Sunday, 11 January 2015

          

             ஊழலுக்காக இந்திய பொது ஊழியர்கள் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள                                                        சட்டங்களின் படி அபராதம் விதிக்கப்படும்:
     ஊழலுக்கு எதிரான சட்டம்ஊழல் செய்யும் அரசு ஊழியர்கள் மற்றும் அலுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வெள்ளைய ஆங்கில அரசின் இந்திய தண்டனைச் சட்டத்தில் போதிய வழி இல்லாதபடியால், விடுதலை அடைந்த இந்திய அரசு 1947ல் ஊழல் தடுப்புச் சட்டம் இயற்றியது. பின் இதே சட்டத்தை பல்வேறு திருத்தங்களுடன் தற்போது நடைமுறையில் உள்ள ஊழல் தடுப்புச் சட்டம் 1988ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின்படி, கையூட்டு மற்றும் ஊழல் புரிந்த மாநில, மத்திய அமைச்சர்கள், சட்டம் இயற்றும் அதிகாரம் உள்ள மக்கள்மன்ற பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள், அரசிடம் ஊதியம் பெறும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள், அரசிடம் நிதிஉதவி பெறும் அரசு சாரா நிறுவனங்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்
     ஊழலுக்காக இந்திய பொது ஊழியர்கள் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்களின் படி அபராதம் விதிக்கப்படும்:

     இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம், 1860வருமான வரி சட்டம் வழக்கு பிரிவு, 1961ஊழல் தடுப்பு சட்டம், 1988இரவல் பெயரில் பரிமாற்றங்களை தடுப்பதற்கு, இரவல் பெயரில் பரிமாற்றங்கள் (தடுப்பு) சட்டம், 1988.பணமோசடி தடுப்பு சட்டம், 20022005 ஆம் ஆண்டு முதல் ஊழலுக்கு எதிரான ஐ.நா. மாநாட்டில் (ஒப்புதல் இல்லை) இந்தியா ஒரு உறுப்பினராக உள்ளது. அந்த மாநாடு ஊழலின் வகைகளையும் அவைகளை தடுக்க சில முறைகளையும் குறிப்பிட்டுள்ளது. 2011 லோக்பால் மசோதா, மக்களவையின் முன் நிலுவையில் உள்ளது.

            இந்திய நாடாளுமன்றத்தின் கீழ்சபை, விசில் புளோயர் பாதுகாப்பு மசோதாவை(The Whistle Blowers Protection Bill), 2011 நிறைவேற்றியது. இந்த மசோதா இப்போது அதன் மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளது.

                      ஊழல் குற்றங்களுக்கான தண்டனைகள்

ஊழல் தடுப்புச் சட்டம், 1988 பிரிவு 7, 8, 9 மற்றும் 10ன் கீழ் ஊழல் செய்தவரின் குற்றம் நிருபிக்கப்பட்டால், அபராதத்துடன் அல்லது அபராதம் இன்றியோ குறைந்த பட்சம் ஆறு மாதங்களும், அதிக பட்சம் ஐந்து ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்படலாம்.

ஊழல் தடுப்புச் சட்டம் 1988, பிரிவு 13ன் கீழ் ஊதியத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த குற்றத்திற்கு குறைந்த பட்சம் ஒரு ஆண்டும், அதிக பட்சம் பத்து ஆண்டுகளும் சிறை தண்டனை உண்டு. மேலும் ஊழலின் மூலம் சேர்த்த அசையும் சொத்துகளையும், அசையாச்சொத்துகளையும் கைப்பற்றவும், முடக்கவும் அரசுக்கு அதிகாரம் உண்டு.

நம் நாட்டில் சேர்த்த ஊழலின் மூலம் சேர்த்த பணத்தை வெளிநாட்டில் பதுக்கி வைத்தும், பிறகு அதை இந்தியாவிற்கு திரும்ப கொண்டு வருவோர் மீது பணச்சலவைத் தடுப்புச் சட்டம், 2002 (Prevention of Money Launering Act, 2002)ன்படி தண்டணைக்குரிய குற்றமாகும்.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...