மின்னணு முறையில் கிடைக்கக்கூடிய தகவல்களை விண்ணப்பதாரர்களுக்கு அளித்தல் அரசாணை
தமிழ்நாடு அரசு தமிழ்நாடு அரசு
சுருக்கம்
பொதுப் பணிகள் - 2005ஆம் ஆண்டு தகவல் பெறும் உரிமைச் சட்டம் (மத்திய சட்டம் 22/2005) - அரசு வலைதளம் "“tn.gov.in”ல் மின்னணுமுறையில் பதிவுருக்களை பராமரித்தல் - 2005ஆம் ஆண்டு தகவல் பெறும் உரிமைச் (மத்திய சட்டம் 22/2005) சட்டத்தின் கீழ் மின்னணு முறையில் கிடைக்கக்கூடிய தகவல்களை விண்ணப்பதாரர்களுக்கு அளித்தல் – அறிவுரைகள் – வெளியிடப்படுகிறது.
பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் (நி.சீ.ஐஐ)துறை
அரசாணை நிலை எண். 16 நாள்: 11.02.2008
படிக்கவும்:
தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் 08.01.2008 ஆம் நாளிட்ட 33425/பொது/2007 ஆம் எண் கடிதம்
*******
ஆணை:
மக்களாட்சி முறையின் செயல்பாட்டிற்கு முக்கியமாகவுள்ள குடிமக்கள் சார்ந்த மற்றும் ஒளிவுமறைவற்ற வெளிப்படையான தகவல் அவசியமாக இருப்பதால், ஒவ்வொரு பொது அதிகார அமைப்பின் செயல்பாட்டில், ஒளிவுமறைவற்ற வெளிப்படையான தன்மையையும், பதில் சொல்லும் பொறுப்பை மேம்படுத்தவும், ஊழலைக் கட்டுப்படுத்தவும்,
அரசுகளையும், அவற்றின் நிறுவனங்களையும் ஆளப்படுபவர்களுக்கு, பதில் சொல்லும் பொறுப்புடையதாகச் செய்வதற்காகவும், பொது அதிகார அமைப்புகளின் கட்டுப்பாட்டின் கீழுள்ள தகவலைப் பெறுவதற்காக 2005ஆம் ஆண்டு தகவல் பெறும் உரிமைச் (மத்திய சட்டம் 22/2005) சட்டம் குடிமக்களுக்கான தகவல் பெறும் நிருவாகமுறையை
அமைப்பதற்கு வகைசெய்கிறது.
2) தற்போது, மேற்சொன்ன சட்டத்தின் கீழ் அரசாணைகள், விளக்கக்குறிப்புகள், விதிகள் முதலியவற்றின் நகல்கள் கோரி பொது மக்களிடமிருந்து கோரிக்கைகள் வரப்பெறுகின்றன. இவை, அரசின் வலைதளமான“tn.gov.in”ல் கிடைக்கின்றன.
3) ஒட்டுமொத்தமாக மேற்சொன்ன சட்டத்தின் கீழ், மின்னணு முறைமூலமாக தகவலைக் கோருவதற்கு விண்ணப்பதாரர்களுக்கு மேற்சொன்ன சட்டத்தின் 2(த)(iஎ), 6(1) பிரிவுகளின்படியும், 7(3)(b), 7(5) மற்றும் 7(9) பிரிவுகளின்படியும் வகைசெய்யப்பட்டுள்ளது.
4) மேற்சொன்ன சட்டத்தின் கீழ், விண்ணப்பதாரருக்கு, முனைப்பாக தகவல் அளிக்கும் பொருட்டு, மேற்சொன்ன சட்டத்தில் இருக்கக்கூடிய விதித்துறைகளின்படி , தகவல் அளிப்பதற்கு மின்னணு முறையைப் பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
5) அதற்கிணங்க, அரசு வலைதளம், """"வn.படிஎ.in""ல் கிடைக்கக்கூடிய அரசாணைகள், விளக்கக் குறிப்புகள், விதிகள் முதலியவற்றின் நகல்கள் தொடர்பாக மேற்சொன்ன சட்டத்தின் கீழ் தகவல் அளிப்பது குறித்து பின்வரும் அறிவுரைகளை அரசு
வழங்குகிறது.
6) மாநில பொதுத் தகவல் அலுவலர், அரசு வலைதளத்தில் விண்ணப்பதாரர் கோரிய தகவல் இருப்பதை உறுதி செய்தபின்னர், அரசு வலைதளமான""""வn.படிஎ.in""ல் குறிப்பிட்ட துறைக்கான பக்கத்தில் விண்ணப்பதாரர் கோரிய தகவல் உள்ளது என்பதை விண்ணப்பதாரருக்கு குறிப்பிட்டுச் சுட்டிக்காட்டலாம். ஆயினும், விண்ணப்பதாரர் தகவலை மின்னணு முறையில் இல்லாமல், தாள் வடிவில் வழங்க வேண்டுமென வலியுறுத்தினால், மேற்சொன்ன சட்டத்தின் 7 ஆம் பிரிவைச் சேர்ந்த (9) உட் பிரிவின்படி பொது அதிகார அமைப்பின் வள ஆதாரங்களை உரிய விகிதத்தில் அல்லாமல் திசை திருப்புவதாக இருக்கக்கூடும் அல்லது பதிவுருவினைப் பாதுகாப்பதற்கு அல்லது பேணிக் காப்பதற்குக் குந்தகம் விளைவிப்பதாக ருக்கக்கூடும் என்றாலன்றி விண்ணப்பதாரர் கோரியவடிவில் அவருக்கு, தகவல் வழங்கப்பட வேண்டும்.
(ஆளுநர் அவர்களின் ஆணைப்படி)
ட்டி.எஸ். ஸ்ரீதர்,
சிறப்பு ஆணையாளர் மற்றும்
அரசுச் செயலாளர்
பெறுநர்
அனைத்து அரசுச் செயலாளர்கள், சென்னை – 9.
தலைமைச்செயலக அனைத்து துறைகள்,
மாவட்ட ஆட்சியர்கள்/மாவட்ட நீதிபதிகள்/தலைமை நீதித்துறை
மாஜிஸ்ட்டிரேட்டுகள் உட்பட அனைத்து துறைத்தலைவர்கள்
உயர்நீதிமன்றம், சென்னை -104
பணியாளர் மற்றும் நிருவாகச்சீர்திருத்தத்துறையின் அனைத்து பிரிவுகள், சென்னை-9
செயலாளர், தமிழ்நாடு தகவல் ஆணையம், 378, அண்ணா சாலை, சென்னை-18.
செயலாளர், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், சென்னை-2.
நகல் பெறுவோர்:
மாண்புமிகு முதலமைச்சர் அலுவலகம், சென்னை-9
அரசு தலைமைச்செயலாளரின் தனிச்செயலர், சென்னை-9,
அரசு செயலாளரின் தனிச்செயலர், பணியாளர் மற்றும் நிருவாகச்சீர்திருத்தத்துறை, சென்னை-9
அரசு செயலாளரின் தனிச்செயலர், சட்டத்துறை, சென்னை-9
/ஆணைப்படி அனுப்பப்படுகிறது/
பிரிவு அலுவலர்
No comments:
Post a Comment