guru
வரலாறு:-
அகத்தியர்( தெலுங்கு:అగస్త్య, கன்னடம்:ಅಗಸ್ತ್ಯ,,சமசுகிருதம்:अगस्त्य, மலாய்: Anggasta, தாய்: Akkhot) என்பவர் சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் அறியப்பெறுகிறார். இவர் சிவபெருமானின் திருமணத்தினை காண அனைவரும் வடதிசைக்கு வந்தமையால், தென்திசைக்கு பயனப்பட்டு அதை சமன் செய்ததாகவும், சிவசக்தி திருமணத்தினை தமிழகத்திலிருந்து கண்டவராகவும், தமிழை சிவபெருமானிடமிருந்து கற்றவராகவும் அறியப்பெறுகிறார். இவரே அகத்தியம் எனும் முதல் தமிழிலக்கண நூலை எழுதியவர்.
அகத்தியர்,இந்துக் கடவுள்களைப் போல தீயவர்களை அடக்கியதாகவும், இராவணை வென்றவராகவும் அறியப்பெறுகிறார்.சித்தராய்விளங்கிய அகத்தியரை பற்றிய “அகத்தியர் காவியம் பன்னிரெண்டாயிரம்” வாயிலாக சில கருத்துக்களை மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது.
அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில்சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் காலத்தில் காவிரி  பூம்பட்டிணத்தில் இந்திர விழாவை எடுப்பித்தார்.அகத்தியர் புதுச்சேரிக்கு அருகிலுள்ள ‘உழவர்கரை’யில்ஆசிரமம் அமைத்து வேதபுரி பல்கலைக்கழகத்தில் தமிழை போதித்தார். எனவே அவர் தங்கியிருந்த பகுதி ‘அகத்தீஸ்வரம்’ என்று அழைக்கப்பட்டு அங்கு பெரிய சிவாலயம் கட்டப்பட்டது. அதனை அகத்தீஸ்வரமுடையார் ஆலயம் என்றும் கூறுகின்றனர்.
முச்சங்கம்பற்றிய வரலாற்றில்தலைச்சங்கப்புலவராக விளங்கியவர்.அகத்தியம் என்னும் நூலை  எழுதியவர்.  காலத்தால்தொல்காப்பியருக்கு முந்தியவர்.
குருதேவரின்சிறப்பு பெயர்கள்:-
• தமிழ்முனிவன் (தமிழ் இலக்கணம் அருளியதால்)
• மாதவ முனிவன் (அதிக தவம்செய்ததால்)
• மாமுனி (பெரிய முனிவர்என்ற பொருளில்)
• குரு முனி (முனிவருக்கெலாம் குருவானவர்)
• திருமுனி (உயர்வுக்குரியவர்)
• முதல்சித்தர் (18 சித்தர்களில் முதன்மையானவர்)
• பொதியில்முனிவன் (பொதிகை மலையில்வாழ்ந்தவர்)
• அமரமுனிவன் (இன்றுவரை பேசப்படும் முனிவர் என்ற பொருளில்)
• பொதியவரை முனிவன் (பொதிகைமலை)
• குடமுனி (குடத்தில்பிறந்தவர்)
குருதேவரின்சிறப்புகள்:
• தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்த,அவர்களை அழிக்க இந்திரன், வாயு,அக்கினிஆகியோர் பூமிக்கு வந்தார்கள். இவர்களைக் கண்ட அசுரர்களோ கடலுக்குள் ஒளிந்தார்கள். இந்திரனின் யோசனைப்படி அக்கினி வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து அகத்தியராய் அவதரித்தார் என்றும், மிர்திரர் குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியரும், வருணன் தண்ணீரிலிட்ட வீரியத்திலிருந்து வசிஷ்டரும் அவதரித்தனர் என்றும் பலவாறான கருத்துகள் நிலவுகின்றன. குடத்திலிருந்து தோன்றியமையால்அகத்தியர் குடமுனி, கும்பயோகி என்னும் பெயர்களைப் பெற்றார் எனக்கூறப்படுகிறது. இவ்வாறு பிறவி பெற்ற அகத்தியர், இந்திரன் வேண்டுகோளுக்கிணங்க சமுத்திர நீர்முழுவதையும் குடித்து விட, இந்திரன் அசுரர்களை அழித்தார். அதன் பி ன்நீரை மீண்டும் கடலுள் விடுவித்தார்அகத்தியர்.
• அகத்தியர் நீரின் மேல்படுத்தபடியே பன்னிரெண்டாண்டுகள் கடுந்தவமியற்றி அரிய சக்திகளை(ஆற்றல்களைப்) பெற்றார்.
• அகத்தியர் தம் முன்னோர்களுக்காக விதர்ப்ப நாட்டை அடைந்து அவ்வரசன் மகள் உலோபமுத்திரையை மணந்து தென்புலத்தார் கடனை தீர்த்தார்.
• கைலையில் நடந்த சிவபெருமான் திருமணத்தின் போது வடதிசை தாழ்ந்து தென்திசைஉயர, அகத்தியரை தென்திசைக்கு செல்லுமாறு சிவபெருமான்கட்டளையிட்டார். இதனால் தெற்கே மேருமலை நோக்கிப் பயணித்தார் அகத்தியர். மேருமலைக்கு செல்ல வழிவிடாமல் நின்ற விந்தியமலை, அகத்தியரைக் கண்டதும் பணிந்து தாழ்ந்து நின்றது. தான் தென்திசை சென்று வரும் வரையில் பணிந்து இருப்பாயாக என்று அதனிடம்கூறிச்சென்ற அகத்தியர், மீண்டும் வடதிசை செல்லாதிருந்தார். ஆதலால் விந்திய மலையும் அதன் பின் உயரவில்லை எனக் கூறப்படுகிறது.
• தென் திசைக்கு வந்த அகத்தியர் பொதிகை மலையில் தங்கி முருகக் கடவுளின் ஆணைப்படி அகத்தியம் என்னும் நூலை இயற்றினார்.
• இராமபிரானுக்கு சிவகீதையை போதித்தவர் அகத்தியர்
• சிவ பூசை செய்வதற்காக கமண்டலத்தில் அகத்தியர் கொண்டு வந்த கங்கை நீரை விநாயகர் காகமாக உருக்கொண்டு சாய்த்துவிட கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி ஆறு ஆனது.
• இலங்கை மன்னர் இராவணனை தம் இசை திறத்தால் வென்றார்அகத்தியர்.
• அகத்தியர் இந்திரன் சபைக்கு சென்ற போது இந்திரன் ஊர்வசியை நடனமாட செய்தான். ஊர்வசி இந்திரன் மகன் சயந்தனிடம் கொண்ட காதலால் தன்னிலை மறந்தாள்.அதனால்அகத்தியர் சயந்தனையும் ஊர்வசியையும் பூமியில் பிறக்கும்படி சபித்தார்.
• வாதாபி, வில்வளவன் என்னும் அரக்கர் இருவரில் வில்வளவன் வேதியர் உருக்கொண்டு வழியில் செல்லும் வேதியர், முனிவர் முதலானோரை விருந்திற்கு அழைத்து வாதாபியைக் கறியாய்ச் சமைத்துப் படைத்து, வாதாபியை திரும்ப அழைக்க அவன் அவர்கள் வயிற்றைக் கிழித்து வெளியே வருவதால்அவர்கள் இறந்து போவார்கள். முனிவர்கள் இதனை அகத்தியரிடம் முறையிடவே, அகத்தியர் அவர்களிடம் விருந்து உண்ண சென்றார். வில்வளவன் உணவு படைத்துவிட்டு அகத்தியர் வயிற்றிலிருக்கும் வாதாபியை கூப்பிட அகத்தியர் “வாதாபே ஜீர்ணோபவ” என்று வயிற்றைத் தடவ வாதாபி இறந்தான். நிலமையை அறிந்த வில்வளவன் அகத்தியரிடம் மன்னிப்பு கோரினான்.
சித்த வைத்தியம்:-
தமிழுக்கான முனிவர் என்றும், சித்த மருத்துவ முறைகளை வழங்கிய முனிவர்  என்றும் அகத்திய முனிவர் குறிப்பிடப்படுகிறார்.இவரது பாடல்களில் பயின்று வந்துள்ள சொற்கள் இவரைப் பதினாறாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர் என்பதைத் தெரிவிக்கின்றன.
அகத்திய மாமுனி சித்த வைத்தியத்திற்கு செய்த பணி அளவிடற்கரியது. பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள சமரச நிலை ஞானம் என்னும் நூலில் உடம்பில்உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள்பற்றிய விளக்கம் காணப்படுகிறது.
அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன. அகத்தியர் அஷ்ட மாசத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷங்கள் பற்றி கூறியுள்ளார்.
குருதேவர் எழுதிய நூல்கள்:-
குருதேவர் எழுதிய நூல்களில் கிடைத்தவை:
1. அகத்தியர் வெண்பா
2. அகத்தியர் வைத்தியக் கொம்மி
3. அகத்தியர் வைத்திய ரத்னாகரம்
4. அகத்தியர் வைத்தியக் கண்ணாடி
5. அகத்தியர் வைத்தியம் 1500
6. அகத்தியர் வைத்திய சிந்தாமணி
7. அகத்தியர் கர்ப்ப சூத்திரம்
8. அகத்தியர் ஆயுள்வேத பாஷ்யம்
9. அகத்தியர் வைத்தியம் 4600
10. அகத்தியர் செந்தூரம் 300
11. அகத்தியர் மணி 4000
12. அகத்தியர் வைத்திய நூல் பெருந்திரட்டு
13. அகத்தியர் பஸ்மம் 200
14. அகத்தியர் நாடி சாஸ்திரம்
15. அகத்தியர் பக்ஷணி
16. அகத்தியர் கரிசில் பஸ்யம் 200
17. சிவசாலம்
18. சக்தி சாலம்
19. சண்முக சாலம்
20. ஆறெழுத்தந்தாதி
21. காம வியாபகம்
22. விதி நூண்மூவகை காண்டம்
23. அகத்தியர் பூசாவிதி
24. அகத்தியர் சூத்திரம் 30
போன்ற நூல்களை இவர்எழுதியதாகக்கூறப்படுகிறது. மேலும்
1. அகத்திய ஞானம் என்னும் அகத்தியம் என்னும் ஐந்திலக்கணம்