் கண்களில் இயற்கையாக அமைந்துள்ள காரடெனோய்ட்ஸ் லூய்டின் மற்றும் ஜியாக்சேன்தின் போன்ற பொருட்கள் காரட்டில் உள்ளது.

9) எனது கண்களுக்கான சிறந்த பழங்கள் யாவை?

பப்பாளி, ஸ்ட்ராபெரி, ஆரஞ்சு மற்றும் திராட்சை போன்ற பழங்கள் சிறந்தது.

10) பிறந்த குழந்தையின் அழுகையில் கண்ணீர் வருவதில்லையே ஏன்?

தோராயமாக ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகளின் கண்கள் கண்ணீரை சுரப்பதில்லை.

பித்தம் குறைய

                          பித்தம் குறைய

* இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும்.

* இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.

* பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து அந்தச் சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.

* எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட்டால் பித்தத்தை தணிக்கும்.

* ரோஜாப்பூ கஷாயம் பால் சர்க்கரை கூட்டி சாப்பிட்டால் பித்த நீர் மலத்துடன் வெளியேறும்.

* பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்தபாண்டு தீரும்.

* விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்கலாம்.

* அகத்திக்கீரை சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் அகலும்.

* பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீக்கி உடல் பலம் பெருகும்.

* கமலா பழம் (ஆரஞ்சு) சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தை தணிக்கும்.

* நத்தைசூரி விதையை வறுத்து பொடித்து காய்ச்சி கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர கல்லடைப்பு தீரும்.

* எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தால் பித்த சூடு தணியும்.

* அரச மரக் குச்சியை சிறு துண்டுகளாக வெட்டி சட்டியில் போட்டு காய்ச்சி ஆறவைத்து, அந்த நீரில் தேன் கலந்து குடித்தால் ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும்

இதயத்தை பாதுக்காக்கும் பழங்கள்


         இதயத்தை பாதுக்காக்கும் பழங்கள்




இன்றைய நவீன உலகில் மக்களை இருவிதமான நோய்கள் அதிகமாக ஆட்டிப் படைக்கின்றன.

அவை நீரிழிவு, இரத்த அழுத்தம்.

இரத்த அழுத்தமானது இதயத்தை பாதித்து இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்குகிறது. இதய நோய் வந்தால் குணப் படுத்தவும், வராமல் தடுக்கவும் இயற்கை நமக்களித்த கொடைதான் காய்களும் கனிகளும்.

சித்தர்கள் முதல் தற்கால மருத்துவர்கள் வரை பரிந்துரைக்கும் ஒரே வாசகம்தான் உணவில் கீரை, காய்கனிகளை அதிகம் சேருங்கள் என்பது.

இதயத்திற்கு இதம் தரும் பழங்கள் பல உள்ளன. அவை இதயத்தை பலப்படுத்தி சீராக செயல்பட வைக்கும்.

ஆப்பிள் பழம் இதயத்திற்கு உற்சாகத்தையும், புத்துணர்வையும் தர வல்லது. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்லை என்கிறது ஒரு ஆங்கில பழமொழி.

“An apple a day, keeps the doctor away” இதிலிருந்து ஆப்பிளின் மருத்துவப் பயன் நமக்கு புரியவரும்.

இதுபோல் புத்தம் புது திராட்சை, அன்னாசி, ஆரஞ்சு, சீதாபழம் ஆகியவை இதயத்தை பலப்படுத்தும்.

வாதுமையும் தேங்காய் நீரும் இதயத்திற்கு ஊக்கம் அளிப்பவை.

நெல்லிக்கனி இதயத்திற்கு மிகுந்த பலனைத் தரவல்லது. ஒரு நெல்லிக்கனியில் 4 ஆப்பிளுக்கு இணையான சத்துக்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனை ஜாமாகவும், இலேகிய மாகவும் செய்து சாப்பிடலாம்.

மார்பில் வலியும், மரத்துப்போன உணர்வும் ஏற்பட்டால் உடனே திராட்சைச் சாறு அருந்தலாம். இது வலியைக் குறைக்கும் இதய நோயாளிகள் தினமும் திராட்சை சாறு பருகுவது நல்லது. அது நோயைக் குணப்படுத்த உதவும்.

ஆரஞ்சு பழமும், அதன் பழச்சாறும் இதயம், மார்புநோய் போன்றவற்றிற்கு சிறந்த டானிக் ஆகும். இதனை இதய சம்பந்தப்பட்ட நோயாளிகள் தினமும் அருந்துவது நல்லது.

அதுபோல் உலர்ந்த திராட்சை, பேரீச்சை, அத்திப்பழம் போன்றவை இரத்தத்தை சுத்தப் படுத்துவதுடன் இதயத்தை பாதுகாக்கவும் செய்கிறது.

உடலில் உள்ள அதிக உப்பைக் குறைத்து ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கனிகளுக்கு உண்டு.
இதயத்திற்கு இதமான கனிகளை உண்டு இதயத்தைப் பாதுகாப்போம்

கொழுப்பை குறைக்கும் உணவுகள்

      கொழுப்பை குறைக்கும் உணவுகள்...


திடீரென்று எடை கூடுகிறதா? களைப்பாக இருக்கிறதா? ஜலதோஷம் அடிக்கடி ஏற்படுகிறதா? குறிப்பாக பெண்களுக்கு முடி கொட்டுகிறதா? அப்படி எனில் உங்கள் இரத்தத்தில் கொலஸ்டிரால் அதிகரித்து வருகிறது என்று அர்த்தம். உடனடியாக இரத்த பரிசோதனை செய்து கொலஸ்டிரால் அளவைப் பாருங்கள்.
கொலஸ்டிரால் இருக்கிறது என்றால் உடனடியாக மருந்துக்கு ஓடாதீர்கள். வாழ்க்கை முறையை மாற்றி அமைத்தாலே போதும். அளவுடன் முட்டை சாப்பிடலாம். ஆனால், நெய், வெண்ணெய் முதலியவற்றை முற்றிலும் தவிர்க்கவும். பெண்கள் தைராய்டு சுரப்பி பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

இளம் பெண்களைவிட வயதான பெண்கள் உடற்பயிற்சி செய்வது, ஓடுவது ஆகியவற்றில் ஈடுபடுவதால் இவர்களுக்கு எல்.டி.எல். என்ற கெடுதலான கொலஸ்டிரால் இல்லை. மாறாக, நல்ல கொலஸ்டிராலான ஹெச்.டி.எல். கொலாஸ்டிரால் சரியான அளவில் இருக்கிறது. இதனால் இதயநோய் அபாயம் இன்றி நலமாக இருக்கிறார்கள். அடிக்கடி கோபம் ஏற்பட்டால் நல்ல கொலாஸ்டிராலான HDLன் அளவு குறைகிறது. எனவே, ஆண்களும் பெண்களும் வைட்டமின் E-400 சர்வதேச அலகு சாப்பிடவும். இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் இருக்க டாக்டர் ஆலோசனைப்படி நிபாஸின் மாத்திரையும் சாப்பிடவும், கோபப்படுவதை தவிர்க்கவும்.

கொழுப்பின் அளவு:

மொத்த கொழுப்பின் அளவு 200-க்குள் இருக்க வேண்டும். இந்த அளவில் இருந்தால் இதய நோய்கள் தாக்குவதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும். 200-லிருந்து 239 வரை கொழுப்பின் அளவு இருக்கும்பட்சத்தில் இதயநோய் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது என்று எடுத்துக் கொள்ளலாம். 240-க்கும் மேலாக இருந்தால் இவர்களுக்கு இதய நோய்க்கான ஆபத்து அதிகமாகும்.
உயர் அடர்வு கொழுப்பு 40-க்கும் குறைவாக இருந்தாலும் ஆபத்து ஆகும்.

பெண்களை பொருத்தவரை 50-க்கும் குறைவாக இருந்தால் ஆபத்து ஆகும்.
குறை அடர்வு கொழுப்பு 100க்குள் இருக்கலாம். 100 லிருந்து 129 வரை பரவாயில்லை. 130 லிருந்து 159 வரை அதிகமாகும். 160லிருந்து 189 வரை இருந்தால் மிக அதிகமாகும். 190க்கும் மேல் இருந்தால் மிக மிக அதிகமாகும். இது இதய நோய்க்கான ஆபத்தை அதிகப்படுத்தும். ட்ரை இளிசரைடுகள் 150க்குள் இருக்கலாம். 199 வரை கொஞ்சம் அதிகமாகும். 200லிருந்து 499 வரை இருந்தால் அதிகமாகும். 500க்கும் மேலிருந்தால் மிக அதிகமாகும்.

கொழுப்பை குறைக்கும் உணவுகள்:

1. கொழுப்பை குறைப்பதில் பூண்டுக்கு இணை பூண்டேதான். கொழுப்பில் கொழுப்பு கரையும் என்பது போல பூண்டில் உள்ள கொழுப்பில் நமது உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு கரைக்கப்பட்டு நல்ல கொழுப்பு அதிகமாகும்.

2. இஞ்சி உடம்பின் கெட்ட கொழுப்பை கரைக்க பயன்படுகிறது. உணவில் அதிகமாக இஞ்சியை சேர்க்க வேண்டும்.

3. வெங்காயம், குறிப்பாக சின்ன வெங்காயம்.

4.லவங்க மசாலா பட்டை நமது ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைப்பதுடன் மொத்த கொழுப்பின் அளவையும் குறைக்கிறது. சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவையும் குறைக்கிறது.

5.சிவப்பு அரிசி, கொழுப்பை குறைக்கிறது.

6. நிலக் கடலை நன்மை செய்யும் கொழுப்பை அதிகரித்து தீமை செய்யும் கொழுப்பை குறைக்கிறது. உணவில் முக்கியமாக கடலை எண்ணையை பயன்படுத்த வேண்டும்.

7. கவளை மீன் எனப்படும் சாலை மீன் நமது உடம்பின் கொழுப்பை குறைப்பதுடன், நமக்கு தேவையான ஒமேகா 3 யை அதிகளவில் கிடைக்கச் செய்கிறது.

8. கருப்பு திராட்சை, கொழுப்புச் சத்தை குறைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது.

9. கொள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு கொடு என்பது நமது பழமொழி. கொள்ளு நமது உடம்பின் மிகை கொழுப்பை சமன்படுத்துகிறது.

10. சோயா, கோதுமை போன்ற தாணியங்களும் கொழுப்பை குறைக்கப் பயன்படுகிறது.

சிகரெட் பிடிக்கக்கூடாது. மற்றவர்கள் விடும் சிகரெட் புகையை இலவசமாகப் பிடிப்பதால் இரத்தக் குழாய்களில் நெருக்கடி ஏற்படுகிறது. கெடுதலான கொலாஸ்டிரால் உருவாகாமல் இருக்க ஓட் மீல், பீன்ஸ், பட்டானி, பார்லி அரிசி, ஆரஞ்சு, சாத்துக்குடி, ஆப்பிள் முதலியன உதவும். இவற்றையும் அவ்வப்போது உணவில் சேர்க்கவும். சில தானிய உணவுகளில் கரையத்தக்க நார்ச்சத்தான சிலியம் (Psyllium) என்ற நார்ப்பொருள் இருக்கிறது. எனவே, கம்பு, கேழ்வரகு, சோளம் முதலியவற்றையும் அவ்வப்போது காலைப் பலகாரமாக சேர்க்கவும். இதில் உள்ள நார்ப்பொருள்களும் கொலாஸ்டிராலைக் கரைக்கும்.

சோயாபால் தினமும் அருந்தவும். இல்லை எனில் மூன்று அல்லது நான்கு தேக்கரண்டி சோயாமாவை, உங்களுக்குத் தயாரிக்கப்படும் உணவில் சேர்த்து பலகாரம் செய்யச் சொல்லுங்கள். சோயா தயிரும் பயன்படுத்தலாம்.

கொலாஸ்டிராலைக் குறைத்து HDL என்ற நல்ல கொலாஸ்டிரால் எப்போதும் அளவு குறையாமல் பார்த்துக்கொள்வதில் மீனின் பங்கு மகத்தானது. ஒமேகா-3 என்ற அமிலம் மீனில் கிடைக்கிறது. எனவே ஒருநாள் விட்டு ஒரு நாள் 100 கிராம் மீனையும் உணவில் சேருங்கள். சைவ உணவுக்காரர்கள் மீன் எண்ணெய் கேப்சூல் இரண்டு சாப்பிடலாம்.

தேங்காய் எண்ணெய், பாம்ஆயில் முதலியவற்றில் சமையல் செய்யக்கூடாது.

தினமும் பத்து டம்ளர் தண்ணீர் அருந்தவும். இத்துடன் தனியாவைத் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு வடிகட்டி அருந்தவும். தினமும் மாதுளம்பழம் சாப்பிடுவது மிக மிக நல்லது. இது கொலாஸ்டிரால் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளும்.

பச்சரிசி மாவில் கோலம் போடுவதன் தத்துவம் என்ன

பச்சரிசி மாவில் கோலம் போடுவதன் தத்துவம் என்ன???

மற்றவர்களுக்கு அன்னதானம் செய்தல் புண்ணியம். அதிலும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தல் பெரும் புண்ணியமாகும். வசதி படைத்த பணக்காரர்கள் அக்காலத்தில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தார்கள். ஆனால், ஏழை என்ன செய்வான்? அந்த ஏழையும் ஆயிரம் உயிர்களுக்கு அன்னதானம் செய்யும் வழிவகைகளை நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். பச்சரிசி மாவில் கோலம் போட்டால் அம் மாவை ஆயிரக்கணக்கான எறும்புகள் சாப்பிட்டபின், மீதமிருக்கும் அரிசி மாவை எடுத்துச் சென்று தங்கள் வலைகளில் சேமித்து வைக்கும். எனவே, ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு உணவளித்து மகிழ்ச்சிப்படுத்தும், இந்த முறையைப் போல் ஆன்ம நேயத்தையும், ஆன்மீகத்தையும் சிறப்பிக்கும் செயல் வேறு உண்டோ எனில் இல்லையெனக் கூறலாம்.

" உன்னிலும் என்னிலும் இருக்கும் ஈசன், ஈயெறும் புடலிலும் இருக்கிறான்" எனபது நினைவு கூறத்தக்கவை. ஆயிரம் உயர்களுக்கு உணவளித்த அந்த மகிழ்ச்சி, உணவளித்தவரின் உள்ளம், உடல் ஆகிய இரண்டையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் அல்லவா?

கோலம் போடுவதில் இன்னொரு தத்துவமும் அடங்கியிருக்கிறது. பல புள்ளிகள் வைத்து பல வடிவங்களில் வளைத்து போடப்படுகின்ற கோலம், பார்ப்பவரின் மனத்தைக் கவரும். யாராவது வீட்டில் தகராறு செய்ய வேண்டும் என்று நினைத்து வருகின்றபோது, அந்த அழகுக் கோலங்கள், வருபவரின் எண்ணத்தைச் சிதற வைக்கிறது. அதனால், வருபவர் கோபம் தணிந்துதான் வீட்டுக்குள்ளே வருவார். இப்படிப்பட்ட மனோவசிய சக்தி கோலங்களுக்கு உண்டு என அறிந்தே முன்னோர்கள் கோலம் போடுவதைப் பரவலாக செய்தார்கள்.

பழங்கால தமிழ் கணிதம்

           

                 பழங்கால தமிழ் கணிதம்....      



கணித வரலாற்றில் தமிழருக்கு என்றும் முதன்மை இடம் உண்டு. அக்கால தமிழ் பாடல்கள் நம்முடைய புலவர்களின் கணித அறிவினை பரைசாற்றுகிறது.

தமிழ் இலக்கமுறை

தமிழ் இலக்கம்அரேபிய இலக்கம்சொல்
0சுழியம்
1ஒன்று
2இரண்டு
3மூன்று
4நான்கு
5ஐந்து
6ஆறு
7ஏழு
8எட்டு
9தொண்டு/ஒன்பது
10பத்து
௯௰90தொன்பது
100நூறு
௯௱900தொன்னூறு
1,000ஆயிரம்
௯௲9000தொள்ளாயிரம்
௰௲10,000பத்தாயிரம்
௱௲100,000நூறாயிரம்
௰௱௲10,00,000பத்து நூறாயிரம்
௱௱௲100,00,000கோடி
௰௱௱௲10,00,00,000அற்புதம் (பத்து கோடி)
௱௱௱௲100,00,00,000நிகர்புதம் (நூறு கோடி)
௲௱௱௲1000,00,00,000கும்பம் (ஆயிரம் கோடி)
௰௲௱௱௲10,000,00,00,000கணம் (பத்து ஆயிரம் கோடி)
௱௲௱௱௲100,000,00,00,000கற்பம் (நூறு ஆயிரம் கோடி)
௰௱௲௱௱௲10,00,000,00,00,000நிகற்பம் (ஆயிரம் ஆயிரம் கோடி)
௱௱௲௱௱௲100,00,000,00,00,000பதுமம் (கோடி கோடி)
௲௱௲௱௱௲1000,00,000,00,00,000சங்கம்
௰௲௱௲௱௱௲10,000,00,000,00,00,000வெல்லம்
௱௲௱௲௱௱௲100,000,00,000,00,00,000அன்னியம்
௰௱௲௱௲௱௱௲10,00,000,00,000,00,00,000அர்த்தம்
௱௱௲௱௲௱௱௲100,00,000,00,000,00,00,000பரார்த்தம்
௲௱௲௱௲௱௱௲1000,00,000,00,000,00,00,000பூரியம்
௰௲௱௲௱௲௱௱௲10,000,00,000,00,000,00,00,000முக்கோடி
௱௲௱௲௱௲௱௱௲100,000,00,000,00,000,00,00,000மஹாயுகம்
பலா பழத்தினை வெட்டாமலேயே, அதிலுள்ள சுளைகளின் எண்ணிக்கையை காண, பழம்பெரும் கணித நூலான, கணக்கதிகாரத்தில் ஒரு பாடல் உள்ளது.
"பலாவின் சுளையறிய வேண்டுதிரேல் ஆங்கு
சிறுமுள்ளுக் காம்பருக் கெண்ணி –வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தினுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை"
உரை: ஒரு பலாப்பழத்தை அறுப்பதற்கு முன்பு அதிலுள்ள சுளைகள் இவ்வளவென்று கண்டுபிடிக்கலாமோ எனின் அதற்குச் சொல்லுமாறு: காம்பைச் சுற்றிலும் எண்ணிப் பார்க்க, ௱ முள்ளுக் கண்டது. இதை ௬ ஆல் பெருக்க, ௱ X ௬ = ௬௱ , இத ௫-க்கீய, ௱ X ௫ = ௫௱, ௨௰ X ௫ = ௱, ஆக ௱ ஐயும் ௨௰ ஐயும் கூட்ட ஈவு ௱௨௰ சுளை என்று சொல்வது.

விளக்கம்:

பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணிக்கையை 6 ஆல் பெருக்கி வரும் விடையை 5 ஆல் வகுக்க கிடைக்கும் ஈவானது பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையாகும்.
அதாவது,
பலா பழத்திலுள்ள முற்களின் எண்ணிக்கை : 100
இதை 100 X 6 = 600,
பின்பு இந்த 600 ஐ 5 ஆல் வகுக்க, 100 X 5 = 500 , 20 X 5 = 100, ஆக 100 ஐயும் 20 ஐயும் கூட்ட 120 ஈவாக வருகிறது, இதுவே சுளையின் எண்ணிக்கையாகும்.

ஒருமுறை தமிழ் புலவர் ஒருவர், ஒளவையாரை அடியே என்று அழைப்பதற்காக "ஒரு காலடி. நாலிலை பந்தலடி." என்று விடுகதை போட, கோபமான ஒளவையார் கீழ்கண்ட சிலேடை பாடலை பாடினார்.
"எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே – முட்டமேல்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாய் அது. "
அதாவது, புலவர் கேட்டது. ஒரு கால் அடியாகவும், நான்கு இலையை கொண்டுள்ளதுமான ஆரைக் கீரையை. அதற்கு ஔவியாரின் பதிலில்,
தமிழில் "அ" என்ற எழுத்து "எட்டு" என்ற எண்ணை குறிக்கும். அதேபோல் "வ" என்பது கால் பங்கைக் (1/4) குறிக்கும். அப்படியானால் "எட்டேகால்" என்பது "அவ" என்றாகிறது. முதல் சொற்றொடர் "அவ லட்சணமே" என்று பொருள் தருகிறது.
எமன் ஏறிவரும் வாகனமாகிய எருமைக் கடாவே! அளவு கடந்த ஒழுங்கீனமான, மூதேவியைத் தாங்கி வரும் வாகனமாகிய கழுதையே! மேலே கூரையில்லாத குட்டிச் சுவரே! குரங்கே, அது ஆரைக்கீரையடா நீ போட்ட பிசியின் (நொடி அல்லது விடுகதை) விடை

பூசணிக்காயை உடைக்காமல், அதிலுள்ள விதைகளின் எண்ணிக்கையை காணவும் இந்த கணக்கதிகாரத்தில் ஒரு பாடல் உள்ளது.
"கீற்றெண்ணி முத்தித்துத் கீழாறினால் மாறி
வேற்றையஞ்சு தன்னில் மிகப்பெருக்கிப் பார்த்ததிலே
பாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும்
பூசணிக்காய் தோறும் புகல்"
ஒரு பூசணிக்காயின் கீற்றுகளை எண்ணிக்கொண்டு அதை மூன்று, ஆறு, ஐந்து இவற்றால் பெருக்கி வரும் விடையை பாதியாக்கி மீண்டும் மூன்றால் பெருக்கினால் வருவது விதைகளின் எண்ணிக்கையாகும்.
அதாவது, கீற்றுகளின் எண்ணிக்கை = X என்க.
இதை மூன்று, ஆறு, ஐந்து ஆகியவற்றால் பெருக்க. 3*6*5*X = 90X ஆகிறது. இதை பாதியாக்கினால் 45X ஆகிறது. பின்னர் மூன்றால் பெருக்க 135X ஆகிறது. இதை சுலபமாக சொல்வதென்றால் கீற்றுகளின் எண்ணிக்கையை 135 ஆல் பெருக்கினால் விதைகளின் எண்ணிக்கை கிடைக்கும்.

உங்கள் வாழ்க்கைத் துணையின் எண் என்ன? எந்த தேதிகளில் திருமணம் செய்துகொள்ளலாம்

உங்கள் வாழ்க்கைத் துணையின் எண் என்ன? எந்த தேதிகளில் திருமணம் செய்துகொள்ளலாம்..???

எண்ஜோதிடப்படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான உங்கள் வாழ்க்கைத் துணையின் எண் என்ன? எந்த தேதிகளில் திருமணம் செய்துகொள்ளலாம்..?

1,10,19,28 ம் திகதியில் பிறந்தோர்

திருமணம் இவர்கள் 3, 5, 6 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களையும் மணந்து கொள்ளலாம். 4, 8 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களையும் மணந்து கொள்ளலாம். 1ம் எண்காரர்களை (பெண்கள்) தவிர்க்க வேண்டும். காரண்ம 1 எண் சூரியன் (ஆண்) அடுத்தவர்க்கும் இதே சூரியன்(பெண்) அதிபதியாக வரும்போது அங்குக் கௌரவப் பிரச்சினைகளும் குடும்ப அன்யோன்ய குறைவும் ஏற்படும். திருமண தேதி 1, 10, 19, 28 தேதிகளும், 6, 15, 24 தேதிகளும் கூட்டு எண் 1 அல்லது 6 வரும் தேதிகளிலும் திருமணம் செய்ய வேண்டும்.

2,11,20,29 ம் திகதியில் பிறந்தோர்

இவர்களின் திருமணத்திற்கு 1, 3, 5, 6 ஆகிய எண்களில் பிறந்த பெண்கள் ஏற்றவர்கள். இருப்பினும் 7ந் தேதி பிறந்த பெண்ணே (பிறவி எண் (அ) கூட்டு எண்) மிகவும் சிறந்தவள். ஆனால் 8 அல்லது 9 எண் உடைய பெண்களை மட்டும் மணக்கவே கூடாது. பின்பு வாழ்க்கையே நரகமாகிவிடும். 1ம் எண் பிறந்த பெண்ணும், இவர்களை அடக்கி ஆட்கொள்வாள். நல்ல வழித்துணையாக அமைவாள். எனவே மணம் புரிந்து கொள்ளலாம். இவர்கள் தங்களது திருமணங்களை 1, 10, 19, 28, 6, 15, 24, 7, 16 மற்றும் 25 தேதிகளும், மற்றும் 1, 6, 7 எண் கூட்டு எண்களாக வரும் தினங்களிலும் செய்து கொள்ள வேண்டும்.

3,12,21,30 ம் திகதியில் பிறந்தோர்

இவர்கள் 3, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களைத் திருமணம் செய்து (பிறந்த எண் அல்லது விதி எண்) கொண்டால், வாழ்க்கைப் பயணம், இனிமையாக இருக்கும். 2 எண்காரர்களையும் மணந்து கொள்ளலாம். இவர்களை அனுசரித்துப் போவார்கள்.

4,13,22,31 ம் திகதியில் பிறந்தோர்

இவர்கள் 1, 8 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களை மணந்து கொண்டால் (பிறவி எண் மற்றும் கூட்டு எண்) நல்ல திருமண வாழ்க்கை அமையும். 5 அல்லது 6 எண்களின் பிறந்த பெண்களும் இவர்களுக்கு நன்மையே செய்வார்கள். இருப்பினும் 4&ம் தேதிகளில் பிறந்த ஆண்கள், 6&ஆம் எண்ணில் பிறந்தவர்களுடன் திருமணம் செய்து கொண்டால் அவர்களது பொருளாதார வசதிகள் முன்னேற்றமடையும். இவர்கள் தங்களுடைய திருமணத்தை 1 அல்லது 6 எண்ணாக வரும் தேதிகளில் (தேதி எண் அல்லது கூட்டு எண்) வைத்துக் கொண்டால், திருமண வாழ்வின் இன்பத்தை அடையலாம்.

6,15,24 ம் திகதியில் பிறந்தோர்

இவர்களுக்கு 6, 9 எண்களில் பிறந்த பெண்களினால் நல்ல திருமண வாழ்க்கை அமையும். இவர்களின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியும்! 1, 4, 5 ஆகிய எண்களில் பிறந்தோர்களைத் தவிர்த்துவிட வேண்டும். 3ம் எண்காரர்களை மட்டும் மணக்கக்கூடாது. மேலும் திருமண 1, 10, 19, 28, 6, 15, 24, 18, 27 ஆகிய தேதிகளிலும், கூட்டு எண் 1, 6, 9 வரும் தேதிகளிலும் செய்து கொண்டால் மிக்க நன்மை தரும்.7,16,25 ம் திகதியில் பிறந்தோர்

7,16,25 ம் திகதியில் பிறந்தோர்

இவர்கள் 1, 2, 5, 6 ஆகிய எண்களில் பிறந்தவர்களை மணந்து கொண்டால் நல்ல திருமண வாழ்க்கை அமையும். குறிப்பாக 2, 1 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களால் மிகவும் இனிய இல்லறம் அமையும். 8&ந்தேதி பிறந்தவர்களை மணந்து கொண்டால், இல்வாழ்க்கையே கசந்துவிடும். திருமணம் செய்து கொள்ளும் நாட்களில் எண்கள் 1, 2, 6 வருவது சிறந்தது! 9ம் எண் நடுத்தரமானதுதான்.

இவர்கள் 1, 4 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களை மணந்து கொள்ளலாம். 8&ம் எண்வரும் பெண்ணை மட்டும் திருமணம் செய்யக்கூடாது! 2, 7 வரும் பெண்களைத் தவிர்த்துவிட வேண்டும். 9ம் எண் பெண்கள் இவர்களை அடக்கி ஆள நினைப்பார்கள். திருமணம் செய்யும் நாளின் கூட்டு எண் 1, 6 வந்தால் மிகவும் நல்லது.

9,18,27 ம் திகதியில் பிறந்தோர்

இவர்கள் தாம்பத்தியத்தில் மகுந்த விருப்பமும், வேகமும் உடையவர்கள். தங்களது நட்பு எண்களான 3, 5, 6, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களை (பிறவி எண், கூட்டு எண்) மணந்து கொண்டால், இவர்களுக்கு ஆனந்தமான திருமண வாழ்க்கை அமையும். குழந்தை பாக்கியம் இவர்களுக்கு உண்டு! ஆண் குழந்தை நிச்சயம் ஏற்படும். 2, 11, 20, 29, 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களையும், கூட்டு எண் 2, 8 வரும் பெண்களையும் திருமணம் செய்யக்கூடாது! திருமண வாழ்க்கையே கசந்துவிடும். சில அன்பர்கள் மனைவியின் கொடுமையால் மனைவியை விட்டு ஓடத் துணிந்து விடுவார்கள். திருமண நாளின் எண்கள் 3, 6, 9, 1 ஆகியவை வந்தால், குடும்ப வாழ்க்கை நன்கு அமையும்.

தாலி கட்டுவது ஏன்

                 தாலி கட்டுவது ஏன்...?

 

தமிழர்களின் திருமண சடங்குகளில் செய்யப்படும் ஒவ்வொரு காரியங்களுக்கும் வலுவான காரணங்கள் உண்டு உதாரணமாக அம்மி மித்திப்பது நான் கற்பு தன்மையில் அம்மியை போல் அதாவது கல்லை போல் உறுதியாக இருப்பேன் என்றும் அருந்ததி பார்ப்பது பகலில் நட்சத்திரத்தை பார்ப்பதற்கு எவ்வளவு விழிப்புணர்வு வேண்டுமோ அதே போன்று விழிப்புணர்வோடு என் குடும்ப கெளரவத்தை காப்பாற்றவும் இருப்பேன் என்றும் பொருளாகும்

ிருமண சடங்கில் அக்னி வளர்ப்பது திருமணம் முடித்து கொள்ளும் நாம் இருவரும் ஒருவர்க்கொருவர் விசுவாசமாகவும் அன்யோன்யமாகவும் இருப்போம் உன்னை அறியாமல் நானும் என்னை அறியாமல் நீயும் தவறுகள் செய்தால் இந்த நெருப்பு நம் இருவரையும் சுடட்டும் இருவரின் மனசாட்சியையும் சுட்டு பொசுக்கட்டும் என்பதாகும்

அதே போன்ற அர்த்தம் தான் கல்யாண வீட்டில் வாழை மரம் கட்டுவதில் இருக்கிறது வாழை மரம் வளர்ந்து குலைதள்ளி தனது ஆயுளை முடித்து கொள்ளவேண்டிய நிலைக்கு வந்தாலும் கூட அடுத்ததாக பலன் தருவதற்கு தனது வாரிசை விட்டு செல்லுமே அல்லாது தன்னோடு பலனை முடித்து கொள்ளாது எனவே திருமண தம்பதியரான நீங்கள் இருவரும் இந்த சமூதாயம் வளர வாழையடி வாழையாக வாரிசுகளை தந்து உதவ வேண்டும் என்பதே வாழைமரம் கட்டுவதின் ரகசியமாகும்.

உலக முழுவதும் உள்ள திருமண சடங்கு முறையில் திருமணம் ஆனதற்கான அடையாள சின்னங்களை அணிந்து கொள்வது முறையாகவே இருந்து வருகிறது அதாவது மனித திருமணங்கள் அனைத்துமே எதோ ஒருவகையில் நான் குடும்பஸ்தன் என்பதை காட்ட தனிமுத்திரை இடப்படுவதாகவே இருக்கிறது. அப்படி உலகம் தழுவிய வழக்கங்களில் ஒன்று தான் தாலிகட்டும் பழக்கமாகும் சங்ககாலத்தில் தாலி என்ற வார்த்தை இலக்கியங்களில் அதிகமாக பயன்பாட்டில் இல்லை என்பதற்காக பழங்கால தமிழன் தாலி கட்டாமல் வாழ்ந்தான் என்று சொல்வதற்கு இல்லை

தாலி என்ற வார்த்தை தான் இல்லையே தவிர இதே பொருளை கொண்ட மங்கலநாண் என்ற வார்த்தை இலக்கியங்கள் பலவற்றில் காணப்படுகிறது. ஒரு காலத்தில் அரசியல் கூட்டங்களில் சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகி திருமண சடங்கில் இளங்கோவடிகள் தாலிகட்டுவதை பற்றி பேசவே இல்லை அதனால் தமிழர் திருமணங்களில் தாலியே இல்லை என்று முழங்கி கொண்டு அலைந்தனர். ஆனால் அவர்களே மங்கள் வாழ்த்து படலத்தில் மங்கல அணி என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்றே அறியாமல் போய்விட்டனர்

“முரசியம்பின, முருடதிர்ந்தன, முறையெழுந்தன பணிலம்,வெண்குடை
அரசெழுந்ததோர் படியெழுந்தன, அகலுள்மங்கல அணியெழுந்தது”'''

என்று இளங்கோ அடிகள் மிக அழகாக சொல்கிறார். அதாவது திருமண நேரத்தில் முரசுகள் ஒலிக்கின்றன வெண்குடை உயர்கிறது வாழ்த்துக்கள் முழங்குகின்றன மங்கல அணி எழுத்து போல் பதிகிறது என்பது இதன் பொருளாகும்

ஆண் பெண்ணை அடிமையாக்குவதோ பெண் ஆணை அடிமையாக்குவதோ சமூதாய பிரச்சனையே தவிர அது சடங்கு பிரச்சனை அல்ல தமிழர் சடங்கில் எந்த இடத்திலாவது நீ தாலி அணிந்திருக்கிறாய் அதனால் எனக்கு நீ அடிமை என்ற வாசகம் கிடையவே கிடையாது.

உணமையாக தாலி அணிவதன் பொருள் ஆண்மகனான நான் உன் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவிக்கும் இந்த நேரம் முதல் உன்னை பாதுகாக்கும் காவலனாக இருப்பேன் இந்த மாங்கல்யத்தில் நான் போடும் முதல் முடிச்சி நீ தெய்வத்திற்கும் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டவள் என்பதை காட்டட்டும் இரண்டாவது முடிச்சி குலபெருமையை நீ பாதுகாப்பாய் என்பதை காட்டட்டும் மூன்றாவது முடிச்சி குலவாரிசுகளை முன்னின்று காப்பவள் நீயென்று காட்டட்டும் என்பதாகும்.

தமிழர்களின் திருமண சடங்குகள் அனைத்துமே ஆணையும் பெண்ணையும் சமமாக பாவித்தே இருக்கிறதே தவிர ஏற்ற தாழ்வு கற்பிக்கும் படி எதுவும் கிடையாது . உண்மைகளை கண்டறிய வேண்டியது தான் உயர்ந்த மனிதர்களின் உன்னத நோக்கமாகும்.

நீங்கள் எப்போதும் உயர்ந்ததையே பாருங்கள் உயர்ந்ததாக சிந்தியுங்கள் உங்கள் வாழ்வும் உயர்ந்ததாக இருக்கும் அதை விட்டு விட்டு ஆகயாத்தில் பறக்கின்ற கழுகு தான் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் அதை மறந்து கீழே பூமியில் கிடக்கும் அழுகிய மாமிசத்தை பார்ப்பது போல் தாழ்மையான கருத்துக்களை பார்க்காதீர்கள் தாழ்வான சிந்தனைகளை காது கொடுத்து கேட்காதிர்கள் உயர்ந்தவர்கள் எப்போதும் உயர்ந்ததையே காண்பார்கள்

தாலி



               தாலி – ஒன்பது இழைத் தத்துவம்...




“தாலி மகிமை”
இந்துக்களுக்கு மஞ்சள் நிறம் புனிதமான நிறம் என்பதால் அந்தத் திருமணப்
ரிசும் மஞ்சள் நிறத்தில் தரப்பட்டது என்று விளக்குகிறார் பாலகிருஷ்ணசாஸ்திரிகள்.
தமிழர் திருமணங்களில் ஆரம்பத்தில் தாலி இருந்ததாக, இலக்கியங்களில் குறிப்பிடப்படவில்லை. சங்க காலத்தின்போது நடந்த திருமணங்களில் புதுமணல் பரப்பி, விளக்கு ஏற்றி, வயதில் மூத்த பெண்கள், மணப்பெண்ணை நீராட்டி வாழ்த்தி அவள் விரும்பியவனுடன் அவளை ஒப்படைத்தனர். நாளடைவில் “”தாலம்” என்ற பெயர்தான் தாலியாக மாறியிருக்கிறது.  பதினோராம் நூற்றாண்டில்தான் திருமணச் சின்னம்என்ற ரீதியில் தாலி என்ற  பெயர் உபயோகப்படுத்தப்பட்டது என்கிறது உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்வெளியிட்டிருக்கும் “”தமிழர் திருமணம்” என்கிற  புத்தகம்.மாங்கல்யச் சரடானது ஒன்பது இழைகளைக் கொண்டது. ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குணங்களைக் குறிக்கிறது.

தெய்வீகக் குணம், 
தூய்மைக் குணம், 
மேன்மை, 
தொண்டு, 
தன்னடக்கம், 
ஆற்றல், 
விவேகம், 
உண்மை, 
உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுதல். 
இத்தனைக் குணங்களும் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒன்பது இழைகள் கொண்ட திருமாங்கல்யச்சரடு அணியப்படுகிறது....

‘300’ (ஆண்டுகளுக்கு முந்தைய) பருத்தி வீரர்கள்



‘300’ (ஆண்டுகளுக்கு முந்தைய) பருத்தி வீரர்கள்:



உங்களில் பெரும்பாலனவர்கள் ‘300 பருத்தி வீரர்கள்’ என்ற ஆங்கில படத்தை பார்த்திருப்பீர்கள்,அதில் வெறும் 300 வீரர்கள் கொண்ட ‘ஸ்பார்ட்டா’ நாட்டின் வீரர்கள் பலலட்சம் வீரர்களை கொண்ட பாரசீக படைகளை தலை தாழாமல் எதிர்த்து வீரத்துடன் போரிட்டு வீழ்வார்கள்.அந்த படத்தை,அவர்களின் வீரத்தை சிலாகித்து விசிலடித்து பார்த்த நமக்கு உண்மையில் நாம் யார் என்பது தெரியாது.

நம் வரலாறு,1805யில் தூக்கிலிடப்பட்ட ‘பழஸிராஜா’ முதல் விடுதலை போராட்ட வீரர் என்கிறது,1857-யில் நடந்த ‘சிப்பாய்க் கலகம்’ இந்தியாவின் முதல் விடுதலைப்போர் என்று வர்ணிக்கிறது.1840களில் போராடிய ஜான்சிராணியை முதல் விடுதலைப்போராளி என்கிறது.அவர்களின் வீரம் மறுப்பதற்கு இல்லை,ஆனால் வரலாற்றில் மறைக்கப்பட்ட ஒரு மாபெரும் சுத்த தமிழ் வீரனை இந்நாளில் நினைவு கூறாவிட்டால் மிச்சம் வாழும் மத்த தமிழர்களும் மொத்தமாய் அழிந்து போவோம்.

செப்டம்பர் 1ஆம் தேதி 1715ஆம் ஆண்டில் திருநெல்வேலி ‘நெற்கட்டும் செவ்வல்’ பாளையத்தில் பிறந்தவர் ‘பூலித்தேவன்’.இவர் ஒரு முறை புலியுடன் போரிட்டு வென்றதால் இப்பெயர் பெற்றார்,மாதம் மும்மாரி பொழிந்து ஆறு போகம் விளைந்ததால் அந்த ஊர் ‘நெற்கட்டும் செவ்வல்’ எனப்பட்டது என்பது போன்ற சுய புராணங்களை சற்று ஒதுக்கி வைத்து விட்டு இவரிடம் இருக்கும் சில மறுக்க முடியாத நன்நெறிகளை ஆராய்ந்தால் தமிழனின் மரபு மெய்சிலிர்க்க வைக்கும்.

1)தாய்மொழித் தாகம்:

அந்நாட்களில் பெரும்பாலான செப்பேடுகளில் வடமொழி சொற்கள் இடம்பெற்று இருந்தன,ஆனால் பூலித்தேவன் காலத்து செப்பேடுகளில் தூய தமிழ் சொற்கள் மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

2)தொழில்வளம் மிக்க ஆட்சி:

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்,ஆனால் இன்று விவசாயிகளின் முதுகெலும்பை உடைக்கும் அரசாங்கம் தான் நடந்து கொண்டு இருக்கிறது.ஆனால் இதை பூலித்தேவன் அன்றே உணர்ந்திருந்தார்.உக்கிரமான போரின் போதும் அவர் விவசாயிகளை போரில் ஈடுபடுத்துவதில்லை,போரை போலவே விவாசயமும் நாட்டின் வாழ்வாதார பிரச்சனை என்று நம்பினார்.குளங்களை வெட்டுவது அதில் மீன்பிடித்தல் மூலம் வரும் வருவாயை கொண்டு மேலும் ஒரு குளம் வெட்டுவது என திட்டமிட்டு செம்மையான ஆட்சி நடத்தினார்.

3)சுய ராஜ்ஜியம் எங்கள் பிறப்புரிமை:

விடுதலைப்போரில் பாலகங்காதர திலகர் ‘சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை’ என்றார்.இதை 1700களிலே பூலித்தேவன் முழங்கினார்,வரி கட்ட மறுத்தார்.இதனால் ஆற்காடு நவாப்பின் எதிர்ப்பினை சம்பாதித்தார்.கோவம் கொண்ட ஆற்காடு நவாப் நெற்கட்டும் செவ்வலை தாக்கினார்,அதில் பூலித்தேவன் வெற்றி பெற்றார்.

4)ஒரு பொது எதிரியை வீழ்த்துவதற்கு ஒன்றுசேர வேண்டும்:

ஒரு பொது எதிரியை வீழ்த்துவதற்கு போர்க்களத்தில் ஒன்றுசேர வேண்டும் என்ற எண்ணத்தைப் இந்தியாவில் முதன் முதலாக ஏற்படுத்தியவரே பூலித்தேவன் தான்.ஆற்காடு நவாப்பின் படையில் வந்த மூன்று இஸ்லாமிய தளபதிகள் முடேமியா எனும் முகம்மது மியானச், மியானோ எனும் முகம்மது பார்க்கி, நபிகான் கட்டாக் ஆகிய மூன்று தளகர்த்தர்கள் மன்னர் பூலித்தேவர் முகத்தைக்கண்டு அவரால் கவரப்பட்டு அவரது படையில் சேர்ந்து வீரப்போர் புரிந்தார்கள். 12 மாதம் கழித்து 1756 மார்ச் 21 இல் திருநெல்வேலியில் மீண்டும் போர் நடத்தி வெள்ளையரை தோற்கடித்தார்,அவ்வாறு இணைந்த நவாப்பின் தளபதிகளுக்கு பள்ளிவாசல் கட்டித் தந்தார் என்பது அவரின் சமயப் பொறையை காட்டுகிறது.

5)எதிரியை பார்க்காமல் இலக்கை பார்த்தல்:

பின் ஆற்காடு நவாப் ஆங்கிலேயரின் துணையை நாடினார்,அடுத்து புலித் தேவருக்கு எதிராக பெரும்படையுடன் போர் புரிய வந்தவன் ‘கான்சாகிப்’ இவன் யார் எனில் ஹைதர் அலியை தோற்கடித்தவன்.பின்னாளில் ஆங்கிலேயர்கள் கான்சாகிப்பை தூக்கிலிட்டனர்,அப்போது இருமுறை தூக்கிலிட்டு சாகவில்லை,இறுதியில் மூன்றாவது முறை காலில் இரும்புக்குண்டை கட்டி தூக்கிலிட்டு கொன்றனர்.அத்தகைய கான்சாகிப்பையும் அவனது பெரும்படையையும் கண்டு அஞ்சாமல் போரிட்டு அவனை வெற்றிகண்டார்.

6)தன்னலமில்லா தலைமை:

பூலித்தேவனின் படையில் வெண்ணிகாலடி,ஒண்டிவீரன் உளவாளி ஆகியோரின் வீரத்தை நம்மால் புறக்கணித்துவிட முடியாது,பூலித்தேவனின் மனைவி மக்கள் எதிரிகளால் எரித்துக் கொல்லப்பட்டனர்,அப்பொழுதும் அவர் கலங்கவில்லை,ஆனால் எதிரிகளுடன் வீரத்துடன் போரிட்டு வீழ்ந்த தன் தளபதி ஒண்டிவீரனை மடியில் கிடத்தி கதறி அழுதார் என்று வரலாறு சொல்கிறது.அவர் சாதி சமயம் கடந்து மக்கள் மீது அன்பு கொண்டார்,அவர்களும் அவர் மீது அத்துனை அன்பாக இருந்தனர்.இந்த மாண்பு இன்று மேதகு.பிரபாகரன் வரை தொடர்கிறது

7)எதிரிகள் போற்றும் வீரம்:

இறுதியில் ஆங்கிலேயரின் பெரும்படையுடன் போர்,அது ஒரு நாட்டையே பிடிக்கும் அளவான நவீன ஆயுதங்கள் உடைய படை,பூலித் தேவர் திப்பு சுல்தான் உதவியை நாடினார் அது கிடைக்காமல் போனது,தானே மோத முடிவெடுத்தார்,அந்த போரைப்பற்றி தன் புத்தகத்தில் குறிப்பிடும் ஒரு ஆங்கிலத் தளபதி,”அந்த போரில் பூலித்தேவன் படையினர் 18 அடி வேல்கம்புகளை அசாத்தியமாக பயன்படுத்தினார்கள்,அவரது வீரர்கள் தங்கள் மார்பினை வைத்து அவர்கள் கோட்டை இடியாமல் காத்தனர்,அதில் வெற்றிபெற மிகவும் சிரமப்பட்டோம்” என்கிறார்.

இறுதியில் போரில் பூலித்தேவர் படை தோற்றபின் கடைசியாக அவரைக் கைதுசெய்து கொண்டு செல்கிறபோதுதான் சங்கரன்கோவில் ஆலயத்துக்குள் நான் வழிபட்டு வருகிறேன் என்று உள்ளே போனார்.அதற்குப்பிறகு என்ன ஆனார் என்றே தெரியவில்லை. அருட்பெருஞ்சோதி மறைந்ததைப்போல சங்கரன்கோவில் கோவிலுக்குள் போனவர் திரும்பவில்லை.நேதாஜியின் மரணத்தைப்போல பூலித்தேவரின் மறைவும் இன்றுவரை மர்மமாகவே உள்ளது.

இன்று பூலித்தேவரின் பிறந்தநாள்,நாம் அவரை கொண்டாட கூட வேண்டாம்,குறைந்தபட்சம் நம் பிள்ளைகளுக்கு நமது வீர மரபுகளை சொல்லி வளர்ப்போம்,உங்கள் குழந்தைகள் 300 பருத்திவீரர்கள் படம் பார்க்கும் முன் இந்த 300 ஆண்டுகளுக்கு முந்தைய பருத்தி வீரர்களை சொல்லி கொடுங்கள்.அடுத்த தலைமுறையை சாதி சமயமற்ற வீரத்தமிழ் படையாக கட்டமைப்போம்.

கணக்கதிகாரம்


                                

                     கணக்கதிகாரம் : மன வேகம்



மன வேகத்தை அளந்த முதல் ஆய்வாளன் தமிழன் :

கணக்கதிகாரம் புத்தகம் 15 ஆம் நூற்றாண்டில் காரி என்பவரால் தோன்றிய நூல் இதை தமிழரின் கணித கோட்பாடுகள் என்றே உரைக்கலாம்.

இது தற்கால கணித முறைகளில் இருந்து முழுவதும் மாறுபட்டு விளக்கப்பட்டுள்ளது . தூரம், காலம், நேரம், எடை போன்ற அணைத்து அளவுகளும் மற்ற பொருட்களுடன் ஒப்பிட்டு அனைவருக்கும் புரியும்படி விளக்கப்பட்டுள்ளது .

இதில் நீட்டலளவை (தூரத்தை) அளக்கும் ஒரு அட்டவனையை கண்டேன், அதில் "யோசனை" என்ற ஒரு அளவை காணமுடிகிறது . அதைப் பற்றிச் சற்றே யோசித்த வாரே இருந்தேன். அந்த யோசனை அளவை பற்றி ஒரு யோசனை கிட்டியது. இந்த கணக்கதிகரத்தில் அணைத்து அளவுகளும் ஒரு புற பொருளுடன் ஒப்பிட்டுக் கூறுகின்றனர். ஆக, யோசனை என்று ஒரு அளவு எப்படி இருக்கும் என்று கணித்து பார்க்க எண்ணினேன்.

1850 ஆம் வருடம் "ஹெர்மன் வோன் ஹெல்ம்வோல்ட்ச" ( Hermann von Helmholtz ) என்ற புகழ் பெற்ற அறிவியலாளர் ஒரு தவளையின் கால்களில் மின்சாரத்தை அளக்கும் கருவியை பொருத்தி அதன் மனதின் வேகத்தை அளக்க முடியும் என்று நிருபித்தார்.

அதற்கு பின்பு வந்தவர்கள் அதன் சரியான மனதின் வேகத்தின் அளவை கண்டுபிடித்தனர் (Speed of Thought). அவை 50 மீட்டர் /நொடி என்று அளவிட பட்டது/ எனினும் வேகமாக கடக்கும் தசைகள் இதே தகவலை 100 மீட்டர் /நொடி என்ற அளவிலும் கடக்குமாம்.

சரி இவை ஒரு பக்கம் இருக்க அந்த யோசனை என்ற அளவையும் தற்போதிய கணித அளவையும் ஒப்பிட்டுப் பாப்போம்.

1 மொழம் = 46.6666 சென்டிமீட்டர் (Cm )
1 சிறுகோல் = 559.9992 சென்டிமீட்டர் (Cm )
1 கூப்பிடுதூரம் = 279999.6 சென்டிமீட்டர் (Cm )
1 காதம் = 1119998.4 சென்டிமீட்டர் (Cm )
1 யோசனை = 4479993.6 சென்டிமீட்டர் (Cm )

சென்டிமீட்டரை கிலோமீட்டராக மாற்றினால்

1 யோசனை = 44.799936 கிலோமீட்டர் (இது காலத்தை குறிக்காத அளவு)


இப்பொழுது அவர்கள் கூறியபடி 50 மீட்டர்/நொடி என்று கால அளவுடன் கணக்கிட்டால்

50 மீட்டர்/நொடி என்பதை கிலோமீட்டர் கணக்கில் பார்த்தல்

180 km/hr

எனினும் இவர்கள் அறிவித்த இந்த அளவு உணர்ந்து, சிந்தித்து, முடிவெடுத்து, செயல்படுதல் என்ற நான்கு செயல்பாட்டை ஒருகிணைந்த அளவே. இங்கு யோசனை என்ற அளவு சிந்தித்தல் என்ற பகுதியில் வரும். ஆகவே,

180 / 4 = 45 கிலோமீட்டர் / hr என்றே வருகிறது .

45 கிலோமீட்டர் / hr = 1 யோசனை

எனவே காலத்தைக் குறிக்காத ஒரு யோசனையின் அளவு இவர்கள் அறிவித்த அளவுடன் பொருந்துகிறது.

இதே போல்,

நூற்று ஐம்பதாயிரம் யோசனை = 1 கதிரவநியங்குகிற மட்டு (6719990.4 km)
இரண்டு கதிரவநியங்குகிற மட்டு = 1 விண்மீன் மண்டலம் (13439980.8 Km )

Thursday 9 July 2015

கிராமங்களை அழிக்கும் துணிகர கனிமக் கொள்ளை


      கிராமங்களை அழிக்கும் துணிகர கனிமக் கொள்ளை



தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டக் கடலோர பகுதிகளில் 25 ஆண்டுகளாக நடந்துவந்த கார்னெட் கொள்ளைக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது தமிழக அரசு. கிரானைட் கிங் பி.ஆர்.பி. மீது வீசப்பட்ட ஏவுகணைகளைபோல இதுவும் வீணாகி விடக்கூடாது என்று கடவுளை வேண்டிக் கொண்டிருக்கிறார்கள் கிழக்கு கடற்கரையின் தென் பகுதி மக்கள்.
தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் கார்னெட் உள்ளிட்ட கனிமவள வியாபாரம் தொடக்கத்திலிருந்தே வைகுண்டராஜன் கையில் சிக்கிக் கொண்டது. இந்த மாவட்டங்களில், வி.வி.மினரல்ஸ், பீச் மினரல்ஸ் , இண்டஸ்ட்ரியல் மினரல் நிறுவனங்கள் மற்றும் எஸ்.டி.எஸ்.மாணிக்கம், தயா தேவதாஸ், நாகராஜன் ஆகியோரின் நிறுவனங்கள் கார்னெட் ஏற்றுமதியில் ஏகபோகத்தில் உள்ளன. இதில், வி.வி., பீச் , இண்டஸ்ட்ரியல் மினரல் நிறுவனங்கள் வைகுண்டராஜன் மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமானவை. கிரானைட் வியாபாரத்தில் பி.ஆர்.பி. என்றால் கார்னெட் வியாபாரத்தில் வைகுண்டராஜன். இவர் ராஜாவுக்கெல்லாம் ராஜா.
1974-ல் கனிமவளத்துறை முன்னாள் அதிகாரி செல்வராஜும், தூத்துக்குடி மணல் மாணிக்கமும் இணைந்து முதலில் கார்னெட் மணல் நிறுவனத்தை தொடங்கினர். ஒருகட்டத்தில் செல்வராஜ் துரத்தப்பட்டார். அவரை அழைத்து வந்து கார்னெட் தொழிலை தொடங்கினார் வைகுண்டராஜன். செல்வராஜ் 150 ரூபாய்க்கு எடுத்துக் கொடுத்த கார்னெட் உரிமம்தான் இன்றைக்கு வைகுண்டராஜனை பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபராக்கி உள்ளது.
கனிம வளத்தை எப்படிச் சுரண்டுகின்றன கார்னெட் நிறுவனங்கள்..?
தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட கடற்கரையில் எடுக்கப்படும் கார்னெட் உள்ளிட்ட கனிமங்களை கொரியா, அபுதாபி, ஜெர்மனி, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். இதில் வைகுண்டராஜன் தரப்புக்கு தூத்துக்குடி முதல் கன்னியாகுமரி வரையிலான பகுதிகளில் சுமார் 15 கி.மீ. நீளத்திற்கான கடற்கரை ஏரியாவை அரசே 30 ஆண்டுகளுக்கு சொற்பமான குத்தகைக்கு தந்திருக்கிறது. உதாரணத்திற்கு இருக்கன்துறை கிராமத்தில் 100 ஏக்கர் அரசு நிலத்தை ஆண்டுக்கு வெறும் ரூ.16.47-க்கு தந்திருக்கிறார்கள். இதுதவிர 2300 ஏக்கருக்கான பட்டா நிலங்களையும் தங்கள் வசம் வைத்திருப்பதாக அந்த நிறுவனமே தனது இணைய தளத்தில் விவரம் தந்திருக்கிறது. தூத்துக்குடி - கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை சாலையில் பல்வேறு இடங்களில் கார்னெட் மணல் நிறுவனத்தினர் கடலை ஒட்டியே தொழிற்சாலைகள் அமைத்துள்ளனர். அதற்குள்ளே என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாபடி பாதுகாப்பு அரண்களை பலப்படுத்தி இருக்கிறார்கள்.
வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜன் வளர்ந்த கதை...
நெல்லை மாவட்டம், திசையன்விளை - கீரைக்காரன்தட்டு கிராமத்தைச் சேர்ந்த வைகுண்டராஜன் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆரம்பத்தில் அரிசி ஆலை, லாரிகள் வைத்து சாதாரணமாகத் தொழில் செய்தவர். கனிம தொழிலில் கால்பதித்த பிறகுதான் இந்திய பணக்காரர்களில் ஒருவரானார். இவரது வி.வி.மினரல்ஸ் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளதோடு, உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
மிகவும் எளிமையானவர், காலில் செருப்புக்கூட அணிய மாட்டார், தனக்கு உதவியவர்களுக்கு என்ன வேண்டுமானாலும் செய்வார் - இதெல்லாம் வைகுண்டராஜனுக்கு வெளியில் இருக்கும் புகழாரங்கள். ஆனால், உள்ளுக்குள் அவருக்கு இன்னொரு முகமும் உண்டு. பத்து வருடங்களுக்கு முன்பு, சாத்தான் குளம், திசையன்விளை பகுதிகளில் வரவிருந்த டாடா-வின் டைட்டானியத் தொழிற்சாலையை தடுத்து நிறுத்தியபோது வைகுண்டத்தின் தலையும் உருண்டது. அனைத்து அரசியல் கட்சிகளிலும் அமைப்புகளிலும் அவருக்கு நண்பர்கள் உண்டு. வருவாய்த்துறை செயலர் ககன்தீப்சிங் பேடியிடம் கார்னெட் அதிபர்களுக்கு ஆதரவாக இந்து முன்னணியினரும், தென்னிந்திய திருச்சபையினரும் மனு கொடுத்ததே இதற்கு சாட்சி!
கடலோர மக்களின் போராட்ட வரலாறு...
கார்னெட் கொள்ளைக்கு எதிராக சுமார் 20 ஆண்டுகளாக அந்த ஏரியா மக்கள் குறிப்பாக மீனவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனாலும், பணபலம், அரசியல் பலம் இவைகளுக்கு முன்பாக அவர்களால் ஜெயிக்க முடியவில்லை. கார்னெட் நிறுவனங்களுக்கு காவடி தூக்கும் காவல்துறை அதிகாரிகளும் மாவட்ட அதிகாரிகளும் வாழ்வாதாரத்திற்காக போராடும் மக்களை அடக்கி ஒடுக்கி அவர்கள் மீது வழக்குகளை பாய்ச்சியதுதான் கடந்த கால வரலாறு.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், முத்தையாபுரம், பெரியசாமிபுரம், மேல்மாந்தை கடற்பகுதி. இவை மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக பகுதிக்குள் வருகின்றன. அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் உள்ள பகுதி இது. பாதுகாக்கப்பட்ட இந்தப் பகுதியில் பல கிலோ மீட்டர்களுக்கு கடற்கரையை வெட்டி மணலை கடத்தி இருக்கிறார்கள். சில இடங்களில் கடலுக்கு உள்ளேயும் போய்விட்டார்கள். இங்கிருந்த சவுக்கு மற்றும் பனை மரங்களை பிடுங்கி எடுத்து இஷ்டத்திற்கு மணலை சுரண்டி இருக்கிறார்கள்.
பெரியதாழை பகுதியில் கடலில் கழிவு மண்ணை கொட்டி பாலைவனமாக்கி இருக்கிறார்கள். மீனவர்கள் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட தூண்டில் வளைவுகளும் முழுவதுமாய் நாசம்! நெல்லை மாவட்டம் உவரியில் பசுமை தீர்ப்பாயத்தின் தடையையும் மீறி இஷ்டத்திற்கு தாது மணலை சுரண்டிவிட்டு, அந்தப் பள்ளத்தை கழிவு மண்ணை கொட்டி மூடி வைத்திருக்கிறார்கள். இங்கேயும் கடலுக்குள் மணலை அள்ளி இருக்கிறார்கள்.
பாதிக்கப்பட்டவர்கள் என்ன சொல்கிறார்கள்...
வடக்கில் பாம்பன் தீவு முதல் தெற்கே தூத்துக்குடி வரை 21 தீவுகள் உள்ளன. மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகத்தின் கீழ் வரும் இப்பகுதியைப் பாதுகாக்க ஆண்டுதோறும் நிதி ஒதுக்கப்படுகிறது. பாதுகாக்கப்பட்ட இந்தப் பகுதியில்தான் இத்தனை அத்துமீறல்கள் நடந்திருக்கு. கடல்சார் உயிரினங்களைப் பெருக்கம் செய்யும், சுனாமியின் வேகத்தை தடுத்து மக்களைக் காக்கும், சதுப்பு நிலக்காடுகளை அழிச்சிட்டாங்க" என்கிறார் தூத்துக்குடிமாவட்டம் புதுக்கோட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலரான காந்திமதிநாதன் கீழவைப்பாறு கிராமத்தைச் சோ்ந்த அந்தோணிசாமி, "கடலுக்குள்ள கழிவு மணலை கொண்டாந்து கொட்டுறதால மீன் பாடே குறைஞ்சு போச்சு. சுனாமியை தடுக்குறதுக்காக தொண்டு நிறுவனங்கள் கடலோரமா நட்டுக்குடுத்த கண்ணா செடிகளையும் வனத் துறை நட்ட சவுக்கு மரங்களையும் நாசம் பண்ணிட்டாங்க. கார்னெட்டை பிரிக்கிறதுக்காக கெமிக்கல் கலந்த தண்ணியைப் பயன்படுத்துறாங்க. அந்த கழிவுநீரால நிலத்தடி நீரும் கெட்டுப் போச்சு. இதனால, எங்க ஊருக்குள்ள புற்று நோய், கல் அடைப்பு, கிட்னி பிரச்னைகளால் பல பேர் பாதிக்கப்பட்டு, இதுவரை ஐம்பது பேர் வரைக்கும் போய் சேர்ந்துட்டாங்க" என்கிறார்.
பெரியதாழை ஆல்ஸ்டன், அமலன் ஆகியோர் கூட்டாக, "கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஆட்சியரிடம் மனு குடுத்தோம். அவரு சோதனைக்கு வந்தப்ப, மத்த அதிகாரிகள் அவரை, பாதிப்பு இல்லாத வேற பகுதிக்கு கூட்டிட்டு போனாங்க. நாங்கதான் அவரை இங்க கூட்டிட்டு வந்து காட்டுனோம். ஆட்சியரே மிரண்டு போயிட்டாரு. இப்ப, இந்தப் பகுதியில கழிவு மணலைக் கொண்டாந்து கொட்டி கற்றாழை செடிகளை கொண்டாந்து நட்டு, இயற்கையா இருக்காப்புல செட்-அப் பண்ணிட்டாங்க. இந்த தகவல்களை எல்லாம் ககன் தீப்சிங் பேடியிடம் சொல்லி இருக்கிறோம். கடலை ஒட்டிய உள்பகுதியில் கனிமங்கள் உள்ள செம்மண்ணை வெட்டி எடுக்காங்க. அதை சுத்திகரித்து வெளியாகும் கழிவுநீரை கடல்ல விடுறதால, கடல் நீரே சிவப்பாகி, மீன்களும் அழிஞ்சு போகுது. மொத்தத்துல, அவங்க கொழிக்கிறதுக்காக எங்களை ஒழிக்கப் பாக்காங்க" என்றார்கள்.
தங்களோட சப்போர்ட்டுக்கும் ஆளுங்க வேணும்கிறதுக்காக கார்னெட் முதலாளிகள் பல கிராமங்களை ரெண்டுபடுத்தி வைச்சிருக்காங்க. தூத்துக்குடியில் ககன்தீப்சிங் பேடிக்கிட்ட நாங்க மனு குடுக்க போயிருந்தப்பக் கூட, தலைக்கு ஆயிரமும் பிரியாணி பொட்டலமும் குடுத்து ஆட்களை கூட்டி வந்திருந்தாங்க. கம்பெனிக்கு ஆதரவாக பிஷப் ஒருத்தரும் வந்திருந்தாரு. தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலில் கார்னெட் முதலாளிகளால் பதவிக்கு வந்தவர்களும் வந்துருந்தாங்க" என்று வேதனையை கொட்டினார்.
திருநெல்வேலி மாவட்ட கடலோர கிராம கமிட்டிகளின் கூட்டமைப்பு தலைவர் ஜோசப், ’சின்ன வயசுல, செருப்பில்லாமல் ஊரில் நடப்போம். இப்ப நடந்தா கால் பொத்துடும். இயற்கையான மணலை சூடுபடுத்தினால் குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேல் போகாது. எவ்வளவு சூடுபடுத்தினாலும் அதே வெப்பநிலையில் இருக்கும். கார்னெட் சுரண்டலால் மணலின் இயற்கைத் தன்மை மாற்றப்பட்டதால், கதிரியக்கத் தன்மை உருவாகி மணலின் வெப்பம் பல மடங்கு அதிகரிச்சிருச்சு" என்றார்.
வேளாண் விஞ்ஞானி ஆர்.எஸ். லால்மோகன், "மோனோசைட்டை தனியார் வைத்திருக்கக் கூடாது. அது சட்டவிரோதம், சமூகவிரோத செயல். மோனோசைட்டில் தோரியம் இருப்பதால் இதற்கு சர்வதேச சந்தையில் நல்ல விலை கொடுக்கிறார்கள். இதனால், இங்கிருந்து சட்டவிரோதமாக கன்டெய்னர்கள் மூலம் மோனோசைட்டை கடத்துறாங்க.
இங்குள்ள கார்னெட் கம்பெனிகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு எந்தவித தடுப்புக் கவசங்களும் இல்லை. இதனால் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக செத்துட்டு இருக்காங்க. இப்பகுதியில் கதிர்வீச்சு இருக்கதால கழலைக் கட்டி, இதய நோய்கள், வால்வு பிரச்னைகள் வரும். கேன்சர் வரலாம். நாங்கள் மேற்கொண்ட ஒரு ஆய்வில், குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் 31 பேரும் , தோவாளையில் 12 பேரும், நெல்லை மாவட்டம் கூத்தன்குழியில் 42 பேரும் மூளை குன்றிய பிள்ளைகள் இருக்கிறார்கள். கதிரியக்கமானது மரபணுக்களைத் தாக்கி, அடுத்த தலைமுறைக்கும் புற்றுநோயைக் கடத்தும். இது தொடர்பாக பல ஆய்வுகள் நடந்திருக்கின்றன. ஆனால், பயத்தால் முடிவுகளை வெளியிடாமல் மறைத்து வைத்திருக்கிறார்கள்" என்கிறார்.
முன்னாள் அரசுச் செயலரும், நெல்லை மாவட்ட முன்னாள் ஆட்சியருமான சுந்தரம், "அந்த முக்கிய நிறுவனம் பல ஆயிரம் கோடிக்கு கார்னெட் மணலை சட்டவிரோதமாக வெட்டிக் கடத்தி இருக்கிறது. அதுகுறித்த ஆவணங்களை நான் திரட்டினேன். மூன்று மாவட்டங்களிலும் நடந்த கடற்கரை மணற்கொள்ளை குறித்து அனைத்து துறை அதிகாரிகளுக்கும் 1500-க்கும் மேற்பட்ட புகார்களை அளித்தேன். தமிழக அரசின் தலைமைச் செயலர் தொழில்துறை செயலர் உள்ளிட்டவர்களுக்கும் மனு அனுப்பினேன் எந்த நடவடிக்கையும் இல்லை.
அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.96,120 கோடி
2011 மே மாதம் வரை தமிழ்நாட்டில் 43 உரிமங்கள் கடற்கரை மணல் எடுக்க வழங்கப்பட்டிருந்தன. அவற்றில் 36 வைகுண்டராஜனின் நிறுவனங்கள். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, மேலும் எட்டு உரிமங்களை வைகுண்டராஜனுக்கு கொடுத்தார்கள். 1999-ம் ஆண்டிலிருந்து அந்த முக்கிய நிறுவனத்தால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 96,120 கோடி ரூபாய். கார்னெட் நிறுவனங்களுக்காக அரசு புறம்போக்கு நிலங்கள் மிகவும் சொற்பமான தொகைக்கு 30 ஆண்டுகால லீசுக்கு விடப்பட்டுள்ளன. 1996ல் நெல்லை மாவட்டம் , இருக்கன் துறை கிராமத்தில் 34.35 ஹெக்டோ் கடற்கரை புறம்போக்கு நிலத்தை ஆண்டுக்கு வெறும் 16.74 ரூபாய்க்கு வி.வி.மினரல்ஸ் நிறுவனத்திற்கு வழங்கி இருக்கிறார்கள். இப்படி பல இடங்களில் அரசின் கடற்கரை புறம்போக்கு நிலங்கள் மணல் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளன.
2007-ம் ஆண்டுதான் இல்மனைட், ரூடைல், சிர்கான் போன்ற அரிய கனிமங்களுக்கு அணுசக்தி சட்டம், 1962-லிருந்து விலக்களிக்கப்பட்டது. ஆனால் இவற்றை, 1998-லிருந்து ஏற்றுமதி செய்வதாக அந்த முக்கிய நிறுவனம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. இதற்கான வரியையும் அந்த நிறுவனம் செலுத்தவில்லை" என்றார்.
விதிமீறல்கள் என்னென்ன...
கார்னெட் மணலை சுத்திகரிக்கும்போது கிடைக்கும் மோனோசைட்டை திரும்ப அரசிடம் ஒப்படைக்கவில்லை. இது அணு சக்தி சட்டம் 1962 ற்கு முரணானது . மோனோசைட் போன்ற கதிர்வீச்சு கனிமங்களைப் பிரித்தெடுக்க அணுசக்தித் துறையிடம் முறையான அனுமதி பெறவில்லை. இதுவும் அணுசக்தி சட்டம் 1984 ற்கு முரணானது.
மோனோசைட்டில் தோரியம் உள்ளதால் மோனோசைட் கையாளப்பட்டது தொடர்பான ஆண்டறிக்கை அணுசக்தித் துறைக்கு ஒவ்வோராண்டும் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் இவ்வறிக்கை கொடுக்கப்படவில்லை என்கிறார்கள். மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் கார்னெட் நிறுவனங்கள் முறையான அனுமதி பெறவில்லை. கார்னெட் ஏற்றுமதிக்கு முன்பாக அணுசக்தித் துறையின் கனிமப்பிரிவிடம் மாதிரிகளை அனுப்பி மோனோசைட் இல்லை என்ற சான்றிதழ் பெற வேண்டும். அவ்வாறு பெறப்படவில்லை. பாதுகாக்கப்பட்ட நிலங்கள், காடுகளில் கனிமங்கள் எடுப்பது சட்டப்படி குற்றம். கார்னெட் நிறுவனங்கள் இந்த குற்றத்தைத் தெரிந்தே செய்திருக்கின்றன.
தமிழ்நாடு சிறு கனிம சட்டம் 1959 விதி 36(C)-ன்படி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பின்றி, தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி தொழில் செய்ய வேண்டும். கார்னெட் நிறுவனங்கள் இதையும் கண்டுகொள்ளவில்லை.
உண்மை அறியும் குழு என்ன சொல்கிறது..
கார்னெட் நிறுவனங்களின் ஏகபோக ஆதிக்கம் குறித்தும் அவர்களின் அத்துமீறல்களால் உருக்குலைந்து கிடக்கும் மீனவ கிராமங்கள் குறித்தும் ஐந்து நாட்கள் நேரில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தலைமையிலான மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் உண்மை அறியும் குழு.
இதுகுறித்து வாஞ்சிநாதனிடம் பேசினோம். "மூன்று மாவட்ட கடலோர கிராமங்களிலும் கார்னெட் மாஃபியாக்கள் கைக்கூலிகளை வைத்து பொது அமைதியை குலைத்து வைத்திருக்கிறார்கள். இதற்கு காரணமான கார்னெட் அதிபர்கள் மீது குண்டர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். கார்னெட் மணல் நிறுவனங்கள் தங்களின் சுயலாபத்திற்காக அரசின் பல்வேறு சட்டங்களை மீறிய குற்றங்களை இழைத்துள்ளன. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழலை ஊட்டி வளர்த்த உள்ளூர் அதிகாரிகளை வைத்து இந்த முறைகேடுகளை விசாரிப்பது கண்துடைப்பு நாடகம். மத்திய மாநில அரசுகளும் இதில் குற்றவாளிகளாக இருப்பதால் ஸ்பெக்ட்ரம் வழக்கைப் போல உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் சிறப்பு விசாரணைக் குழுவால் இந்த முறைகேடுகள் விசாரிக்கப்பட வேண்டும். ஸ்பெக்ட்ரம் ஊழல் போல, அரசு இத்தொழிலை நடத்தி சந்தை விலைக்கு கனிமங்கள் விற்கப்பட்டிருந்தால் இவ்வளவு தொகை கிடைத்திருக்கும் என்ற முறையில் இழப்பீடு கணக்கிடப்பட வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளில் 2 மில்லியன் டன் மோனோசைட் எடுக்கப்பட்டதில் 1,95,300 டன் தோரியம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு அளவிட முடியாதது. கார்னெட் நிறுவனங்கள் மோனோசைட்டைக் கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. ஆகவே இதுவரை பிரித்தெடுக்கப்பட்ட மோனாசைட் குறித்து அணு விஞ்ஞானிகள் அடங்கிய குழு விசாரணை நடத்த வேண்டும். கார்னெட் மணல் நிறுவனங்களின் சட்டவிரோத மணல் கொள்ளையால் மீனவர்களுக்கு புற்றுநோய், சிறுநீரக நோய், தோல்நோய், எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதுடன், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய சிகிச்சையும், இழப்பீடும் வழங்க வேண்டும். இந்த முறைகேடுகளில் சம்பந்தபட்ட அனைத்து அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சட்டவிரோதமாக கார்னெட் மணலை கொள்ளையடித்த நிறுவனங்களின் சொத்துகள் அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும். ககன்தீப் சிங்கின் அறிக்கையை உடனடியாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்" என்றார்.
என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்!
*
கொள்ளை போகும் கனிமங்கள்...
தென் மாவட்ட கடற்கரைகளில் உள்ள கார்னெட், இல்மனேட், ரூடைல், சிர்கான், மோனோசைட் ஆகிய கனிமங்கள் மிகவும் அரிய வகையைச் சேர்ந்தவை. ஊட்டி முதல் கன்னியாகுமரி வரையுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியிலிருந்து ஆறுகளால் கடத்தி வரப்பட்ட இந்தக் கனிமங்கள், தென் மாவட்டக் கடற்கரைகளில் குவிந்துள்ளன. பல லட்சம் வருடங்களாக குவிக்கப்பட்ட இந்தக் கனிமங்கள் தான் இப்போது கொள்ளைபோய்க் கொண்டிருக்கின்றன.
கார்னெட்
மாசு இல்லாத இந்தக் கனிமம் கோமேதகம் வகையைச் சேர்ந்தது. உப்புக்காற்றால் சேதமடைந்த கப்பல்கள், கட்டிடங்கள், சிலைகளைத் தூய்மைப்படுத்த, கண்ணாடி, செயற்கை கற்கள், அலுமினியம், டைட்டானியத்தைத் துண்டிக்க, நீரை சுத்தப்படுத்த, கணினித் திரை, மூக்குக் கண்ணாடி, வால்வுகள் பாலீஷ் செய்ய இப்படி பலவகைகளில் கார்னெட் பயன்படுகிறது.
இல்மனைட்
தேவை அதிகம் உள்ள இக்கனிமம் பெயின்ட், பிளாஸ்டிக் உயர்தர காகிதம், வெல்டிங்ராடு, டைட் டானியம், அணுசக்தி நீர்மூழ்கிக் கட்டமைப்பு, விளையாட்டு, மருந்து, அழகு சாதனப் பொருட்கள் செய்யப் பயன்படுகிறது.
சிர்கான்
18,000 சென்டிகிரேடு வெப்பத்தில் மட்டுமே உருகும் தன்மை கொண்ட சிர்கான் உருக்கு, வார்ப்பு தொழிற்சாலைகள், செராமிக் டைல்ஸ், இரும்பு, உருக்கு ஆலைக் கற்கள் தயாரிக்க, துருப்பிடிப்பு மற்றும் அரிப்பைத் தடுக்க பயன்படுகிறது. அணுஉலைக் கட்டமைப்பில், மருந்து, சமையல் பாத்திரங்கள், குளியலறை- கழிவறை உபகரணங்கள் தயாரிப்பிலும் சிர்கான் பயன்படுத்தப்படுகிறது.
ரூடைல்
டைட்டானியத்தின் மூலப்பொருள் இது. பெயின்ட், பிளாஸ்டிக், ஜவுளி உற்பத்தி, வெல்டிங்ராடு, நகை, விண்வெளி உபகரணங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.
மோனோசைட்
தோரியத்தை உள்ளடக்கிய கனிமம் இது. அணு உலைகளில் எரிபொருளாகப் பயன்படுகிறது.

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...