Wednesday 11 August 2021

தலையூர் காளி மன்னன்

 

                                                தலையூர் காளி மன்னன் 

    கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் ஆண்ட பரம்பரை எனவும் உயர்ந்த சாதியினர் என கூறி கொள்வதற்கும்,தமிழ் மண்ணை ஆண்ட வேட்டுவ குடியினரை (வேட்டுவ கவுண்டர் ) இழிவுபடுத்தி பொதுமக்கள் மத்தியில் பரப்புவதற்காகவும் ஒரு கற்பனை கதபாத்திரத்தை (தலையூர் காளி மன்னன் ) உருவாக்கினார்கள் .
'வாங்கலான் பாட்டனவன் வாழ்வு சிறுகாற்புலியூர்
தீங்கு செய்த செல்லத்தான் சிற்றப்பன் -ஓங்கு தந்தை
நாமமொழி குன்றனையன் நன்னுநகர் சிற்றலை
தாமரை நாட்சியார் தாய் , என்னும் வெண்பா கிடைத்து இருக்கிறது என்று தி .அ முத்துசாமி கோனார் (கிபி 1858-1944)அவர்கள் எழுதிய கொங்கு நாடு அடைவு இயல் என்னும் நூலில் கூறி உள்ளார் .
கொங்கு வெள்ளாள இனத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தில் சண்டை சக்கரவுகள் இருந்ததையும் ,அந்த குடும்பத்தினர் கொங்கு நாட்டில் கிழங்கு நாட்டு (வேட்டமங்கலம் ,நொய்யல் ,மறவாபாளையம்,துக்காச்சி ,வடிஉடையமங்கலம் ,ஆவுடையார் பாறை பகுதிகள் ) திருகாபுலியூர் (சிறுகாற்புலியூர்) என்னும் ஊரை சேர்ந்தவர்கள் என்பதையும் இந்த வெண்பா உறுதிபடுத்துகிறது . தங்காய் என்னும் தங்கை தன் மூத்தோரை அண்ணன்மார் என்றதால் இப்பெயர் வந்தது .
இந்த சண்டை சக்கரவுகள் 60 ஆண்டுகளுக்கு முன் நடந்தது தி .அ முத்துசாமி கோனார் எழுதிய கொங்கு நாடு அடைவு இயல் என்னும் நூலில் கூறி உள்ளார் .ஆக இந்த சண்டை சக்கரவுகள் ஏறக்குறைய கிபி 1870 ஆம் ஆண்டுகளில் நடந்து இருக்க வேண்டும் .நடந்த நிகழ்வுகளை வெண்பாவாக பாடியுள்ளார்கள் .
'கொங்கு நாட்டினராகிய இவர்களை பொன்னிவள நாடு என்று யாரோ ஒருவர் பாடி அச்சிட்டுயுள்ளார்கள் ' என்று தி .அ முத்துசாமி கோனார் எழுதிய கொங்கு நாடு அடைவு இயல் என்னும் நூலில் கூறி உள்ளார்.
வேட்டுவ இனத்தின் மீது வெறுப்பு உணர்வு கொண்ட ஒரு சாதி வெறி பிடித்த வெள்ளாளனாள் பாடி அச்சிட பட்டு இருக்க வேண்டும் .இதனால்தான் 'பொன்னழகர் என்னும் கள்ளழகர் அம்மனை ' எனும் நூலுக்கு ஆசிரியர் பெயர் இல்லாமல் அச்சிட பட்டு இருக்கிறது .
கிபி 1934-40 இந்த காலகட்டங்களில் 4855 வரிகள் ,128 பக்கங்களை கொண்டு 'பொன்னழகர் என்னும் கள்ளழகர் அம்மனை ' எனும் நூலை அச்சிட பட்டு இருக்க வேண்டும்.
கொங்கு கிழங்கு நாட்டு திருகா புலியூர் என்ற ஊரை சேர்ந்த ஒரு வெள்ளாள குடும்பத்தில் நடந்த சண்டை சக்கரவுகளை ,வேட்டுவ இனத்துக்கும் ,வெள்ளாள இனத்துக்கும் நடந்த சண்டையாக 'பொன்னழகர் என்னும் கள்ளழகர் அம்மனை ' எனும் நூலில் கூறப்பட்டு உள்ளது .மேலும் திருகா புலியூர் என்ற ஊரில் உழவு தொழில் செய்து வந்த பொன்னர் ,சங்கர் இவர்கள் பொன்னி வள நாட்டை சேர்ந்தவர்களாகவும்,மன்னர்களாகவும் கூறபடுகிறது .மேலும் வேட்டுவ குலத்தவர்களை கெட்டவர்களாகவும் ,பன்றி வளர்ப்பவர்களாகவும் ,நாய் பிடிப்பவர்களாகவும் ,பெண் பித்தர்களாகவும் ,நாகரிகம் இல்லாதவர்களாகவும் ,மோசமானவர்களாகவும் கூறபடுகிறது.
தமிழ் மண்ணை ஆண்ட வேட்டுவ குலத்தவர்களை இழிவுபடுத்தவும் ,உழவு தொழில் செய்த கொங்கு வெள்ளாளர்களை ஆண்ட பரம்பரையினர் என கூறி கொள்ளவும் 'பொன்னழகர் என்னும் கள்ளழகர் அம்மனை ' எனும் நூல் உருவாக்க பட்டு உள்ளது . இந்த நூலை அடிப்படையாக வைத்து அண்ணன்மார் சாமி கதை ,குன்னுடையன் கதை ,தங்காள் கதை என பலநூல்களை எழுதி விட்டு இந்த நூல்கள் ஏட்டு பிரதியில் இருந்து எடுத்து எழுத பட்டதாக பச்சை பொய்யை கூறி இருக்கிறார்கள் . 'வெட்ட வெட்ட தலையும் ' என பொன்னர் ,வேட்டுவருக்கு வரம் கொடுத்ததை உண்மை என மக்களை நம்ப வைப்பதற்கு 'வெட்ட வெட்ட தலைக்கும் வேட்டுவ படை ' எனும் போலிபழமொழிகளை மக்கள் மத்தியில் பரப்பி விட்டு இருக்கிறார்கள் .
அண்ணன்மார் (பெரியண்ணன் -சின்னணன் ) கடவுள்களோடு ,அண்ணன்மார்(பொன்னர் -சங்கர் ) களை தொடர்பு படுத்தி வுள்ளர்கள் .
மணப்பாறை பகுதியில் இருந்த அண்ணன்மார் (பெரியண்ணன் -சின்னணன் ) கடவுள்களை முத்தரையர் இனத்தினர் ஆரம்பத்தில் வழிபட்டு வந்தார்கள் .காலபோக்கில் இறந்த முத்தரையர் இனத்தை சேர்ந்த முன்னோர்களுக்கு அந்த கோயில்களில் முத்தரையர் இனத்தினர் கற்களை நட்டு வழிபட்டு வந்தார்கள். கொங்கு வெள்ளாளர்கள் உருவாக்கிய கட்டு கதையை (பொன்னழகர் என்னும் கள்ளழகர் அம்மனை ) அண்ணன்மார் (பெரியண்ணன் -சின்னணன் ) கடவுள்களோடு தொடர்பு படுத்திய பிறகு முத்தரையர் இனத்தை சேர்ந்த கற்களை பொன்னர் -சங்கர் உடைய கற்களாக எழுதி கொண்டார்கள் .
அண்ணன்மார் (பெரியண்ணன் -சின்னணன் ) கதை :
அண்ணன்மார்கள் (பெரியண்ணன் -சின்னணன் ) பர்வத ராஜா குலத்தை சேர்ந்தவர்கள் .இவர்களுடைய தங்கை பெயர் லோக்கமதா .பல்லவர்கள் உதவியோடு ஜைனர்கள் பர்வத ராஜா குலத்திற்கு தீங்கு செய்து வந்தார்கள் .இதனால் அண்ணன்மார்கள் (பெரியண்ணன் -சின்னணன் ) தீங்கு செய்தவர்களை அளிப்பார்கள் .பிறகு பாண்டிய நாட்டில் விசர் என்னுமிடத்தில் அண்ணன்மார்கள் (பெரியண்ணன் -சின்னணன் ) மற்றும் லோக்கமதா இவர்களுக்கு சிலை வைத்து வழிபட்டதை பற்றி கூறுகிறது என்று மு அருணாசலம் தனது நாட்டுபுறபாடல் எனும் நூலில் (கிபி 1976) கூறியுள்ளார் .
வசந்தபுரம் ,கவுண்டம்பாளையம் ,எழுமாத்தூர் போன்ற இடங்களில் உள்ள அண்ணன்மார்கள் (பெரியண்ணன் -சின்னணன் ) கடவுள்களை வேட்டுவ இனத்தினர் வழிபட்டு வருகிறார்கள் .

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...