Wednesday 10 February 2016


                                          மனித உடலின் மகத்துவம்


  நாளமில்லா சுரப்பி மண்டலம்
============================
ஆண், பெண் இருபாலருக்கும் அந்தந்த வயதுக்கேற்ப உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு அதாவது , ஆண்களுக்கு மீசை முளைப்பது, பெண்களுக்கு மார்பகம் வளர்வது போன்றவற்றுக்கு முக்கியக் காரணமாக இருப்பது இந்த நாளமில்லா சுரப்பி மண்டலம்தான். மேலும் ஆணும் பெண்ணும் உறவு கொண்டு மகிழவும் இந்த மண்டலத்தில் உள்ள சுரப்பிகளே காரணம்.
நமது உடலில் உள்ள சுரப்பிகள் பல சிறப்பான திரவங்களை சுரக்கின்றன.இவை நரம்பு மண்டலம் தரும் தொடர்புகள் போன்று தகவல் தொடர்பு கருவியாகவும் பயன்படுகின்றன. நாளமில்லா சுரப்பிகளின் பணிகள் அனைத்தும் நரம்பு மண்டலத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன.
இவற்றை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்.
---------------------------------------------------------------------------
வெளிப்புற சுரப்பிகள்
உதாரணம் வாய், வயிறு, குடற் பகுதி, வியர்வை, கண்ணீர் போன்றவை ஆகும்.
மற்றொன்று உட்புற சுரப்பிகள்
இவை சுரக்கும் நீர்கள் அல்லது திரவங்கள் அனைத்தும் வெளியேற்ற நாளங்கள் எனப்படும் குழாய்கள் ஏதும் இல்லாத காரணத்தால் நிண நீர் திசுக்களில் அல்லது இரத்தத்தில் நேரடியாக கலந்து விடுகின்றன.
இரத்த மண்டலத்தில் இரத்த ஓட்டத்தில் கலந்து கொண்டு உடலில் உள்ள அனைத்து திசுக்களுக்கும் உறுப்புகளுக்கும் போய் சேர்கின்றன. பிறகு தனது தனித்தன்மையை காட்டி உடலின் உறுப்புகளில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. இத்தகைய நாளமில்லா சுரப்பிகள் சுரக்கும் திரவத்தைத்தான் ஹார்மோன்கள் என்று அழைக்கப்படுகின்றன.
இந்த ஹார்மோன்கள் நமது உடலின் வளர்ச்சிக்கு, சிதையும் திசுக்கள் சீரடைதலுக்கு, அடிப்படை உணர்வுகளின் உந்துதலுக்கு, இன உணர்வுகளின் ஊக்கத்திற்கு, கோபம், பயம், கொடூரம், சந்தோசம், துயரம் போன்ற குணாதிசயங்களுக்கு, சூழ்நிலைக்கேற்றவாறு உடலினை தயார் செய்துகொள்வதற்கு, நம்மை தாக்கும் நோய்களில் இருந்து காத்துக்கொள்வதற்கு, காதல் உணர்வுகளுக்கு என அனைத்து செயல்களுக்கும் காரணமாக இருக்கின்றன.
நம் உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் பற்றி காண்போம்.
(1)பிட்யூட்டரி சுரப்பி,
(2)தைராய்டு சுரப்பி,
(3)பாராதைராய்டு சுரப்பி,
(4)தைமஸ் சுரப்பி,
(5)அட்ரீனல் சுரப்பி,
(6)பால் இன சுரப்பி,
(7)கணைய சுரப்பி,
(8)பீனியல் சுரப்பி ஆகியன ஆகும்.
பிட்யூட்டரி சுரப்பி;-
**************************
இது கண்கள் மற்றும் மூக்குக்கு பின்புறமாக சிறுமூளைக்கு அடியில் கபால குழியில் பயிறு வடிவத்தில் அல்லது முட்டை வடிவில் அமைந்து உள்ளது. இதன் எடை 0.5கிராம் ஆகும். அனைத்து நாளமில்லா சுரப்பிகளை திறமையாக பணி செய்ய தூண்டுவது பிட்யூட்டரி சுரப்பி ஆகும். அதனால் இது சுரப்பிகளின் தலைவன் எனப்படும். இது வளர்ச்சி ஹார்மோன், தைராய்டு ஊட்ட ஹார்மோன், அட்ரீனல் ஊட்ட ஹார்மோன், இனப்பெருக்க ஊட்ட ஹார்மோன் மற்றும் ஆக்ஸிடோசின், வேசோபிரசின் ஆகிய ஹார்மோன்களை சுரக்கிறது.
தைராய்டு சுரப்பி;-
**************************
இது கழுத்தின் முன் பரப்பில் அமைந்து உள்ளது. இதன் எடை 28கிராம். இது தைராக்சின் மற்றும் டிரையோடோதைரானின் ஹார்மோன்களை சுரக்கிறது.
பாராதைராய்டு சுரப்பி;-
*******************************
இது தைராய்டு சுரப்பியின் பின்புறத்தில் அமைந்து இருக்கும். இவை நான்கு இருக்கும். ஒவ்வொன்றும்0.05கிராம் எடை அளவு இருக்கும். இது பாராதார்மோன் என்னும் ஹார்மோனை சுரக்கிறது. இதன் பணி கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவற்றை கட்டுப்படுத்துவது ஆகும்.
தைமஸ் சுரப்பி;-
**********************
மூச்சுக்குழாய் இரு பிரிவாக பிரிவதற்கு முன்பாக தைராய்டு சுரப்பிகளுக்கு சற்று கீழாக அமைந்து உள்ளது. இது தைமிக் ஹ்யூமரல் ஃபேக்டர் என்னும் ஹார்மோனை சுரக்கிறது.
அட்ரீனல் சுரப்பி;-
************************
இது சிறுநீரகங்களின் மேற்பாகத்தில் அமைந்து உள்ளன. கார்டெக்ஸ் மற்றும் மெடுல்லா என்ற இரு பாகங்களை கொண்டது. ஒவ்வொன்றும் ஏழு கிராம் எடை கொண்டது. இது கார்டிசோன் மற்றும் அட்ரீனலின் ஹார்மோன்களை சுரக்கிறது.
பால் இன சுரப்பி;-
************************
இதன் சுரப்பிகளாக விரைகளும், சூலகங்களும் விளங்குகின்றன.
கணைய சுரப்பி;-
************************
இது உட் புறமும் சுரக்கும். வெளிப்புறமும் சுரக்கும். கணையம் இன்சுலின் மற்றும் குளுகோன் என்ற இரண்டு ஹார்மோன்களை சுரக்கின்றது.
பீனியல் சுரப்பி;-
***********************
இது பெருமூளை எபிபிசிஸ் என்னும் இடத்தில் ஒரு சிறிய உறுப்பாக அமைந்து உள்ளது.
இந்த மண்டலத்தில் உள்ள சுரப்பிகளில் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்துவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. மேலும், அவற்றுக்கான மருந்துகள் கிடைப்பதும் மிகவும் அரிது.
அந்த மண்டலத்தில் உள்ள முக்கிய சுரப்பியான கணையம் பாதிக்கப்படுவதால் ஏற்படும் சர்க்கரை நோய், இன்று உலகத்தையே பயமுறுத்தி வருகிறது. தவிர, உடல் பருமன் , மாதவிலக்குகோளாறுகள் , தைராய்டு நோய்கள் போன்றவற்றை இம் மண்டலத்தில் ஏற்படும் மிக முக்கியமான நோய்களாகும்.
மேலும், சித்த உடற்கூறு தத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள ஆறு ஆதார உயிர் மையங்கள்தான், இம் மண்டலத்தில் உள்ள சுரப்பிகளைத் தூண்டிச் செயல்படுத்துவதாகச் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
யோகாசனப் பயிற்சிகளாலும், சுவாச ஒழுங்கு மூச்சு பயிற்சிகளாலும் உடலுக்கு என்ன பயன் விளையக்கூடும் என்பது பற்றி பலருக்கும் சந்தேகங்கள் இருப்பது இயல்பு. பொதுவாக அதுவொரு ஆரோக்கிய பயிற்சி என்பது மட்டும் தான் வெளிப்படையாக தெரிந்த செய்தி.
ஆனால் யோகாசனப்பயிற்சிகளும், சுவாச ஒழுங்கு மூச்சு பயிற்சிகளும் உடலில் அரிதான பல மாற்றங்களை நிகழ்த்துகின்றன என்பதே உண்மை. இன்றைக்கு இயங்கும் கம்பியில்லா தகவல் தொடர்பு சாதனங்கள் அனைத்தும் கண்ணுக்கு தெரியாத மின்காந்த அலைகள் மூலம் செயல்படுகின்றன என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம்.
நமது மூளையும் ஏறக்குறைய இதே அடிப்படையில் செயல்பட்டு தான் மனிதனை உலகத்தின் உயர்ந்த பரிணாம அதிசயமாக மாற்றியிருக்கிறது. இன்று வரை மனித மூளையின் முழு ஆற்றலின் வெளிப்பாட்டையும் அறிந்திருக்க முடியவில்லை. ஆனால் வியத்தகு செயல்பாட்டை கொண்ட சில விஞ்ஞானிகளால் மட்டும் உலகின் அரிதான கண்டுபிடிப்புகளை வெளியிட முடிந்திருக்கிறது. இதற்கு காரணம், அவர்களின் உடல் அதிகமான மின்காந்த செயற்பாடுகளை கொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.
இதை வேறுவகையில் பார்க்கலாம். இந்த பூமி ஒரு மிகப்பெரிய இயற்கை காந்தம் என்பது உண்மை. இதன் காந்த அலைகள் அதைச்சுற்றிலும் கிட்டத்தட்ட 66 ஆயிரம் மைல்கள் விட்டத்திற்கு ஒரு அடர்த்தியான பரப்பளவில் அலைகளாக விரிந்து கிடக்கிறது. அதன் வட துருவம் வடஅமெரிக்கா வரையிலும், தென்துருவம் தென்விக்டோரியா வரையிலும் படர்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அப்படியானால் இந்த காந்த எல்லைக்குள் வசிக்கிற அனைத்து உயிரினங்களும் மின்காந்த துணுக்குகள் தான் என்பதில் மாற்றமில்லை. மின்காந்த சக்தி விதிகளுக்கு உள்பட்டு தான் இந்த உலகமும், அதனுள் இருக்கும் நமது உடலும், உறுப்புகளும் இயங்குகின்றன.
மின்காந்த விதிகளின்படி நமது உடலும் வடதுருவம், தென்துருவமாக பிரிக்கப்பட்டுள்ளது.
காந்த சக்தியின் அடிப்படையில் உடலை ஆராயும் பொழுது மேலிருந்து கீழாக தலை, கைகள், இடுப்பு வரை மேல்பகுதி வடதுருவமாகவும், இடுப்பிற்கு கீழ்புறம், கால்கள் முதலியவை தென்துருவமாகவும் அமைகின்றன.
பக்கவாட்டில் பார்க்கும் போது வலது கை, முன் கை, வலது பாதி வடதுருவமாகவும், இடது கை, முன் கை என்று உடலின் இடப்புறம் முழுமையும் தென்துருவமாகவும் அமைகின்றன.
உடலின் முன்புறம் அதாவது, நெற்றி, முகம், மார்பு, வயிறு இவைகள் வடதுருவமாகவும், உடலின் பின்புறமான பிடரி, கழுத்தின் பின்புறம், முதுகுத்தண்டு இவைகள் தென்துருவமாகவும் அமைகின்றன.
இந்த உடல் அமைப்பின் நடுநேர் கோட்டில் தான் மனித உடலை இயக்கும் 7 ஆதார சக்கரங்கள் (சுரப்பிகள்) அமைந்துள்ளன. இந்த சுரப்பிகள் முழுமையாக காந்த ஆற்றலின் விதிகளின் அடிப்படையில் சிறப்பாக இயங்கி மனித உடலையும், மூளையின் ஆற்றலையும் செம்மைப்படுத்துகின்றன.
விஞ்ஞானிகளும், மருத்துவஉலகமும் மனித உடற்கூறு இயலையும், பிரபஞ்சத்தின் சக்தி ஆற்றல் அந்த உடலில் செயல்படும் விதத்தையும் கணிக்கும் முன்பே, யோக சக்தியில் வளர்ந்த யோகிகள் மனித உடலின் இந்த சக்கரங்களையும், அவற்றில் மின்காந்த ஆற்றல் செயல்படும் விதத்தையும் துல்லியமாக கணித்து அந்த ஆற்றலை செழுமைப்படுத்தும் விதத்தையும் உலகிற்கு அளித்தனர். அது தான் யோகாசனங்களும், மூச்சுப்பயிற்சியும். இதில் மூச்சுப்பயிற்சி பல வகைகளில் கற்பிக்கப்பட்டாலும், அதில் சுவாச ஒழுங்கு என்ற முச்சுபயிற்சி மட்டுமே சரியானது ஆகும். மற்ற வாசியோகப்பயிற்சிகள் உடலில் உள்ள செல்களை சிதைத்து சின்னாபிண்ணமாக்கிவிடும் என்றால் அது மிகையாகாது.
யோகிகளின் கூற்றுப்படி, மனித உடல் 7 சக்கரங்களில் இருந்து இருகூறுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
சக்கரம் என்றால் ஒரு குறிப்பிட்ட இடம் அல்லது முனைப்பு. இந்த குறிப்பிட்ட இடங்களில் உள்ள நரம்புகள் மூளையில் உள்ள முக்கியமான நாளமில்லா சுரப்பிகளோடு தொடர்புடையவை.
இந்த குறிப்பிட்ட சக்கரங்கள் அல்லது முனைப்புகள் தூண்டப்படும் போது அந்த குறிப்பிட்ட நாளமில்லா சுரப்பிகள் செவ்வனே இயங்கி உடல் உறுப்புகளை சரியாக இயங்க செய்கின்றன.
இந்த சக்கரங்களின் மூலமாகவே உடலின் ஜீவசக்தி பல பாகங்களுக்கும் அனுப்பபடுகிறது என்கிறார்கள். ஆக, இந்த சக்கரங்கள் இயங்க தேவையான சரியான மின்காந்த ஆற்றலை அவற்றுக்கு நாம் தொடர்ந்து அளித்திட வேண்டும். அதற்கு உதவுவது தான் யோகசனங்களும், சுவாச ஒழுங்கு மூச்சுப்பயிற்சியும் ஆகும்.
இப்போது இந்த சக்கரங்கள் என்று சொல்லப்படக்கூடிய 7 ஆதாரங்களையும் மருத்துவரீதியாக பார்க்கலாம்.
1. மூலாதார சக்கரம்
==================
இந்த சக்கரம் எருவாய்க்கும் கருவாய்க்கும் இடையில் இருக்கிறது. இதுவே குண்டலி சக்தியின் இருப்பிடம் என்பார்கள். இது பாலுணர்வு தொடர்பான உணர்வுகளுக்கு இருப்பிடம். இதன் மையம் மூளையின் அடிப்புறமாகும். ஆண்களில் டெஸ்டிஸ் எனப்படும் உறுப்பும், பெண்களில் சினைப்பையும் இதன் பிரதிபலிப்பாகும்.
2. சுவாதிஷ்டான சக்கரம்
======================
இந்த இடத்தில் சோலார் பிளக்ஸ் என்று சொல்லப்படும் நரம்பு மண்டலம் உள்ளது. இது அட்ரீனல் சுரப்பிகளுடனும், கழிவு மண்டலத்துடனும் தொடர்புள்ளது. சிறுநீரக மண்டலம் இருக்கும் இந்த இடம் ஆண்குறி அல்லது பெண்குறி. இது குதத்தையும், கால்களையும் கட்டுப்படுத்தக்கூடியது. கர்ப்பபையும், சினைப்பையும் இதன் கட்டுப்பாட்டில் உள்ளது.
3. மணிபூரக சக்கரம்
==================
இதன் இருப்பிடம் தொப்புள். இது அக்கினி சக்தியாக கருதப்படுகிறது. இது கணையத்துடன் தொடர்புடையது. வயிறு, குடல், கல்லீரல், பித்தப்பை, கணையம் போன்றவை இதன் கட்டுப்பாட்டில் உள்ளன.
4. அனாகத சக்கரம்
=================
இது இருக்கும் இடம் இதயம். இது தைமஸ் சுரப்பியுடன் தொடர்புடையது. இது இதயத்தையும், நுரையீரலையும் கட்டுப்படுத்துகிறது. வேகஸ் நரம்பு மண்டலம் என்னும் அதி முக்கிய நரம்பு மண்டலம் இதன் கட்டுப்பாட்டில் உள்ளது.
5. விசுக்தி சக்கரம்
================
இதன் இருப்பிடம் கழுத்து மற்றும் பின்புற எலும்புகள் அமைந்துள்ள இடம். காதுகள், மூக்கு, தொண்டை, கண்கள், உணவுக்குழல், பாரா தைராய்டு ஆகியவை இதன்கட்டுப்பாட்டில் உள்ளன. இது தைராய்டு சுரப்பியை குறிக்கிறது.
6. ஆக்ஞா சக்கரம்
================
இது முளையின் நடுமையத்தில் வெளிப்புறமாக இரண்டு புருவ மத்தியில் அமைந்துள்ளது. இது பீனியல் கிளாண்ட் எனப்படும் சுரப்பியைக் குறிக்கிறது. இந்த பீனியல் கிளாண்டுக்கு மூன்றாவது கண் என்ற பெயர் உண்டு. இது மூளையின் கீழ்புறத்தையும், காதுகளையும், மூக்கையும் கட்டுப்படுத்துகிறது.
7. சகஸ்ரஹார சக்கரம்
====================
இது பிட்யூட்டரி சுரப்பியை குறிக்கிறது. தலையின் உச்சியில் அமைந்துள்ளது. பிட்யூட்டரி நாளமில்லா சுரப்பிகளின் தலைவன் என்ற பெருமை கொண்டது. அதீதமான அறிவுத்திறனை ஒருவர் பெறுவதற்கு இந்த பிட்யூட்டரி சுரப்பியின் ஆற்றல் தான் காரணம்.
ஆக..இந்த 7 சக்கரங்களை தூண்டி நன்றாக செயல்படும் படி செய்யவும், உடலுக்கு வரும் நோய்களை தடுத்து நிறுத்தவும் வந்த நோய்களை குணப்படுத்தவும் உடலுக்கு இயங்கும் காந்தசக்தியை வலுப்படுத்தவும் சுவாச ஒழுங்கு மூச்சுப்பயிற்சியும், யோகப்பயிற்சியும் உதவுகின்றன.
அதாவது நமது உடலுக்குள் வலுவான காந்தசக்தியை இந்த பயிற்சிகள் உருவாக்குகின்றன. ஒருவர் மிகவும் சராசரி அறிவுத்திறனுடன், எதிலும் பிடிப்பில்லாமல் இயங்குகின்றார் என்று வைத்துக் கொள்வோம்.
அவர் இந்த பயிற்சிகளை செய்து வருகையில் மேற்கண்ட சகஸ்ரார சக்கரம் தூண்டப்பட்டு மிகுந்த சுறுசுறுப்புடனும், நல்ல நினைவாற்றலுடனும், மிகுந்த திறனுடனும் விளங்கும் நபராக மாற்றத்தை காண முடியும்.
இந்த மின்காந்த சக்திகள் எப்படி நோய்களை குணப்படுத்துகின்றன என்பதற்கு வேறு ஒரு உதாரணத்தையும் கூறலாம்.
நமது அன்றாட வாழ்வில் காற்றில் கலந்திருக்கும் எத்தனையோ நுண்கிருமிகள் நமது மூச்சின் வழியாக உள்ளிழுக்கப்பட்டு உடலுக்குள் புகுந்து விடுகின்றன. ஆனால் இந்த நுண்கிருமிகளை எல்லாம் நமது ரத்தத்தின் வெள்ளை அணுக்கள் கொன்று போட்டு உடலை பாதுகாக்கின்றன. அதாவது குறிப்பிடத்தக்க வெப்பம் உடலில் உருவாக்கப்பட்டு இந்த நோய்க்கிருமிகள் கொல்லப்படுகின்றன என்பதே உண்மை. இது போல் அதீதமான திறனுடைய வெப்பத்தை அதாவது சுத்த கணலை யோகாபயிற்சியும், சுவாச ஒழுங்கு மூச்சு பயிற்சியும் நமக்கு தருகிறது.
இதுதவிர பயிற்சிகளின் உச்சத்தில் ஒருவரால் கண்களால் கூட பொருள்களை நகர்த்தும் (சைக்கோகீனசிஸ்) என்ற ஆற்றலை பெறும் அளவுக்கு கூட முன்னேற முடியும் என்கிறார்கள் நிபுணர்கள். சிவனின் மூன்றாவது கண் என்பது கூட ஒரு வித ஆற்றலின் வெளிப்பாட்டு வடிவம் தான்.
இந்த சுவாச ஒழுங்கு மூச்சுப்பயிற்சியினால் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலுப்படுத்தப்படுகிறது. இதனால் உடலுக்குள் நுழையும் கிருமிகள் தடுக்கப்பட்டு கொல்லப்படுகின்றன. உடல் எப்போதும் ஆரோக்கியமாகவும், புத்துணர்வுடனும் இருக்கிறது.
சித்தர்களின் குரல்'s photo.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...