Tuesday, 3 February 2015

சில பொன்மொழிகள்

சில பொன்மொழிகள்


  
1.     நீ செய்யும் காரியம் தவறாகும் போது,நீ நடக்கும் பாதை கரடு முரடாய் தோன்றும்போது,உன் கையிருப்பு குறைந்து கடன் அதிகமாகும்போது,உன் கவலைகள் உன்னை அழுத்தும் போது,அவசியமானால் ஓய்வெடுத்து கொள்.ஆனால் ஒருபோது மனம் தளராதே..
---
டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி ---- 
2.     எப்போதும் அச்சத்தில் இருப்பதை விட
ஆபத்தை ஒருமுறை சந்திப்பதே மேல்.
---
திருடெஸ்கார்டஸ்
3.   இந்த உலகில் தலைவிதி என்று எதுவும்கிடையாது.எல்லாம் நீயாக தேடி கொண்டதுதான்.
--
பெயர் தெரியா பெரியவர்
4.     தனக்கு நிகழும்வரை எல்லாமேவேடிக்கைதான்.
--
புத்தர்--- 
5.     அதிர்ஷ்டம் என்பது நல்லநேரம் அல்ல.உழைக்கும் நேரம்.
--
பெயர் தெரியா பெரியவர்--- 
6.     இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.
---
மாவீரன் நெப்போலியன்--- 
7.     தீமை செய்வதற்கும் மட்டும் பயப்படு.வேறு எந்த பயமும் உனக்கு வேண்டாம்.
--
பெயர் தெரியா பெரியவர்--- 
8.     நான் சாவதற்கு அஞ்சவில்லைஆனால் வாழ்ந்த
வாழ்வின் அடையாளமின்றி சாக அஞ்சுகிறேன்.
---
திருமிக்கேல் லேர்மொண்டஸ்--- 
9.     எல்லாம் தெரியும் என்று குழப்பத்தோடு இருக்காதே
எதுவும் தெரியாது என்று தெளிவோடு இரு..
--
பெயர் தெரியா பெரியவர்--- 
10.  தேவையற்ற பொருட்களை வாங்கும் வழக்கம்
தேவையான பொருட்களை விற்கும் நிலைக்கு
கொண்டு வந்துவிடும்.
--
பெயர் தெரியா பெரியவர்--- 
11.  போலியான நண்பனாக இருப்பதைவிட
வெளிப்படையான எதிரியாக இரு
--
பெயர் தெரியா பெரியவர்--- 
12.  ஆயிரம் வருடம் மௌனமாக நின்ற மரம் விழும்போது காடே அதிரும்படிசெய்துவிடுகிறதுநீ?
--
ரஸ்கின்--- 
13.  எல்லோருக்கும் சொர்க்கத்திற்கு செல்ல ஆசை
ஆனால் யாருக்கும் சாகத்தான் விருப்பமில்லை.
--
பெயர் தெரியா பெரியவர்--- 
14.  ஒவ்வொருவரும் அசலாக பிறந்து நகலாக இறக்கிறோம்.
---
திருஎட்மன்ட் பார்க்--- 
15.  முட்டாள்கள் செய்யும் ஒரே புத்திசாலித்தனம் காதல்.புத்திசாலிகள் செய்யும் ஒரே முட்டாள்தனம் காதல்
--
திருஜார்ஜ் பெர்னாட்ஷா--- 
16.  காதல் என்பது அரசியலைப் போல் ஒரு சூதாட்டம்.ஏனெனில் இரண்டிலும் பொய்யும் பித்தலாட்டமும்
செய்தால்தான் வெற்றி பெற முடியும்.
--
பெயர் தெரியா பெரியவர்
17.  நீ பின்பற்ற வேண்டிய நற்பண்புகள்,நீ வெறுக்கும் மனிதர்களிடம் இருக்ககூடும்.
--
பெயர் தெரியா பெரியவர்--- 
18.  ஒவ்வொருவரும் கட்டளையிடவே விரும்புகின்றனர்.யாரும் கீழ்படிவதற்கு தயாராகயில்லை.முதலில் நல்ல வேலைக்காரனாக இருக்க கற்றுகொள்.பின் எஜமானனாகும் தகுதி உனக்கு வந்துவிடும்.
--
சுவாமி விவேகாந்தர்
19.  எல்லாரும் தன்னை சீர்திருத்துவதை விட்டு,உலகத்தை சீர்திருத்த விரும்புகின்றனர்.
--
பெயர் தெரியா பெரியவர்
20.  நீ எந்த மாற்றத்தை விரும்புகிறாயோ?அந்த மாற்றத்தை உன்னில் இருந்தே தொடங்கு.
--- 
அண்ணல் காந்தி --- 
21.  நீ இருக்கும் வரை மரணம் வரப்போவது கிடையாது.மரணம் வந்த பிறகு நீ இருக்க போவது கிடையாது.
---
தத்துவஞானி சாக்ரடீஸ்
22.  இருள் இருள் என்று சொல்லி கொண்டு சும்மா இருப்பதை விட,ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வை.
--
தத்துவஞானி கன்பூசியஸ்--- 
23.  அதிர்ஷ்டமுள்ளவன் ஒரு நல்ல நண்பனை சந்திக்கிறான்.அதிர்ஷ்டம் இல்லாதவன் ஒரு அழகியை சந்திக்கிறான்.
--
பெயர் தெரியா பெரியவர்--- 
24.  உன்னால் நூறு பேருக்கு உணவளிக்க முடியாது என்றாலும்,ஒருவருக்கு உணவளி அது போதும் 
25.  உன் மேல் அன்பு செலுத்துகிறவர்களை நேசி.உன் மீது கோபம் கொண்டவர்களை அதைவிட அதிகமாக நேசி.
--
அன்னை திரசா
26.  ஒரு முள் குத்திய அனுபவம் காடளவு எச்சரிக்கைக்கு சமம்.
--
திருவோயாஸ்--- 
27.  நூறு பேர் சேர்ந்து ஒரு முகாம் அமைக்கலாம்ஆனால் ஒரு நல்லஇல்லறம் அமைய ஒரு பெண் வேண்டும்.
--
கவிஞர் ஹோமர்-- 
28.  சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறதுபல நேரங்களில் வெற்றியேபுத்தியாகிவிடுகிறது.--கவிஞர் கண்ணதாசன்--
29.  வெற்றியில் புதிதாக விரல் ஒன்றும் முளைபதில்லை.தோல்வியில் உயிர் ஒன்றும் போவதில்லை.போராடு..
--
கவிஞர் சுகி--- 
30.  உழைப்பவனின் காலம் பொன் ஆகுகிறது.உழைக்காதவனின் பொன் காலமாகுகிறது.
--
பெயர் தெரியா பெரியவர்--- 
31.  உன்னை ஒரு கூட்டம் எப்படியாவது கீழே விழவைக்க திட்டமிடுகிறதா?அப்படியென்றால் சந்தோசப்படு
நீ அவர்களை விட மேலே இருக்கிறாய்.
--
பெயர் தெரியா பெரியவர்--- 
32.  வேரை வெட்டுகிறவன் அந்த மரத்திற்கு எத்தனை கிளைகள் என்று பார்த்துவெட்ட வேண்டும்.
---
திருஹென்றி டேவிட் தேரோ---- 
33.  அறிஞர்கள் சித்தனை செய்யாதிருந்து அறிவிலிகள் ஆகிறார்கள்.அறிவிலிகள் சிந்தனை செய்து அறிஞர்கள் ஆகுகிறார்கள்.
-- 
தத்துவஞானி கன்பூசியஸ்--- 
34.  உங்களை ஒருவர் விமர்சித்தல் உங்களுக்கு எரிச்சல் வருகிறதா?அப்படியென்றால் அந்த விமர்சனம் சரியானதுதான்.
--
திருடாக்டஸ்
35.  ஒருவன் கடவுளை நோக்கி நொண்டியடித்து செல்கிறான்.சாத்தனை நோக்கி குதித்தொடுகிறான்.
--
பெயர் தெரியா பெரியவர்--- 
36.  இதயத்தை சுத்தபடுத்தி விட்டு இறைவனை கூப்பிடுநிச்சயம் வருவார்.
---
பைபிள்--- 
37.  வாக்குறுதி முழுமதியை போன்றது.. உடனே நிறைவேற்றா விட்டால் அதுநாளுக்கு நாள் தேய்ந்துவிடும்.
--
பெயர் தெரியா பெரியவர்--- 
38.  அடுத்தவனுக்கு ஆயிரம் அறிவுரைகள் சொல்வதைவிடஅதில் ஒன்றைகடைபிடி.
--
பெயர் தெரியா பெரியவர்--- 
39.  எல்லாம் கடைசியில் சரியாகிவிடும்
அப்படி சரியாகவில்லை என்றால்
அது கடைசியல்ல
--
பெயர் தெரியா பெரியவர்---
              நன்றி: தமிழ்தாசன் 

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...