Monday 23 August 2021

குடும்ப ஆரோக்கியத்திற்கான 10 மருத்துவ கட்டளைகள்

             குடும்ப ஆரோக்கியத்திற்கான 10 மருத்துவ கட்டளைகள்

    குடும்ப ஆரோக்கியத்திற்கான 10 மருத்துவ கட்டளைகள் இதெல்லாம் உங்க நலனுக்காக..!!
Dr.#சிவராமன் அவர்களின் பேச்சின் சுருக்கம்...!!
1--மைதாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் வேண்டாம்..பிஸ்கட், பிரட், புரோட்டாவில் முற்றிலும் ஊட்டச்சத்துக்கள் இல்லை என்பதால் அல்ல, அதில் மெல்லக்கொள்ளும் ரசாயனம் சார்ந்த விஷம் உள்ளது. இதை கொடுத்தால் உங்கள் கண்முன்னே உங்கள் சந்ததிகளின் அழிவை காண்பீர்கள். விழித்து கொள்ளுங்கள்..
2-சாக்லெட் வேண்டாம்--வேண்டிய அளவு கடலை மிட்டாய், எள்ளுமிட்டாய் வாங்கிகொடுங்கள்...
3-#pizza, #burgers தவிர்க்கவும்.
4-கோதுமையை அரைத்து பயன்படுத்துங்கள்
கடையில் உள்ள ஆட்டாவில், சப்பாத்தி உப்பவும் மற்றும் மிருதுவாக்கவும் செயர்க்கையான ரசாயனம் கலப்படம் செய்யப்படுகிறது...
5-பழங்களான கொய்யா, வாழை, பப்பாளி, விதை உள்ள திராட்சை மற்றும் Melon போன்ற பழவகைகளை உணவாக சேர்த்து கொள்ளுங்கள்.
6-#corn-flakes, #oats வேண்டாமே..
7- தினைவகைகளான கம்பு,சோளம் ,ராகி, வரகு, சாமை, குதிரைவாலி போன்றவற்றை உணவில் பெருமளவு பயன்படுத்தவும்..
8-வெள்ளை சர்க்கரை வேண்டாமே அதற்கு பதிலாக தேன், பனைவெல்லம், பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு இனிப்புசுவைக்காக பயன்படுத்தவும்..
9-black tea without sugar good.. சுக்கு, கொத்தமல்லி காபி நல்லது ..யார் வீட்டிற்கு சென்றாலும் குழந்தைகளுக்கு சாக்லெட் பிஸ்கட் வாங்கி செல்லாதீர்கள்..மாறாக கடலைமிட்டாய், எள்ளுமிட்டாய் வாங்கிசெல்லுங்கள் ஏனெனில் உடலுக்கு தேவையான முழு பலமும் இந்த பொருட்களில் கொட்டிக்கிடக்கிறது..
ஆகையால் நாம் தான் முதலில் திருந்தவேண்டும்..
பிள்ளைகளுக்கு அனைத்தையும் தருவதாய்
மார்தட்டி கொள்ளும் நாம் விஷத்தை கொடுத்து இளம்தளிர்களை கருக்க வேண்டாம்..நம் கையில் பிள்ளைகளின் எதிர்காலம் என்பது காசு,பணம் அல்ல, ஆரோக்கியமும் ,குணமுமே...
உணவின் பின்னால் குணமாற்றமும் உண்டு
Hyper activity because of this types of food also அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்
இனியும் நாம் தூங்ககூடாது.அவர் கூறிய வரிகள் இன்னும் ஈட்டியாய் நெஞ்சில் வலியை உண்டாக்குகிறது...
பிள்ளைகளின் உடலை விஷத்தை கொடுத்து சம்மட்டியால் அடித்து கொண்டிருக்கும் நாம் பிள்ளைகளுக்கு பொறுமையாக கூறி புரிய வைப்போம்..
ஆரோக்கியத்துடன் வாழ்வதோடு் நல்ல விசயங்களை படித்து விட்டு ஷேர் பண்ணுவோம்.....
#என்கருத்து:
ஓர் ஆண் தெரிந்து கொள்ளும் விழிப்புணர்வானது
அவனை மட்டுமே மாற்றும்....!!!
ஒர் பெண் தெரிந்து கொண்ட விழிப்புணர்வு சார்ந்த விடயமானது அந்த குடும்பத்தையேயன்றி வம்சத்தையே மாற்றும்....எனவே. தயவுகூர்ந்து இதை போன்ற பாரம்பரிய விழிப்புணர்வு சார்ந்த விடயங்களை உங்கள் குடும்ப பெண்களுக்கு முதலில் சொல்லிபுரிய வையுங்கள்...
மாற்றம் நிச்சயம உண்டாவதோடு, அனைவரின் ஆரோக்கியமும் மேம்படும் என்பதில் ஐயமில்லை....!!!

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...