Friday 12 June 2015

வேலை நிறுத்த உரிமையின் மீதான கட்டுப்பாடுகள்


                            வேலை நிறுத்த உரிமையின் மீதான கட்டுப்பாடுகள்

வேலை நிறுத்த உரிமையின்
மீதான கட்டுப்பாடுகள்
இந்தியாவில் வேலை நிறுத்தம்
செய்யும் உரிமை முழு
உரிமையுடையது அல்ல.
தொழிற்தகராறுகள் சட்டம் -
1947 வேலை நிறுத்தத்தின்
மீது சில கட்டுப்பாடுகளை
விதிக்கிறது.
வேலை நிறுத்தம்
கட்டுப்பாடுகளின்றி இருந்தால்
நாட்டின் தொழில் அமைதி
பாதிக்கப்பட்டு உற்பத்தி
குறைந்து போகக் கூடும் எனும்
அச்சமே இக்கட்டுப்பாடுகளைக்
கொண்டுள்ளது.
தொழிற்தகராறுகள் சட்டம்
வேலை நிறுத்தத்தின் மீது
பொதுவாகச் சில
கட்டுப்பாடுகளை விதித்தாலும்,
பொதுப் பயன்பாட்டுப் பணிகளில்
ஈடுபடும் தொழிலாளர்கள்
வேலை நிறுத்தத்தில்
செல்வதற்கு சில கூடுதல்
நிபந்தனைகளை விதிக்கிறது.
I. பொதுப் பயன்பாட்டுப்
பணிகளில் கட்டுப்பாடுகள்
பொதுப் பயன்பாட்டுப் பணிகளில்
ஈடுபடும் தொழிலாளர்கள்
வேலை நிறுத்தத்தில்
செய்வதற்கு முன்பு சில
நடைமுறைகளைக் கடைப்பிடிக்க
வேண்டும். அவை.
1. வேலை நிறுத்தம்
செய்வதற்கு 6 வாரங்களுக்கு
முன்பாக அது குறித்த அறிவிப்பு
ஒன்றை நிர்வாகத்திடம் அளிக்க
வேண்டும்.
2. இத்தகைய அறிவிப்பு தந்து
14 நாட்கள் முடிவதற்கு
முன்னரே வேலை நிறுத்தத்தில்
செல்லக் கூடாது.
3. அந்த அறிவிப்பில் வேலை
நிறுத்தம் செய்யப் போவதாக
குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாக
வேலை நிறுத்தம்
செய்யக்கூடாது.
4. ஒரு கோரிக்கை குறித்து சமரச நடவடிக்கை நிலுவையில்
இருக்கும் போது அல்லது அந்த
சமரச பேச்சுவார்த்தை முடிந்து
7 நாட்களுக்குள்ளாக, அதே
கோரிக்கை குறித்து வேலை
நிறுத்தம் செய்யக் கூடாது.
சட்டவிரோதமான வேலை
நிறுத்தம்
மேற்காணும் 4 நிபந்தனைகளில்
ஒன்றில் மீறினாலும் அது
பொதுப் பயன்பாட்டுப் பணிகளில்
சட்டவிரோதமான வேலை
நிறுத்தம் என்றாகி விடும்.

சட்டம்'s photo.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...