Sunday 18 September 2016

உலகின் மிகப்பெரிய வழிபடுதலம்!

                     உலகின் மிகப்பெரிய வழிபடுதலம்!


உலகின் மிகப்பெரிய கோவில் எனும்போது இந்து சமையத்தை மட்டுமே குறிக்கிறது. அனால், உலகின் மிகப்பெரிய வழிபடுதலம்  என்று சொன்னாலும் இதுதான்.
தமிழ் மன்னன் இரண்டாம் சூரிய வர்மன்
கடந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவினால் கூட - இன்று வரை - இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை! வானத்தில் 1000 அடிக்கு மேல் சென்று விமானத்தில் இருந்து படம் எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் ?




இன்றைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இதைப் போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார். ஆனால்,  எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில், நமது முன்னோர்களின் மதிநுட்பத்தால் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளதாம். இதன் சிறப்பு: கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் "தேசிய சின்னமாக" பொறிக்கப்பட்டுள்ளது.

 கம்போடியாவிலுள்ள அங்கோர் வாட் கோவிலானது தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உலகின் மிகப்பெரிய வழபாட்டு தளமாக செயல்பட்டுவந்தது. இரண்டாம் சூரியவர்மன் என அழைக்கப்பட்ட சோழ மன்னன் கட்டிய இந்த கோவிலானது இன்றளவும் உலகின் மிகப்பெரிய வழிபடுதலமாக உள்ளது. இவருக்கும், அதே காலகட்டத்தில் (கி.பி. 1114) தமிழகத்தில் வாழ்ந்த சோழப்பேரரசர் குலோத்துங்க சோழனுக்குமிடையே குழுவினர்களை பரிமாறிக்கொண்ட உறவு இருந்ததாக வரலாறு கூறுகிறது. ( இவர் சோழ மன்னர்களின் வழியில் வந்தவர் என வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள்.)


நம் தமிழ் மன்னன் ''சூர்யவர்மன்'' கட்டிய உலகின் மிக பெரிய கோயில்.("அங்கோர் வாட்" )

இவர் இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினார். இந்த இடம் தான் அவரின் தலை நகரமாக செயப்பட்டது. ஒரு பெருமையான விஷயம் என்னவென்றால், "விஷ்ணு" கடவுளுக்காக கட்டப்பட்ட இந்த கோயில்தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே மிகவும் பெரியது! இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். 

இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். மீண்டும்,  இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட "சூர்யவர்மன்" இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது.

இதன் பின்னர் ஆறாம் "ஜெயவர்மன்" கைக்கு மாறியது. அவர் புத்தமதத்தை பின்பற்றியவராக இருந்தபடியால், பின்னர் இந்த கோயிலானது  கொஞ்சம் கொஞ்சமாக புத்தர்களின் வழிபாடு தளமாக மாறியது. இப்படியாக ஆரம்ப கால புத்தமத வளர்ச்சிக்கு அடித்தளமாய் அமைந்தது. இறுதி வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது. பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது, அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதிலமடையத்தொடங்கியது.  தீட்டிய மரத்தில் கூர் பார்கின்ற கதையாக இன்று புத்த மதத்தை சேர்ந்தவர்கள் தமிழர்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருவது நினைவுகூறத்தக்கது.

 தாங்கள் மேலும் அறியவும், (நன்றியுடனும்) கீழ்கண்ட இணைப்புகளை சமர்ப்பிக்கிறேன்.

http://en.wikipedia.org/wiki/Suryavarman_II)

http://en.wikipedia.org/wiki/Angkor_Wat

http://kalakalapputamilchat.forumotions.in/t112-topic

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...