Wednesday 11 August 2021

வேளிர்கள்

 

வேளிர்கள் 
 
ஆயர்களுக்கு உரிமையுடைய ஆநிரைகளைக் திருடர்கள் மற்றும் பகைவர்கள் கவர்ந்து சென்று விடுவார்கள் . வேட்டுவ குடியை சேர்ந்த தலைவர் கவர்ந்த சென்றவர்களோடு சண்டையிட்டு ஆநிரைகளை மீட்டு ஆயர் குடியிடம் கொடுத்தார்கள் . ஆயர் குடியினர் ஆநிரைகளை மீட்டு கொடுத்த வேட்டுவ குடி தலைவர்களை விரும்பி தங்களது தலைவர்களாக ஏற்று கொண்டார்கள் .பிறகு அந்த வேட்டுவ குடி தலைவரை வேள் என்று அழைக்க பட்டான்.
·இதன் தொடர்ச்சியாக பூசல் நிகழும் போது மட்டுமின்றி, பூசல் நிகழாத காலங்களிலும் வேட்டுவ குடித்தலைவன் ஆயர்களுக்கு தேவைப்பட்டான்.வேட்டுவ குடியை சேர்ந்த வேளிர்கள் அரச அமைப்பை உருவாக்கினார்கள் .
‘வேட்டுவ குடியை சேர்ந்த தலைவனை பிற மக்களால் தலைவனாக விரும்பி ஏற்றுக்கொள்ளப் பெற்றதையே வேள் என்ற சொல் கூறுகின்றது’
காலப்போக்கில் வேள் என்ற சொல் பட்டமாக மாறிவிட்டது. வேட்டுவ குடித்தலைவரைக் குறிக்கும் சொல்லாக இருந்த வேள் வேந்தனிடம் அதிகாரிகளாக இருந்த அனைவருக்கும் பட்டபெயராக கொடுக்க பட்டது .
வேள் என்ற சொல் ஒளி,வேளாண்மை,விருந்தோம்பல் ,கொடை,உதவி,வேளாண் என்ற கருத்தோட்டத்துடன் தொடர்புடையதன்று.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...