Tuesday 2 June 2015

சித்தர்கள்

          சித்தர் உலகின், கலைகளின் சிறப்பு

சித்தர்கள் நிலை  
எனது அறிவுக்கு எட்டியவரை இவ்வுலகில் உயர்ந்த பதவிகள் மூ ன்று . அமெரிக்க ஜனாதிபதி, இந்திய ஜனாதிபதி, ரோம் நகரில் உள்ள போப் ஆண்டவர். நாம்  இதைவிட அதிகாரமும் செல்வாக்கும் நிறைந்த பதவிகள் கிடையாது என்று  நினைக்கிறேன்.

அமெரிக்க ஜனாதிபதிக்கோ அளவு கடந்த அதிகாரங்கள். ஆலோசகர்கள் படைகள் என்று ஏராளம் ஏராளம்.  இருப்பினும் அவர்கள் மற்ற நாட்டின் மீது போர் தொடுப்பதும், கருத்து வேறு பட்ட நாட்டில் உள் கலவர்த்தை  தூண்டி பிரிவினையினை உண்டாக்கவும். அதிக முயற்சியும்; செலவும் செய்கிறார்கள். தன்  நாட்டின் நலனையும் காக்க வேண்டி யுள்ளது. அதனால் அமெரிக்க  ஜனாதிபதிக்கோ அமைதியாகவோ, நிம்மதியாகவோ, நிறைவாகவோ வாழ முடியாத நிலை,  ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு அவர்களும் சாதார்ன மனிதர்களாகி விடுகிறார்கள்.

ரோம் நகரத்தின் ராசாவாக எல்லா அதிகரத்துடனும்,  செல்வத்தோடும் செல்வாக்கோடும் வாழ்து கொண்டு இருப்பவர் போப்   ஆண்டவர் ஆவார். அவர் இயேசுவின் கொள்கைகளை உலகம் பூராவும் பரப்பும் பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது, மேலும் அவர் ஏசு வின் நிலையினை அடையும் சூழலில் உள்ளார்.  அவருக்கு உள்ள பொறுப்பு புதிதாக எத்தனை சர்ச்சுகள் கட்டப் பட்டுள்ளது.  எவ்வளவு மக்கள் மத மாற்றம்  செய்யப்பட் டுள்ளார்கள் என்பதை  மேற்பார்வையிடவும், அதற்கான செல்வத்தை திரட்டுவதும் தான் அவரது முக்கிய  கடமை.  இருப்பினும் அவர்களும் ஆரோக்கியமான, அமைதியான,   சந்தோஷமான வாழ்க்கையினை அடைய முடிய வில்லை. 

உலகத்திலே சொகுசான, பிரச்னைகளே இல்லாத ஆடம்பரமான பதவி எது என்றால் அது இந்தியாவின் ஜனாதிபதி பதவியாகும்.  பொறுப்பு கிடையாது பார்லிமெண்டின் முடிவுக்கும்,  ஆளும் கட்சி தலைமையின்  முடிவுக்கும் கட்டுப்பட்டு கையெழுத்திடு வதுதான் அவரது பிரதான  கடமை. ( இதுவரை இதுதான் நடைமுறை).  எனினும் அவர்களும் முழுமையான, நிறைவான சந்தோஷமான வாழ்வினை வாழ முடியவில்லை.என்பதை அறியவும்.

(ஒரு குறிப்பிடப் பட்ட மனிதரையோ, அல்லது குறிப்பிட்ட பதவினையோ குறை சொல்ல எழுதப் பட்டது அல்ல  இது.  இவ்வளவு பெரும் பதவியில் உள்ளவர்களும் முழுமை பேற்றினை அடைய  முடியவில்லை என்பதை  சுட்டி காட்டவே  இதனை எடுத்து காட்டி யுள்ளோம்)

இன்றைய உலகில் பணக்காரர்களின் முதல் வரிசை  பட்டியல் வருடம் ஒரு முறை மாறிக் கொண்டே உள்ளது.  அவர்களும் சந்தோசமாக இல்லை. அவர்களில சிலர்  நடிகையோ  அல்லது புகழ் பெற்ற பெண்மணிகள் அணிந்தி ருந்த சட்டிகளை   (உள் ஆடை )  லட்சம் ரூபாய் கொடுத்து  வாங்கி முகர்ந்து கொண்டு ள்ளார்கள்   அவர்கள் இன்பம்  இன் நிலையில்தான் உள்ளது. 

 யார் சித்தர்கள்.

சித்தர்கள்  சாகாவரம் பெற்றவர்கள்.  பல உகங்கள் இந்த பூ த உடலுடன் இந்த பூமிதனில் வாழ்பவர்கள்.

அட்டமா சித்துக்களை கை  வரப் பெற்றவர்கள் , அதாவது கடவுளால்   என்ன என்ன செய்ய முடியுமோ அவை அனைத்தையும் செய்ய வல்லவர்கள்.
ஒரு சிறந்த சித்த   வைத்தியனால் நவ லோகங்களையும் தங்கமாக்கி விற்று  உண்ண  முடியும். 
  
எல்லா வியாதிகளையும் தவிடு பொடியாக்கி விடுவர். 
தன்  தரும பத்தினி  களுடன் கால வரம்பு இன்றி விந்து வெளியேறாமல் போகம் செய்ய வல்லவர்கள். 

சித்தர்கள் மண்ணிலும்  தண்ணிலும் உயிருடன் சமாதில் இருக்கிறார்கள்
உலகம் முழுதும் உள்ள மொழி, கடவுள், கலாசாரம், சாங்கியம், சம்பிரதாயம், முதலிய வைகனை உருவாக்கினவர்கள் சித்தர்களே.

நமது இந்திய, தமிழக கலாசாரத்தில் வணக்கத்திற்கு என்று ஒரு முறையினை வகுத்து ள்ளார்கள். அந்த முறையில் ஒரு மனிதன் இவ்வுலகில் எவ்வாறு முழுமையான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காண வழி முறையினை கூறியுள்ளர்கள். அடுத்து உடலை காய கற்ப்பமாக மாற்றும் வாசி யோகத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதையும் விளக்கி யுள்ளார்கள். மேலும் அமிர்தத்தை அருந்தும் வழியினையும் காட்டி யுள்ளனர். இறுதியாக இறை நிலையாகிய இறப்பும் பிறப்பும் அற்ற முக்தி நிலை யினையும் விளக்கி யுள்ளார்கள் . அதன் விளக்கத்தை, உண்மை பொருளை இந்த சலனப் படத்தின் மூலம் அறியலாம்.  

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...