Wednesday 11 August 2021

 வல் வில் ஓரி

    புல்லை வேட்டுவர் குடியை சேர்ந்த மன்னர் வல் வில் ஓரி.
வல் வில் ஓரியின் வம்சவழியினர்(கொல்லி மழவர்) புல்லை வேட்டுவ குலத்தவர்கள் (கொல்லி வேட்டுவர் ) ஆவார்கள் .
வல்வில் என்று அவன் பெயரின் அடைமொழி குறிப்பிடுகிறது. வில்லுக்கு உரிமையுடையவர்கள் யார்? வேட்டுவர்கள். ஓரியைப் பற்றி வன்பரணர் பாடிய பாடல்,
………யாம்
நாட்டிடன் நாட்டிடன் வருதும் ஈங்கோர்
வேட்டுவர் இல்லை நின் ஒப்போர் (புறம் 152)
என்று விறலியர் புகழ்வதாகக் கூறுகின்றது. பல நாடுகளுக்குச் சென்று வருபவர்கள் நாங்கள்; ஆனால் எங்கும் உனக்கு நிகரான வேட்டுவர் எவரும் இல்லை என்பது இதன் பொருள். ஆக வல்வில் ஓரி வேட்டுவர் சாதியைச் சேர்ந்தவன் என்பது உறுதிப்படுகிறது.
வல் வில் ஓரியின் வம்சாவளியினர் கொல்லி மழவர்கள் ஆவார்கள் .
சுந்தர சோழனின் 5ஆவது (கி பி 961) மற்றும் 10ஆவது (கி பி 966) ஆட்சி ஆண்டில் திருச்செங்கோடு செப்பேடுகள் வெளி இடப்பட்டது.(S.I.I Vol 3,part4,No 212,213 ) .
'...கொல்லி மழவன் ஒற்றியூரன் பிரதி கண்டவர்மன் என்னாட்டு தூசியூர் தென் புல தூநிலம் ----' (திருச்செங்கோடு செப்பேடுகள்)
'....தூசியூர் நகர '(நாமக்கல் .பொம்மசமுத்திரம் கல்வெட்டு .கி பி 947,பராந்தகன் 1)
கொல்லி மழவன் இந்த தூசியூர்ரை சேர்ந்தவன் நாமக்கலில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது .
'..பிரதி கண்டன் தரசோழன்..'
(நாமக்கல் ,கொல்லிமலை கல்வெட்டு ,உத்தம சோழன் ,கி பி 980)
கொல்லி மழவன் பிரதிகண்டன் சுந்தர சோழனை (கொல்லி மழவன் ஒற்றியூரன் பிரதிகண்ட வர்மனின் மகன் ) பிரதிகண்டன் தரசோழன்( சுந்தர சோழன் ) என்று கல்வெட்டுகளில் கூறபட்டு உள்ளது.
கொடும்பாளுரை ஆட்சி செய்த குறுநில மன்னன் சிறிய வேளான் மற்றும் நாமக்கலை ஆட்சி செய்த குறுநில மன்னன் கொல்லி மழவன் ஒற்றியூரன் பிரதிகண்ட வர்மன் இந்த இரண்டு குறுநில மன்னர்களும் சுந்தர சோழனின் 9 ஆம் ஆட்சி ஆண்டு ஈழ படையெடுப்புக்கு(கி பி 965) ஆதரவாக இருந்தார்கள் என்பதை கொடும்பாலூர் கல்வெட்டு (S.I.I Vol 3,part 3 and iv,page 476,Annual report on epigrphy for 1913-14,part 2,paragraph 15) மற்றும் திருச்செங்கோடு செப்பேடுகள் மூலம் அறியலாம் .
'...கொல்லி கிரிக் குடையவர்கள் கூறிய னாடுதனிலே வாசகங் கூறி வைத்து கொண்ட பெரியவர்கள் ...' ( அல்லால இளையான் செப்பேடு)
கொல்லி மலைக்கு உரிமை படைத்தவர்கள் வேட்டுவ குலத்தவர்கள் என்று அல்லால இளையான் செப்பேடு கூறுகிறது .
வேட்டுவ குலங்களில் கொல்லி வேட்டுவ குலம் இருக்கிறது .
வல் வில் ஓரி வேட்டுவ குலத்தை சேந்தவன் என்று புறம் 152 கூறுகிறது .
புல்லை வேட்டுவரில் காவேரி நாடாள்வான் தேசி ஆளபிறந்தான் மும்முடி சோழ சக்கரவர்த்தி ஆன அங்கராயன் என்பவரை பற்றி நாமக்கல் (மழ கொங்கு ) கல்வெட்டு (S.I.I Vol 22,part 1,No-9) கூறுகிறது .
மழ கொங்கு நாட்டை ஆட்சி செய்த வேட்டுவ குறுநில மன்னன்(கொல்லி மழவன் ) புல்லை வேட்டுவ குல தலைவனாக இருந்தவன் . சோழ பேரரசி செம்பியன் மாதேவி புல்லை வேட்டுவ குல தலைவனின் பெண் . கி பி 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாமக்கல் கல்வெட்டு புல்லை வேட்டுவரில் காவேரி நாடாள்வான் என்பவரை பற்றி கூறுகிறது .
கொல்லி மழவனின் வம்சாவளியினர் புல்லை வேட்டுவ குலத்தவர்கள் ஆவார்கள் .இன்று புல்லை வேட்டுவ குலத்தின் குல தெய்வம் ராசா கோயில் (நாமக்கல் ,பள்ளிபாளையம்) ஆகும்

 

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...