Friday 12 June 2015

கூலி வழங்கல் சட்டம்


கூலி வழங்கல் சட்டம்

கூலி வழங்கல் சட்டம் -part 2
கூலி வழங்குவது குறித்த
விதிகள்
* கூலி வழங்கல் சட்டம்
1936 ன் பிரிவு 3ன் படி
ஒவ்வொரு முதலாளியும்,
தன்னால் பணியில்
அமர்த்தப்பட்ட தொழிலாளிக்குச்
சேர வேண்டிய அனைத்துக்
கூலியையும் வழங்க
வேண்டும் என்பதைச் சட்டக்
கடமையாக்குகிறது.
* கூலி வழங்கல் சட்டம்
1936 ன் பிரிவு 4ன் படி
ஒவ்வொரு முதலாளியும் கூலி
வழங்கும் கால இடவெளியை
உருவாக்கிக் கொள்ள வழி வகை
செய்யப்பட்டுள்ளது. ஆனால்
இது ஒரு மாத கால
இடைவெளிக்கு அதிகமாகக்
கூடாது.
* தொழிலாளர்கள் எண்ணிக்கை
1000 க்கு அதிகமாகாத
நிலையில் ஊதியக் காலத்தின்
கடைசி நாளிலிருந்து ஏழு
நாட்கள் முடிவடைவதற்கு
முன்பும், 1000 க்கு அதிகமாக
உள்ள போது பத்து நாட்கள்
முடிவடைவதற்கு முன்பும்
கூலி வழங்கப்பட வேண்டும்.
இதை விடுமுறை நாளில்
அளிக்கக் கூடாது என்பதை
கூலி வழங்கல் சட்டம் 1936
ன் பிரிவு 5 மூலம்
வலியுறுத்தப்பட்டுள்ளது.
* கூலியை நடப்பிலுள்ள
இந்தியப் பணமாகவும்
சில்லரைக்காசுகளாகவும்
கொடுக்க வேண்டும்.
தொழிலாளர்கள் ஒப்புதல்
பெற்று வங்கிக்
காசோலையாகவோ அல்லது
அவர்களின் வங்கிக் கணக்கில்
வரவு வைப்பதன்
வாயிலாகாவோ வழங்கலாம்
என்று கூலி வழங்கல் சட்டம்
1936 ன் பிரிவு 6
தெரிவிக்கிறது.
* சட்டம் அனுமதிக்கும்
பிடித்தங்களைத் தவிர வேறு
எவ்வித பிடித்தங்களும்
இல்லாமல்
தொழிலாளர்களுக்குக் கூலி
வழங்கப்பட வேண்டும்.
முதலாளிக்கு அல்லது அவரது
முகவர்க்கு தொழிலாளர்கள்
செலுத்தும் தொகை
அனைத்தும் பிடித்தங்கள்
எனப்படும். ஊதிய உயர்வு
அல்லது பதவி உயர்வு
நிறுத்தி வைக்கப்படுதல், கீழ்
பதவிக்கு மாற்றம் செய்தல்
மற்றும் தற்காலிகப் பணி
நீக்கம் ஆகியவற்றால் ஏற்பட்ட
கூலி இழப்புகள்
பிடித்தங்களாகக்
கருதப்படமாட்டாது என கூலி
வழங்கல் சட்டம் 1936 ன்
பிரிவு 7ல்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டம் அனுமதிக்கும்
பிடித்தங்கள்
கூலி வழங்கல் சட்டம் 1936-
ன் படி சில பிடித்தங்கள்
அனுமதிக்கப்பட்டுள்ளன.
அவை
* அபராதத் தொகை
தொழிலாளி கடமையைச் செய்ய
தவறியதற்காகவோ,
* செய்யக்கூடாத செயலைச்
செய்ததற்கு விதிக்கப்பட்ட
அபராதத் தொகையைக்
கூலியில் பிடித்தம்
செய்யலாம். இப்பிடித்தம்
அவரது ஒரு மாதக் கூலியின்
மொத்தத் தொகையில் மூன்று
சதவிகிதத்திற்கு அதிகமாக
இருக்கக் கூடாது.
* வேலை செய்யாத நாட்கள்
கூலி வழங்கும்
காலத்திற்குரிய வேலை
நாட்களில் வேலைக்கு வராத
நாட்களுக்குரிய கூலியைப்
பிடித்தம் செய்து கொள்ள
அனுமதிக்கிறது.
* சேதத்திற்கான இழப்பு
தொழிலாளியிடம்
ஒப்படைக்கப்பட்ட பொறுப்பில்
கவனக்குறைவாய் இருந்து
அதனால் ஏற்பட்ட சேதம்
அல்லது இழப்பை ஈடு
செய்யும் வகையில் ஒரு
தொகையை கூலியிலிருந்து
பிடித்தம் செய்யலாம். இப்படி
பிடித்தம் செய்யப்படும் முன்பு,
தொழிலாளிக்கு இது குறித்த
நியாயமான விளக்கங்கள்
அளிக்கப்பட வேண்டும்.
* சேவைகளுக்கான தொகை
வீட்டு வசதி, தண்ணீர், மின்சார
வசதி மற்றும் வாகன வசதி
போன்ற சேவைகள்
வழங்கப்பட்டால் அதற்குச்
சமமான தொகையைக் கூலியில்
பிடித்தம் செய்யலாம். ஆனால்
அச்சேவைகளுக்கு தொழிலாளி
ஏற்பளித்திருக்க வேண்டும்.
முன்தொகை
தொழிலாளி வேலையில் சேரும்
முன்பு அல்லது சேர்ந்த பின்பு
அல்லது விழாக் காலங்களில்
வழங்கப்பட்ட
முன்தொகையினைக் கூலியில்
பிடித்தம் செய்ய
அனுமதிக்கிறது. இது போல்
அதிகமாகக் கொடுக்கப்பட்டு
விட்ட கூலியைத் திரும்பப்
பெறவும் பிடித்தம்
செய்யலாம். ஆனால்
போக்குவரத்து செலவுகளோ
அல்லது முன்பணம் மற்றும்
அதிகமாக வழங்கப்பட்ட
கூலிக்கு வட்டியோ பிடித்தம்
செய்யக் கூடாது.
கடன் தொகைகள்
மாநில அரசால்
அங்கீகரிக்கப்பட்ட வீட்டு
வசதிக் கடன், வாகனக் கடன்
மற்றும் தொழிலாளரால்
பெறப்பட்ட கடன்கள்
போன்றவற்றின் மாதாந்திர
தவணையிலான பிடித்தங்கள்
கூலியிலிருந்து கழித்துக்
கொள்ளலாம்.
பிற பிடித்தங்கள்
1. வருமான வரிக்கான
பிடித்தம்
2. நீதிமன்ற உத்தரவுகளின்
பேரிலான பிடிக்கப்பட
வேண்டிய தொகை
3. வருங்கால வைப்புநிதி
மற்றும் ஒய்வூதியத் திட்டம்
ஆகியவைகளுக்குச் செலுத்த
வேண்டிய தொழிலாளர்களின்
சந்தாத் தொகை
4. தொழிலாளர்களின் தொழில்
வரிப் பிடித்தம்
5. பிரதமர் தேசிய உஅதவி நிதி
மற்றும் பிற நிவாரண
நிதிகளுக்கான நன்கொடைத்
தொகை போன்றவை
தொழிலாளர்களின் சம்மதக்
கடிதத்தின்படி பிடித்தம்
செய்யலாம்.
6. தொழிற்சங்கத்திற்கான
உறுப்பினர் தொகை
தொழிலாளர்களின் சம்மதக்
கடிதத்தின்படி பிடித்தம்
செய்யலாம்.
பிடித்தத்தின் பொது வரம்பு
தொழிலாளியின் சம்பளத்தில்
பிடித்தம் செய்யப்படும்
பொழுது அனைத்துத்
தலைப்புகளின் கீழும்
செய்யப்படும் மொத்தப் பிடித்தம்
தொழிலாளியின் மாதச்
சம்பளத்தில் 50
சதவிகிதத்திற்கு மேல் இருக்கக்
கூடாது. கூட்டுறவு
நிறுவனங்கள் மற்றும் கடன்
தொகைகளுக்காகப் பிடித்தம்
செய்யப்படும் பொழுது 75
சதவிகிதம் வரை பிடித்தம்
செய்யலாம்.
சட்டம்'s photo.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...