Sunday 8 February 2015

இந்தியா என்றொரு குப்பைத்தொட்டி

இந்தியா என்றொரு குப்பைத்தொட்டி



இந்தியா என்னும் நாடு வெளிநாட்டினருக்கு ஒரு குப்பைத் தொட்டியாகத்தான் இன்றளவும் தெரிகறது. ஏனென்றால் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சேர்த்துவைக்கப்படும்பிளாஸ்டிக் ,இரும்புக் குப்பைகள் வந்து கொட்டுவது இந்தியாவில்தான். அதுப்போல உலக அளவில் தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனையாவதும் இந்தியாவில்தான்.
பல நாடுகளில் தடை செய்யப்பட்டு இந்தியாவில் மட்டும் விற்பனையில் இருக்கும் கூட்டு மருந்துகள் எத்தனைதெரியுமா? 80.
சரி, இப்போது பார்ப்போம். அது என்னென்ன மருந்துகள் என்று.

 1 .அனால்ஜின்( Analgin)
பயன்பாடு - வலிநிவாரணி
பக்கவிளைவு - எலும்புமஜ்ஜைசீர்கேடு
2 .நிமிசுலைட் (Nimisulide)
பயன்பாடு - வலிநிவாரணிமற்றும்காய்ச்சல்
பக்கவிளைவு - கல்லீரல்செயல்இழப்பு
3 .பினைல்ப்ரோபநோலமைன்( phenylpropanolamine )
பயன்பாடு - சளிமற்றும்மூக்குஒழுகுதல்
பக்கவிளைவு - மூளைக்குச்செல்லும்ரத்தநாளங்களில்ஏற்படும்திடீர்அடைப்பால்சுயநினைவுஇழத்தல்
4 .சிசாபிரைடு( cisapride )
பயன்பாடு - மலச்சிக்கல்மற்றும்அதிகஅமிலம்சுரத்தலைகட்டுப்படுத்து
பக்கவிளைவு - இதயத்துடிப்புசீர்கேடு
5 .குயிநோடக்ளர் (quinodochlor )
பயன்பாடு -வயிற்றுப்போக்குகட்டுப்படுத்துதல்
பக்கவிளைவு - கண்பார்வைபாதிப்பு
6 .பியுரசொளிடன் (Furazolidone )
பயன்பாடு - வயிற்றுப்போக்குகட்டுப்படுத்துதல்
பக்கவிளைவு – புற்றுநோய்
7 .நைட்ரோபியுரசொன் (Nitrofurozone )
பயன்பாடு - கிருமிகளைஅழித்தல்
பக்கவிளைவு – புற்றுநோய்
8 .ஆக்சிபென்பியுட்டசொன்( Oxyphenbutozone )
பயன்பாடு - வலிநிவாரணி
பக்கவிளைவு - எலும்புமஜ்ஜைசீர்கேடு
9 .பைப்பரசின்( Piperazine )
பயன்பாடு - வயிற்றுப்புழுக்களைஅழித்தல்
பக்கவிளைவு - நரம்புச்சிதைவு
10 .பினப்தலின் (Phenophthalein )
பயன்பாடு - மலமிலக்கி
பக்கவிளைவு – புற்றுநோய்
சரி, இந்தபத்துமருந்துகளின்விற்பனைப்பெயர்கள்தெரியணும்இல்லையா
1 .அனால்ஜின் - Paralgan-M,Novalgin,
2 .நிமிசுலைட் -Monogesic,Nlid,Nam,Nelsid,Nimbus,Nimulid,Nise,Nugesic,Sumo,Zydol
3 .பினைல்ப்ரோபநோலமைன் - D-cold,Coldact,
4 .சிசாபிரைடு -Alipride,Cisapro,Santiza,Unipride
5 .பியுரசொளிடன் - Furoxone
6 .பைப்பரசின் -Piperazine citrate
7 .குயிநோடக்ளர் - Enteroquinol

இதைத் தான் நம் மருத்துவர்கள் தடை செய்யப்பட்டாலும் பரவாயில்லை என்று எழுது எழுதுன்னு எழுதுகிறார்கள். ஏன் நாமே வலுக்கட்டாயமாக மருத்துவரை பரிந்துரைக்கவும் செய்கிறோம். நமக்கு உடனே நோய் சரியாக வேண்டும், பக்கவிளைவுகள் வந்தால் பின்னாடி பார்த்துக் கொள்ளாலாம் என்கிற நினைப்பு. இல்லாவிட்டால் குலசாமிக்கு விரதம் இருந்து மொட்டை போட்டு பொங்கல் வைச்சால் போதும் என்கிற நினைப்பு. இதற்கு முழுக்காரணமும் மருந்து நிறுவனங்களும் ,மருத்துவர்களுமேதான்.


மேலே இருக்கும் இந்த மருந்தானது மிகச்சிறந்த வலி நிவாரணியாக கருதப்பட்டு மருந்து விற்பனையில் சக்கைப் போடுபோட்டது, நம்ம வியாபாரிகளை பற்றித்தான் உங்களுக்கு தெரியுமே? காதலை மையப்படுத்தி ஒரு சினிமா வெற்றி பெற்றால் போதும், உடனே வரிசையாக காதல் படமா எடுப்பார்கள் என்று அதேபோல் இந்த மருந்தை எல்லா நிறுவனங்களும் விற்பனை செய்தன பின்புதான் தெரிந்தது. இதன் பக்க விளைவு இதைத் தொடர்ச்சியாக எடுத்து கொண்டால் இதய நோய்வரும் என்று வந்தது வினை,2004-ம் ஆண்டு இந்த மருந்தை விற்பனை செய்ய கூடாது என்று தடை கூட வந்தது.
ஆனால் மருந்து நிறுவனங்கள் இந்த மருந்தை அதிகமாக உற்பத்தி செய்து விற்பனைக்கு வைத்துள்ளன என்ன செய்வ தென்று முழிபிதுங்கி, தடைசெய்த2004 ம் ஆண்டில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவரின் தந்தையிடம்200 கோடி கொடுத்தன ஒரு ஆறு மாதம் விற்பனை செய்த சம்பாதித்தன மருந்து நிறுவனங்கள். மருந்தை உண்டவன் செத்தானா இருக்கிறானா என்று தெரியவில்லை

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...