Tuesday, 3 February 2015

மன இறுக்கத்தைத் தளர்த்த 10 எளிய வழிகள்!

மன இறுக்கத்தைத் தளர்த்த 10 எளிய வழிகள்!


1. 
சத்தான உணவைச்சாப்பிடுங்கள்

கவனியுங்கள்… ருசியானஉணவு என்று சொல்லவில்லை.சத்தானஇயற்கையானஉணவுவகைகளைச்சாப்பிடும்போது மூளைஎப்போதும் சுறுசுறுப்புநிலையிலேயே இயங்குகிறது.பதப்படுத்தப்பட்டடின்களில் அடைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போதுஉடல் ஒருவித மந்த நிலையினை அடைகிறதுஇதனால் நாம் செய்யும்செயல்களில் நமக்குத் திருப்தி ஏற்படுவதில்லை.

2. 
நன்றாகத் தூங்குங்கள்
நல்ல ஆழ்ந்த தூக்கம் அனைத்து மனிதர்களுக்கும் அவசியம்பகலில் நாம்செய்யும் வேலைகளினால் களைப்புறும் உடல் உறுப்புகள் தூக்கத்தில்மட்டுமே Refresh அடைகின்றனதூக்கத்தில் மட்டுமே ஒரு பகுதி மூளைஅவற்றைச் சரிசெய்யும் பணியினைச் செய்வதால் நல்ல தூக்கம் அவசியம்.அது இல்லையேல் உடல்நலக் குறைவு நிச்சயம்இளைஞர்களுக்குஆறிலிருந்து எட்டுமணி நேரத் தூக்கம் அவசியம்.

3. 
நடங்கள்ஓடுங்கள்!
தினமும் அதிகாலை எழுந்தவுடனோ அல்லது மென்மையான மாலைவேளைகளிலோ மெல்லோட்டம் (Jogging) செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்அல்லது கை கால்கள் வீசி விரைந்து நடக்கலாம்இது உங்கள்உடல் இறுக்கத்தைப் பெருமளவு தளர்த்தும்மனம் உற்சாகம் பெறும்.ஆரம்பத்தில் அதிகாலை எழுவதும்மெனக்கெட்டு செல்லவேண்டுமா எனத்தோன்றுவதும் இயல்புபத்து நாட்கள் விடாமல் சென்று பாருங்கள். 40வயதுக்காரர் 20வயது இளைஞனைப்போல் உற்சாகமாக வேலைசெய்வீர்கள்.

4. 
ஓய்வெடுங்கள்.
பணியிடையே அவ்வப்போது ஓய்வெடுங்கள்ஓய்வெடுத்தல் என்பதுவேலையை நிறுத்திவிட்டு அரட்டை அடிப்பதல்லகண்களை மூடி நன்றாகமூச்சை ஆழ்ந்து இழுத்துசற்று நிறுத்திமெல்ல விடுங்கள்கடினமானமிகக்கவனமான வேலைகளைச் செய்வோர் செய்யும் சுவாசம் ஆழ்ந்து இல்லாமல்மேம்போக்காக இருக்கும்அதனால் மூளைக்கு சரியாக ஆக்ஸிஜன்செல்லாமல் தலைவலிஉடல் சோர்வு ஏற்படும்ஒரு மணிநேரக் கடினவேலைக்கு ஐந்து நிமிட ஓய்வு போதுமானது.

5. 
சிரியுங்கள்
மனம் விட்டு சிரியுங்கள். “மனம் விட்டு” என்பதற்கு ஆழ்ந்த அர்த்தமுண்டு.சிரிக்கும்போது மனதில் எந்தவித எண்ணங்களும் இருக்கக்கூடாது.சிரிக்கும்போது நன்றாக முழுமையாக ரசித்துச் சிரிக்க வேண்டும்வேறுஏதேனும் சிந்தனை தோன்றி பட்டென்று சிரிப்பை நிறுத்தும்போது வேறுவிளைவுகளை ஏற்படுத்தும்எப்பொழுதும் சிரித்து இன்முகம் காட்டுபவர்முகத்தில் ஒருவித தேஜஸ் இருக்கும்அது மற்றவர்களை உங்கள்பால்கவர்ந்திழுக்கும்.

6. 
மனம்விட்டுப் பேசுங்கள்
மனம் விட்டுப்பேசுங்கள்உங்கள் நம்பிக்கைக்குரியவர்களிடம் மட்டும்.எல்லோரிடமும்எல்லா நேரமும்தெரிந்த எல்லாவற்றையும்பேசிக்கொண்டிருக்காதீர்கள்யாரிடம் பேசினால் உங்களுக்கு ஆன்ம திருப்திகிடைக்கிறதோ அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள்அவர்கள் சொல்லும்வார்த்தைகள் உங்கள் மனதிற்குத் தெளிவைத் தரும்.

7. 
உங்களால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்
இந்த உலகத்தில் ஒருவரே எல்லாவற்றையும் தன் வாழ்நாளில்ஒழுங்குபடுத்திட இயலாதுஅது தேவையில்லாததும் கூடமலையைத்தலையால் முட்டி உடைக்கமுடியாதுஆனால் சிறு பாறையைப்பெயர்த்தெடுக்க இயலும்சமூகத்தில் உங்களால் முடிந்த சிறுசிறுவேலைகளைச் செய்யுங்கள்மற்றவர்களையும் உத்வேகப்படுத்துங்கள்.

8. 
தெளிவாகச் செய்யுங்கள்
எந்தச் செயல் செய்தாலும் முழுமையான ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன்செய்யுங்கள்வேண்டாவெறுப்பாக ஒரு வேலையைச் செய்வதை விட அதைச்செய்யாமல் இருப்பதே மேல்எந்த ஒரு நிறுவனத்தில் வேலை செய்தாலும்செய்யும் வேலையை மட்டும் காதலியுங்கள்நிறுவனத்தை அல்லநிறுவனம்உங்களைத் தூக்கிவிடும் அல்லது கவிழ்த்திவிடும்ஆனால் ஈடுபாட்டுடன்காட்டிய வேலை திருப்தியை மட்டுமல்லநல்ல அனுபவத்தையும்கொடுக்கும்.

9. 
விளையாடுங்கள்
உங்கள் நேர நிர்வாக அட்டவணையில் விளையாட்டிற்கும் இடம்ஒதுக்குங்கள்கோயிலுக்குச் செல்வதை விட கால்பந்து விளையாடுவதுமேலானது என விவேகானந்தரே கூறியிருக்கிறார்விளையாட்டு உடலுக்குமட்டுமல்ல மனதிற்கும் உற்சாகம் தரும்.

10. 
மற்றவர்களையும் கவனியுங்கள்
உங்கள் விருப்பங்களையும்உங்கள் தேவைகளையும் மட்டுமே சிந்தித்துக்கொண்டிருக்காதீர்கள்அது மன உளைச்சலில் கொண்டுபோய்விடும்நமதுவிருப்பு வெறுப்புகளுக்கு எல்லைகளே கிடையாதுஉங்களைச்சுற்றியிருப்பவர்களையும் கவனியுங்கள்யாருக்கேனும் உதவிதேவைப்பட்டால் தயங்காமல் செய்யுங்கள்பிரதிபலன் எதிர்பாராமல்.உங்களுக்கே தெரியாமல் அது திரும்பிவரும் !

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...