மோசடிகளின் முழு உருவமாக மாறிவரும் தனியார் வங்கிகள்.
வங்கியின் பணம் பெறுவதற்கு கட்டணம் வசூலிப்பார்களா? இந்தியாவில் பெருகி வரும் தனியார் வங்கிகளின் கேஷ் கவுன்டர்களில் பணம் செலுத்தினால் அதை பெற்றுக்கொள்ள கட்டணம் வசூலிக்கிறார்கள்.
ஆமாம். கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் பில் தொகையை பணமாக செலுத்தினால் அதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்தத் தொகையை செக்காக செலுத்த வசதி வைத்துள்ளார்களாம்; எனவே கவுண்டரில் பணமாக செலுத்தினால் கட்டணம் வசூலிப்பார்களாம். செக்காக செலுத்தினால் என்ன ஆகும்? உங்கள் கடனை கட்டுவதற்கு கடைசி நாளுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக செக்கை கலெக்ஷன் பாக்ஸில் போட வேண்டுமாம். அப்படியென்றால் கடைசி நாள் என்பதற்கு என்ன அர்த்தம்? சரி. செக்காக செலுத்தலாம் என்றால் அதற்கு ரசீது கிடையாது. எனவே நீங்கள் செக் கொடுத்ததற்கு அத்தாட்சி கிடையாது. எனவே அவர்கள் சவுகரியப்பட்டபோது (தாமதமாக) அந்த செக்கை கலெக்ஷனுக்கு அனுப்புவார்கள்.
பிறகு தாமதக்கட்டணம் என்ற பெயரில் சில நூறு ரூபாய்களை வாடிக்கையாளர்களிடம் வசூலிப்பார்கள். ஆக மக்களிடம் கொள்ளை அடிப்பது ஒன்றே லட்சியம். ஒவ்வொரு வங்கிக்கும் எத்தனை லட்சம் வாடிக்கையாளர்கள், அவர்களிடமிருந்து எத்தனை கோடி ரூபாய்கள் இவ்வாறு கொள்ளை அடிக்கப்படுகிறது என்று எண்ணிப்பாருங்கள்.
இவ்வாறு மக்கள் மீது சுமத்தப்படும் கொடுஞ்சுமையால் மக்கள் கடன் தவணை கட்டத்தவறும் போது நடக்கும் அராஜகங்கள் அனைவருக்கும் தெரியும்.
இதற்கான தீர்வுதான் என்ன? இந்த தீர்வை அடைவதில் உங்கள் பங்கு என்ன?
ஆமாம். கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் பில் தொகையை பணமாக செலுத்தினால் அதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்தத் தொகையை செக்காக செலுத்த வசதி வைத்துள்ளார்களாம்; எனவே கவுண்டரில் பணமாக செலுத்தினால் கட்டணம் வசூலிப்பார்களாம். செக்காக செலுத்தினால் என்ன ஆகும்? உங்கள் கடனை கட்டுவதற்கு கடைசி நாளுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக செக்கை கலெக்ஷன் பாக்ஸில் போட வேண்டுமாம். அப்படியென்றால் கடைசி நாள் என்பதற்கு என்ன அர்த்தம்? சரி. செக்காக செலுத்தலாம் என்றால் அதற்கு ரசீது கிடையாது. எனவே நீங்கள் செக் கொடுத்ததற்கு அத்தாட்சி கிடையாது. எனவே அவர்கள் சவுகரியப்பட்டபோது (தாமதமாக) அந்த செக்கை கலெக்ஷனுக்கு அனுப்புவார்கள்.
பிறகு தாமதக்கட்டணம் என்ற பெயரில் சில நூறு ரூபாய்களை வாடிக்கையாளர்களிடம் வசூலிப்பார்கள். ஆக மக்களிடம் கொள்ளை அடிப்பது ஒன்றே லட்சியம். ஒவ்வொரு வங்கிக்கும் எத்தனை லட்சம் வாடிக்கையாளர்கள், அவர்களிடமிருந்து எத்தனை கோடி ரூபாய்கள் இவ்வாறு கொள்ளை அடிக்கப்படுகிறது என்று எண்ணிப்பாருங்கள்.
இவ்வாறு மக்கள் மீது சுமத்தப்படும் கொடுஞ்சுமையால் மக்கள் கடன் தவணை கட்டத்தவறும் போது நடக்கும் அராஜகங்கள் அனைவருக்கும் தெரியும்.
இதற்கான தீர்வுதான் என்ன? இந்த தீர்வை அடைவதில் உங்கள் பங்கு என்ன?
No comments:
Post a Comment