Wednesday, 7 January 2015

வங்கிப் பணிகள் - அதி நவீன 
தொழில்நுட்ப வசதிகள்
ஆனாலும் 
சிரமங்களை சந்திக்கும் வாடிக்கையாளர்

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கோர் பேங்கிங் என எந்த கிளைக்கும்
அதே வங்கியின் மற்ற கிளைகளிலிருந்து பணம் செலுத்தலாம்ஏடிஎம் கார்டு
எந்த வங்கியின் இயந்திரத்திலும் பயன்படுத்தலாம்கைபேசியிலிருந்துவங்கி கணக்கை இயக்கலாம்ஏடிஎம் இயந்திரம் வழியாகவேபணப்பரிமாற்றம்பல யுடிலிட்டி பில்கள்   இணையம் வழியாக செலுத்தும்வசதிநெட் பேங்கிங் என தொழில் நுட்ப செளகர்யங்கள் பல அதிகரித்துள்ளபோதிலும்சாதாரணமாக வங்கியின் வாடிக்கையாளர் சந்திக்கும்   சிலபிரச்சனைகளுக்கு அனைவருக்கும் சுமுகமாக விரைவாக தீர்வுகிடைக்கிறதா   என்றால் சந்தேகம்தான் மிஞ்சுகிறது.
நான் பணியாற்றும் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் மாதாந்திரசம்பளம் எனது 
பாரத ஸ்டேட் வங்கி சேமிப்பு கணக்கில் பிரதி மாதம் வரவுவைக்கப்படுகிறது.  இந்நிலையில் ஓரிரு மாதங்கள் முன்பாக எனது ஏடிஎம்கார்டில் லேமினேஷன் உரிந்து   போனதால்அவ்வப்போது சில ஏடிஎம்இயந்திரங்களில் அந்த கார்டை மதிக்காமல்   இயந்திரம் திரும்பத் துப்பும்நிலை ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட வங்கியின் எனது கணக்கு உள்ளதல்லாகுளம்   கிளையை அணுகி மாற்றுக் கார்டு வேண்டும் என கேட்டபோதுஎன்னை எதிர்கொண்ட (வடமாநில - அதாவது தமிழ் புரிவதில்,  பேசுவதில் சிரமம் உள்ளஅலுவலர்வங்கி மேலாளர் அறையின் வெளிப்புறகண்ணாடியில் உள்ள ஸ்டிக்கரை காண்பித்து அதில் உள்ள   நம்பர்களில்ஏதாவது ஒன்றுடன் தொடர்பு கொண்டு தெரிவியுங்கள் என்றார். (வாடிக்கையாளர் சேவை மைய எண்கள் அவை)
அதில் ஒரு நம்பரை எனது கைபேசியிலிருந்து அழைத்தபோதுஹிந்தியில்   சம்சாரிக்க 1 அழுத்துங்கள்ஆங்கிலத்தில் செப்ப 2அழுத்துங்கள்,   தமிழில் பேச 3  அழுத்துங்கள் என்கிற வகையிலான பதிவுசெய்யப்பட்ட குரல் கேட்கவும்இது கேட்கும் ஒவ்வொரு கேள்விக்காக பதில்அளிக்க நமது அலுவலகம் சென்று விடுவோம்.  ஏற்கனவே ஒரு   மணி நேரம்மட்டுமே அவகாசம் கேட்டு வந்திருக்கிறோம் என எனது இருப்பிடம் வந்து-பின்னர் அதே எண்ணை தொடர்பு கொண்டு அதுசொல்லியவற்றையெல்லாம் கேட்டபின்வங்கியின் வாடிக்கையாளர்சேவை மைய உதவியாளருடன் தொடர்பு கொள்ளும்   பாக்கியம்சில பலஇசை மெட்டுக்களை கேட்டு காத்திருந்தவுடன் கிடைத்ததுஅவரும் எனதுகணக்கு எண்பிறந்த தேதி போன்ற சில விபரங்களை கேட்டு பேசுவதுசம்மந்தப்பட்ட   கணக்கின் வாடிக்கையாளர் என உறுதி செய்தபின்உங்கள்ஏடிஎம் கார்டு செயலிழக்க    செய்யப்படுகிறது.  இனி நீங்கள் உங்கள் வங்கிகிளையை தொடர்பு கொண்டு புதிய கார்டுக்கான மனுச் செய்யவும் என்றார்.

வங்கிக்கும் எங்கள் அலுவலகத்திற்கும் உள்ள தூரம் சுமார்    8 கி.மீ,இரு சக்கர வாகனத்தில் பல நெருக்கடிபல சிக்னல்கள் கடந்து சென்று வந்தஅலுப்பில்இவற்றை நம்மை எதிர் கொண்ட வங்கி அலுவலரேசெய்திருக்கலாமேஏன் இவ்வாறு அரைகுறை தகவலுடன் நம்மைஅலையவிட்டார் என தோன்றியது.
மறுநாள் வங்கி கிளைக்குச் சென்று மாற்று ஏடிஎம் கார்டிற்கானவிண்ணப்ப   படிவம் நிரப்பிமுகவரி மற்றும் அடையாளச் சான்றாக ஓட்டுனர்உரிம நகலையும்    இணைத்து மனுச் செய்தவுடன் (14/06/14) ஒரு வாரத்தில்கார்டு வந்துவிடும் என்றார்கள்.  3 வாரங்களுக்கு மேலாக வராமல்இருக்கவேஇணையத்தில் பாரத ஸ்டேட் வங்கியில் புகார் செல் என்பதுபோன்று ஏதாவது இருக்கிறதா என தேடிய போது "8008202020" என்றஎண்ணிற்கு "UNHAPPY" என குறுஞ்செய்தி அனுப்பினால்வங்கியிலிருந்து நம்மை தொடர்பு கொள்வார்கள் என்பதைஅறிந்து அதே போல் 4 தினங்களுக்கு முன்பாக குறுஞ்செய்தி அனுப்பினேன்.
மறுதினம் தொடர்பு கொண்ட வாடிக்கையாளர் சேவை மையஉதவியாளர் எனது புகாரை பதிவு செய்து கொள்வதாகவும்சம்மந்தப்பட்டவங்கி கிளைக்கு அனுப்பி    வைப்பதாகவும் தெரிவித்து முடித்துக் கொண்டார்.
வங்கியில் கணக்கு துவக்கும் போது நமது கைபேசி எண்மின்னஞ்சல்முகவரி,   போன்றவை கொடுக்கிறோமேமற்ற நேரங்களில்இல்லாவிட்டாலும் குறைந்த பட்சம் இது   போல் புகார் பதிவு வந்தநபர்களுக்காவதுஉங்கள் கோரிக்கை பாிசீலனையில் உள்ளது இன்னதேதியில் கிடைக்கும் என்பது போன்ற குறுஞ்செய்தியை எதிர்பார்த்தது என்தவறு.
மீண்டும் நேற்று (02/07/14)  "8008202020" என்ற எண்ணிற்கு "UNHAPPY"  என குறுஞ்செய்தி அனுப்பினேன்.  இன்று வாடிக்கையாளர் சேவை மையஉதவியாளர்  என்னை தொடர்பு கொண்டவுடனேயே எனது தரப்பைபுலம்பவும்அவர் மதுரையின்   முதுநிலை வங்கி மேலாளர் ஒருவரின்எண்ணைக் கொடுத்து தொடர்பு கொள்ளச்   சொன்னார்.  நான் குறிப்பிட்டமேலாளரை தொடர்பு கொண்டவுடன் எனது கணக்கு எண் போன்றவிபரங்களை கேட்டுக் கொண்டவுடன் எனது கணக்கு எண் போன்ற விபரங்களை கேட்டுக் கொண்டு, உங்கள் கணக்கு தொடர்பாக (KYC - Know Your Customer) "உங்கள் வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள்" என்பதற்கான விபரங்கள் வங்கி கணணியில் update செய்யப்படாமல் உள்ளதால், உங்கள் ஏடிஎம் கார்டு வேண்டுகை செயல்படாமல் உள்ளது.  நீங்கள் உங்கள் கிளையை அணுகி உங்கள் அடையாளச் சான்று, முகவரிச்சான்று போன்றவையுடன்  KYC update request ஒன்று கொடுத்து அது கணணியில் ஏற்றப்பட்டவுடன், உங்கள் ஏடிஎம் கார்டு கோரிக்கை செயல்பட துவங்கும் என்றார்.
நீங்கள் சொல்லியபடி செய்கிறேன், ஆனால் வங்கியின் நீண்ட நாள் வாடிக்கையாளர் என்ற முறையில் எனக்கு சில சந்தேகங்கள் என்றேன், கேளுங்கள் என்றார் அந்த முதுநிலை மேலாளர்.  எனது மாதாந்திர சம்பளம் வரவு வைக்கப்படும் கணக்கு இது என்பதால் தொடர்ந்து பாிமாற்றங்கள் நிகழும் கணக்கு இது, தவிர நான் மாற்று ஏடிஎம் கார்டு விண்ணப்பிக்கும் போது நிரப்பிக் கொடுத்த படிவத்துடன், எனது அடையாள மற்றும் முகவரி சான்று இணைத்து கொடுத்துள்ளேன், எனது முகவரியில் கடந்த 10 ஆண்டுகளாக மாற்றம் ஏதுமில்லை, அவ்வாறிருக்க உங்கள் கணணியில் எனது வேண்டுகை தொடர்பான பதிவினை மேற்கொள்ளும் போது முகவரியில் மாற்றமில்லை, தொடர்ந்து பரிமாற்றங்கள் இருந்து கொண்டிருக்கிறது என்ற நிலையை பார்த்து உங்கள் அலுவலரே சரிபார்த்திருக்கலாமே என்றேன்.
சார் இது ரிசர்வ் வங்கி உத்திரவின்படி ஒவ்வொரு வாடிக்கையாளரின்விபரமும் 3 ஆண்டுக்கு ஒரு முறை கணணியில் update செய்யப்படவேண்டும் என்றார்சரி எனது   வேண்டுகையை கணணியில் பதிவு செய்யும்போதே இந்த தடங்கல் உங்களுக்கு தெரிய வரும் என்றால்எனது கைபேசிஎண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தியோஎனது மின்னஞ்சல் முகவரிக்கு ஒருமின்னஞ்சலோ அனுப்பியிருக்கலாமேநான் ஒவ்வொரு முறை கிளைக்குவர வேண்டுமென்றால் அலுவலகத்தில் முன் அனுமதி பெற வேண்டும்,அல்லது அரை நாள் விடுப்பு கொடுக்க வேண்டும்தவிர அரை லிட்டர்பெட்ரோல் செலவழிக்க வேண்டும் என்றேன்அதற்கு அவர் இப்போதுஉங்கள் பிரச்சனை தீர கிளையை தொடர்பு கொள்ளுங்கள் என்றார்.சிறிதுநேரம் கழித்து எனது கைபேசியில் அழைத்த மற்றொரு முதுநிலை மேலாளர்,  நீங்கள் தல்லாகுளம் கிளையில் திரு ராஜாரூபன் என்பவரை தொடர்புகொள்ளுங்கள் என்றார்.
நான்  இன்று  மதியம் தல்லாகுளம் கிளைக்கு சென்று திரு.ராஜாரூபன்  என்ற அலுவலரை தொடர்பு கொண்டபோதுஎனது குறைகளை கேட்டபின், "தங்களுக்கு ஏற்பட்ட அசெளகர்யங்கள் யாரால் ஏற்பட்டிருப்பினும் நான்மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்தற்போது உங்களுக்கு நான் விரைவானஉதவியை மேற் கொள்ளுகிறேன்என்றார்.  மீண்டும் ஒருமுறைஅடையாளச் சான்றுமுகவரிச்சான்று போன்றவைகளை கொடுத்து,கையோடு கணணியில் ஏற்றப்பட்டபின் ஒரு வாரத்தில் கார்டு வந்துவிடும்என தெரிவித்துள்ளார்.  திரு ராஜாரூபன் என்பவரின் அணுகு முறையும்,பணி நடவடிக்கைகளும் நிச்சயம் பாராட்டுதலுக்குரியதுஅவருக்கு என்தனிப்பட்ட நன்றி.
இந்தப் பதிவின் நோக்கம் மேலே தெரிவித்த விபரங்கள்யாவும் வங்கி மேலாளர்கள் கண்ணில் பட்டுஅவர்களின்அடுத்து விவாதிக்கும் ஜட்டத்தில் மேற்சொன்ன சிரமங்கள்மற்றவர்களுக்கு ஏற்படாமல் இருக்க என்ன செய்யலாம்என்பதை அவர்கள் முடிவு செய்ய வேண்டுமென்கிற ஆசைமட்டுமே.
இது போன்ற சில சிரமங்களை வைத்து "தனியார் வங்கி சிறந்ததுஎனஎன் நண்பர் திரு அதியமான் போல் நான் சொல்ல மாட்டேன்.  அது தலையில்பேன் இருக்கிறது   என்பதற்காக கொள்ளிக் கட்டையை எடுத்து தலையைசொறிந்ததற்கு ஒப்பாகிவிடும்.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக நான் எழுதி இந்த மாத "ஆழம்"மாத இதழில்   அச்சாகியுள்ள "பொதுத் துறை வங்கிகளுக்கு ஆபத்தாஎன்றதலைப்பில் நாயக் கமிட்டி அறிக்கையினை தொடரும் அபாயம் குறித்தகட்டுரையின் முடிவில் "வலுவாக உள்ள  வங்கி ஊழியர்கள் கூட்டமைப்புகள்போராட்டங்களோடு நின்று விடக் கூடாது.    பொது மக்களின் நம்பிக்கையைவென்றெடுக்கும் வகையில் அன்றாட பணியின் போது அவர்களுடன்சுமுகமாக இயங்க வேண்டும்.  சேவையை மேம்படுத்தி   நல்லுறவுவளர்த்துக் கொள்ள வேண்டும்.  அப்போதுதான் தனியார்   மயத்திற்கெதிரானபோராட்டங்களில் அவர்களையும் தங்களோடு இணைத்துக் கொள்ளமுடியும்பொது மக்களின் ஆதரவைப் பெறாமல் நடத்தப்படும்   எந்தவொரு போராட்டமும் நீண்ட கால நோக்கில் வெற்றியை பெற முடியாது"   எனமுடித்திருந்தேன்.
அதற்கேற்ப நல்லுறவு பேண விழையும் திரு ராஜாரூபன்போன்றவர்கள் இருப்பது மகிழ்வையே தருகிறது.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...